பீட்சா 3 தி மம்மி விமர்சனம்.; பயமா.?? பாசமா.??

பீட்சா 3 தி மம்மி விமர்சனம்.; பயமா.?? பாசமா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பிரட் அண்ட் சாக்லேட் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் அஸ்வின். இன்ஸ்பெக்டர் கௌரவ நாராயணனின் தங்கையை அஸ்வின் காதலித்து வருகிறார்

ஒரு கட்டத்தில் இவரது உணவகத்தில் அமானுஷ்ய சக்திகள் தொந்தரவு செய்கின்றன. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் இவருக்கு தெரிந்த சில நபர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

இதனால் அஸ்வின் மீது சந்தேகம் கொள்ளும் கௌரவ் இவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறார்.

அஸ்வின் கொலை செய்யவில்லை என்றாலும் இவரை சுற்றி அமானுஷ்ய சக்தி நடப்பதற்கான காரணம் என்ன.?

இவருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சமையல் கலைஞர் என்பதால் நளன் என்ற பெயரை ஹீரோவுக்கு வைத்து விட்டாரா இயக்குனர்.?

அலட்டிக் கொள்ளாத நிதான நடிப்பில் கவர்கிறார் அஸ்வின். இவருக்கும் நாயகிக்கும் ரொமான்ஸ் சுத்தமாக இல்லை. எனவே இவர்கள் இணைந்தால் என்ன? பிரிந்தால் என்ன? என்று நமக்கு தோன்றுகிறது.

பேயின் பிளாஷ்பேக் தெரிந்த பின் அஸ்வின் உருகும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

போலீஸ் பிரேம் ஆக கௌரவ் நாராயணன், மித்ராவாக அபிநட்சத்திரா, ராணியாக அனுபமா குமார், வீராவாக வரும் நாராயணன், தாமுவாக வரும் காளி வெங்கட், விஸ்வநாதனாக வரும் கவிதா பாரதி, செக்யூரிட்டியாக விநாயகம் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

அழகு சிறுமியாக அபி நட்சத்திரா. பேயாக வந்தபின் தலை முடியை முகத்தில் போட்டு மூடிவிட்டார்.. ஒருவேளை பேய் மேக்கப் போட செலவு மிச்சம் செய்து விட்டார்களோ.?

டெக்னீசியன்கள்…

நாம் பார்த்த வரையில் பேய் படங்கள் என்றாலே அந்தப் பேய் ஒரு அடர்ந்த காட்டு பங்களாவில் தான் குடியேறி இருக்கும் ஆனால் இதில் ஒரு உணவகத்தில் வந்து சமைப்பது வித்தியாசமான சிந்தனை.

படத்தில் ஆரம்பத்தில் காட்டப்படும் ஒரு ஒரு வாலிபால் பிளேயரின் உருவம்.? ஏன் எதற்கு என்பதற்கான விளக்கம் இல்லை.

ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வாலிபால் அவசியம் என்ன.? அந்த பந்து சத்தத்தை அடிக்கடி காட்டுவது ஏன்.? இயக்குநர் மோகன் கோவிந்தா.

பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்து பயமுறுத்தி இருக்கிறது. அருண் ராஜின் அளவான பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில நேரங்களில் எந்த சப்தமும் இல்லாமல் இவர் அடக்கி வாசித்திருப்பது சபாஷ்.

பேய் என்றாலே தன்னை கொன்றவர்களை நினைவில் வைத்து தான் பழி வாங்கும். ஆனால் இதில் ஞாபக மறதி பேயை வைத்து ஒரு வித்தியாசமான பீட்சாவை கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் பீட்சா 1 அளவுக்கு இந்த பீட்சா 3 சுவைக்கவில்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தம்.

Pizza-3 The Mummy movie review and rating in tamil

அறமுடைத்த கொம்பு விமர்சனம்.; ஆபாச வீடியோ ஆசாமிகளுக்கு மரண அடி

அறமுடைத்த கொம்பு விமர்சனம்.; ஆபாச வீடியோ ஆசாமிகளுக்கு மரண அடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜாக்சன் ராஜ் இயக்கத்தில் ஏகே ஆனந்த், ஜெசி ரத்னவதி, ரெஜி, சிந்து, டிகேஎஸ் சண்முக சுந்தரம், சிம்சன் தேவராஜ், வினோத் சிங், சதா, ஜாவா கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் ‘அறமுடைத்த கொம்பு’.

