பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.25/5.; பொய் இல்லாத குடும்ப பாசம்

பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.25/5.; பொய் இல்லாத குடும்ப பாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தன் மகளுக்காக போராடும் ஒற்றைக்கால் நாயகனின் வாழ்க்கையும் வலியும்.!

கதைக்களம்…

ஒரு விபத்தில் தன் ஒரு காலை இழந்தவர் நாயகன் பிரபுதேவா. இவர் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியை செய்கிறார். இவரது நண்பன் ஜெகன்.

மனைவியை இழந்த பிரபுதேவாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தன் மகளுக்கு இருதய பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.

அதன் அறுவை சிகிச்சைக்காக ரூ.70 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக பலரிடம் பணம் கேட்கிறார் பிரபுதேவா. ஆனால் எவரும் உதவவில்லை.

எனவே ஒரு பிரபல நிறுவனம் சார்பாக கிரவுட் ஃபண்டிங் மூலம் தன் மகளுக்காக பணம் திரட்டுகிறார். ஆனால் வசூலான கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகிறது.

இதனால் வெறுத்துப் போன பிரபுதேவா இனி நல்ல வழியில் சென்றால் தன் மகளை இழக்க நேரிடும் என்பதால் ஒரு தவறான வழிக்கு முயற்சி செய்கிறார்.

பெரிய கோடீஸ்வரியான வரலட்சுமி மகளை கடத்தி பணம் பறிக்க முயல்கிறார். அந்த குழந்தையை கடத்தும் போது வசமாக சிக்கி கொள்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? தன் மகளைக் காப்பாற்றினாரா பிரபுதேவா? வரலட்சுமி என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஒற்றைக் காலால் நடிப்பதற்கே ஒரு பெரிய தைரியமும் தில்லும் வேண்டும். அதுவும் கோலிவுட் நாயகர்கள் சிலர் இதுபோன்ற விஷப்பரிட்சைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்று நடித்திருக்கும் பிரபுதேவாவை கண்டிப்பாக பல மடங்கு பாராட்டலாம். ஒற்றைக் காலை வைத்துக் கொண்டு மகளுக்காக உருகுவதும்.. நடனமாடுவதும்.. பைட் செய்வதும் என அசத்திவிட்டார்.

ஒற்றைக்கால் நாயகனுக்கு உதவும் நண்பனாக ஜெகன். சில காட்சிகளில் அயன் பட நண்பர் பாத்திரத்தை நினைவுபடுத்துகிறார்.

படத்திற்கு நாயகி கேரக்டர் தேவைப்படும் என்பதால் ரைசா வில்சன் வருகிறார். அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

மகளாக நடித்திருக்கும் ஆலியா பாராட்டுக்குரியவர். அப்பா மீது பாசம் காட்டும் மகளாக நம்மை கவர்கிறார்.

ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ள வரலட்சுமியை பாராட்டலாம். ஆனால் அவர் இவ்வளவு ஸ்பீடாக பேசுவது இன்னும் எத்தனை நாளைக்கு.?? நிறுத்தி நிதானமாக பேசினால் ரசிகர்களுக்கு புரியுமே..

வில்லனாக ஜான் கொக்கென். ஓகே தான். இவர் சார்பட்டா பரம்பரையில் நடித்தவர்.

பிரகாஷ்ராஜ் கேரக்டர் வலுவில்லாத ஒன்றாகும். அவரை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

இமானின் இசையில் “சிங்கிளு.. சிங்களு..” பாடல் ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசையிலும் தெறிக்கவிட்டுள்ளார்.

சென்டிமெண்ட் பாடலில் கார்க்கியின் பாடல் வரிகள் பக்க பலம்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரிடம் இருந்து இனி நல்ல படங்கள் வருவதற்கு அறிகுறியாக இந்த படம் அமைந்துள்ளது.

ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைப்பதாக எண்ணி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ட்விஸ்ட் என வைத்து போதும் என சொல்ல வைக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் சிறப்பு.. (DOP – Ballu)

முக்கியமாக இந்த படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர் பிரீத்தி மோகன். இது போன்ற துறைகளுக்கு பெண்கள் வருவது அரிது. துணிச்சலாக வருகை புரிந்துள்ள பிரித்தியை வெகுவாக பாராட்டலாம்.

