ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, காளி வெங்கட், ராதாரவி, இளவரசு, அறந்தாங்கி நிஷா, மாஸ்டர் கவின், பேபி மோனிகா மற்றும் பலர்.
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – விஜய் மில்டன்
எடிட்டர் – காசி விஸ்வநாதன்
தயாரிப்பு – பக்ரூதின், தாமிரா, சேக் தாவூத்
பிஆர்ஓ. – ஜான்

கதைக்களம்..

சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். சென்னையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு மோனிகா மற்றும் கவின் என இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.

குழந்தைகளை நன்றாக வளர்க்கவும் படிக்க வைக்கவும் இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.

குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் ப்ளே ஸ்கூலில் விட்டு செல்கின்றனர்.

வேலை பளு காரணமாக வீட்டிற்கு சரியான நேரத்தில் குழந்தைகளை கூட்டி வரவும் முடியவில்லை.

இதனால் இருவருக்கும் பிரச்சினை எழ, வேறு வழியில்லாமல் சமுத்திரக்கனி தன் வேலையை விட்டு குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ரம்யா நன்றாக சம்பாதித்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார். இதனால் மிகப்பெரிய தொகைக்கு பேங்க் லோன் எடுக்கிறார்.

ஒரு சூழ்நிலையில் சமுத்திரக்கனிக்கும் இவருக்கும் பிரச்சினை எழ, என் காசில் வாழும்போது நீ இப்படி செய்ற, என் போல் சம்பாதிக்க முடியுமா? வெளியே போய் வாழ்ந்துப் பார் என சமுத்திரக்கனியிடம் சவால் விடுகிறார்.
எனவே சமுத்திரக்கனியும் தன் மகளை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

ரம்யா தன் மகனுடன் வாழ்கிறார். அவருக்கும் மகனை பார்த்துக் கொள்ள ஆள் தேவைப்படுகிறது.

மேல் அதிகாரியின் ஆசைக்கு இணங்காத காரணத்தால் ஒரு நாள் ரம்யாவுக்கு வேலை போகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது..? லோன் கட்டினாரா? சமுத்திரக்கனி என்ன செய்தார்? தன் ஈகோவை ரம்யா விட்டாரா? கணவரிடம் மன்னிப்பு கேட்டாரா? என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமான யதார்த்த கேரக்டரில் சமுத்திரக்கனி. எதற்கும் ஆசைப்படாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவர். பொறுப்பான தந்தையாக அன்பான கணவனாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக வாழ்ந்திருக்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக ரம்யா மற்றும் சுஜா வருணி.

மாடர்ன் மங்கையாக ரம்யா பாண்டியன். குடும்பத்தை விட குழந்தைகளை விட வேலையே (பணமே) வாழ்க்கையாக வாழ்கிறார். ஜோக்கர் படத்தில் அசத்தியர் இதிலும் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா நல்ல தேர்வு. அதிலும் மோனிகா ஆடும் அந்த கடவுள் விளையாட்டு சொற்கள் படத்திற்கு ப்ளஸ். கேள்வி மேல் கேள்வி கேட்டு தந்தைக்கு உதவுவதில் ரசிக்க வைக்கிறார்.

பறக்க ஆசைப்படும் சுஜா வருணியின் வாழ்க்கை இறுதியில் பரிதாபத்தில் முடிகிறது.

ராவுத்தராக ராதாரவி. பெரிதாக வேலை என்றாலும் கொடுத்த வேலையாக சரியாக செய்திருக்கிறார்.

தன் அப்பார்ட்மெண்டில் மனைவியை சந்தேகப்படும் கணவனாக இளவரசு. யதார்த்த பேச்சில் கவர்கிறார்.
அறந்தாங்கி நிஷா கொஞ்சமே வந்தாலும் சிரிப்பூட்டுகிறார்.

அப்பார்ட்மெண்ட ஆண்டிகளிடம் சமுத்திரக்கனி பேசும்போது எல்லாம் சில கணவன்மார்கள் எரிச்சல் அடையத்தான் போகிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரான் இசைய்யில் பாடல்களும் பாடல் வரிகளும் படத்திற்கு கூடுதல் பலம். நிகரா தான் நிகரா பாடல் நெஞ்சை விட்டு நீங்காது நிற்கும். பேசுகிறேன் பேசுகிறேன்… மலரின் நறுமணம் பாடல்களும் ரசிக்கும் ரகமே.

காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

இயக்கம் பற்றிய அலசல்…

ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஐடி கம்பெனி பெண்கள் மற்றும் அவரது லைப் ஸ்டைல், டிரிங்ஸ் பார்ட்டி ஆகியவற்றை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழும் சில போலி மனிதர்களையும் ஜெராக்ஸ் எடுத்து காட்டியிருக்கிறார்.

பழக்கப்பட்ட அடிமையை (கணவன்களை) மனைவிகள் மன்னித்து விடுவார்கள் என்ற டயலாக் கைத்தட்டல்களை அள்ளும்.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. சீரியல் போல நாடகத்தன்மை இருக்கிறது. அதை குறைத்திருக்கலாம். ஒரே அட்வைஸ் மையமாக இருக்கிறது போன்ற உணர்வை தருகிறது.

ஆண் தேவதை.. அசத்தலான ஹவுஸ் ஹஸ்பெண்ட்

Aan devathai review rating

First on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5

First on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சினிமா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர்.

