லக்ஷ்மி விமர்சனம்

லக்ஷ்மி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Prabhu Deva, Ditya Bhande, Aishwarya Rajesh

Directed By : Vijay

Music By : Sam C. S.

Produced By : Prateek Chakravorty, Shruti Nallappa, R. Ravindran

கதைக்களம்..

படித்தால், நடந்தால், சிரித்தால், கனவு கண்டால், படுத்தால்.. இப்படி எந்நேரமும் டான்ஸை பற்றியே சிந்திப்பவள் தித்யா. இவர்தான் இந்த படத்தில் லக்‌ஷ்மி யாக நடித்திருக்கிறார். இவருக்கு அப்பா கிடையாது.

ஆனால் இவரது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ்க்கோ நடனம் என்றாலே பிடிக்காது.

எனவே அம்மாவுக்கு தெரியாமல் நடனம் கற்றுக் கொண்டு மேடையேற நினைக்கிறார்.

அதன்படி காபி ஷாப் வைத்திருக்கும் பிரபுதேவாவின் உதவியை நாடுகிறார். அவரும் இவருக்கு உதவுகிறார்.

ஒருவழியாக அம்மா முதல் பள்ளி ஆசிரியர்களை ஏமாற்றி நடனம் கற்றுக் கொண்டு மும்பையில் நடைபெறும் ப்ரைட் ஆப் இந்தியா டான்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்.

ஆனால் அங்குள்ள லைட்டிங் வெளிச்சத்தில் நடனம் ஆட முடியாமல் லக்ஷ்மி சொதப்பி விடுகிறார்.

இதனால் இவருடைய சென்னை அணியே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்போது அவரை சேர்க்க சொல்லி மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டு வருகிறார் பிரபுதேவா.

அவர் சொன்ன உடன் அந்த நடுவர் குழுவே கேட்கிறது. அப்படி என்றால், பிரபுதேவா யார்? அவர் சொன்னால் அவர்கள் கேட்பது ஏன்? இந்த லக்‌ஷ்மி மீது பிரபுதேவாவுக்கு அப்படி என்ன அக்கறை..? என்பதே மீதிக்கதை.

இறுதியில் நடன போட்டியில் பரிசை வென்றாரா லக்‌ஷ்மி? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நடனத்தில் ஜொலித்த பிரபுதேவா இதில் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.

இசையில்லாமல் ஒலிக்கும் அசையும் யாவும் வரிகளுக்கு நடன அமைப்பு அருமை. அந்த வரிகளுக்கு ஏற்ப பிரபுதேவாவும் குழந்தைகளும் ஆடுவது அற்புதம்.

இறுதிப் போட்டியில் இங்கே யார் தோற்றார்கள் என்பது இல்லை. நடனம் மட்டுமே ஜெயித்தது என்று சொல்லி அனைத்து நடன பிரியர்களையும் அழ வைத்துவிட்டார்.

தித்யா… நடனத்தில் நீ செம தில்-ய்யா… இந்த சிறுமியை குட்டி பிரபுதேவா என்று கூட சொல்லாம். இவரை சுற்றி திரியும் அந்த குண்டு பையனும் அர்ஜீனும் செம க்யூட். இவர்கள் செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது.

ஆனால் இந்த வயதிலேயே ஒரு பெண்னுக்காக அந்த பையன்கள் மாறி மாறி ஏதாவது செய்வது நெருடலாக உள்ளது.

படத்தில் யாருமே சிரிக்க கூடாது என டைரக்டர் விஜய் சொல்லிவிட்டாரோ? கோவை சரளாவை தவிர எல்லாரும் செம டென்சன் முகத்துடன் காணப்படுகிறார்கள்.

பிரபுதேவா, டான்ஸ் மாஸ்டர் சோபியா, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடுவர், தித்யா என அனைவரது முகத்திலும் கொண்டாட்டமே இல்லை. இதனால் நமக்கே புன்னகை வர மறுக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் அமைதியாக வருகிறார். நடன மாஸ்டர் சோபியா அழகாக வருகிறார். அவ்வளவே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இந்த நடன படத்திற்கு சாம் சி.எஸ். இசை பக்க பலம். அதிரடி பாடல் முதல் இதமான இசை என வெளுத்து கட்டியிருக்கிறார்.

பின்னணி இசையிலும் கை கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதம். இரண்டிலும் குறை சொல்ல முடியாது. ஆனால் ஓவராக எடிட்டிங் செய்துவிட்டாரோ? என்னவோ?