எனிமி படத்தை தயாரித்த வினோத்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒற்றைக்கால் நாயகனே நம்பி முதலீடு செய்த வினோத் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர் தான்.

ஆக.. இந்த ‘பொய்க்கால் குதிரை’.. பொய் இல்லாத குடும்ப பாசம்

Poikkal Kuthirai movie review and rating

எண்ணித் துணிக விமர்சனம்.; வைரத்தை விட வைராக்கியமே!

எண்ணித் துணிக விமர்சனம்.; வைரத்தை விட வைராக்கியமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rain Of Arrows என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் வழங்க ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா நடிப்பில் எஸ் கே வெற்றிச் செல்வன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய படம்.

ஒன்லைன்…

தன் காதலியை சுட்டுக் கொன்ற கொள்ளையர்களை நாயகன் பழிதீர்க்கும் கதை.

கதைக்களம்…

ஜெய் – அதுல்யா காதல் ஜோடிகள். இவர்கள் தங்கள் திருமணத்திற்காக நகை எடுக்க செல்கின்றனர்.

மறுபுறம்… அமெரிக்காவில் உள்ள கொள்ளைக் கும்பல் தலைவன் (தயாரிப்பாளர்) சுரேஷ் சுப்ரமணியம் இந்தியாவில் உள்ள வம்சி கிருஷ்ணா மூலம் டைமண்ட் கொள்ளைகளை நடத்துகிறான் .

இதில் அமைச்சர் சுனில் ஷெட்டி தனக்கு சொந்தமான நகைக் கடை ஒன்றில் உள்ள சுமார் 2000 கோடி மதிப்புள்ள பத்து வைரங்களை வைக்கிறார்.

அந்த கடையில் கொள்ளை நடக்கும் போது..

அதுல்யா அங்கு இருக்கிறார்.

அதே சமயம்… தன் குழந்தை சிகிச்சைக்க்காக தன் நகைகளை விற்க அஞ்சலி நாயரும் வருகிறார்.

அப்போது இவர்களை கொள்ளையர்கள் கொல்கின்றனர்.

எனவே அவர்களை பழி தீர்க்க புறப்படுகிறார் ஜெய். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெய் ஸ்மார்ட்டாக வருகிறார். அதுல்யாவுடன் கெஞ்சுகிறார். பயப்படும்போது அடிக்கடி எங்கேயும் எப்போதும் சீன்களை ஞாபகப்படுத்துகிறார்.

ஆக்சன் காட்சிகளில் அசத்தல். சில நேரம் ஓவர் பில்டப்.

அழகாக வருகிறார் அதுல்யா. பசுமைக்காக போராடுகிறார். ஆனால் முதல் படத்தில் பார்த்த முகப்பொழிவு இப்போ இல்லை.

அஞ்சலி நாயர். : அழகும் நடிப்பும் ஓகே. குழந்தைக்காக ஏங்கும் கேரக்டர்.

சரண்யா ரவி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனிக்க வைத்து விடுகிறார். அவர் பேசும் கிழாமத்து பாஷை அழகு.

வித்தியாசமான வேடத்தில் வித்யா பிரதீப்.

ஸ்டைலிஷ் வில்லன் வம்சி கிருஷ்ணா. சாம் சுரேஷ் உள்ளிட்டோரும் கச்சிதம்.

அதிரடி சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் ஃபைட் மாஸ்டர் முருகன்.

சாம் சி எஸ் இசை, தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு அனைத்தும் சிறப்பு.. பாடல்களை விட பின்னணி நன்றாக அமைந்துள்ளது.

வெற்றிசெல்வன் இயக்கியுள்ளார். முதல் பாதி குழப்பமாக இருந்தாலும் 2ம் பாதியில் தெளிவாகி விட்டார். ஆனால் 10 வைரக்கல் ரூ 2000 கோடி என்பது நம்பும்படியாக இல்லை.

வைரக்கல்லை தேடா விட்டாலும் பழி தீர்க்க புறப்பட்ட ஜெய்யின் வைராக்கியமே ‘எண்ணித் துணிக’.

Yenni Thuniga movie review and rating in Tamil

விக்ராந்த் ரோணா விமர்சனம்..2/5.; வீணா போணா..

