தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா காசன்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மகேந்திரன், சந்தோஷ், ஸ்டன்ட் சில்வா மற்றும் பலர்.
இயக்கம் – திரு
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு – தனஞ்செயன்
பிஆர்ஓ. – சுரேஷ் சந்திரா
கதைக்களம்…
நவரச நாயகன் கார்த்திக் தான் சந்திரமௌலி. அவரது சொந்த மகன் கௌதம் கார்த்திக்கே இதிலும் மகன். மகனின் காதலி ரெஜினா.
கௌதம் கார்த்திக் ஒரு குத்துச்சண்டை வீரர்.
இதனிடையில் பைரவி (வரலட்சுமி) என்ற இளம் பெண் உடன் நட்புக் கொள்கிறார் சந்திரமௌலி. இது கௌதமுக்கு தெரியாது.
ஒரு நாள் திடீரென்று நிகழும் கார் விபத்தில் சந்திரமௌலி கொல்லப்படுகிறார்.
அந்த விபத்தில் கௌதமின் கண் பார்வை பாதியாக பறி போகிறது.
தன் தந்தையை கொன்றவர் யார்? எனபதை தன் பார்வை குறைபாடுடன் கண்டுபிடிப்பது தான் படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக். பழைய பார்மில் இல்லையென்றாலும் அவரின் வழக்கமான மேனரிசத்தில் குறை வைக்கவில்லை.
பத்மினி கார் மீது காதல், மகன் மீது அன்பு, மருமகள் மீது பாசம், பைரவி மீது நேசம் என அனைத்திலும் கார்த்திக் அவர்கள் கச்சிதம்.
இதுநாள் வரை கௌதம் அவரது படங்களில் ஆக்சன், ரொமான்ஸ் மட்டுமே செய்து வந்தார். ஆனால் இதில் பாசம், அழுகை என வெரைட்டி காட்டியிருக்கிறார்.
தந்தை இறந்த பிறகு அவர் அழுதுக் கொண்டே பேசும் காட்சி கண்ணீரை வரவழைக்கும்.
வரலட்சுமி சில காட்சிகளிலே வந்தாலும் நம்மை ஈர்க்கிறார். இவருக்கும் கார்த்திக்கு உள்ள உறவுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
அது கள்ளம் இல்லாத உறவாக இருந்தாலும் அப்பா என அழைக்கமாட்டேன் என்கிறார். வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது நெருடல்தான்.
நடிப்பு, அழகு என ரெஜினா ஸ்கோர் செய்கிறார். அதிலும் ஏது ஏதோ ஆனானே பாடலில் வெர்ஜின் பசங்க சாபத்தை வாங்கி கொள்கிறார் ரெஜினா.
காமெடியுடன் குணச்சித்திர கேரக்டரிலும் சதீஷ் சபாஷ் பெறுவார்.
மகேந்திரன், மைம் கோபி, ஸ்டன்ட் சில்வா, போலீசாக விஜி ஆகியோரின் பாத்திர படைப்பு ரசிக்கும் விதம்.
வித்தியாசமான வில்லனாக சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஸ்டைலிஷ் வில்லன் இவர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் நாயகிகளின் அழகும் செம.. ஒளிமயமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.
ஆக்சன் காட்சிகளில் நாயகன் என்ட்ரீ கொடுக்கும் போது பின்னணி இசையில் சாம் சி.எஸ் பின்னி எடுத்துள்ளார்.
ராஜாதி ராஜா பாடல் ஆட்டம் போட வகை என்றால், இடைவேளைக்கு பின்னர் வரும் தீராதோ வலி சோக பாடல் மனதிற்கு இதம்.
திரைக்கதை பற்றிய அலசல்…
ஜாலியான ஒரு படம், அதில் ஒரு மெசேஸ், ஆக்சன் த்ரில்லர் டைரக்டர் திருவும் தயாரிப்பாளரும் தனஞ்செயனும் என கலந்து கொடுத்துள்ளனர்.
நான் சிகப்பு மனிதனில் ஹீரோவுக்கு ஒரு குறை வைத்திருப்பார். இதிலும் ஒரு குறை வைத்துள்ளார். அது அவரின் பார்முலா? என தெரியவில்லை.
ஒரு கால் டாக்சி அக்கௌண்ட்டில் இருந்து மற்றொரு நிறுவன டிரைவருக்கு பணம் பரிவர்த்தனை நடக்கிறது. இதை கூடவா இவ்வளவு ஓபனாக செய்வார்கள்? அதிலும் இப்போது எல்லாம் ஆதார் கார்டு, பான் கார்டு என எதையும் மறைக்க முடியாது. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.
பாக்சிங் போட ஸ்பான்சர் கிடைத்தவுடன் அன்று மிகப்பெரிய அளவில் பார்ட்டி நடக்கிறது. (ராஜாதி ராஜா பாடல்). ஸ்பான்சருக்கே பணம் இல்லாதவர்களுக்கு பார்ட்டிக்கு ஏது அவ்வளவு பணம்..?
ஒருவேளை அது கனவு பாட்டாக இருந்தால், போட்டோ எடுக்க முடியாது. போட்டோவை காட்டும் ஒரு காட்சி வேற படத்தில் இருக்கிறதே? அது எப்படி?
கால் டாக்ஸி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நடக்கும் போர். அதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். அதற்காகவே அவரை பாராட்டலாம்.
மிஸ்டர் சந்திரமௌலி…. சபாஷ் சந்திரமௌலி