அல்லது படத்தில் டைரக்டர் விஜய் ப்ளாஷ்பேக் காட்சிகள் வைக்கவில்லையோ? பிரபுதேவா & ஐஸ்வர்யா காதலில் உணர்வும் இல்லை. அழுத்தமும் இல்லை.

டைரக்டர் விஜய் ஒரு நடன படத்தை கொடுக்க வேண்டும் நினைத்து அதில் ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் படம் முழுக்க நடனத்தையும் மையப்படுத்தியே காட்சிகள் அமைத்து விட்டதால் மற்ற காட்சிகளில் கவனம் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி ஆட்டம், சென்னை 28 படத்தில் கிரிக்கெட் இருந்தாலும் மற்றவைக்கும் சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இதில் அது இல்லை.

நிறைய டான்ஸ் ரியால்ட்டி ஷோக்களை ஒன்று சேர்த்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.

முக்கியமாக தித்யா மேடையில் நடனம் ஆடும்போது பயிற்சியாளர் பிரபுதேவா கீழே நின்று நடன அசைவுகளை சொல்லி கொடுக்கிறார். அது எப்படி சாத்தியம்?

ப்ரைட் ஆஃப் இந்தியா பட்டம் வெல்ல அப்படி ஒரு அனுமதி உண்டா? என்ன-? அது டைரக்டருக்கே வெளிச்சம்.

லக்‌ஷ்மி… நடன இளவரசி

First on Net மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

First on Net மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வளையன்குளம், ஆண்டனி வாத்தியார், தேனி ஈஸ்வர் மற்றும் பலர்.
இயக்கம் – லெனின் பாரதி
இசை – இளையராஜா
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
எடிட்டிங் – காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ. – நிகில் முருகன்
தயாரிப்பு : நடிகர் விஜய்சேதுபதி

கதைக்களம்…

தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கை பதிவுதான் இப்படம்.

மலையடிவாரத்தில் வசிக்கும் நாயகன் ஆண்டனி, தினமும் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேலே செல்கிறார்.

போகும் வழியில் சின்ன சின்ன சேவைகளையும் மற்றவர்களுக்கு உதவிடும் வகையில் பொருட்களை கொண்டு செல்வதும் அங்கிருந்து கீழே கொண்டு வருவதும் கூலிக்கு மூட்டை சுமப்பதும் தான் இவரது வாழ்க்கை.

எப்படியாவது தான் உழைத்த பணத்தில் நிலம் வாங்கி, விவசாயம் செய்து முன்னேறி விட வேண்டும் என அயராது உழைக்கிறார்.

இதனிடையில் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் யுனியன் பிரச்சினை என தலையிடுவதால் சிறைக்கு செல்ல நேரிடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? நிலம் வாங்கினாரா? சிறைக்கு சென்று வந்த பின்னர் வாழ்க்கை எப்படி திசை மாறியது? இதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்திற்கு நாயகன் நாயகி வேண்டும் என்பதால், ஆண்டனி மற்றும் காயத்ரி இருவரும் நடித்துள்ளனர்.

இருவரும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர். தன் மகனுக்கு தன் நிலத்தை காட்ட வேட்டி கட்டுவது, ஏலக்காய் மூட்டை சாய்வது, விவசாயம் நஷ்டத்தை தருவது என ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு முக பாவனைகள் கொடுத்துள்ள இவரது சிறப்பு.

ஜோக்கரில் பார்த்த அதே காயத்ரி. இவருக்கு நடிக்க தெரியாது. வாழ மட்டும்தான் தெரியும் என நிரூபித்துள்ளார்.
மற்றபடி படத்தில் உள்ள அனைத்தும் கேரக்டர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

அங்குள்ள மனிதர்கள் அவர்களின் யதார்த்தமான வாழ்க்கையை முறையை அவர்களுக்கே தெரியாமல் கேமரா வைத்து படமாக்கியுள்ளது போல் தோன்றும்.

அப்படியொரு படத்தை நமக்கு கொடுத்துள்ளார் லெனின் பாரதி.