கதைக்களம்…

திருநெல்வேலி அருகே வேலியூர் என்றொரு அழகிய கிராமம். அந்த கிராமத்தின் எல்லையில் கிழிந்த சட்டையுடன் பசி மயக்கத்தில் விழுகிறார் நாயகன் ஆனந்த்

இவரை அந்த ஊரில் உள்ள 3 திருநங்கைகள் காப்பாற்றி ஊர் பெரியவர் சண்முகசுந்தரிடம் ஒப்படைக்கின்றனர்.

சில தினங்களுக்கு பின் சண்முகசுந்தரம் அவரை ஒரு நல்ல மனிதனாக்கி அங்கேயே வேலை கொடுத்து தங்க வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆனந்தின் மீது காதல் கொள்கிறார் நாயகி ஜெசி ரத்னவதி.

இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்கும் அந்த ஊரில் ஜாதி சங்கம் அமைக்க வேண்டும் சிலர் போராடுகின்றனர். வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார் ஊர் தலைவர்.

ஜாதி சங்கம் ஊருக்குள் நுழைந்த பின் ஊரின் ஒற்றுமை கலைகிறது. ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது.? நாயகன் – நாயகி என்ன செய்தனர்.? ஊர் பெரியவர் என்ன செய்தார்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், நாயகியாக நடித்திருக்கும் ஜெஸ்சி இருவரும் புதுமுகம். முகத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும் முகபாவனைகளில் நம்மை கவனிக்க வைக்கின்றனர்.

ஆனால் பாடல்களில் க்ளோசப் சாட் தேவையா.?

ஒரு கட்டத்தில் ஜெஸ்ஸியை ஜாதி வெறியன் ஆபாச வீடியோ எடுத்து அவளை மிரட்ட.. “உன் அம்மாவிடம் உள்ள உறுப்பு தான் என்னிடமும் இருக்கிறது.. இன்டர்நெட்டில் நீ போட்டுக் கொள். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். உன் ஜாதி புத்தி இப்போது தெரிந்து விட்டது என சொல்லும் வசனங்கள் சாட்டையடி.

நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் இதுபோல செய்ய முன் வந்தால் எவனும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்ட மாட்டான்.

ஜாதிப் பெருமை பேசும் சிம்சன் தேவராஜ், வினோத் சிங் மற்றும் ஜாதி வேண்டாம் என்னும் கர்ணன் ஆகியோரும் கச்சிதம்.

ஊர் பெரியவர் சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நாடகத் தனமாக உள்ளது.. டிடி பொதிகை சேனலில் ஒரு டாக்குமென்ட்ரி படம் பார்க்க உணர்வையே சில காட்சிகள் நமக்கு கொடுக்கின்றன. அதை தவிர்த்து இருக்கலாம்.

தான் கட்டிய வேட்டிக்கு தகுந்தார் போல நெத்தியில் பட்டை போடும் வசனகர்த்தா நடிகருமான ரத்தினம் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

உன் தங்கச்சியை நான் கட்டிக்கிறேன்.. என் தங்கச்சிய நீ கட்டிக்கோ என ஒருவரிடம் சொல்வார்.. அதற்கு நண்பர்கள் அவர் தங்கச்சி சுமாரா தானே இருப்பார் என்பார்கள்.. என் தங்கச்சி அதைவிட சுமாராக தான் இருப்பார்.. அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்பார்.

டெக்னீசியன்கள்…

அல் ரூபியன் இசையில் பாடல்கள் சுமார்தான்.. ஒளிப்பதிவு ஓகே ரகமே.

கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்தையும் ஜாக்சன் ராஜ் கையாண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்கு குட் டச்.. பேட் டச்… கிராமத்தில் நூலகம், மருத்துவ முகாம் ஆகிய விழிப்புணர்வு காட்சிகள் பலம்.

