மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன், சனத் ரெட்டி மற்றும் பலர்
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: திரு
எடிட்டிங்: விவேக் ஹர்சன்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: பென் மூவீஸ்

கதைக்களம்…

இந்த படத்தில் வசனங்களே இல்லை என்பதுதான் செம ஹைலைட். இப்படியொரு கதைக்களத்தை தேர்ந்தெடுப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். எனவே படக்குழுவிற்கு முதலிலேயே பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

படத்தின் நாயகன் பிரபுதேவா கண் பார்வையற்ற ஒரு கிடார் கலைஞர்.

திகில் படங்கள் என்றாலே காடு இல்லாமல் இருக்குமா..? அந்த மலைக்காட்டில் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார் பிரபுதேவா.

ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவருக்கு என்ன ஆனதோ? என்று தெரியாமல் வாழ்கிறார் ரம்யா.

மற்றொரு புறம் மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா, தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் ஆகிய 4 ப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள்.

இவர்கள் நால்வரும் ஒரு தனி வீட்டில் வாழ்கிறார்கள்.

இவர்கள் ஒரு நாள் வெளியே செல்லும்போது வழியே ஒரு சடலம் கிடக்கிறது. எனவே அந்த பிணத்தை புதைக்கிறார்கள்.

பின்னர் அதே இடத்திற்கு வேறு ஒரு பொருளை தேடுவதற்கு போகும்போது சடலத்தை புதைத்த இடத்தில் காணாமல் தேடுகிறார்கள்.

இதனிடையில் இந்துஜாவையும் காணவில்லை. இவர்களை தேடி செல்லும் போது ஒரு அமானுஷ்யத்தை பார்க்கிறார்கள்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது? கொன்றது யார்? இந்துஜா என்ன ஆனார்? என்பதுவே மீதி கதை.

கேரக்டர்கள்…

நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் பிரபுதேவா. பார்வையாலேயே கதை சொல்கிறார். கண்கள் முதல் உடல் என அனைத்தையும் நடிக்க செய்திருக்கிறார்.

இவர் எப்படி கண்பார்வையை இழந்தார் என்பதற்கே ஒரு ப்ளாஷ்பேக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ரம்யாவுக்கு கேமியோ ரோல் மட்டுமே. கிடைத்த பணியை செய்திருக்கிறார்.

மேயாத மானில் அசத்திய இந்துஜா இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ப்ரெண்ட்ஸ் என்றால் பேசாமல் இருக்க முடியுமா? அப்படியிந்தும் நால்வரும் பேசாமல் இருந்து நடிப்பை பேச வைக்க முயற்சித்துள்ளனர். சபாஷ்.

இவருடன் தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என நண்பர்களின் நடிப்பும் கச்சிதம்.

இவர்களுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது என்பதும் படத்தின் கதைக்களத்திற்கு ப்ளஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் வசனங்கள் இல்லையென்றால் அந்த காட்சிக்கு பின்னணி இசையே உயிரூட்டும்.

அதை சிறப்பாக படம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டல்.

திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். சவுண்ட் டிசைன் மற்றும் கலை பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
கமல் நடித்த பேசும் படம் என்ற படத்திற்கு பிறகு டயலாக் இல்லாமல் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

க்ளைமாக்ஸ் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதல்பாதியில் வரும் சோர்வை தடுத்திருக்கலாம்.
முக்கியமான படத்தின் நீளத்தை குறைத்திருப்பது ரசிக்கும் ரகம்.

கார்ப்பரேட்டின் கம்பெனிகளின் கழிவுகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்கிறார் டைரக்டர்.
கார்ப்பரேட்டு கம்பெனிகளால் பாதிக்கப்பட்டோருக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்துள்ளனர்.

மெர்க்குரி.. வித்தியாசமான முயற்சி

கேணி விமர்சனம்

கேணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயப்ரதாவின் கணவர் கேரளாவில் உயர் பதவியில் உள்ளார். அவருக்கு தமிழ் நாட்டின் எல்லையில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் உள்ள கிணற்றில் வற்றாத அளவுக்கு எப்போதுமே தண்ணீர் இருக்கும்.

அந்த கிணற்றை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் இருமாநில சில அரசியல்வாதிகள், அவர் மீது ஒரு பழியை சுமத்தி சிறையில் அடைக்கின்றனர்.

