தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலும் இனங்கள் மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போராட்டங்களை மையப்படுத்தியே இருக்கும்.. எனவே சுதாரித்துக் கொண்டு வாய்ஸ் ஓவரில் விளக்கம் கொடுத்துள்ளார் முத்தையா.
இந்த படம் பெண்ணுக்கு அடித்துக் கொள்ளும் கதை என முன்பே சொல்லி விடுகிறார்.
காதர் பாஷா என்ற இஸ்லாமிய பெயரும் முத்துராமலிங்கம் என்ற ஹிந்து பெயரும் ஏன் ஒருவருக்கு வைக்கப்பட்டது என்ற காரணத்தை நீங்கள் கேட்டால் எங்களிடம் பதில் இல்லை.. அதற்கு இந்த படத்திலும் பதில் கொடுக்கப்படவில்லை.
கதைக்களம்…
நாயகி தமிழ் (சித்தி இதானி)யின் குடும்பம் பெரிய குடும்பம். இரண்டு முறை மாமன்கள் இவரை கட்டிக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். இவர்கள் இருவரையும் மணக்க மனமில்லாமல் தவிக்கிறார்.
இவரைப் பெண் பார்க்க எவர் ஊருக்குள் நுழைந்தாலும் வெட்டுகிறார்கள். இந்த நிலையில் இவருக்கு உதவ வருகிறார் ஆர்யா (காதர் பாட்சா).
நாயகிக்கு நாயகன் உதவ என்ன காரணம்.? இவர்கள் இருவரும் யார்? முறைமாமன்கள் என்ன செய்தார்கள்.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த படம்.
கேரக்டர்கள்…
கிராமத்து கதை என்பதால் வேட்டியில் களம் இறங்கியுள்ளார் ஆர்யா. அடிதடி.. புழுதி பறக்க சண்டை.. கண்களில் தெறிக்கும் தீ என அதிரடி காட்டி உள்ளார் ஆர்யா.
சித்தி இத்னானி கிராமத்து பெண்ணாக அம்சமான நடிப்பை கொடுத்துள்ளார். சிரித்த முகத்துடனே நடித்திருப்பது சிறப்பு. இவருக்கு ரவீனா ரவி வாய்ஸ் கொடுத்துள்ளார். அதுவும் கூடுதல் கவனம் பெறுகிறது.
இஸ்லாமிய காதர் பாட்ஷாவாக பிரபு நடித்துள்ளார். தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார். ஆர்யா பிறக்கும் போது பிரபு அப்படியே இருக்கிறார். பாக்யராஜ் வயதான பிறகும் பிரபு அப்படியே தான் இருக்கிறார்.
பிரபு மகளாக வரும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் தன் நடிப்பில் கவனம் பெறுகிறார். அழகான முகத்தோடு அழவும் செய்து இருக்கிறார்.
சிங்கம்புலி ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். விக்னேஷ்காந்த், பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன் என ஒரு காட்சியில் வந்து செல்கிறார்கள்.
முக்கியமாக இந்த படத்திற்கு பிளாஷ்பேக் காட்சியே தேவையில்லை. கிளை கதைக்குள் கிளை கதையை வைத்து சோதித்துவிட்டார்.
விஜி, மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் உள்ளிட்ட பல வில்லிகளும் வில்லன்களும் உள்ளனர். ஒவ்வொருவரின் தோற்றமும் மிரட்டல் ஆகவே உள்ளது.. நல்லவேளை இந்த படத்தில் வேலராமமூர்த்தி இல்லை.
டெக்னீஷியன்கள்…
சென்டிமென்ட் காட்சி.. காமெடி காட்சி.. பாடல் காட்சி.. சண்டை காட்சி என அனைத்தும் கலவையாக கோர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கு நடுவே மற்ற காட்சிகளை மட்டும் திணித்து வைத்துள்ளதாக தெரிகிறது.
பஞ்சாயத்து காட்சிகளில் பிற்போக்கான சிந்தனைகள் நிறைந்துள்ளன. மேலும் பெண் சிசு கொலை ஏன்.?
அதேசமயம் ராமநாதபுரம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் வகையில் நிறைய காட்சிகளை வைத்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த உணர்வும் ஒட்டவில்லை.
அண்மையில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. ஆனால் காதர் பாஷா என்ற முத்துராமலிங்க படத்தில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
கறி குழம்பு என்ற பாடல் மட்டும் வழக்கம் போல முத்தையா பாணியில் உள்ளது. மற்றபடி பின்னணி இசையில் அனல் தெறிக்க விட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.
ஸ்டண்ட் மாஸ்டர்’ அனல் அரசு : இவருக்கும் இவரது குழுவினருக்கும் டபுள் பேட்டா கொடுத்திருப்பார்கள். ஷூட்டிங் முடியும் வரை சண்டை போட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் போல.. ஆக்சன் பிரியர்களிடம் அப்ளாஸ் அள்ளும்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் : இவர் எப்போதுமே தன்னுடைய பங்கை சிறப்பாக நேர்த்தியாக செய்பவர். இந்த படத்திலும் கிராமத்து மண்வாசனையுடன் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.
படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் : எடிட்டிங் செய்யாமல் வெங்காயத்தை உரித்து கொண்டு இருந்தாரோ.? என்பது போல தோன்றுகிறது. முக்கியமாக படத்தின் முதல் காட்சியில் நாயகி யார் என்று தெரியாமல் தேடிச் செல்கிறார் ஆர்யா. ஆனால் பிளாஷ்பேக் காட்சியில் ஆர்யாவும் சித்தி இத்னானி சந்தித்துக் கொள்கிறார்கள். என்னய்யா லாஜிக்.?
கர்வம், கௌரவம் தான் முதல்ல அதுக்கு அப்புறம் தான் எல்லாம்” என்ன பஞ்ச் டயலாக் பேசுகிறார் ஆர்யா. ஆனால் அதில் ஓரளவு கூட கம்பீரமே இல்லை.
பெரும்பாலும் முத்தையா படங்களில் கொம்பன் மருது தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் பஞ்ச் வசனங்கள் அனல் தெறிக்கும். ஆனால் இதில் ஏதோ போகிற போக்கில் டயலாக் பேசுவது போலவே உள்ளது.
சண்டை காட்சிகள் மட்டும் கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது வரை உள்ளன.. சண்டையில் ஆரம்பித்து படம் சண்டையிலே முடிவடைகிறது..
ஆர்யாவுக்கு வேற கருப்பு கலரை தவிர வேற எந்த கலரும் கொடுக்கப்படவில்லை. கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, கருப்பு பனியன்.. கருப்பு ஜட்டி என படம் முழுக்க வருகிறார் ஆர்யா. (காஸ்ட்யூமர் கவனிக்க)
கிராமத்து மண்வாசனை.. மாமன் மச்சான் உறவு.. அண்ணன் தங்கை உறவு.. மாமன் மகள் உறவு.. அங்காளி பங்காளி சண்டை வெட்டு குத்து என எத்தனை படங்களில் தான் முத்தையா இதே ரூட்டில் பயணிப்பாரோ.? முத்தையா இனிமேல் இதெல்லாம் வெத்தையா.. ஆர்யா இதுபோல் நடித்தால் தேறாதய்யா! என சொல்லத் தோன்றுகிறது.
Kathar basha Endra Muthuramalingam movie review and rating in tamil