தமிழக முதல்வர் நாசர் ஒரு ஊழல் புகாரில் சிக்குகிறார். இதனால் பதவி விலக நேரிடுகிறது.

எனவே கட்சிக்கார்ர்களையும் தன்னுடன் இருக்கும் மந்திரிகளையும் நம்பாமல் 2 வாரத்திற்கு மட்டும் டம்மி CM ஆக தன் மகன் விஜய் தேவரகொண்டாவை நியமிக்க சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் எம்எல்ஏ.க்களும் ஆதரவு அளிக்க கவர்னர் முன் பதவி ஏற்கிறார்.

ஆனால் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

2 வார முடிவில், நாசருக்கு சிறை தண்டனை உறுதியாகுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் கலவரம் வெடிக்க, சட்டம் ஒழுங்கு கெடுகிறது.

அதன் பின்னர் தன் பொறுப்பை உணர்ந்து, மூத்த பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனை பேரில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார் விஜய்.

இதனால் முதல்வருக்கு நல்ல பெயர் மக்கள் மத்தியில் கிடைக்கிறது.

அதன் பின்னர் ஜாமீனில் வெளிவருகிறார் நாசர். அப்போது அவரை ஒரு கும்பல் கொல்ல திட்டமிடுகிறது.

அதில் இருந்து நாசர் தப்பித்தாலும் சுய நினைவை இழக்கிறார்.

அப்போது 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் வர, அதில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிறார் விஜய் தேவரகொண்டா.

அப்போது நாசருக்கு சுய நினைவு வந்தாலும் அதை தன் கட்சியிடமே மறைத்து பதவி ஏற்கிறார்.

மேலும் சில ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதே நடவடிக்கைகள் எடுக்கிறார்.

இதனால் நாசருக்கும் விஜய்க்கும் மோதல் உருவாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இதை எல்லாம் மீறி விஜய் நல்லது செய்தாரா? ஆட்சி என்ன ஆனது? நாசர் என்ன செய்தார்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இளைய முதல்வராக விஜய் தேவரகொண்டா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் முதல்வர் ஆகிறார். ஆனால் அதில் ஏமாற்றமே.. ரசிகர்களுக்கும்தான்.

மெஹ்ரீன், சஞ்சனா என 2 ஹீரோயின்ஸ் இருந்தும் படத்தில் ரொமான்ஸும் இல்லை.

சஞ்சனாவை ஆரம்பத்தில் கனிமொழி ரேஞ்சில் காண்பித்து அவரையும் டம்மியாக்கி விட்டார்கள்.

யாசிகா ஆனந்த் ஒரு காட்சியிலும் கருணாகரன் ஓரிரு காட்சியிலும் வருகிறார்கள். அவ்வளவுதான்.

பக்கா அரசியல்வாதியாக நாசர் அருமை. தனக்கான கேரக்டரில் நிறைவை தருகிறார். ப்ளாஷ்பேக் தவிர.

சத்யராஜ் கேரக்டரில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜஸ்ட் அட்வைஸ் மட்டும் செய்கிறார். அமைதிப்படை-யில் அல்வா கொடுத்தவருக்கு இப்படி ஒரு அவலநிலையா..?

எம்எஸ். பாஸ்கரின் கேரக்டர் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை நினைவு படுத்தும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முன்னேற முடியாது என்பது போல திமுக. வை நினைவுப்படுத்துகிறார்.

இதில் சத்யராஜுக்கு லவ் ப்ளாஷ்பேக் வேற. அதில் நாசருக்கும். ஆனால் எடுபடவில்லை.

தமிழக அரசியலையும், ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை சுற்றியே கதை நகர்கிறது.

கூவத்தூர், சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் ஒட்டுதல், ஜெயா மருத்துவமனையில் அனுமதி, ஆட்சி செயல்பாடு, ஊழல் இவற்றில் கவனம் செலுத்தி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.

சாம் இசையில் பாடல்களும் ரசிக்கும்படியாக இல்லை. மினிஸ்டர் பாடல் ஓகே ரகம். பின்னணி இசையும் சுமார்தான்.

கட்சி ஆபிஸ், அமைச்சர்கள், தொண்டர்கள் என எப்படி எல்லாமோ கெத்து காட்டியிருக்க வேண்டிய படத்தை லோ பட்ஜெட்டில் எடுத்துள்ளார் ஞானவேல்ராஜா.

முதல்வர் வருகிறார் என்றால் நூற்றுக்கணக்கான பேனர்கள் இருக்க வேண்டாமா..? பெயருக்கு பேனர்களை காட்டுகிறார்கள்.

கலவர காட்சி, ஊழல், சாமியார், ஆற்றங்கரையில் சாமியார் ஆக்ரமிப்பு என கதையை எங்கெங்கோ கொண்டு செல்கிறார்.

முக்கியமாக நோட்டா என்றால் என்ன.? ஆட்சியாளர்கள் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு ஓட்டுப் போன பயன்படுத்தும் ஆயுதம்தானே.. ஆனால் அதை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை.

நோட்டா… சாரி சி.எம். டாட்டா…

ராட்சசன் திரை விமர்சனம்

ராட்சசன் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – பி. வி. சங்கர்
எடிட்டர் – சான் லோகேஷ்.
தயாரிப்பு – ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ்
மக்கள் தொடர்பாளர் – சுரேஷ் சந்திரா, ரேகா

கதைக்களம்…

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” பட இயக்குனரும் நாயகனும் மீண்டும் இணைந்துள்ள படம். அதற்கு பிறகு நாயகன் பல படங்களில் நடித்துவிட்டாலும் டைரக்டருக்கு இதுதான் 2வது படம்.

ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என்ற சினிமா கனவுகளுடன் அலைகிறார் விஷ்ணு. அதிலும் ஒரு சைக்கோ திரில்லர் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என பல வருடங்களாக முயற்சிக்கிறார்.

இப்படியே வேலை தேடிக் கொண்டிருந்தால் என்ன ஆவது.? பேசாமல் என்னைப் போல் நீயும் போலீஸ் ஆகிவிடு என்கிறார் விஷ்ணுவின் அக்கா கணவர் முனீஷ்காந்த்.

அதன்படி எஸ்.ஐ. ஆன சில நாட்களிலேயே விஷ்ணுவுக்கு ஒரு கேஸ் மாட்டுகிறது.

அதாவது 16 வயது பள்ளி சிறுமிகள் அடுத்தடுத்து கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். கொல்வது மட்டுமில்லாமல் அவர்களின் உடல்களை பொதுவெளியிலேயே கட்டி வைத்து செல்கிறார் அந்த மர்ம நபர்.

இது தனக்கான கேஸ் என்பதால் அதிக ஆர்வம் கொண்டு கொலைக்காரனை தேடுகிறார் விஷ்ணு. ஆனால் இவரின் உயரதிகாரியான சூசன் இவரின் எல்லா செயலுக்கும் தடை போடுகிறார்.

ஒரு கட்டத்தில் தன் அக்கா மகளே கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இனியும் தாமதித்தால் சரி வராது என்பதால் விஷ்ணுவே அதி தீவிரமாக களம் இறங்குகிறார்.

ஆனால் இவரை காவல் துறை 3 மாதம் சஸ்பெண்ட் செய்கிறது. அதன்பின்னரும் ஒரு பள்ளி சிறுமி கடத்தப்படுகிறார்.

சஸ்பெண்ட் ஆன விஷ்ணு என்ன செய்தார்? அந்த சிறுமி கொலையை தடுத்தாரா? பணியில் சேர்ந்தாரா? அல்லது டைரக்டர் ஆனாரா? கொலைக்காரன் யார்? அவனது நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

இதுநாள் வரை விஷ்ணு சில படங்களில் நடித்திருந்தாலும் ஜாலியாக வந்து செல்வார். ஆனால் இதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப ராட்சசன் அவதாரம் எடுத்துள்ளார்.

எந்த செயலை செய்தாலும், ஒரு நிதானத்துடன் செய்வது அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

இந்த விறுவிறுப்பான படத்தில் ரொமான்ஸ் குறைவு என்பதால் அமலா பாலுக்கு அவ்வளவு வேலையில்லை. ஆனாலும் சேலையில் அழகான டீச்சராக வந்து செல்கிறார்.

காமெடியனாக கலக்கிய முனீஷ்காந்த் இதில் குணச்சித்திர ஆர்ட்டிஸ்டாக புரமோசன் பெற்றுள்ளார். தன் இறந்த மகள் உடல் பார்த்த பின்னர் இவர் கதறி அழுவதும், தன் மனைவிக்கு தெரியாமல் அதே இடத்தில் சமாளிப்பதும் செம.

சைக்கோ கில்லரை நெருங்கிய நேரத்தில் காளி வெங்கட் காட்டும் ரியாக்சன் நச்.

ராதாரவி மற்றும் நிழல்கள் ரவி சில காட்சிகளிலேயே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மிரட்டல் உயர் போலீஸ் அதிகாரியாக மைனா புகழ் சூசன் நடித்துள்ளார். தன் கீழ் உள்ள அதிகாரிகளை சூசன் மிரட்டும்போது நமக்கே எரிச்சல் வரும்.

பள்ளி மாணவிகளை தன் காம இச்சைக்கு பயன்படுத்தும் அந்த ஆசிரியரை கண்டால் அந்த இடத்தில் நமக்கே சுட்டுத் தள்ள தோன்றும். அதை போலீஸ் விஷ்ணு செய்யும் போது தியேட்டரில் விசில் சவுண்ட் பறக்கிறது.

பேபி மோனிகா, கடத்தப்படும் மற்ற சிறுமிகள் அந்த பள்ளி மாணவிகள் அனைவரும் கச்சிதம்.

அந்த சைக்கோ கில்லரும் அவரின் முகமும் கொடூரத்தின் உச்சம். ஒவ்வொருவராக அவன் கொலை செய்வதும் போலீசிடம் இருந்து தப்பிப்பதும் செம ட்விஸ்ட். க்ளைமாக்ஸ் பைட்டும் அவன் செய்யும் மேஜிக்கும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

ஒரு காட்சியில் கருணாகரன் வருவார்? ஏன் என்பதுதான் தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் நானும் ஒரு ஹீரோதான் என இசையமைப்பாளர் ஜிப்ரான் உறுதியாக சொல்லிக் கொள்ளலாம்.

பியானோ மியூசிக் முதல் இவர் போட்டுள்ள ஒவ்வொரு ட்யூனும் அந்த திக் திக் மியூசிக்கும் நம்மை பயமுறுத்தும். பாடல்களை விட பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார்.

பி.வி. சங்கரின் ஒளிப்பதிவில் பள்ளி காட்சிகளும் சேஸிங் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் ரகம். முதல் பாதி வரை சைக்கோ யார்? என்பதே தெரியாமல் கதை நகர்கிறது.