விக்ராந்த் ரோணா விமர்சனம்..2/5.; வீணா போணா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கமரூட்டு என்ற மலைப் பிரதேச காட்டுப்பகுதிக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சுதீப். (என்ன படத்தில் அவர் போலீஸ் யூனிபார்ம் அணியவே இல்லை இது படத்தில் வரும் காட்சிகள் வசனமாக கூட வருகிறது)

அங்கு 15 குழந்தைகளும், சில நபர்களும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். ஆனால் பேய் தான் அந்த கொலைகளை செய்தது என்று சிலர் நம்புகின்றனர்.

அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் போலீஸ்.. திடீர் திடீர் பேய்கள் வருகின்றன.. ஆனால் கடைசில என்னதான் நடக்கிறது என்பதே நமக்கே புரியவில்லை.

கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சுதீப் இந்த படத்தில் நாயகன்.. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் நம் மனதை கவர்ந்தவர் சுதீப்.. இந்த படத்தில் செம ஸ்டைலாக இருக்கிறார்.. சுருட்டு குடித்துக் கொண்டே இருக்கிறார்… விசாரணை செய்கிறார்.. ஆட்டம் போடுகிறார்.. அவ்வளவுதான்.

விசாரணைக்கு போகும்போது தன் மகளையும் சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார்.. அந்த லாஜிக் புரியவில்லை.

அம்மாவாக வரும் பிரியா வி., விஸ்வநாத்தாக வரும் ரவிசங்கர் கவுடா உட்பட பலரும் உள்ளனர்.

பெரிய புள்ளியாக மதுசூதன ராவ். அவரது மகனாக நிரூப் பண்டாரி, நிரூப் காதலியாக நீதா அஷோக் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

இயக்குநர் அனூப் பண்டாரி.. அடிக்கடி காட்டு பகுதிகளை மட்டுமே காட்டுகிறார் இயக்குனர்.. படம் முழுவதும் இருட்டாகவே இருக்கிறது.. ஒருவேளை சூரியனே சூட்டிங் நேரத்தில் உதிக்கவில்லையா என்னவோ?

ஊரில் மக்களே இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் ஒரு சாராயக் கடை காண்பிக்கப்படுகிறது.. அதில் மட்டும் நிறைய பேர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். படம் முழுக்க இருட்டு நமக்கு டையட் ஆயிட்டு..

ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட்.. முழு படத்தையும் இருட்டில் தான் எடுப்பேன் என்று முடிவெடுத்து விட்டாரோ என்னவோ..

ஆனால் 3d தொழில்நுட்பத்தில் பல காட்சிகளை எடுத்துள்ளனர்.. அதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். போர் அடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தை ஓரளவுக்கு நிமிர்ந்து பார்க்க செய்வது 3டி தொழில்நுட்பம் தான்.

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நடனமாடும் ஐட்டம் டான்ஸ் செம… ‘ரா ரா..ராக்கம்மா..’ பாடலில் இசையமைப்பாளர் அஜனீஷ் செம மெட்டு… பின்னணி இசையும் பாராட்டும்படி உள்ளது.

ஆர்ட் டைரக்டக்கு நல்ல வேலை.. பேண்டஸி படமாக எடுக்க நினைத்து விட்டார்கள்.் அதனால் கலை இயக்குனரை நல்ல வேலை வாங்கி உள்ளார்.. இடையில் பேய் படம் போல த்ரில்லராக எடுக்க முயற்சித்துள்ளார். இப்படியாகவே காட்சிகள் நகர்கின்றன..

ஆக விக்ராந்த் ரோணா.. வீணா போணா..

VikrantRona movie review and rating in Tamil

பேட்டரி விமர்சனம்.; சாமானியனின் சார்ஜ்

பேட்டரி விமர்சனம்.; சாமானியனின் சார்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இதய சிகிச்சையில் கூட இரக்கமற்ற நபர்களின் வியாபாரமே கதை.

மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி, மற்றும் தீபக் நடிப்பில் உருவான படம் ‘பேட்டரி’.

கதைக்களம்…

சப் இன்ஸ்பெக்டர் ஹீரோ செங்குட்டுவன். சென்னையில் ஒரு கொலை நடக்க அந்த விசாரணையில் இறங்குகிறார் ஹீரோ.