ஒரே படத்தில் காதல்.. ஜாதி.. மாடு வளர்ப்பு, ஆபாச வீடியோ, திருநங்கை மீது ஜொள்ளு என அனைத்தையும் சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குநர் ஜாக்சன். ஆனால் திரைக்கதை அமைத்த விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார்.

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் பட்ஜெட்டை குறைக்க சில சித்து வேலைகள் செய்திருக்கிறார். நாயகன் எடுத்த முடிவு எதிர்பாராத ஒன்று. ஆனாலும் கிளைமாக்ஸ் திருப்தியானதாக இல்லை என்பது பெரும் வருத்தமே.

ஆக அறமுடைத்த கொம்பு.. ஆபாச வீடியோ ஆசாமிகளுக்கு மரண அடியை கொடுத்துள்ளது.

ARAMUDAITHA KOMBU movie review and rating in tamil

DIE NO SIRS டைனோ்சர்ஸ் பட விமர்சனம் 3.5/5.; கேங்ஸ்டர் கேம்

DIE NO SIRS டைனோ்சர்ஸ் பட விமர்சனம் 3.5/5.; கேங்ஸ்டர் கேம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டைனோசர்ஸ்’ (Die No Sirs).

எம்.ஆர்.மாதவன் இயக்கிய இப்படத்துக்கு போபோ சசி இசையமைக்க ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது.

கதைக்களம்…

சாலையார் மற்றும் கிள்ளியப்பன் ஆகிய இரு ரவுடி கேங்ஸ்டர்கள் உள்ளன.

இவர்களின் பழைய பிரச்சினை ஒன்றை முடித்து வைக்க.. சில மாதங்களுக்கு பின் 8 பேரை சரணடைய செய்கிறார் சாலையார்.

அதில் ஒருவனுக்கு மட்டும் திருமணம் ஆகி ஒரு வாரமே ஆன நிலையில் அவனுக்கு பதிலாக அவன் நண்பன் சிறைக்கு செல்கிறான்.

இதை ஒரு கட்டத்தில் அறியும் மற்றொரு கும்பல் தலைவன் கிள்ளியப்பன் என்ன செய்தார்.? இரு கும்பலுக்கும் பிரச்சினை என்ன ஆனது.?

நண்பனுக்காக சிறைக்குச் சென்ற தன் அண்ணனை நாயகன் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

என்னதான் கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அதில் சிக்காமல் நல்லவனாக வாழ நினைக்கும் நாயகனாக மண்ணு பாத்திரத்தில் ஜொலிக்கிறார் உதய் கார்த்திக். நாயகியை பிராக்கெட் போட இவர் டூவீலரில் தீபா என்று வரையும் காட்சிகள் டூவீலர் ரைடர்களுக்கு டூ மச் ட்ரீட்.

புதுமாப்பிள்ளை துரையாக மாறா. சிலநேரம் நடிப்பில் விஜய்சேதுபதியை போல இருக்கிறார்.

அண்ணன் தனாவாக நடித்திருக்கும் ரிஷி, சாலையாறாக நடித்திருக்கும் மணேக்‌ஷா ஆகியோர் அசத்தல்.. அவரை பார்த்தாலே பயமாக இருக்கிறது. (இவர் போடும் திட்டமும் செம ஸ்கெட்ச்).

பெரும்பாலும் கேங்ஸ்டர் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதிலும் பெரிதாக கொடுக்கப்படவில்லை. நாயகி வேடத்தில் சாய் ப்ரியா.

ஆனால் இதில் நாயகனின் அம்மாவாக நடித்த ஜானகி ஒரு காட்சி என்றாலும் அலற விட்டுள்ளார்.

பேருந்தில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஆன்ட்டியாக நடித்த சிந்துவும் ரசிக்கவும் கவனிக்கவும் வைக்கிறார். இவருக்கு ஒரு பிரச்சனை வரும்போது அங்கே நுழையும் ‘திருமலை’ படத்தின் இயக்குனர் ரமணா கவனிக்க வைக்கிறார்.