எனவே 2ஆம் பாதியில் தான் அனைத்தும் சொல்லப்படுகிறது. கொஞ்சம் நீளமாக இருந்தாலும் அதிகபட்ச ட்விஸ்ட்கள் இருப்பதால் அதையும் ரசிக்க முடிகிறது.

ஆனால் இன்று படம் வெளியாகும் நாளில் 15 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களுக்கு எந்த காட்சியும் போரடிக்க வாய்ப்பில்லை. சபாஷ் எடிட்டர் சான் லோகேஷ்.

முண்டாசுப்பட்டி டைரக்டரா இவர். முதல் படத்தில் கிட்டதட்ட சைவ உணவை கொடுத்த ராம்குமார் 2ஆம் படத்தில் அன் லிமிடட் அசைவ உணவை சுவையாக கொடுத்துள்ளார்.

கொலையாளி இவரா? அவரா? என ரசிகர்களை சீட் நுனியிலே உட்கார வைத்துவிட்டார். ரசிகர்களும் அசையாமல் இந்த ராட்சசனை ரசிக்கலாம்.

ராட்சசன்… ரசனை அரசன்

Ratchasan aka Ratsasan review rating

இதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்

இதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர்.
இசை –கோவிந்த் வஸந்த்
ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு & சண்முக சுந்தரம்,
எடிட்டர் – கோவிந்தராஜ்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்
மக்கள் தொடர்பாளர் – மௌனம் ரவி
வெளியீடு – 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் லலித்குமார்


கதைக்களம்…

விஜய்சேதுபதி கேரக்டர் பெயர் ராமசந்திரன் என்ற ராம். த்ரிஷாவின் கேரக்டர் ஜானகி தேவி என்ற ஜானு.

இவர்கள் இருவரும் கேரக்டர்களே வாழ்ந்து விட்டார்கள் என்பதால் கேரக்டர் பெயரிலேயே விமர்சனத்தை தொடங்குவோம்.

டிராவல் போட்டோகிராபர் ராம். ஊர் ஊராக சென்று தனக்கு பிடித்த காட்சிகளை படம் பிடிக்கிறார். இவருடன் சில மாணவிகளும் வருகிறார்கள்.

ஒரு நாள் தன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று படம் பிடிக்கிறார்.

அப்போது, தான் 96ஆம் ஆண்டில் படித்த பள்ளிக்கும் செல்கிறார். (அதாவது கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளி அது). அங்கு அதே வாட்ச் மேன் ஜனகராஜையும் சந்திக்கிறார்.

ராமுக்கு பழைய நினைவுகள் வரவே, நண்பர்களுடன் அலைபேசியில் பேசுகிறார். எனவே ஒரு நாள் எல்லாரும் சந்திக்க நினைக்கின்றனர்.

அதன்படி சென்னையில் ஒருநாள் சந்திக்க ஏற்பாடு நடக்கிறது. எல்லாரும் அங்கே வருகிறார்கள்.

ராமுக்கு நெருக்கமான ஜானுவும் சிங்கப்பூரில் இருந்து வருகிறார். அந்த ஒரு நாளில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் காவியமே இந்த 96. அந்த காதலை இப்போது எப்படி கொண்டாடினார்கள்? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

போலீஸ், டாக்டர், தாதா, பொறுப்பற்ற மனிதர், குடிகாரர் என பல படங்களில் விஜய்சேதுபதியை பல கோணங்களில் பார்த்திருப்போம். இதில் 40 வயதில் ஒரு லவ்வர் பாயாக பார்க்க முடிகிறது.

20 வயதில் மட்டும்தான் காதல் இருக்குமா என்ன? 40 வயதில் காதல் எப்படி இருக்கும் என பாடமே நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி.

டேய் நீ ஆம்பள நாட்டுக்கட்ட என்றும் டேய் இன்னும் நீ கன்னி பையனா? என த்ரிஷா இவரிடம் கேட்கும்போது விஜய்சேதுபதி வெட்கப்படும் அழகை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

தளபதி படத்தில் இடம்பெற்ற யமுனை காற்றினிலே பாட்டை பாட சொல்லி த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி கேட்கும் ஒவ்வொரு காட்சியும் இறுதியாக த்ரிஷா பாடும் அந்த காட்சியும் கொள்ளை அழகு.

காதலி ஜானுக்காக ஏங்குவது, அவள் உபயோகித்த ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பாக எடுத்து வைத்திருப்பது என மனிதர் வேற லெவல்.

விஜய்சேதுபதியின் இதயதுடிப்பு சத்தம் லப் டப் லப் டப் என அடிக்கும்போது நம் ஹார்ட் பீட்டூம் நிச்சயம் எகிறும்.

22 வருடத்திற்கு தன் ஜானுவை சந்திக்கும்போது விஜய்சேதுபதி கொடுக்கும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷனையும் ப்ரேம் போட்டு வச்சிக்க தோனும். சபாஷ் சார்.

த்ரிஷாவை காட்டி விஜய்சேதியிடம் அவர் மாணவி வர்ஷா.. சார் அது உங்க ஒய்ப்..? என்று கேட்கும்போது விஜய்பேதுபதி காட்டும் முகபாவனை மெர்சல் பீலீங்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக கலக்கியிருப்பார் த்ரிஷா. இனி ஜானு கேரக்டரே நிலைத்து நிற்கும் என்ற லெவலில் அசத்தியிருக்கிறார்.