அந்த நபர் கொலை செய்யப்படும்போது அவரது வாயில் பல பேட்டரிகளை திணித்து கொல்லப்படுகிறார். இதுபோல அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன.

ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்படுகிறார். தீவிர விசாரணையில் இறங்கியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது.

பேட்டரிகளை வாயில் திணித்து கொல்லப்படுவது ஏன்? இந்த கொலைகளை யார் செய்வது? எதற்காக செய்கிறார்கள்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஹீரோ செங்குட்டுவன் கம்பீரமான போலீசாக வருகிறார். கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். சில காட்சிகளில் மெச்சூரிட்டி தேவை. முகபாவனைகள் போதுமான அளவு இல்லை.

கதையின் நாயகியாக அம்மு அபிராமி. முதலில் படத்துடன் ஒட்டாமலே இவரின் கேரக்டர் நகர்வது போல தெரிந்தாலும் கிளைமாக்ஸ் இல் இயக்குனர் ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளது சிறப்பு. ஆனால் ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்பது போல பல காட்சிகள் வருகிறார் அம்மு.

போலீஸ் அதிகாரியாக யோக் ஜேபி, தீபக் ஷெட்டி ஆகியோர் போலீசுக்கு உரித்தான கம்பீரத்தையும் தோற்றத்தையும் கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் அபிஷேக், நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர், சிறுமி மோனிகா என அனைத்து நடிகர்களும் கச்சிதம்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளது சிறப்பு. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்.

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை பல படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இதில் பேஸ்மேக்கரில் பொருத்தப்படும் பேட்டரிகளாலும் அதில் நடக்கும் திருட்டு மோசடிகள் என அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் மணி பாரதி.

இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக இந்த பேட்டரி படம் க்ரைம் மெடிக்கல் த்ரில்லராக அமைந்துள்ளது.

ஆக… இந்த பேட்டரி… சாமானியனின் சார்ஜ்

Battery movie review and rating in Tamil

குலுகுலு விமர்சனம்.; கொஞ்சம் லொள்ளு.. கொஞ்சம் சொல்லு.!

குலுகுலு விமர்சனம்.; கொஞ்சம் லொள்ளு.. கொஞ்சம் சொல்லு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

13 மொழிகள் தெரிந்தவர்.. உதவி என்று கேட்டால் உடனே செய்பவர்.. அனைத்தும் அறிந்தவர் என்பதால் சந்தானத்தை google என்று அழைக்கினர். ஒரு கட்டத்தில் அதுவே மறுவி குலு பாய் என்கின்றனர்.

கதைக்களம்…

சந்தானம் ஒரு நாடோடி. யார் எந்த உதவி கேட்டாலும் உடனே சற்றும் தாமதிக்காமல் உதவி செய்து வருபவர்.. ஒரு கட்டத்தில் போலீஸ் சாய் தீனா ஒரு பிச்சைக்காரியை அவமானப்படுத்த.. அந்த பிச்சைக்காரி உதவி கேட்டதன் பேரில் போலீசை அடிக்கிறார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த 3 இளைஞர்கள்… எங்கள் நண்பரை ஒருவர் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகிறார். நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்கின்றனர்.

அவர்களுக்கு உதவ போய் பல சிக்கல்களை சந்திக்கிறார் சந்தானம். ஆனாலும் அந்த நண்பனை மீட்கும் போராட்டத்தில் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்..

இது ஒரு புறம் இருக்க.. பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார்கள் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர்.

அடுத்த இடத்தில்…

மரியம் ஜார்ஜ்ஜின் உறவினரை விடுவிக்க, அவரின் கடத்தலுக்குத் துணை புரிகின்றனர் நான்கு இலங்கைத் தமிழர்கள்.

இந்த மூன்றும் கதையும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்கும் கதையே குலுகுலு.

கேரக்டர்கள்…

சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் முழுக்க முழுக்க சீரியஸ் கேரக்டரை செய்திருக்கிறார் சந்தானம். இவரை சுற்றி உள்ளவர்களுக்கு காமெடி அடித்தாலும் சிந்திக்கும் கருத்துக்களையே தெரிவிக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பிச்சைக்காரி பிச்சை கேட்கும் போது.. ஏன் பிள்ளையை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கிறார் என கேட்கிறார்? அதுக்கு அந்த பிச்சைக்காரி அது என் பிள்ளை இல்லை” என்கிறார்.. இந்த குழந்தை யார் கையில் இருந்தாலும் அது குழந்தைதான் என்று சென்டிமென்ட் பேசுகிறார்.