சிறையில் மாரடைப்பால் அவர் இறந்துவிடுகிறார்.

எனவே அவருடைய கடைசி ஆசையின் படி அந்த கிராமத்து வருகிறார் ஜெயப்ரதா.

Keni-movie-stills-15

 

அப்போது அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவ நினைக்கிறார்.

இதற்கு ஊர் தலைவர் பார்த்திபன், அனுஹாசன், ரேவதி, நாசர் உள்ளிட்ட பலரும் உதவ வருகின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகளால் இந்த பிரச்சினை கோர்ட் வரை செல்கிறது.

எனவே கோர்ட் வரை தனியாக சென்று போராடுகிறார் ஜெயப்ரதா.

இறுதியில் அவரின் ஆசை நிறைவேறியதா? இரு மாநில பிரச்சினைகள் என்னானது? ஊர் மக்கள் என்ன செய்தார்கள்? கோர்ட் தீர்ப்பு என்ன? என்பதே நீதி மன்றம் சொல்லும் மீதிக்கதை.

DWX4uT_U8AAXFJZ

 

கேரக்டர்கள்..

படம் முழுக்க ஜெயப்ரதா போராட்டம்தான். முகத்தில் வயது தெரிந்தாலும் நடிப்பில் இளமையில் பார்த்த அதே முதிர்ச்சி தெரிகிறது.

ஊர்த்தலைவர் பார்த்திபன் நக்கல் கலந்த பேச்சு ரசிக்க வைக்கிறது. இவர் சாம்ஸ், பிளாக் பாண்டி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

நாசர், ரேவதி, ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், அனுஹாசன், தலைவாசல் விஜய், ஆகியோர் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

Keni-movie-stills-61

 

தொழில்நுட்ப கேரக்டர்கள்..

சாம் சி.எஸ் இசையில் எஸ்பிபி, ஜேசுதாஸ் பாடும் அய்யாச்சாமி பாடல் அருமை.

படத்தை முழுவதும் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரது கேமரா கண்களில் காட்சிகள் அனைத்தும் இயற்கையை வியக்க வைக்கிறது.

முதல்பாதியில் சொல்லப்பட்ட தீவிரவாதிகள் கதை, இரண்டாம் பாதியில் என்ன ஆனது? என்று காட்டவில்லை.

கோர்ட் தீர்ப்பில் இயக்குனர் நிஷாத் உயர்ந்து நிற்கிறார்.

அனுஹாசன் கிராமத்து பெண் போல பேச முயற்சித்தாலும் அவரின் முதிர்ச்சியான பேச்சு சிட்டி பெண் போல தோன்ற வைக்கிறது.

படத்தில் வரும் கேரக்டர்கள் ஜெயப்ரதாவுக்கு நிறைய பில்டப் கொடுகிறார்கள். ஆனால் இறுதியில் அந்த காட்சிகள் இல்லை என்பது வருத்தம்தான்.

தண்ணீர் அவசியத்தை இந்த தலைமுறை தெரிந்துக் கொள்ள நிச்சயம் படம் பார்க்கலாம்.

கவர்ச்சி, காதல், இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு என எதுவும் இல்லாமல் இருந்தாலும் தண்ணீருக்காக இந்த படத்தை பார்க்கலாம்.

கேணி.. தண்ணீருக்காக கண்ணீர் போராட்டம்

6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படத்தில் 6 கதைகள் இருந்தாலும் எல்லா படத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை பேய்தான்.

6 குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடுள்ளனர்.

முதல் அத்தியாயம் : ‘சூப்பர் ஹீரோ’

இதில் சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் ஒரு இளைஞன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தான் சம்பந்தப்பட்டவர்கள் சிக்கவுள்ள ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறான்.

எனவே ஒரு டாக்டரை பார்க்கிறார். அந்த சூப்பர் மேனை சோதிக்கும் டாக்டர் என்ன செய்தார்..? என்பதுதான் இந்த அத்தியாயம்.

DWotz9xVoAEuJ2z

 

இரண்டாவது அத்தியாயம் : ‘இனி தொடரும்’

ஒரு இளைஞனை சின்ன வயது பெண் ஒருத்தி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் மற்றொரு பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்?’ என்று கேட்கிறாள்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான் என கூறுகிறாள்.

