தாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)

தாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு, வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் மற்றும் பலர்.
இயக்கம் – சீனு ராமசாமி
ஒளிப்பதிவு – ஜலந்தர் வாசன்
எடிட்டிங் – மு. காசி விஸ்வநாதன்
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

விவசாயம் படித்த பட்டதாரி உதயநிதி. தன் தந்தை சொன்னால் மறுவார்த்தையே கிடையாது என வாழ்பவர்.

மேலும் தாய் இல்லாத தனக்கு அப்பத்தா (வடிவுக்கரசி) தான் என எல்லாம் என்பதால் இவர்களின் கட்டுப்பாட்டில் வளர்கிறார்.

தனது சொந்த நிலத்திலேயே இயற்கை உரங்களை தயாரித்து அதை இலவசமாகவும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

வங்கியில் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் கடன் வாங்கி கொடுப்பதும் அவர்கள் கட்டவில்லை என்றால் அவர்களுக்காக இவர் கட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

வங்கியில் நேர்மையாக பணிபுரியும் பேங்க் மேனஜர் தமன்னாவை சந்திக்கிறார். அவர் மீது காதல் கொள்ள, இரு வீட்டார் சம்மத்துடன் பல பிரச்சினைகளுக்கு பிறகு திருமணமும் நடக்கிறது.

அதன்பின்னர் ஒரு கட்டத்தில் பார்வையை இழக்கிறார் தமன்னா. அதன்பின்னர் என்ன ஆனது? அதில் இருந்து அவரை எப்படி மீட்டு எடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஊர் சுத்தும் பையன், பெற்றோர் பேச்சை கேட்காதவர் என படங்களில் நடித்து வந்து உதயநிதி இதில் தன் வழக்கத்தை மாற்றியிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெற்று விடுகிறார்.

தமன்னாவை படம் முழுவதும் தாங்கி அன்பான கணவனாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் சென்டிமெண்டிலும் தேறியிருக்கிறார் உதயநிதி.

ஆனால் ஒரு வாரம் சாப்பிடாம இருக்கும் காட்சியில் சோர்வு பத்தவில்லை. ஜீஸ் குடிப்பதற்கு முன்பே படு ப்ரெஷ்ஷாகிவிடுகிறார். அது எப்படியோ? பல இடங்களில் ஒரே முக பாவனையை மட்டுமே காட்டுகிறார்.

தர்மதுரை படத்திலேயே தமன்னாவை வேறு கோணத்தில் காட்டியிருப்பார். இதில் நேர்மை, பொறுமை, கண் மை என எக்ஸ்ட்ரா மைகளை சேர்த்துள்ளார். தமன்னாவின் கண்களுக்காகவே க்ளோஸ் அப் சாட்டுகளை அதிகம் காண முடிகிறது.

ஒரு துளி கூட கவர்ச்சியில்லாத தமன்னாவை காட்டியிருப்பது சிறப்பு.

உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராம், அப்பத்தா வடிவுக்கரசி, தோழி வசுந்தரா என அனைவரிடத்திலும் மிகையில்லாத நடிப்பை வாங்கியிருக்கிறார் சீனுராமசாமி.

நாயகன் நண்பர்களாக வரும் அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. எந்தன் கண்களை காணோம் பாடல் படத்திற்கு ஹைலைட்.

பாடல்களை விட வைரமுத்துவின் பாடல் வரிகள் நம்மை அதிகமாகவே ஈர்க்கின்றன.

ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். கிராமத்து அழகை அழகாக ரசித்துக் கொண்டே இருக்கும்படி தந்துள்ளார். இது அவரின் முதல் படமா? என்பதை நம்ப முடியவில்லை.

முதல் பாதியில் படம் சீரியல் போல உள்ளதை தவிர்த்து இருக்கலாம். கிராமத்தில் எவ்வளவோ ரசிக்கத் தகுந்த காட்சிகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் காண்பித்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

ஆனால் 2ஆம் பாதியில் படத்தை தாங்கி நிறுத்தியிருக்கிறார்.

பெண்களை உயர்வாக காண்பிப்பதில் சீனுராமசாமி செமசீனு ராமசாமி தான்.

மருமக வேலைக்கு போறதுதான் புடிக்கல. அவளை புடிக்கலைன்னு சொல்லலையே என மாமியார் சொல்லும்போது தாய்மார்களை கவர வைத்துவிடுவார்.

முதல்பாதியில் விவசாயம் கடன் முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் சொல்லியிருப்பது தமிழர்களை உற்சாகப்படுத்தும்.