கழுத்தைப் பிடித்துக் கொண்டு அவர் பேசும் வசனங்கள் பலே பலே.. அது போல கிளைமாக்ஸ் காட்சியில் அவர் சொல்லும் டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

ஊனமுற்றவராக நடித்திருப்பவரும் அவர் பேசும் வசனமும் நம்மை மறந்து கைதட்ட வைக்கும்.. அல்லாஹ் கோவிந்தா அல்லேலூயா..!!!

டெக்னீஷியன்கள்…

இரண்டு கேங்ஸ்டர் என்பதால் இரு கும்பல் தலைவனையும் மிரட்டலாக காட்ட வேண்டும்.. அதற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன்.

அதிலும் ஒரு பக்கம் பணம் எண்ணிக் கொண்டே மற்றொரு புறம் இதில் துரை யார்.? என கண்டுபிடிக்க கும்பல் தலைவன் போடும் திட்டம் நம்மை பதற வைக்கிறது.

போபோ சசி இசையில் டாலி டாலி, மெரினா பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்களுக்கு பின்னணி இசை தான் பலம். அதை உணர்ந்து மிரட்டலான இசையை கொடுத்துள்ளார்.

வடசென்னை குடிசைப் பகுதி, கிணற்றுக்குள் இருக்கும் சூப்பர் ஏரியா.. அடுத்து ‘காக்கா நகர்’ ஏரியா என ஜோன்ஸ் வி ஆனந்த் கேமரா கைவண்ணம் ரசிக்க வைக்கிறது. அந்த கிணறை காட்டும் காட்சியும் அதில் இருக்கும் ஒரு ஓவியமும் அற்புதமாக இருக்கிறது.

வசனங்கள் பலே… பலே…

அவரு உதவி செய்றது வெளியே யாருக்கும் தெரியாது என்பார்கள்.. அப்புறம் உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது.? இது போன்ற நக்கல் நையாண்டி வசனங்கள் படத்தில் நிறையவே உள்ளன

ஒவ்வொரு ரவுடிக்கும் அவன் உயிர் ஆஸ்கார் அவார்டு’ … ‘ஒரு சிகரெட் 1 கிலோ அரிசி விலை… ‘மதுரைல எங்கய்யா சுனாமி வந்துச்சு.. ஸ்விம்மிங்க போட்டீங்க’ என பல வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன

வழக்கமான வட சென்னை கேங்ஸ்டர் கதை தான் என்றாலும் அதில் வசனங்களை தெறிக்க விட்டுள்ளார். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு என்பதால் முழுமையாக ஒன்ற முடியவில்லை.

ஆக.. இந்த டைனோசர்.. கேங்ஸ்டர் கேம்

Dienosirs aka Dinosaurs review and rating in tamil

DD RETURNS விமர்சனம் 4.25/5.; SS RETURNS (SMILE SANTHANAM)

DD RETURNS விமர்சனம் 4.25/5.; SS RETURNS (SMILE SANTHANAM)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேய் படங்கள் என்றாலே ஒரு கதை தொடங்கும்.. அதில் பேய் வந்து பழி வாங்கும்.. பின்னர் அந்த பேய்க்கு ஒரு பிளாஷ் பேக் காட்சி இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியுடன் தான் படம் தொடங்குகிறது.

கதைக்களம்…

1965 ஆண்டில் பாண்டிச்சேரியில் ஒரு சூதாட்ட குடும்பம் மக்களை வரவழைத்து ஒரு கேம் விளையாடுகிறது. அந்த விளையாட்டில் வென்றால் லட்சங்களில் சம்பாதிக்கலாம். இல்லையென்றால் அந்த மனிதர்களை கொன்று விடுவது அந்த குடும்பத்தின் வாடிக்கை.

இதையறிந்த அந்த மக்கள் ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தை தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.

தற்போது 2023 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது…

இரண்டு திருட்டு கும்பல் இருக்கிறது.. ஒரு கும்பலிடம் இருந்து மற்றொரு கும்பல் பணம் பறிக்கிறது. அந்த பணம் தவறுதலாக சந்தானத்திடம் வந்து சேர்கிறது.