எனவே இருவரும் அவனை எப்படி பழிவாங்கினார்கள்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9xVMAEDFqo

 

மூன்றாவது அத்தியாயம் : ‘மிசை’

தன்னுடைய ரூம் மேட்ஸ் தன் காதலியின் போட்டோவுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்து விடுகிறான்.

எனவே அந்த பையன் தன் நண்பர்களை என்ன செய்தான்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9xU0AAmNEJ

 

நான்காவது அத்தியாயம் : ‘அனாமிகா’

தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் ஒரு வாலிபன்.

அப்போது மாமா அவசர வேளையாக வெளியே செல்ல, அந்த வாலிபன் தனியாக இருக்கிறார்.

அந்த வீட்டில் ஒரு பெண் பேய் இருப்பதாக உணர்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

ஐந்தாவது அத்தியாயம் : ‘சூப் பாய் சுப்ரமணி’

இந்த சூப் பாய் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய்.

அந்தப் பேய் யார்? ஏன் இப்படி செய்கிறது என தெரிந்துக் கொள்ள மந்திரவாதியிடம் செல்கிறான்.

அந்த மந்திரவாதி பேய் ஓட்ட என்ன செய்தார்? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9vU8AAN1Jg

 

ஆறாவது அத்தியாயம் : ‘சித்திரம் கொல்லுதடி’

ஓவியம் வரையும் ஒரு இளைஞனுக்கு, வெளிநாட்டில் இருந்து பெண் ஓவியம் ஒன்று வரைந்து தரும்படி ஆர்டர் வருகிறது.

அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடையில் இரண்டு புத்தகங்கள் வாங்குகிறான். அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக அந்தப் புத்தகங்களுடன் சேர்ந்து வருகிறது.

அதில் கூறப்பட்டிருந்தபடி பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண்ணை மட்டும் அவரால் வரைய முடியவில்லை.

இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

கேரக்டர்கள் மற்றும் இயக்கம்…

கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர் வெங்கடேசன் என வரிசைப்படி ஆளுக்கொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளனர்.

6 அத்தியாயங்களில் அனைவரையும் கவர்ந்த அத்தியாயம் என்றால் அது 5 மற்றும் 6 அத்தியாங்கள்தான்,

‘சூப் பாய் சுப்ரமணி’ கில்மா காமெடி என்றால் ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற ஆறாவது அத்தியாயம் திகிலை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முதலில் காட்டிவிட்டு, க்ளைமாக்ஸை மட்டும் கடைசியில் தனித்தனியாக காண்பிக்கிறார்கள்.

இது தமிழில் புதிய முயற்சி என்பதால் வரவேற்று பார்க்கலாம்.

6 அத்தியாயம் அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

நாகேஷ் திரையரங்கம் விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆரி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், எம்ஜிஆர் லதா, சித்தாரா, அதுல்யா ரவி, மசூம் சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : முகம்மது இசாக்
இசை : ஸ்ரீ என்ற ஸ்ரீகாந்த்தேவா
ஒளிப்பதிவு: நவ்ஷாத்
எடிட்டிங்: எஸ். தேவராஜ்
பி.ஆர்.ஓ. : வின்சன்
தயாரிப்பு: ட்ரான்ஸ் இந்தியா மீடியா

கதைக்களம்…

ஆரி, ஒரு வீட்டு புரோக்கர். இவருக்கு அம்மாவாக சித்தாராவும் நண்பனாக காளி வெங்கட் நடித்துள்னர்.

தங்கையாக அதுல்யா ரவி, தம்பியாக அபிலாஷ் நடித்துள்ளன்ர்.

ஆரியும் நாயகி ஆக்‌ஷனாவும் காதலிக்கின்றன்ர.

அதுபோல் ஆஷ்னாவின் நண்பரும் அதுல்யாவும் காதலிக்கின்றனர்.

அதுல்யாவின் காதலுக்கு ஆரி பச்சைக் கொடி காட்ட, அதுல்யாவை பெண் பார்க்க வருகின்றனர்.

அப்போது அதிக வரதட்சணை கேட்கின்றனர். வேறுவழியில்லாமல் சித்தாரா சம்மதிக்கிறார்.