எந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என ஏலக்காய் மூட்டை சுமந்து செல்லும் பெரியவர், அங்கு டீ கடை வைத்து வியாபாரம் செய்யும் பெண்மணி, உரக்கடை அதிபர், யுனியன் தலைவர் என இப்படியாக எல்லாரையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சிட்டியில் வாழும் ஏன், கிராமத்தில் வாழும் மக்களே இந்த படத்தை பார்த்தால் மலை பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என்னடா? கேமரா ஆங்கிள் இது? என சினிமாவை திட்டினால் இந்த படத்தை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும்.
அப்படியொரு அழகான பல கோணங்களில் இந்த பதிவை செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

மூட்டை சுமக்கும் ஒரு பெரியவர் நடந்துக் கொண்டே தன் வேலையை சொல்லிக் கொண்டே போகும் போது கேமரா செல்லும் அந்த ஒவைட் ஆங்கிள், இறுதியாக அந்த காற்றாழை காத்தாடிகள் இப்படியொரு ஆங்கிளை பார்த்து இருக்க மாட்டீர்கள்.

மு. காசி விஸ்வநாதன் தேவைக்கு ஏற்றவாறு எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.

இளையராஜா இசையில் வலம் வந்தால் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை எந்த சோர்வும் இன்றி நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு பின்னணி இசையை கொடுத்துள்ளார்.

ஒரு அழகான பாடலையும் பாடி ரசிகர்களை பரசவப்படுத்தியுள்ளார்.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒவ்வொரு வெள்ளந்தி மனிதனையும், அவர்களின் உழைப்பையும் அழகாக உரித்து வைத்துள்ளார் டைரக்டர் லெனின் பாரதி.

இப்படிப்பட்ட மனிதர்களில் யார்? வில்லனாக இருக்க முடியும் என்பதற்கு இயற்கை, சூழ்நிலைகள் எப்படியெல்லாம் மாறி நாயகன் வாழ்க்கை மாற்றுகிறது என்பதை எல்லாம் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று.

தான் ஒரு முன்னணி நடிகர் என்றாலும் இப்படத்தில் தலை காட்டாது, கமர்சியல் விஷயங்கள் எதையும் சேர்க்காமல் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலை… குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற மலை

Merku Thodarchi Malai movie review rating

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேண்டிள் லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மூலன் வழங்கும் படம் `ஓடு ராஜா ஓடு’.

ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் இதில் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தொகுப்பு – நிஷாந்த் ரவிந்திரன்

இசை – தோஷ் நந்தா
ஒளிப்பதிவு – ஜதின் சங்கர் ராஜ் & சுனில் சி.கே.,
தயாரிப்பு – விஜய் மூலன்
இயக்கம் – நிஷாந்த் ரவிந்திரன் & ஜதின் ஷங்கர் ராஜ்.

மக்கள் தொடர்பாளர் : ராஜ்குமார்

பட வெளியீடு : பிடி. செல்வகுமார்

கதைக்களம்..

குருசோமசுந்தரத்தின் மனைவி லட்சுமி ப்ரியா. கணவர் ஒரு எழுத்தாளர். சினிமா வாய்புப்பாக அலைகிறார். வீட்டில் இருக்கும் அவருக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்தால் அவர் எப்படி செய்கிறார்.

பொறுப்பாக இருக்கிறாரா? என்பதற்காக செட்டப் பாக்ஸ் வாங்க அனுப்புகிறார்.

அவரிடமோ பணம் இல்லை. ஆனால் கண்டிப்பாக வாங்கி வந்தால் மட்டுமே வீட்டில் அனுமதி என ஒரு நாள் அவகாசம் தறுகிறார். இல்லையென்றால் தன் தாய் வீட்டுக்குப் போய் விடுவேன் என மிரட்டுகிறார்.

எனவே தனது போதை நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்கிறார் நாயகன்.

அந்த போதை நண்பர் பணத்திற்காக ஒரு ஐடியா தருகிறார். இருவரும் பாஸ் கஜபதி என்பவரிடம் வசமாக சிக்கிக் கொள்ள, அவர்களிடம் ஒரு பொட்டி கொடுத்து போதை மாமி அங்கம்மாளிடம் அனுப்புகின்றனர். (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க).

இதனிடையில் பணம் தொலைகிறது.இது ஒரு பக்கம்.

பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. இது அடுத்த கதை.

மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். இது 3வது கதை.

குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), காணாமல் போன பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இது 4வது கதை.

இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

இந்த கேரக்டர்களின் இன்ட்ரோவே அரை மணி நேரத்திற்கு மேலாக வருகிறது.