+2 பையன் ஹேர் ஸ்டைலில் தன்னுடைய பழைய ராமை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாகட்டும், 22 வருடத்திற்கு பிறகு ராமை தேடும் கண்களாகட்டும் த்ரிஷாவை மிஞ்ச ஆளில்லை.

ஒட்டுமொத்த காதலையும் மனதுக்குள் வைத்துக் கொண்டு த்ரிஷா வாரி வாரி வழங்கிய நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ராம் ரொம்ப நல்லவரு. எனக்கு தெரியும். ஆனா எப்படி பாத்துக்கிறது? என த்ரிஷா கலங்கும் காட்சியில் நிச்சயம் காதலர்கள் கலங்கித்தான் போவார்கள்.

காதலை சொல்ல ராம் கல்லூரிக்கு வந்த கதையை தெரிந்த நாளாகட்டும், தன் திருமணத்திற்கு வந்த செய்தியை தெரிந்த நிமிடங்களாகட்டும் என்னா ஒரு நடிப்பு த்ரிஷா. ஹேட்ஸ் ஆஃப்.

விஜய்சேதுபதியின் மனைவியாக நினைத்து த்ரிஷா காதலை சொல்லும் அந்த நிமிடங்கள் போதும் அவரின் நடிப்புக்கு.

இளவயது விஜய்சேதுதியாக ஆதித்யன் என்பவர் நடித்திருக்கிறார். இவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன். இளவயது த்ரிஷாவாக கௌரி என்பவர் நடித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா காதலைப் போல இவர்களின் காதலும் காவியம். நட்பா? காதலா என்ற தெரியாத இளவயதில் இவர்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு முகபாவனைகளும் நடிப்பில் உச்சம்.

ஜானு பள்ளிக்கு வராத நாட்களில் ராம் படும் பாடு நமக்கே படு அவஸ்தையாக இருக்கும். டேய் காதலை சொல்லுடா என நம்மையும் படாத பாடு படுத்தி லப் டப்பை எகிற செய்துவிடுகிறார்.

அதுபோல் இளவயது தேவதர்ஷினியாக நடித்திருக்கும் அந்த பெண்ணும் அருமையான தேர்வு. அசல் தேவதர்ஷினி போன்றே இருக்கிறார்.

ராமின் நண்பர்களாக வரும் அவர்களும் கச்சிதம். வாட்ச் மேன் ஜனகராஜ் சில காட்சிகளிலே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோவிந்த் வஸந்தாவின் இசையில் பாடல்கள் இதயத்தை வருடி செல்கிறது.

ஏற்கெனவே ”காதலே காதலே.. தனிப்பெருந் துணையே . “ பாடல் பலரின் ரிங் டோனாக மாறிவிட்டது. வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில் தினம் ஒலிக்கிறது. (ஹி…ஹி.. என்னுடைய ஸ்டேட்டசும் அதான்)

வசந்த காலங்கள் கசந்து போனதே என்ற பாடல் வரிகள் பலரின் மனதை நிச்சயம் தொந்தரவு செய்யும்.

பாடல்களை தனியாக இல்லாமல் கதையோடு பயணம் செய்ய செய்தமைக்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முக சுந்தரம் இருவரின் ஒளிப்பதிவு படத்தின் காதல் ஓட்டத்திற்கு கை கொடுத்துள்ளது.

நாம் பல படங்களில் பார்த்த சென்னையை இதில் பார்க்காத சென்னையாக கொடுத்திருக்கிறார்கள்.

கேமராவை வைத்துக் கொண்டு விஜய்சேதுபதி சுற்றும் அந்த ஆரம்ப பாடல் காட்சிகள் அனைத்தும் அருமை. இனி எத்தனை பேர் இப்படி எல்லாம் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட போகிறார்களோ? தெரியவில்லை.

தேவையான கலை மற்றும் தேவையான காட்சிகள் என கலை இயக்குனரும் எடிட்டரும் பாராட்டை பெறுகிறார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமாருக்கு இயக்கத்தில் இதுதான் முதல் படம்.

நிச்சயம் அவரும் காதல் வயப்பட்டு இருப்பாரோ? என நினைக்கத் தோன்றுகிறது. ரசிகர்கள் ரசிக்க ரசிக்க அவர் ரசித்துக் கொடுத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு பல மாணவர்கள் தாங்களும் ரீயுனியன் பார்ட்டி வைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பள்ளி நாட்களில் ஜானு பாடும் ஒவ்வொரு பாட்டையும் தேர்ந்தெடுத்த டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரேம் குமார் பெயரை ஃபிரேம் போட்டு வைக்க இந்த படம் ஒன்று போதும். வாழ்த்துக்கள் ப்ரோ. இன்னும் தொடர வேண்டுகிறோம்.

விஜய்சேதுபதி, த்ரிஷா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க 96 படத்தை பரிந்துரை செய்யலாம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காதல் ஜோடிகளில் விஜய்சேதுபதி த்ரிஷா பெயர் நிச்சயம் இந்த 96 படம் மூலம் இடம்பெறும்.

எத்தனையோ படங்களுக்கு பார்ட் 1 பார்ட் 2 வருகிறது. இந்த 96 படத்துக்கும் அடுத்த பார்ட் எடுக்க வேண்டும் என பிரேம் குமாருக்கு ரசிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

96… இதயத் துடிப்பை எகிற செய்யும் காவியம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, ஹரி ஜானி, லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேஷ் மற்றும் பலர்.
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்
எடிட்டர் –
தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ் டைரக்டர் ரஞ்சித்
மக்கள் தொடர்பாளர் – குமரேசன்

கதைக்களம்…

கருப்பி என்ற நாயை வளர்த்துக் கொண்டு புளியங்குளம் கிராமத்தில் ஜாலியாக நண்பர்களுடன் வேட்டைகளுக்கு சென்று திரிகிறார் பரியேறும் பெருமாள் கதிர்.