எனவே ஒரு கிராமத்தில் உள்ள தமது பூர்விக சொத்தான ஒரு பழைய திரையரங்கம் ஒன்றை விற்று அதுல்யாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

அதன்படி காளி வெங்கட்டுடன் அந்த கிராமத்திற்கு சென்று அந்த தியேட்டரில் தங்குகிறார் ஆரி.

அங்கு ஆரியின் கனவில் ஒரு சிலர் கொல்லப்பட அது நிஜத்திலும் நடந்தேறுகிறது. அப்போதுதான் அங்கு பேய் இருப்பதை ஆரி உணகிறார்.

அதை வீடியோ எடுத்து பார்க்கிறார். வீடியோவில் இவர்தான் இருக்கிறார்.
அப்படியென்றால் இவர்தான் பேயா?

பலரையும் இவரே கொல்ல என்ன காரணம்? பேய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அதுல்யாவின் திருமணம் நடைபெற்றதா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

பொதுவாக பேய் படங்கள் எல்லாம் பங்களாவில்தான் இருக்கும். ஆனால் இதில் பேய் தியேட்டர் இதுவே புதுசு.

ஆரியின் காதல் மற்றும் ஆக்ஷன் இரண்டிலும் மாறுபட்டு இருக்கிறார்.

இவரே பேயாக உணர்ந்தபின் இவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி. க்ளைமாக்ஸ காட்சி அந்த பேய் உடல் மாறும் நிலை வித்தியாசமான முயற்சி.

காதல் காட்சிகளில் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார் ஆஷ்னா.

பிற்பாதியில் பேயாகவும் அழகு தேவதையாகவும் வந்து மிரட்டல் செய்திருக்கிறார் மாசூம் சங்கர். பேயை விட கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டி விடுவார்.

காளி வெங்கட்டின் காமெடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகிறது. இதில் புதிதாக செக்ஸ்க்கு ஆணி அடித்தல் என புது விளக்கம் கொடுத்துள்ளார்.

அதுல்யா அழகாக வருகிறார். நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

எம்ஜிஆர் காலத்து லதா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சித்தாரா.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

’இசையமைப்பாளர் ஸ்ரீயின் இசையில் ”கண்கள் ரெண்டும்” என்ற மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது.

ஆட்டம் போடவும் வைப்பவேன். தலையாட்டி ரசிக்கவும் வைப்பேன் என ஸ்ரீகாந்த் தேவா இதில் நிரூபித்து இருக்கிறார்.

கவிஞர் முருகன் மந்திரம் எழுதிய சங்கி மங்கி லேடி கபாலி தாடி.. பாடல் தாளம் போட வைக்கிறது. ராபர்ட் மாஸ்டரின் நடனமும் அதற்கு பலம் சேர்க்கிறது.

பேய் படங்களுக்கு பின்னணி பிரதானம். அதையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் நெளசத் கேமரா திரையரங்கினை பல இடங்களில் மிரட்டலை காண்பிக்க தவறவில்லை.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் மிரட்டலான பேய் படத்தை கொடுத்துள்ளார் இசாக்.

நாகேஷ் திரையரங்கம் – நம்பி போகலாம்

மனுசனா நீ விமர்சனம்

மனுசனா நீ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஒரு கும்பல் இளைஞர்களை குறி வைத்து கடத்துகிறது.

கிட்டதட்ட 36 வாலிபர்கள் மாயமாகி விடுகின்றனர். இதனால் போலீஸ் அதற்கான விசாரணையில் இறங்குகிறது.

இதனிடையில் நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலிக்கின்றனர்.

ஆதர்ஷின் அப்பா ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தை அந்த ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சுப்பு பஞ்சு அபகரிக்க நினைக்கிறார். ஆனால், ஆதர்ஷின் அப்பா இடம் கொடுக்க மறுக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்படுகிறது.

இந்நிலையில் சுப்பு பஞ்சுவின் ஆட்களை ஆதர்ஷை அடிக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கஸாலி ஒரு மருந்து செலுத்துகிறார்.

இதனால் அவருக்கு பல மடங்கு சக்தி வருகிறது.

அப்போது ஆதர்ஷின் முகத்தில் பல காயங்கள் திடீரென ஏற்படுகிறது.