இறுதியில் என்ன ஆகிறது? என்பதுதான் படக்கதை.

கேரக்டர்கள்…

குரு சோமசுந்தரம் வழக்கம்போல யதார்த்த நடிப்பில் மிளிர்கிறார். அழகான மனைவிக்கு பயந்து இவர் அவஸ்தை படுவது இயல்பாக இருக்கிறது.

மனைவியாக வரும் லட்சுமி பிரியா, நாசர், ஆஷிகா, பேபி ஹிரினி, மாஸ்டர் ராகுல் என அனைவரும் கச்சிதமான நடிப்பை தந்துள்ளனர்.

கால பைரவி லயன் கேரக்டர் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். யாரும் எதிர்பாராத வித்த்தில் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிம்ரன்.

அழகான லட்சுமி ப்ரியா நடிப்பிலும் அழகுதான்.

இரண்டு லவ்வருமே தனக்கு வேனும் என ஆகிஷா சொல்லும் போது தியேட்டரில் அலப்பரை தான்.

படத்தில் பெண்களையும் ஆண்களையும் செக்ஸ்க்காக அலைபவர்களாக காட்டியுள்ளனர்.

கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ்க்காக அலையும் பக்கத்து வீட்டுக்காரன், ஜெயிலில் இருந்த விடுதலையாகும் கணவன், அவன் நண்பன் ரெண்டு பேருமே வேனும் என சொல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் இரண்டு சிறுவன் சிறுமியர் வேற.

அறுந்தவாலு பேபி ஹரினியும், ரோட்சைட் ரோமியோ மாஸ்டர் ராகும் காதல் போல காட்டியுள்ளது. அதாவது டாவு என்கிறார்கள்,

இதை டைரக்டர்கள் குறைத்திருக்கலாம்.

திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த்.

தோஷ் நந்தா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. மனதில் ஒட்டவில்லை.

பின்னணி இசை சில இடங்களில் ஓகே.

இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும் இயக்கியுள்ளனர்.

சூது கவ்வும் பட பாணியில் ப்ளாக் காமெடியை தொட்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் இன்னும் காமெடியை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு பிளாக் காமெடி படத்துக்கு தேவையானதை தர முயற்சித்துள்ளனர்.

பல கதைகள் வருவதால் எல்லாருக்கும் புரியுமா? என்பது சந்தேகம்தான். முக்கியமாக கவனம் சிதறாமல் படத்தை பார்த்தால் இந்த ஓடு ராஜா ஓடு புரிவான்.

ஓடு ராஜா ஓடு… செட்டப் பாக்ஸில் ஒரு ப்ளாக் காமெடி

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: துருவ், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – ராகேஷ்
ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
எடிட்டிங் – சான் லோகேஷ்
இசை – அச்சு ராஜமணி
தயாரிப்பு : மதியழகன் ரம்யா
பிஆர்ஓ : அ. ஜான்

பாலியல் தொல்லை செய்திகளை போல செயின் பறிப்பு செய்திகளும் தினம் தவறாமல் செய்தி தாள்களில் இடம் பெற்று வரும் காலம் இது.

நம் வீட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே நாம் அதிர்ச்சியாக துக்கமாக பார்க்கிறோம். இல்லையென்றால் ஜஸ்ட் லைக் தட் என கடந்து செல்கிறோம்.

கதைக்களம்…

செயின் பறிப்பு திருடர்களால், அந்த நிகழ்வில் தன் மனைவியை இழந்து பாதிக்கப்பட்ட தன் அம்மாவுடன் வாழும் ஒரு இளைஞனின் கதைதான் இப்படம்.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் துருவ்வின் ஆரம்பமே படு ஸ்பீட். அவர் திருடர்களிடம் இருந்து செயினை தட்டி பறிப்பதும் முதலே படம் வேகம் எடுக்கிறது.

கேஸ் சிலிண்டர் போடும் பையனாக வந்தாலும் போலீசுக்கு ஏற்ற கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார்.

தாய் மீது பாசம், மனைவி மீது அன்பு என யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் 2வில் கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் இன்ட்ரோ சீனுக்கு எத்தனை பேர் துள்ளி குதிப்பார்களோ? எனத் தெரியாது.

அவர் துள்ளி துள்ளி ஓடி வரும் காட்சியை மறைந்திருந்து எத்தனை பேர் பார்ப்போர்களா? அதே சமயத்தில் அவரது நடிப்பும் கச்சிதம்.