தனது காதலியின் கடனை அடைக்க சந்தானம் அந்த பணத்தை கொடுக்க காதலி சுரபி அந்த பணத்தை ஒரு கும்பலிடம் கொடுக்கிறார். அப்போதுதான் அந்த கும்பலின் பணம் தான் அது என்பது அவர்களுக்கே தெரிய வருகிறது.

இதனையடுத்து காதலி சுரபியை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகின்றனர். தன்னுடைய காதலை காப்பாற்ற மீதி பணத்தை தேடி செல்கிறார் சந்தானம்.

சந்தானத்தின் நண்பர்களோ அதை ஒரு பங்களாவில் ஒளித்து வைப்பதை அறிந்து அங்கு செல்கின்றனர்.

அதன் பின்னர்தான் அது பேய் பங்களா என அவர்களுக்கு தெரிய வருகிறது.

பேய் பங்களாவிலிருந்து பணத்தை எடுத்தார்களா.? அந்த பேய்கள் என்ன செய்தது.? காதலின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சமீபத்தில் வந்த குலுகுலு உள்ளிட்ட படங்கள் சந்தானத்திற்கு படுதோல்வியை கொடுத்தன. எனவே மீண்டும் தன்னுடைய பழைய காமெடி டிராக்க்கு வந்து சிக்ஸர் அடித்துள்ளார் சந்தானம்.

தனது ஒன்லைன் காமெடி பன்ச்களை போகிற போக்கில் தூவி விட்டு நம்மை சிரிக்க சிரிக்க கதற விட்டுள்ளார்.

ஒரு நிமிட சிரிப்பு முடிவதற்கு அடுத்த நிமிட சிரிப்பு வந்து விடுவதால் நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாமல் போகிறது.

நாயகி சுரபிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளார்.

எப்போதுமே படு மிரட்டலாக வரும் பெப்சி விஜயன் இதில் டெட் டேய்..டேய்.. டேட் என சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

படம் முழுவதும் காமெடியை அள்ளி தெறிக்க விட்டிருந்தாலும் ஒரு சில காமெடிகள் உச்சத்தை தொடுகின்றன.

கட்டிலுக்கு அடியே தெரியும் பேய் கால்கள்… இரண்டு கதவுகளுக்கு மேல் நிற்கும் மொட்ட ராஜேந்திரன் கால்கள்.. ஒரே பங்களாவிற்குள் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் அவதிப்படும் கும்பல் என அனைத்துமே சிரிப்புக்கு கேரண்டி.

இதில் கூல் சுரேஷ் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.. பிளாக் ஜட்டி ஒயிட் ஜட்டி காமெடி செய்து நம்மை கலகலப்பூட்டி செல்கிறார்.

‘லொள்ளு சபா’ மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, பெப்சி விஜயன் மகனாக வரும் கிங்ஸ்லி, அவர் அடியாளாக வரும் தீனா, முனீஷ் காந்த் காமெடியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

அதுபோல பேய்களாக வந்து ரகளை செய்யும் பிரதீப் ராவத், பேபி மானஸ்வி, மசூம் சர்க்கார், ரீட்டா ஆகியோரின் பங்களிப்பு அல்டிமேட்..

எப்போதும் அழகு குட்டி பாப்பாவாக நாம் பார்த்த மானஸ்வி்இதில் கொஞ்சம் குட்டி பேயாக மிரட்டல் செய்திருக்கிறார்.

டெக்னீசியன்கள்….

ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கம் பாராட்டத்தக்கது. அந்த பேய் பங்களா செட்டுகளை அவர் எப்படி போட்டார்? பேய் விளையாட்டுக்கு தகுந்தார் போல WIN RUN என காட்சி அமைப்புகளை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஆர்.ஹரிஹர சுதன் உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் குழந்தைகளை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும்.

ஒளிப்பதிவு பின்னணி இசை எடிட்டிங் அனைத்து பணிகளும் சிறப்பு.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சந்தானத்துடன் பணிபுரிந்த தன்னுடைய நண்பர் பிரேம் ஆனந்த் என்பவரை இயக்குனராக்கி அழகு பார்த்து இருக்கிறார் சந்தானம்.