திடீரென ரத்தம் கொட்டுகிறது. முகமெல்லாம் பருக்கள் போல காயங்கள் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என போலீஸ் கண்டுபிடிக்கிறது.

மற்ற இளைஞர்களையும் அவர்தான் கடத்தியுள்ளார் என்பது தெரியவருகிறது.

அப்படியென்றால் கஸாலி என்ன மருந்து கொடுத்தார். மற்ற இளைஞர்களை கடத்த என்ன காரணம்? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

நாயகனாக நடித்திருக்கிறார் ஆதர்ஷ். டான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஓகே. நடிக்க முயற்சித்திருக்கிறார்.

நாயகி அனுகிருஷ்ணா அழகு கண்களால் ரசிகர்களை ஈர்ப்பார். அவரைப் போன்று அவரது கண்களும் குண்டு.

பின்னணி இசை சில இடங்களில் பேசப்படும்.

கஸாலி இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார்.

மெடிக்கல் க்ரைம் திரில்லர் படத்தை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார். டாக்டர்கள் ஆராய்ச்சி செய்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதில் ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார். க்ளைமாக்ஸில் அந்த கால் முடியாதவர் பழிவாங்கும் காட்சி நச்.

ஆராய்ச்சி என்ற பெயரில் மனித உயிர்களோடு விளையாடும் மருத்துவர்களுக்கு இப்படம் ஒரு எச்சரிக்கை.

மனுசனா நீ… மெடிக்கல் மிராக்கிள்

First on Net : நாச்சியார் விமர்சனம்

First on Net : நாச்சியார் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ், தமிழ்குமரன் மற்றும் பலர்
இயக்கம் : பாலா
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: ஈஸ்வர்
எடிட்டிங்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: பாலா மற்றும் EON STUDIOS

கதைக்களம்…

நாச்சியார் (ஜோதிகா) ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு மைனர் பெண்ணை (இவான்) கற்பழித்து குற்றத்திற்காக ஜிவி பிரகாஷை கைது செய்கிறார்.

அவரும் மைனர்தான். இந்நிலையில் இவானுக்கு குழந்தை பிறக்கிறது.

ஆனால் குழந்தையின் டிஎன்ஏ டெஸ்ட் ஜிவி.பிரகாஷின் டெஸ்ட் உடன் மேட்ச் ஆகவில்லை.

அப்படியென்றால் அந்த சிறுமியின் குழந்தைக்கு அப்பன் யார்? குழந்தை என்ன ஆனது? ஜோதிகா குற்றவாளியை கண்டு பிடித்தாரா? ஜிவி. பிரகாஷ் யார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நாச்சியார் விடை சொல்வாள்.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை நாம் பார்த்த துறுதுறு ஜோதிகா இதில் முரட்டு ஜோதிகாவாக ஜொலிக்கிறார்.

வெள்ளத் தோலா இருக்கேன். ஹேய் ஸ்வீட்டி, ஹாய் இப்படி எல்லாம் பேசுவேன் பாத்தியா. சங்க அறுத்துடுவேன் என ஜோதிகா சொல்லும் போதே இவர் ஒரு டெரர் போலீஸ்தான் என பயமுறுத்துகிறார்.

ஆனால் அந்த முரட்டு குணத்திலும் மென்மை இருக்கிறது என்பதை தன் போலீஸ் ஜீப் டிரைவர் ஒரு வண்டியில் மோதிய உடன் அந்த டிரைவரை கண்டிப்பதில் தெரிகிறது.

அந்த மென்மையை க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்று நம் மனதை வென்றுவிடுகிறார்.

குற்றவாளிக்கு ஜோதிகா கொடுக்கும் அந்த தண்டனை பாலா டச். இதுபோல் தண்டனை கொடுத்துவிட்டால் எவனும் தப்பு செய்ய மாட்டான்.

இதுநாள் வரை ஜிவி. பிரகாஷிடம் இப்படியொரு நடிப்பை பார்த்திருக்க முடியாது. தன் கெட்டப் முதல் பாடி லாங்குவேஜ் வரை மாற்றியிருக்கிறார்.