ப்ளாஷ் பேக்கில் வரும் அஞ்சனா கீர்த்தியும் அசத்தல். ஆங்கராக வந்து இறுதியில் அனுதாபத்தை பெறுகிறார்.

ரொம்பவே ப்ராடிக்கலான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். கொஞ்சம் நேரமே வந்தாலும் கவர்கிறார்.

இவர்களுடன் மிரட்டல் வில்லன்களாக மைம் கோபி, ராம்ஸ், அருள்தாஸ் அனைவரும் பக்கா.

திறமையான நடிகர் ராதாரவி. அவருக்கான காட்சியை அதிகப்படுத்தியிருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜேடி. சக்கரவர்த்தி நல்ல மிடுக்கு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில் இரவு நேர செயின் பறிப்பு காட்சிகள் அருமை. என்ன நடக்குமோ? என்ற பயம் அடிக்கடி ஒட்டிக் கொள்கிறது.

அச்சு ராஜாமணி இசையில் எனக்கு என்னாச்சு, உருவாஞ்சுறுக்கு பாடலும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
மிரட்டலான பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

என்னடா ஹீரோ இவன்? திருடனிடமிருந்து திருடுகிறானே? எனும்போது படத்தின் மீது ஒரு ஆவல் பற்றிக் கொள்கிறது.

அப்படியென்றால் நிச்சயம் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கும் என்பதை அப்பட்டமாக காட்டி விட்டார் டைரக்டர் ராகேஷ்.

ராத்திரி 12 மணிக்கு நகை போட்டு பெண் நடந்தால் அன்றே உண்மையான சுதந்திர தினம் என மகாத்மா காந்தி ஜி கூறியிருந்தார்.

ஆனால் இன்று பகல் 12 மணிக்கே அப்படி நகை போட்டு நடக்க முடியவில்லை. ஏனென்றால் கடுமையான தண்டனைகள் வேண்டும் என ஆணித்தரமாக சொல்லியுள்ள ராகேஷை பாராட்டலாம்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. *தங்க*மான மக்களே உஷார்

Marainthirunthu Paarkkum Marmam Enna movie review rating

கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நயன்தாரா, யோகிபாபு, சரண்யா, அறந்தாங்கி நிஷா, விஜே ஜாக்லின், நவீன் குமார் மற்றும் பலர்.
இயக்கம் – நெல்சன்
ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன்
எடிட்டிங் – நிர்மல்
இசை – அனிருத்
தயாரிப்பு : லைகா
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு நிகராக நயன்தாராவின் படத்திற்கும் அதிகாலை காட்சி வைத்துள்ளனர்.

அப்போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது.

கதைக்களம்…

மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் நயன்தாரா. மிகவும் கஷ்டப்படுகிறார். இந்த நிலையில் அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது.

அவரை குணப்படுத்த பணம் தேவைப்படுவது இயற்கைத்தானே. எனவே சினிமாவில் என்ன செய்வார்கள்.?

எதாவது குறுக்கு வழியில் செல்வார்கள்தானே. அதே தான் இங்கும் நடக்கிறது.

எனவே ஒரு போதைப்பொருள் கும்பலிடம் இவருக்கு தொடர்பு கிடைக்கிறது.

பொதுவாக பெண்கள் கடத்தினால் அதிக சந்தேகம் வராது என்பதால் அந்த போதை பொருளை கடத்த நயன்தாராவை நாடுகின்றனர்.

இதனால் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறார் கோகிலா.

அதன் பின்னர் என்ன செய்தார்? பிரச்சினைகளை எப்படி முறியடிக்கின்றார்? அம்மாவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நானும் ரௌடிதான் காதம்பரி கேரக்டர், அறம் Collector கேரக்டர், டோரா கேரக்டர் உள்ளிட்ட வரிசையில் இப்படம் நயன்தாராவுக்கு சேரும். இவரை நம்பியே கதையை நகர்த்தியுள்ளார் நெல்சன்.

கோகிலாவும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்துவிடுகிறார். டாப் ஹீரோக்களுடன் கெமிஸ்டரி எப்படி ஒர்க் அவுட் ஆனதோ? அதுபோல் யோகிபாபு உடனும் பிஸிக்ஸ் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நயன்தாராவும் யோகிபாபுவும் தான் படமே. யோகிபாபு இனி ஹீரோ கேரக்டர் கொடுத்தாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை.