இவர்கள் சாதியின் மேல் உள்ள வெறியில் கருப்பி என்ற நாயை உயர் சாதியினர் கொன்றுவிடுகின்றனர்.

ஒருமுறை வேட்டைக்காக சென்ற போது போலீஸில் மாட்டிக் கொள்கின்றனர் கதிர் மற்றும் அவரது நண்பர்கள்.

அப்போது இவர்களுக்கு உதவ சூப்பர் குட் சுப்ரமணி ஒரு வருகிறார். நீ என்னடா வக்கீலா.? என்னை கேள்வி கேட்கிறாய்? என அவரை அடித்து விடுகிறார் போலீஸ்.

அப்படி என்றால் போலீசை தட்டிக் கேட்க நீ வக்கீலாக வேண்டும் என கதிருக்கு அறிவுரை கூறுகிறார் சூப்பர் குட் சுப்ரமணி. அதன்படி தன் கிராமத்து அருகில் இருக்கும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சேர்கிறார் கதிர்.

அங்கு சக மாணவன் யோகிபாபு மற்றும் ஆனந்தி பழக்கமாகின்றனர். கதிரின் அப்பாவித்தனத்தால் ஆனந்திக்கு அவர் மேல் காதல் வருகிறது.

இதை தெரிந்துக் கொள்ளும் ஆனந்தியின் அப்பா கதிரை ஆள் வைத்து அடிக்கிறார்.

மேலும் கீழ் சாதியின் காரணமாக கதிருக்கு அடிக்கடி எல்லா வகையிலும் தொந்தரவு கொடுக்கிறார் ஆனந்தியின் அண்ணன் லிஜீஸ்.

கதிரை தீர்த்துக் கட்ட கராத்தே வெங்கடேஷ் என்பவரிடம் பணம் கொடுக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? கதிர் எப்படி தப்பித்தார்? ஆனந்தியை கரம் பிடித்தாரா? வக்கீல் ஆனாரா? தன் சாதியினைரை காப்பாற்றினாரா? என்பதே பரியேறும் பெருமாள்.

கேரக்டர்கள்…

கதிர் ஆனந்தி இருவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும்.

ஒரு கிராமத்து இளைஞராக வாழ்ந்திருக்கிறார் கதிர். ஆங்கிலம் தெரியாத காரணத்தால் மாணவர்களிடம் அவமானப்படும் போதும், அம்மா மேல சத்தியம் என கூறும்போது, சாதியால் துவண்டு பின்னர் வெகுண்டு எழும்போது கதிர் கைத்தட்டல்களை அதிகம் வாங்குகிறார்.

காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பெயரெடுப்பார் யோகிபாபு. தன் பங்களிப்பை சரியாக செய்துள்ளார்.

ஆங்கில C லெட்டரில் சில வார்த்தைகள் சொல்லு என ஆசிரியர் இவரை கேட்கும்போது சின்ன C பெரிய C என இவர் கேட்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. எங்க அப்பா கவுன்சிலர் நான் க்ளாஸ் விட்டு போகனுமா? என நக்கல் பேசி நம்மை அதிகம் கவர்கிறார்.

இப்படி ஒரு தோழி நாம் படிக்கும்போது (சிலருக்கு) கிடைக்கவில்லையே என ஏங்க வைப்பார் ஆனந்தி. பரியனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என அப்பாவிடம் கூறும்போதும், தன் அப்பா முன்னிலையில் காதலனிடம் பேசும்போது ஒரு யதார்த்த நடிப்பை அள்ளி கொடுத்திருக்கிறார்.

மிரட்டலான அப்பாவாக மாரிமுத்து. தன் மகளுக்கு தெரியாமல் மகளிடம் நல்லவனாக நடித்து இவர் காட்டும் மிரட்டல் தனம் அருமை.

கராத்தே வெங்கடேஷ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மற்றொரு வில்லன். வயதானவராக இருக்கிறாரே என்று பார்த்தால் மிரட்டியிருக்கிறார். நிச்சயம் இவரை பார்ப்பவர்கள் திட்டாமல் இருக்க மாட்டார்கள்.

ஆனந்தியின் அண்ணனாக லிஜீஸ். யார்ரா இவர் என்று? நிச்சயம் ரசிகர்களை கேட்க வைப்பார். கதிரின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சியில் ஜாதி வெறிக் கொண்டவராகவும் சீனியர் மாணவராகவும் கெத்து காட்டியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ரசிக்கும் ரகம். கிராமத்து ராகத்தை கலந்து கொடுத்திருக்கிறார். எங்கும் புகழ் பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலாக இருக்கும்.

கருப்பி நாய் படத்தின் முதல் காட்சியிலே இறந்துவிடுகிறது. அதன்பின்னர் ஒரு பாடல் வருகிறது. சாரி. அது பாடல் இல்லை. கத்தி கத்தி படித்திருக்கிறார்.