தன் மேல் வைத்த நம்பிக்கையை கொஞ்சம் கூட குறை வைக்காமல் சிக்ஸர் அடித்து சந்தானத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் பிரேம் ஆனந்த்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக டிடி ரிட்டன்ஸ் படத்தை பார்க்கலாம்.

ஆக.. டிடி ரிட்டர்ன்ஸ்.. சந்தானத்தின் ஸ்மைல் ரிட்டன்ஸ்

DD RETURNS movie review and rating in tamil

LGM எல்ஜிஎம் விமர்சனம் 3/5.; மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்

LGM எல்ஜிஎம் விமர்சனம் 3/5.; மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாணத்திற்கு முன்பு மாமியாருடன் பழக ஆசைப்படும் மருமகள் போடும் விசித்திர நிபந்தனை.

கதைக்களம்…

நாயகன் (கௌதம்) ஹரிஷ் கல்யாண் – நாயகி (மீரா) இவானா இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகின்றனர். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இரண்டு வருடத்திற்கு பின் திருமணத்தைப் பற்றி பேசவே வீட்டிற்கு சென்று பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது.

அப்போதுதான் இவானா.. “நான் உன்னுடன் வாழ்வதைப் பற்றி யோசித்தேன். ஆனால் உன் அம்மாவுடன் வாழ்வதை பற்றி யோசிக்க வில்லை” என்கிறார்.

இதனால் காதலர்களுக்கு பிரச்சனை வெடிக்கிறது. எனவே நாம் அனைவரும் ஒரு சுற்றுலா செல்வோம் அப்போது உன் அம்மாவுடன் உன் குடும்பத்தாருடனும் நான் பழக வாய்ப்பு உள்ளது.

அப்போது பிரச்சினை இல்லை என்றால் நான் உன்னை மணக்கிறேன். பிரச்சனை வந்தால் நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்கிறார் இவானா.

காதலியின் நிபந்தனையை அம்மாவுக்கு தெரியப்படுத்தாமல் இரு குடும்பத்தாரும் சுற்றுலா செல்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது.? இவானாவை ஏற்றுக் கொள்ள சம்மதித்தாரா நதியா.? மாமியார் – மருமகள் உறவு தொடங்கியதா.? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா.? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சாக்லேட் பாயாக ஹரிஷ் கல்யாண் காணப்பட்டாலும் அவருக்கு இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் சீன்ஸ் எதுவும் இல்லை. மாறாக வழக்கம் போல பக்கத்து வீட்டு பையனாக வந்து செல்கிறார்.

இவானா அழகு நிறைந்த மீராவாக ஜொலிக்கிறார். டீன் ஏஜ் பெண்களுக்கு உரித்தான கண்டிஷன்கள் போடும்போது முரட்டு சிங்கிள்ஸ் மனம் கொஞ்சம் குளிரலாம்.. (இதுக்கு தான்யா நாங்க கல்யாணம் பண்ணிக்கவே இல்ல என்பார்கள்)

யோகி பாபு வந்தபின் டூர் போலவே காமெடியும் களை கட்டுகிறது. அது போல டூரில்.. டிரைவர் யோகி பாபுவிடம் சுகர் பேஷண்ட் சிறுநீர் கழிக்க ஒவ்வொரு முறையும் வண்டியை நிறுத்த சொல்லும் காமெடி செம.

ஹரீஷின் நண்பனாக வரும் ஆர் ஜே விஜய் தன் பங்களிப்பை பக்காவாக செய்துள்ளார். டூர் போகும் போது.. “செமையாக இருக்குல்ல.. என்று ஒரு பெண்ணிடம் கடலை போடுகிறார். சென்னை பூந்தமல்லி கூட தாண்டல அதுக்குள்ள இப்படியா என கலாய்ப்பது செம.

விடிவி கணேஷ் வந்து கொஞ்சம் கலகலப்புக்கு கை கொடுக்கிறார்.