‘சார் நீங்க அவன சுட்டா தான் இங்க இருந்து போவேன், கொலை பார்க்க பயமா இருக்கு நான் திரும்பி காதை மூடிக்கொள்கின்றேன்’ என சொல்லும் இடமெல்லாம் நயன்தாராவுக்கு கைத்தட்டல் அள்ளுகிறது.

நயன்தாரா தங்கை ஜாக்குலீன், யோகிபாபு கடையில் வேலை பார்க்கும் கண்ணாடி போட்ட பையன், மொட்டை ராஜேந்திரன் அனைவரும் ரசிக்க வைக்கின்றனர்.

டோனி கேரக்டரும் படத்திற்கு கைகொடுத்துள்ளது. ஜாக்லினை காதலிக்கும் அந்த இளைஞர் ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்துடன் ஒன்ற வைக்க சிவகுமாரின் ஒளிப்பதிவு உதவியுள்ளது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு வர முக்கிய காரணம் அனிருத் தான்.

பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே என்றாலும் சில நேரம் டயலாக் புரியாமல் செய்து விடுகிறது.

எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும், மேல் உள்ள 10 மாடிக்கு போக 8 வருஷம் ஆகும், பச்சையப்பாவில் படித்தாலும் பச்சை பச்சையாக பேசுவேன் உள்ளிட்ட டயலாக்குகள் அப்ளாஸ்க்கு கேரண்ட்டி.

முதல் பாதி மற்றும் இடைவேளையில் ஸ்கோர் செய்யும் நெல்சன் க்ளைமாக்ஸில் சொதப்பி இருக்கிறார். க்ளைமாக்ஸ் அழுத்தமாக இருந்தால் கோலமாவு கோகிலா நன்றாகவே ஸ்கோர் செய்துவிடுவார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து ஜெட் வேகத்தில் கொண்டு போகாமல் ஜவ்வென இழுத்து விட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா… Just Go and Enjoy Don’t Expect more

விஸ்வரூபம் 2 விமர்சனம்

விஸ்வரூபம் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், வகீதா ரகுமான், ரகுல் போஸ், தீபக் ஜேத்தி, ஆனந்த் மகாதேவன் மற்றும் பலர்.
இயக்கம் – கமல்ஹாசன்
ஒளிப்பதிவு – சானு வர்கீஸ்
எடிட்டிங் – மகேஷ் நாராயணன், விஜய் சங்கர்
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு : கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ்
பிஆர்ஓ : டைமண்ட் பாபு

கதைக்களம்…

இந்த கதைக்கு உள்ளே சென்று அவர்கள் சொன்னப்படி சொன்னால் நிச்சயம் குழம்பித்தான் போவீர்கள். எனவே புரிகிற மாதிரி சொல்கிறேன்.

உளவுத்துறையான ‘ரா’ என்ற அமைப்பின் அதிகாரிகளான கமல்ஹாசன், சேகர் கபூர், ஆண்ட்ரியா ஆகியோர் அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய உமர் என்ற தீவிரவாதியை தேடி செல்கின்றன.

இவர்களுடன் கமலின் மனைவி பூஜாகுமாரும் வருகிறார். ஒரே சமயத்தில் மனைவி, சைட் அடிக்கும் காதலி என வருகிறார் உலகநாயகன்.

இந்த அதிகாரிகளை கொலை செய்ய பலவித முயற்சி நடக்கிறது.

அப்போது லண்டனில் உள்ள கடலில் செயற்கையாக பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுத்தி லண்டன் முழுவதையும் அழிக்க உமர் திட்டமிடுகிறார் என்பதை கமல் கண்டு பிடிக்கிறார்.

அதனை இந்த உளவாளிகள் எப்படி தடுக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

இதன் நடுவில்…

விசாம் (கமல்) பயிற்சி பெறும்போது ஆண்ட்ரியா எப்படி பயிற்சி பெறுகிறார்? என்பதை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்.

மேலும் விசாம் எப்படி அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பில் சேர்ந்தார் போன்ற காட்சிகளையும் காட்டியுள்ளனர்.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை கமல் ஒரு நடிகராகவே இருந்தார். தற்போதுதான் அரசியல்வாதியாக மாறிவிட்டாரே.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சில தீம் பாடல் காட்சிகளையும் வைத்துவிட்டார். படத்தையே அப்படிதான் தொடங்குகிறார்.