உன் மூக்கில் உரசனும். உன் நாக்கால் நக்கி என் அழுக்கை போக்கனும் என்றெல்லாம் பாடல் வரிகள் வருகிறது. ஒரு வேளை நாயை பிடித்தவர்களுக்கு அந்த பாடல் பிடித்திருக்கலாம்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அனைத்தும் அருமை. முக்கியமாக க்ளைமாக்ஸில் டீ க்ளாஸை வைத்து சாதி பிரிவினையை சொல்லியிருக்கிறார்.

ஆனால் சில கல்லூரி காட்சிகளில் (யோகிபாபு பல் குத்தும் காட்சி க்ளோஸ்அப் சார்ட்) தேவையில்லாமல் கேமராவை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். (ஒருவேளை கேமரா மேனுக்கு கை வலித்திருக்குமோ.?)

ஒரு காட்சியில் காலா ஸ்டைலில் கலர் பூசியிருக்கிறார் டைரக்டர். நாயின் மீதும் கதிரின் மீது நீல பவுடர்களை பூசி புது வண்ணம் கொடுத்திருக்கிறார். இது ரஞ்சித் பார்முலாவாக இருக்கும்.

கல்லூரியில் பல நிகழ்வுகள் இருக்கும். முக்கியமாக கலை நிகழ்ச்சிகள். ஆனால் அதுபோன்ற காட்சிகளே இல்லை. சாதியினை காட்டியே காட்சிகளை நகர்த்துகிறார் மாரி செல்வராஜ்.

நாயகன் கதிர் டீமுக்கு கானா எல்லாம் அருமையாக வருகிறது. அதில் ஒன்றை கொடுத்து அவரை உயர்த்துவதாக கொடுத்திருக்கலாம். ஆனால் கடைசிவரை சாதியை காட்டியுள்ளனர். முக்கியமாக நட்பாக பழகும் மாணவர்கள் சாதியை பார்ப்பதில்லை. நல்ல நண்பர்களுக்கு இன்று வரை சாதியே தெரியாது என்பதுதான் உண்மை. அதுபோல நட்பை உயர்த்தியிருக்கலாம்.

கதிரை ஒருவர் கொல்ல முயன்று ரயில் ட்ராக்கில் கிடத்தி இருப்பார். டிரெயின் வந்துக் கொண்டிருக்கும். அப்போது இறந்துபோன கருப்பி நாய் வந்து நக்குவதாகவும் கதிர் விழித்துக் கொள்வதாகவும் காட்சிகள் இருக்கும். அட்லீஸ்ட் அப்போது மழை வந்திருக்கலாம். அல்லது வேறு ஒரு நாயை வைத்து நக்க விட்டு இருக்கலாம். ஆனால்…?????

சாதி கொடுமை இன்னும் பல கிராமங்களில் இருக்கிறது உண்மைதான். சாதி இல்லாத உலகம் வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசையும்.

ஆனால் அதையே தொடர்ந்து ரஞ்சித் (இதில் தயாரிப்பாளர்) படமாக்கி கொண்டிருப்பது ஏனோ? கொஞ்சம் கேப் விடுங்க சார்? ஒரே மாதிரியாக இருந்தால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும்.

சாதி பிரிவினையை எடுத்து அதை கல்லூரி பருவத்துடன் கலந்து கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். கதைக்கு ஏற்ற நட்சத்திரங்களை கொண்டு அதை திறம்படவும் செய்திருக்கிறார். அதற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.

பரியேறும் பெருமாள்… சாதியை வெறுப்பவர்களுக்கு சமர்ப்பணம்

First on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

First on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, அதிதிராவ், டயானா எரப்பா மற்றும் பலர்.
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – சந்தோஷ்சிவன்
எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பாளர் – நிகில் முருகன்
தயாரிப்பு – மெட்ராஜ் டாக்கீஸ் மணிரத்னம், லைகா சுபாஸ்கரன்
வெளியீடு – லைகா

கதைக்களம்…

சேனாபதி என்றழைக்கப்படும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள்.

முதல் மகன் அரவிந்த்சாமி, 2வது மகன் அருண்விஜய், 3வது மகன் சிம்பு.

அரவிந்த்சாமி மனைவி ஜோதிகா. அவரது கள்ளக்காதலி அதிதிராவ்.

அரவிந்த்சாமியின் பள்ளி தோழர் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரி.

அருண்விஜய் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ். (இலங்கை பெண்)

சிம்பு திருமணமாகதவர். அவரது காதலி டயானா எரப்பா.

செக்கச் சிவந்த வானம் ஹீரோயின் டயானா எரப்பா பயோ டேட்டா

அரசாங்கத்தையும் மெட்ராஸ் சிட்டியையே தன் கைக்குள் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ்.

ஒரு முறை இவர் கோயிலுக்கு சென்றுவரும்போது இவரை கொல்ல ஒரு கும்பல் வருகிறது. அதிலிருந்து தப்பி விடுகிறார்.

எனவே 3 மகன்களும் அந்த கும்பலை தேடி அலைக்கின்றனர். ஆனால் பிரகாஷ்ராஜீக்கோ சந்தேகம் தன் மகன்கள் மீது விழுகிறது. இதை தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மரணமடைகிறார்.

அதன்பின்னர் தந்தையின் டான் இடத்தை அடைய 3 மகன்கள் இடையே போட்டி எழுகிறது. அப்படியென்றால் தந்தையை கொல்ல முயற்சித்தவர் யார்? யார் அந்த இடத்தை அடைந்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் மிக மிக அரிது. அப்படியே இருந்தாலும் 2 ஹீரோக்கள் சப்ஜெக்ட் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால் நான்கு ஹீரோக்களை வைத்து நாலு திசையும் பேச வைத்துவிட்டார் மணிரத்னம்.

அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி இவர்களில் எவரையும் குறை சொல்ல முடியாத படி வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர்.

ஹீரோயின் டயானா எரப்பா கவர்ச்சி படங்கள்

தந்தை இடத்தை அடைய 3 மகன்கள் அடிக்கும் ஒவ்வொரு ஸ்டண்ட்டும் ரசிக்க வைக்கிறது. யார்? அந்த இடத்திற்கு வருவார்கள்? என்ற பரபரப்பு நம்மை படம் முடியும் வரை தொற்றிக் கொள்கிறது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் சென்டின்மெண்டையும் கொடுத்து கவர்கிறார்.

அப்பாவுக்கு பிடிக்காத பையனாக சிம்பு வந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்துவிடுவார். காதலைப் பற்றி சிம்பு பேசினாலே தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. அது எல்லாருக்கும் கிடைக்காத ஒன்று. அதிதிராவை மிரட்டும் காட்சியில் அவர் பேசும் வசனம் சிம்பு ஸ்டைல்.

ஸ்டைலிஷ் லுக்கில் அருண்விஜய் அசத்தல். அப்பா இடத்தில் உட்கார ஆசைப்பட்டு அவர் அமரும் ஸ்டைலே அழகுதான்.

விஜய்சேதுபதி வரும் காட்சிகள் எல்லாம் காமெடி கலாட்டாதான். நக்கலாக பேசி பேசி நம்மை கவர்ந்துவிடுகிறார். க்ளைமாக்ஸில் ரசூல் இப்ராஹீமாக ஜொலிக்கிறார் விஜய்சேதுபதி.

ஒரு டான், ஒரு தந்தை என இரண்டிலும் தன் பக்குவப்பட்ட நடிப்பில் கவர்கிறார் பிரகாஷ்ராஜ். இவரைப் போலவே ஜெயசுதாவும் அமைதியான அம்மா வேடத்தில் ஈர்க்கிறார்.

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

இதுவரை இல்லாத வில்லன் வேடத்தில் தியாகராஜன். வித்தியாசமான கெட்அப். இவர்தான் எல்லாத்துக்கும் காரணமோ? என்ற சந்தேகத்திலேயே கதையை நகர வைத்துள்ளார்.

மன்சூர் அலிகான் பெரிதாக வேடம் இல்லை என்றாலும் மனதில் நிற்கிறார்.

நாயகிகள் நால்வர் என்றாலும் அதிக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா. தந்தை, மாமனார், மாமியார், கணவர் என அனைவரிடத்திலும் இவர் நடந்து கொள்ளும் விதங்கள் அருமை.

இலங்கை பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். இனிக்க இனிக்க தமிழ் பேசி செல்கிறார். இவரது முடிவு அனுதாபம்.

அரை குறை ஆடையில் வந்து அடேங்கப்பா என ஏங்க வைக்கிறார் அதிதி ராவ். டயானா எரப்பா சில காட்சிகளே என்றாலும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மணிரத்னம் படங்கள் என்றாலே மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும்தான். இரண்டிலும் குறையே காண முடியாத அளவுக்கு செம.

பின்னணி இசையில் நம்மை அதிகம் ஈர்க்கிறார். தனிதனி பாடலாக இல்லாமல் படத்துடன் பாடலை ஒன்ற வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. கீச் சீச் பாடல் ரசிகர்களின் நெஞ்சை கீறிக் கொண்டே இருக்கும். வைரமுத்து வரிகள் பாடலுக்கு அதிகம் மதிப்பூட்டுகிறது.

பிரகாஷ்ராஜின் வீடு, குடோன், துபாய் நாடு அழகு, விஜய்சேதுபதி வீடு என அனைத்தையும் முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியிலும் சந்தோஷ்சிவனின் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

சிம்பு விஜய்சேதுபதி பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக சிறப்பு. இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தால் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கும்.

பொதுவாக கேங்ஸ்டர் படம் என்றால் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். அண்ணனுக்காக தம்பி செய்வது, குடும்பத்திற்காக செய்வது என பல கதைகளை நாம் பார்த்துருப்போம்.

ஆனால் ஒரே குடும்பத்தில் 3 மகன்களின் கேங்ஸ்டர் கதை. அப்பாவின் இடத்துக்கு ஆசைப்பட்டு மகன்கள் செய்யும் ஒவ்வொன்றையும் ஃப்ரேம் பை ஃப்ரேம் ரசிக்க வைத்துவிட்டார் மணி சார்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2 பாதியில் குறைந்துவிடுகிறது. இதனால் கொஞ்சம் சோர்வு ஏற்படுகிறது.

கேங்ஸ்டர் கதை என்றாலும் அருவா இல்லாமல் துப்பாக்கியுடன் விளையாடியிருக்கிறார்.

அரவிந்த்சாமி மனைவி ஜோதிகா மற்றும் கள்ளக்காதலி அதிதிராவ் சந்திக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் மணிரத்னம் டச்.

க்ளைமாக்ஸை நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதில் ஹீரோயிசத்தை உடைத்து டைரக்டர் ஜெயிக்கிறார்.

செக்கச் சிவந்த வானம்… மணி மகுடத்தில் நாலு நட்சத்திரங்கள்

Chekka Chivantha Vaanam Review (VIDEO)

More Articles
Follows