வி டிவி கணேஷ் ஒருமுறை ஹரீஷிடம் நதியா – இவானா இருவரையும் பார்த்து இதில் யார் உங்கள் அம்மா? என்று சொல்லும் போதே நதியாவின் இளமை ரசிகர்களுக்கு புரியும். என்றும் நதியா அழகுதான்.

இவானாவை பெண் பார்க்கும் காட்சியில் பிரச்சனை வெடிக்க ஹரிஷ் வெளியே புறப்படும்போது.. “நான் பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேன்.. கொஞ்ச நேரம் இருக்கலாம் என்பதுபோல நதியா கேட்கும் காட்சிகள் சிரிப்பலை.

இவர்களுடன் தீபா அக்கா, வினோதினி உள்ளிட்டோரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. தங்கள் பங்குக்கு கொஞ்சம் கலகலப்பூட்டி செல்கின்றனர்.

டெக்னீசியன்கள்…

படத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாகவே கை கொடுத்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தி. கோவாவின் அழகையும் சிறப்பாக கையாண்டு உள்ளார்.

படத்தொகுப்பாளர் இரண்டாம் பாதியை கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம். பாரஸ்ட் காட்சிகள் பஜனை காட்சிகள் சற்று சோர்வை தருகின்றன.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தன் மனைவி சாட்சியுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கோவாவில் நதியா மற்றும் இவானா ஆகியோருக்கான சீன்கள் மூலம் தலைமுறை இடைவெளியை அழகாக சித்தரித்து இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

அது போல நதியா மீது ஆசைப்படும் ஒரு ஆங்கிலேயரின் காட்சிகள் ஏன்.? என்று தெரியாவிட்டாலும் அது ஆண்களின் மனநிலையை காட்டுகிறது.

பாரஸ்ட் சீன்கள் பெரிதாக கவரவில்லை. அதிலும் முக்கியமாக சாண்டி மாஸ்டர் வந்து ஆட்டம் போடும் அந்த பஜனை காட்சிகளும் எதற்கு என்றே புரியவில்லை.

இந்த சுற்றுலாவின் நோக்கமே மாமியாருக்கும் மருமகளுக்கும் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான். ஆனால் அதற்கான விளக்கம் கொஞ்சம் கூட கிளைமாக்ஸில் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நாயகி ஜெனிலியாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் குடும்பத்தாருடன் பழகச் சொல்வார் ஜெயம் ரவி. இதில் கொஞ்சம் மாறுதலாக அனைவரும் சுற்றுலா சென்று இருக்கின்றனர்.

ஆனால் அதை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

ஆக இந்த எல் ஜி எம்.. மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்

LGM movie review and rating in tamil

LOVE லவ் விமர்சனம் 2/5..; TORTURE-ன்னு வச்சி இருக்கலாமே

LOVE லவ் விமர்சனம் 2/5..; TORTURE-ன்னு வச்சி இருக்கலாமே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புலி முருகன்’ உள்ளிட்ட பல படங்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வர வசனங்களை எழுதியவர் ஆர் பி பாலா. தற்போது இவரே இயக்குனராக மாறி தயாரித்துள்ள படம் ‘லவ்’.

இது சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘லவ்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, டேனியல், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இது பரத்தின் 50வது படம்.. விமர்சனம் இதோ

கதைக்களம்…

தன் தந்தை ராதாரவி சொன்னதன் பேரில் தான் கட்டிக்க போகும் மாப்பிள்ளை பரத்தை காண ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார் வாணி போஜன்.

முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் கருத்து மோதல் உருவாகிறது. ஆனாலும் பரத்தின் வெளிப்படையான பேச்சை கண்டு அவரை மணக்க சம்மதிக்கிறார் வாணி போஜன்.

இவர்கள் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளே பல பிரச்சினைகள் வெடிக்கிறது. பிசினஸ் நஷ்டத்தால் மனம் உடைந்து போகும் பரத் வீட்டிலேயே சரக்கு அடிக்கிறார். வாணி போஜன் வேலைக்கு சென்று பொறுப்புடன் இருக்கிறார்.

ஒருநாள் பிரச்சனை அதிகமாகவே இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொள்ள வாணியை அடித்து விடுகிறார் பரத்.