சந்தானம் பல படங்களை காமெடி செய்து விட்டார் இனி சீரியஸ் ரோலும் செய்வார் என எதிர்பார்க்கலாம் போல.

கெரஸ்கோஃபோபியா (Gerascophobia) எனும் வயதாகுதல் குறித்த அச்சத்தினையுடைய நவநாகரீக யுவதி வடிவுக்கரசியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி.

இவருடன் அதுல்யா, சந்த்ரா இரண்டு பேரும் நாயகிகளாக வருகின்றனர். மேக்கப் எதுவும் இல்லாமல் படத்தின் கதையுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

ஆனால் கிளைமாக்ஸில் இவர்கள் காதலை மாற்றிக் கொள்வதும் காதலர்களை மாற்றிக் கொள்வதும் ரொம்ப ஓவர் தான்.

வில்லனாக ப்ரதீப் ராவத், போலீஸாக சாய் தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் உள்ளிட்ட அனைத்து கதாப்பாத்திரங்களும் கச்சிதம்.

அதிலும் சிக்கனமாக இருக்க யோசனை சொல்லும் TSR ஆகியோரின் காமெடி வேற லெவல்.

லொல்லு சபா ‘மாறன்’ & சேசு ஆகிய இருவரும் சிறிது நேரமே வந்தாலும் தங்கள் பங்களிப்பில் சூப்பர்.

டெக்னீசியன்கள்..

பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பழிவாங்க நேரடியாக துப்பாக்கி கொண்டு வரும் சில சைனீஸ் இளைஞர்கள்… இன்ஸ்டாகிராமில் வீடியோவை பார்த்து பெண் கேட்கும் வரும் நபர்… பள்ளி மாணவியை கற்பழிக்க வரும் இரண்டு இளைஞர்கள்… என ஆங்காங்கே சில கேரக்டர்களை கதைக்குள் கொண்டு வந்து படத்தில் சுவாரஸ்யம் காட்டியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவரிடம் இருந்து இப்படி ஒரு படமா.? என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு உள்ளது.. தன் வழக்கமான பாணியை மாற்றி இதில் வேறு விதமாக முயற்சி செய்திருக்கிறார்.

வசனங்களும் பலே…

புத்திசாலிகள் எப்படி யோசிப்பார்கள் என்பதை யூகிக்க முடியும்.. ஆனால் கிறுக்கன்கள் ஆபத்தானவர்கள்.. கிறுக்கனிடம் நாட்டை கொடுத்தால் எப்படி.? என அரசியல் வசனங்களும் பேசுகிறார் சந்தானம்.

விஜய் கார்த்திக் கண்ணனின் அட்டகாசமான ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

சந்தோஷ நாராயணன் பாடல்கள் ஓகே. ஆனால் எல்லா பாடலும் ஒரே போல உரையாடலாக வருவது கொஞ்சம் போர்தான்.

ஆக குலு குலு.. கொஞ்சம் லொள்ளு.. கொஞ்சம் சொல்லு..

Gulu Gulu movie review and rating in Tamil

தி லெஜண்ட் விமர்சனம்.; சரவெடியில் சாரல் மழை

தி லெஜண்ட் விமர்சனம்.; சரவெடியில் சாரல் மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

விஞ்ஞானி சரவணன்.. சர்க்கரை
நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிறார். அதனை நம் நாட்டுக்காக நாட்டுமையாக்க போராடுகிறார்.

அதற்கு எதிராக மெடிக்கல் மாஃபியா-களுடன் போராடுகிறார். இதுதான் படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி சரவணன் (அருள் சரவணன்) மக்களுக்கு சேவை செய்ய தன் சொந்த ஊருக்கு வருகிறார்.

தன் பால்ய நண்பனை சர்க்கரை நோய்க்கு பரிகொடுத்து விட்டதால் அந்த நோய்க்கான நிரந்தர மருந்தை கண்டுபிடிக்க இறங்குகிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சரவெடி சரவணன் என்ற தீம் மியூசிக் உடன் தான் அறிமுகமாகிறார் சரவணன். அதன் பிறகு ப்ளாஷ்பேக் காட்சிகள்.