கிடைத்த கேப்பில் எல்லாம் அரசியல் & ஆன்மிகம் பேசிவிட்டார். முஸ்லீம் இந்து, ஐயர் என அனைத்தையும் நல்லெண்ண அடிப்படையில் நாசூக்காக வாரியிருக்கிறார்.

படம் முழுக்க முகத்தில் பிளாஸ்த்ரி ஒட்டிக் கொண்டு வருகிறார். அதே சமயம் எல்லா காட்சியிலும் பக்கா க்ளீன் ஷேவ் செய்திருக்கிறார். அது எப்படி?

விசாமின் மனைவியான நிரூபமா. இவர் ஒரு நியூக்ளியர் ஆன்கோலாஜிஸ்ட் என்பதாக சொல்லியிருக்கிறார்.

கடலுக்கு அடியில் இருக்கும் வெடிகுண்டை செயல் இழக்க இவர் பாதுகாப்பான உபகரணங்களுடன் செல்கிறார்.

ஆனால் திடீரென கமல் குதிக்கிறார். கடலுக்கு அடியில் சண்டை போடுகிறார். இறுதியில் சீஸியும் கலந்து இருக்கும் அந்த வெடிகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடுகிறார். அது எப்படி????

கமலின் தாய் உயிருடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கிறார்கள். கூடவே வெகு நாட்களுக்கு பிறகு கமல் படத்தில் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது ஆறுதல்.

கமலின் அம்மா வஹீதா ரஹ்மானுக்கு அல்ஸீமர் நோய் இருப்பதால் அவர் விசாம் தன் மகன் என்று கூட தெரியாமல் இருக்கிறார்.

தன் கணவருடன் தன் மகன் பாகிஸ்தான் சென்று விட்டதாக கூறுகிறார் அவர். ஆனால் எதற்கு அவர்கள் அங்கு சென்றார்கள் ஆகியவற்றை காண்பித்திருந்தால் ரசிகர்களுக்கு புரிந்து இருக்கும்.

ஆக்சனும் சரி. அழகும் சரி. ஆண்ட்ரியா செம கெத்து. கமலையும் பூஜாவையும் ஓட்டிக் கொண்டே இருப்பது ரசிக்க வைக்கிறது.

ஆக்சன் ஹீரோயினுக்கு இனி ஆண்ட்ரியாவுக்கு அப்பாய்மெண்ட் கொடுத்துடலாம்.

கமலுக்கு ஆண்ட்ரியாவுக்கு என்ன உறவு என குழம்பி போகிறார் பூஜாகுமார். சில சமயம் நமக்கும் அந்த குழப்பம் வந்துவிடுவது உண்மைதான்.

ஆனால் ரொமான்ஸில் கமலையும் இளைஞர்களையும் சூடேற்றிவிடுகிறார் ஒரு பாடல் காட்சியில் கமலை தாஜா செய்துவிடுகிறார் இந்த பூஜா.

சேகர் கபூரின் நடிப்பும், உமர் என்ற கேரக்டரில் நடித்துள்ள ராகுல் போஸ் நடிப்பும் கச்சிதம். கமலை வெறுக்கும் அரசு அதிகாரியாக ஆனந்த் மகாதேவன் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்து விடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்களும் இதமான ராகம். இவன் யாரென்று தெரிகிறதா? என் தீம் சாங் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

ஜிப்ரான் இசையில் ‘நானாகிய நதிமூலமே’ பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. பின்னணி இசையிலும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்து கலக்கியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் மூலம் பாமர மக்களையும் சென்றடைகிறார் கமல். ஆனால் இதுபோல் படங்களால் கிராம மக்களிடம் இருந்து விலகியே நிற்கிறார். சி சென்டர்களில் படம் புரியாமல் நிறைய பேர் தவிப்பது நிச்சயம்.

பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல். இதிலும் சின்ன சின்ன விஷயங்களை கையாண்டுள்ள விதம் அருமை. ஆனால் முதல் பாக அளவு இதில் விஷயம் இல்லை என்பதுதான் பெரிய வருத்தம்.

க்ளைமாக்ஸில் முறையான பைட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

விஸ்வரூபம் 2…. கமல் தொண்டர்களுக்கு

Vishwaroopam II review and rating

More Articles
Follows