அப்போது எதிர்பாரா விதமாக வாணி போஜன் மரணம் அடைகிறார்.

அந்த சமயத்தில் சரக்கடிக்க பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார்.

சிறிது நேரத்தில்.. திருமணமான மற்றொரு நண்பன் டேனியல் வேறொரு பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு மேட்டர் செய்ய வருகிறார்.

அதேசமயம் அவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டுக்கு போலீஸ் ஜீப் வருகிறது.

அதன்பின்னர் என்னாச்சு.? நண்பர்களிடம் தான் செய்த கொலையை சொன்னாரா பரத்.? தப்பித்தாரா.? என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

கதை கேட்பதற்கு சொல்வதற்கும் அழகாகவும் எளிதாகவும் இருந்தாலும் இதன் பின்னர் நடக்கும் குழப்பங்களும் தடுமாற்றமான திரைக்கதையும் ரசிகர்களை வெறுப்படையச் செய்கிறது.

பரத் வாணி போஜன் விவேக் பிரசன்னா டேனியல் ராதாரவி என கிட்டத்தட்ட 8-10 நபர்களே படத்தில் நடித்துள்ளனர்.

அவர்கள் அனைவருமே வீட்டிற்குள் நடக்கும் கதையை சுற்றி சுற்றி வருவதால் எந்தவிதமான ஓர் உணர்வும் நமக்கு ஏற்படவில்லை. அவர்களும் பெரும்பாலும் பெருமளவில் முயற்சிகளை எடுத்து நடிக்கவில்லை.

சீரியஸான முகத்துடனே பரத் காட்சியளிக்கிறார். ஒரே ஒரு பாடலில் மட்டும் பரத்தும் வாணி போஜனும் கொஞ்சம் ரொமான்ஸ் செய்கின்றனர். மற்றபடி அவர்களுக்குள் ஒரு துளி கூட காதல் இருப்பதாக காட்சிகள் இல்லை.

அப்படி இருக்கையில் ஏன் லவ் என்று டைட்டில் வைத்தார்கள் என்பதுதே கேள்வி. விவேக் பிரசன்னா அவரது மனைவியை சந்தேகப்படுவதும் டேனியல் அவரது மனைவியை சந்தேகப்படுவதும் இப்படியாகவே காட்சிகள் நகர்கின்றன.

மனைவியை கொல்லவே அனைவரும் திட்டமிடுகின்றனர். அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு டவுட் அல்லது டார்ச்சர் என்று பெயர் வைத்திருக்கலாம்.

இடைவேளைக்குப் பிறகு விவேக் யார்.? டேனியல் யார்? என பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளார்கள். ஆனால் அதில் கொஞ்சம் கூட ஈர்ப்பே இல்லை

*என் மகளை அடிக்கும் உரிமை உனக்கு இருந்தால்.. உன்னை அடிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என ராதாரவி பேசும் வசனம் மருமகன்களுக்கு மாமனார் கொடுக்கும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்*

‘லவ்’ படத்திற்கு மிகப்பெரிய ஆறுதல் படத்தின் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா தான். கண்ணாடி ஜார் உடைவது முதல் வீட்டில் இருக்கும் அலங்கார பொருட்கள் என ஒவ்வொன்றையும் அழகாக படம் பிடித்து நம்மை ரசிக்க வைக்கிறார்.

பாடல் பின்னணி இசை கொஞ்சம் படத்திற்கு கை கொடுத்துள்ளது.

ஆர்பி பாலா இந்த படத்தை மலையாள பாணியில் இயக்கி இருக்கிறார். மற்றபடி தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்து இருந்தால் ரசிகர்களை கவர்ந்திருக்கலாம்.

காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் மனதளவில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே தம்பதிகள் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் பாலா.

ஆனால் அதற்காக அவர் அமைத்துக் கொண்ட திரைக்கதை தான் ரசிகர்களை குழப்பம் படியாக அமைந்து விட்டது.

ஆக பரத்தின் 50 வது படம் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்..

இது லவ் இல்ல…

Love review and rating in tamil

More Articles
Follows