சரவணன் தான் படத்தின் எல்லாம். ஆனால் டயலாக்கில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் இல்லை. விவேக் & யோகிபாபு உடன் காமெடி… காதலியுடன் ரொமான்ஸ்… வில்லனுடன் ஃபைட் என களம் உள்ளது. ஆனால் சரவணன் தான் அப்படியே நிற்கிறார்.

நாயகிகள் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி நடித்துள்ளனர். இருவரும் நடிப்பிலும் அழகிலும் கவர்ச்சியிலும் சிறப்பு.

காமெடியனாக விவேக் நடித்துள்ளார். அவர் டப்பிங் பேசுவதற்குள் இறந்துவிட்டதால் அவருக்கு மட்டும் லைவ் ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது. காமெடி ஓகே.

ஆனால் டைட்டில் கார்டில் விவேக்கு அஞ்சல் கூட செலுத்தவில்லை.

யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, விஜயகுமார், லதா, லிவிங்ஸ்டன், சுமன், தீபா, திவ்ய தர்ஷினி, முனிஷ்காந்த் , மன்சூர் அலிகான் என சரவணா ஸ்டோர் விளம்பரம் போல் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

50 வருட தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர். சரவணன் ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் போல் பிரம்மாண்டமாக ஒவ்வொரு காட்சியும் உள்ளது. பாடலும் சரி.. காதலும் சரி… சென்டிமெண்டும் சரி… ஆக்சனும் சரி… எல்லாமே பிரம்மாண்டத்தின் உச்சம்.

இந்த படத்தை ஹாரீஸ் ஜெயராஜின் கம்பேக் எனலாம்.. கொஞ்சி.. கொஞ்சி.. . ‘வாடிவாசல்’ ‘மஸலோ மசலு’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கூடவே தாளம் போட வைக்கிறது.

சண்டைக் காட்சிகளின் பின்னணி இசையும் மிரட்டல். சில இடங்களில் ஓவர் டோஸ்.

நிறைய பாடல்கள்.. சண்டை என மாறி மாறி வந்தாலும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான்.. ஆரம்பம் முதல் க்ளைமாக்‌ஸ் வரை கலர்ஃபுல்.. ஆக இருக்கு.

ரூபன் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்த்தாலும் 2ம் பாதி நீளத்தை குறைத்திருக்கலாம்.

இயக்கம்…

நாம் டிவி-யில் தினமும் பார்க்கும் (800க்கும் மேற்பட்ட) விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி ஆகிய இருவரும் இந்த படத்தை இயக்கியுள்ளனர். (அஜித் – விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர்கள் இவர்களே.)

திடீரென டெல்லி… திடீரென பூஞ்சோலை.. திடீரென பாரீஃன் என காட்சிகள் கோர்வையில்லாமல் நகர்கிறது.

சூர்ய வம்சம் பட வாத்து சீன்… விவேக்கின் பழைய கேரள காமெடி… எம்ஜிஆரின் சாட்டையடி பைஃட் சீன்… பெரிய ஹீரோக்களின் பன்ச் வசனங்கள் என பலமுறை பார்த்த காட்சிகளே வருவது போரடிக்கிறது.

படம் ஆரம்பித்த உடன்.. ‘அவன் சாதாரண ஆள் இல்ல’ என்ற பில்டப் வசனங்கள் முடியல..

தன் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் உள்ள 500 – 1000 டிரெஸ்களை தனக்கு மட்டுமே பயன்படுத்தி இருப்பார் போல.. ப்ரேமுக்கு ஒரு காஸ்டியூம் மாற்றிவிட்டார் சரவணன்.

கோடிக்கணக்கில் செலவு செய்து முழுக்க முழுக்க ஹீரோயிசத்தை சொன்னவர்கள் படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனத்தை செலுத்தி இருந்தால் நிஜமாகவே ‘தி லெஜண்ட்’ லெஜண்டாக இருந்திருப்பார்.

ஆக… தி லெஜண்ட்… சரவெடியில் சாரல் மழை

The legend movie review and rating in Tamil

More Articles
Follows