தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்..
ஒரு நீதிபதி கொலை செய்யப்படுகிறார். இதனால் சென்னையே பரபரப்பாகிறது.
இதனால் குற்றவாளிகளை பிடிக்க போலீசுக்கு அழுத்தம் தரப்படுகிறது. தற்போதைய காவல்துறையில் யாரும் சரியில்லை. எனவே வேலையை உதறி மாடு மேய்க்க சென்ற (பிரபுதேவா) பொன் மாணிக்கவேலை மீண்டும் அழைக்கிறது காவல்துறை.
விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இறந்த நீதிபதியின் மற்றொரு நண்பர் போலீஸ் ஒருவரும் கொல்லப்படுகிறார்.
இருவரின் கொலைகளை தொடர்ந்து இவர்களின் அடுத்த நண்பரான தொழில்அதிபர் சுரேஷ் மேனனுக்கு கொலை மிரட்டல் வருகிறது.
எனவே உங்களை காப்பாற்ற வேண்டும் என்றால் எனக்கு 10 கோடி கொடுங்கள் என டீல் பேசுகிறார் பொன் மாணிக்கவேல்.
சுரேஷ் மேனன் என்ன செய்தார்? திட்டமிட்டு மிரட்டி கொலை செய்பவர் யார்? கொலைகளுக்குக் காரணம் என்ன? நேர்மையான போலீஸ் ஏன் டீல் பேசினார்? என்பதே ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
முதன்முறையாக பொன் மாணிக்கவேலாக போலீஸ் வேடம் ஏற்றுள்ளார் பிரபுதேவா. முரட்டு தோற்றம்.. கஞ்சி போட்ட சட்டை, வீராப்பு என அலட்டிக் கொள்ளாமல் வித்தியாசமான வேடத்தில் ரசிக்க வைக்கிறார்.
ப்ளாஷ்பேக் காட்சிகளில் போலீஸ் உரிய கம்பீரத்தை கொடுக்க முயற்சித்துள்ளார்.
மனைவி நிவேதா உடலில் இவர் வருடங்களை சொல்லி சொல்லி பேசும் அந்த வரலாற்று சம்பவங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் நிவேதாவுக்கான காட்சிகள் பெரிதாக இல்லை. வழக்கமாக வந்து போகிற நாயகி வேடம் அவருக்கு.
ஆக்சன் படம் என்றாலும் தீரம் அதிகாரம் ஒன்று… சேதுபதி படங்களை போல காவலர்களின் காதல் காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் இதில் மிஸ்ஸிங்.
தொழிலதிபர் சுரேஷ் மேனக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர் மறைக்கும் ரகசியங்கள் படத்தின் ட்விஸ்ட்.
சில நிமிடங்களே வந்தாலும் மறைந்த இயக்குநர் மகேந்திரன் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவரின் பேத்தியாக வருபவரும் நல்ல தேர்வு.
வில்லனாக வரும் பத்ரிநாத் (சுதன்சு பாண்டே) சோனு சூட் போல இருக்கிறார்.
பெருவளத்தான் (பாகுபலி பிரபாகர்) காட்சிகள் படத்தில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. கைலாஷ் கேரக்டரில் நடித்துள்ள சார்லஸ் வினோத் நம் கவனம் ஈர்க்கிறார். பிரபுதேவாவை விட இவர் தான் நிறைய விசாரணைகளை செய்கிறார். (அதன்பின்னர் பிரபுதேவாவின் சீன்ஸ் நமக்கு ஏன் என்று புரிய வைக்கிறது)
டெக்னிஷியன்கள்..
இமானின் இசையில் ‘உதிரா உதிரா’ பாடல் அழகாக ரசிக்க வைக்கிறது. கே.ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.
முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியிருக்கிறார். பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை மீ டூ என வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.
தங்களுக்கு பிரச்சினை என்றால் அதை சொல்ல பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.
ஒரு போலீஸ் என்பவர் நாட்டு மக்களுக்காக செயல்பட வேண்டுமா? அல்லது காவல்துறைக்காக செயல்பட வேண்டுமா? என்று கேட்பதன் மூலம் வசனகர்த்தா கண்ணன் கவனிக்க வைக்கிறார்.
ஆக சொல்ல வேண்டிய விசயத்தை எளிதாக சொல்லாமல் ட்விஸ்ட் என்ற பெயரில் ஆங்காங்கே திரைக்கதையை ஓட விட்டுவிட்டார் இயக்குனர்.
ட்விஸ்ட்டுகளை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் இந்த பொன் மாணிக்கவேல் இன்னும் அதிகமாக ஜொலித்திருப்பார்.
Pon Manickavel movie review and rating in tamil