நாச்சியார் படத்திற்கு முதல்நாள் சூட்டிங் செல்லும்போது இந்த மேக்அப் உடன்தான் ஜிவி பிரகாஷ் போனாராம். அப்போதே இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். இவரின் கேரக்டர் வெற்றி அன்றே தொடங்கிவிட்டது.

மேடம் அது ஒரு சப்ப மேட்டர். நான் பாத்துகிறேன். அவகிட்ட சொல்லாதீங்க என ஜோதிகாவிடம் சொல்லும்போது ஜிவி. பிரகாஷ் ஜேஜே பிரகாஷ் ஆக மாறிவிடுகிறார்.

தன் இனிமையான நடிப்பால் மயிலிறகாய் வருடி செல்கிறார் இவானா.

சின்ன சின்ன முகபாவனைகள், மழலைத்தனம் மாறா பேச்சு, எல்லாரிடம் அன்பாய் பழகும் விதம் என நம்மை இறுக வைத்து விடுகிறார் இந்த இவானா.

இவர்களுடன் ப்ரோஷ் கானாக வரும் ராக்லைன் வெங்கடேஷ் படம் முழுக்க யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறார். கம்பீரம் கண்ணியம் என நல்ல தேர்வு.

இவர்களுடன் ஜிவி. பிரகாஷின் பாட்டி (மருதுவில் விஷால் அம்மாவாக நடித்தவர்), போலீஸ் கான்ஸ்டபிள், இவானாவின் தாய்மாமன், டாக்டர்கள், ஜோதிகாவின் கணவர், அவர்களின் மகள் என அனைவரும் சில காட்சிகளில் வந்தாலும் தன் முத்திரையை பதித்து செல்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலாவுக்கு இளையராஜாவுக்கும் அப்படி என்னதான் கெமிஸ்ட்ரியோ தெரியாது. கதையை புரிந்து அதற்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். பின்னணி இசையில் கூட திரைக்கதையின் உணர்ச்சிகளை சொல்லிவிடுகிறார்.

படத்தின் டைட்டில் கார்டூ போடும்போது எதற்க்காக குப்பை மேட்டை காண்பிக்கிறார்கள் என்றால், அதையும் ஒரு முக்கிய காட்சியாக கொடுத்துவிடுகிறார்.

எங்களுக்கு கோயிலும் ஒன்னுதான். குப்பை மேடும் ஒன்னுதான் என் போலீஸ் சொல்வது சட்டத்தின் மதிப்பை காட்டுகிறது.

குண்டு வைக்கிறவன அந்த கடவுள் தண்டிக்கலையே என்று சொல்லிவிட்டு அப்படியென்றால் ஒரு நல்ல கடவுளை இனி உருவாக்கிவிடுமோ என்று அந்த போலீஸ் பேசும் வசனங்கள் நச்.

கோர்ட் காட்சி முதல் விசாரணை காட்சிகள் வரை அனைத்தும் யதார்த்தம்.

க்ளைமாக்ஸில் ஜிவி. பிரகாஷை ஜோதிகா பாராட்டும் காட்சி மனதில் நிற்கும்.

ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் கைவண்ணத்தில் காட்சிகள் கவிதை.

டீசரில் ஜோதிகா பேசும் அந்த கெட்ட வார்த்தை சரியான இடத்தில்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

படத்தின் முதல் பாதி செல்வதே தெரியாது. அப்படியொரு எடிட்டிங் செய்து இருக்கிறார் சதீஷ் சூர்யா.அடடா… இப்படியொரு ட்விஸ்ட் என நினைக்கும்போதே இண்டர்வெல் கொடுத்து ரசிக்க வைத்துவிடுகிறார் பாலா.

சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் நடிகர்கள் என்றால் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள்தான் சிறந்த நடிகர்கள் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.

குற்றம் செய்யாதவர்களை ஜோதிகா தண்டிப்பதும் அதன்பின்னர் அதற்கு மன்னிப்பு கூட கேட்காதது எல்லாம் போலீஸின் மிருகத்தனம்.

விசாரித்துவிட்டு அடிக்காமல் அடித்துவிட்டு விசாரிப்பதும் அதற்கு விளக்கம் கொடுப்பதும் சரியான தீர்வல்ல. இவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறதே. அதை எண்ணி பார்ப்பது இல்லையோ?

நாச்சியார்… தமிழ்சினிமாவின் நறுமணம்

More Articles
Follows