கண்ணே கலைமானே… தாய்மார்களின் தாலாட்டு

Kanne Kalaimaane review rating

ஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)

ஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, மொசக்குட்டி வீரா, சாந்தினி, வர்ஷா பொல்லம்மா, சுந்தர், அஸ்மிதா, மொட்ட ராஜேந்திரன், ஆர்வி. உதயகுமார், ஆர் சுந்தர்ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – இசக்கி கார்வண்ணன்
ஒளிப்பதிவு – அருள் சீனிவாஸ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
இசை – மரியா மனோகர்
தயாரிப்பு – இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்..

இன்று நாம் எந்த பொருளை வாங்க நினைத்தாலும் வெளியே செல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடுகிறோம். நம் தேவைகளை இப்படியாக உடனடியாக கிடைத்தாலும் நம்மை நம்பி பக்கத்தில் கடை வைத்திருக்கும் பெட்டிக்கடைகள் அழிந்து வருகிறது.

நமக்கு பிடித்த பொருட்களை ப்ரெஷ்ஷாக அண்ணாச்சி கடையில் வாங்குவோம். ஆனால் ஆன்லைன் பெயரில் பல மாதங்களாக வைத்திருந்த உணவு பொருட்களை நாம் வாங்கி உட்கொட்கிறோம்.

வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்காலத்தில் நம்மை ஆளத் தொடங்கிவிடும் என்பதை அடித்துக் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக வருகிறார் சாந்தினி. ஒரு அவசர தேவைக்கு கூட ஒரு பொருளை வாங்க முடியாத நிலையில் அந்த கிராமம் உள்ளது. ஏனென்றால் பெட்டிக்கடையே அங்கு இல்லை.

கே லைன்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்தால் உடனே டெலிவரி செய்கின்றனர். இதற்கு பின்னணியில் அரசு அதிகாரிகளும் அரசும் உள்ளது அவருக்கு தெரிய வருகிறது.

எனவே ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் அந்த ஆன்லைன் வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறார் சாந்தினி.

இறுதியில் ஆன்லைன் நிறுவனத்தை ஒழித்தாரா? என்ன செய்தார்? சமுத்திரக்கனி யார்? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மொசக்குட்டி வீரா தான் படத்தின் நாயகன். வர்ஷாவை காதலிப்பதை முதல் பாதியில் செய்கிறார். 2ஆம் பாதியில் ஊருக்காக போராடி சாதித்து காட்டுகிறார்.

வழக்கம்போல சமூக கருத்துக்களை சொல்லி ஓவர் அட்வைஸ் செய்கிறார் சமுத்திரக்கனி. அதுவும் கிட்டி பில் பயிற்சி சொல்லித்தர இவர் ஊருக்கு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இதை இவரிடம் ஊர் மக்கள் சொல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என்பதே தெரியவில்லை.

அப்பாவியான முகத்தாலும் அழகான கண்களாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் வர்ஷா பொல்லம்மா.

முதலில் சாதாரண பெண்ணாக வந்தாலும் இறுதியில் சாதித்து காட்டுகிறார் சாந்தினி. இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

அழகும் திறமையும் உள்ள நடிகையாக அஸ்மிதா. ஆன்லைனை அழிக்க இவர் எடுக்கும் முடிவு வித்தியாசமான முடிவுதான்.

மொட்ட ராஜேந்திரன், ஆர்வி. உதயகுமார், ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இருந்தாலும் இவர்களின் கேரக்டர்களில் சுத்தமாக வலுவில்லை. அதுவும் மொட்ட ராஜேந்திரன் காமெடிகள் மொக்க.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மரியா மனோகரின் இசையும், அருள், சீனிவாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும் நமக்கு ஆறுதல் தருகிறது.

எடிட்டர் சுரேஷ் அர்ஸ் அவர்களும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

அனைத்திலும் ஆன்லைன் வரலாம். ஆனால் அது நமக்கே ஆபத்தாய் முடியும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடுத்துள்ளார் டைரக்டர் இசக்கி கார்வண்ணன்.

அவருக்கு இது முதல் படம். படத்தின் நாயகனுக்கும் இசக்கி பெயரை வைத்துவிட்டார். அது ஏனோ-.?

சமுத்திரக்கனி வந்தபின்தான் படம் டாப் கியரில் செல்கிறது. அதுவரை கிராமத்து காதல் என சில காட்சிகளால் போரடிக்க வைத்துவிட்டார்.

முன்பெல்லாம் எல்லா நோய்க்கும் ஒரே டாக்டர் இருப்பார். அப்ப நோயே இருக்காது. ஆனால் இப்போ ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு டாக்டர் இருக்கிறார். ஆனால் எந்த நோயும் தீரவில்லை என்ற வசனங்கள் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார் டைரக்டர் இசக்கி.

ஆன்லைன் வியாபாரத்தில் தவிர்த்து பெட்டிக்கடைகளுக்கு வாழ்வு கொடுத்து ஆரோக்யமாக வாழ்வோம் என்ற சொல்லப்பட்டுள்ள மெசஜுக்காக இந்த ‘பெட்டிக்கடை’ க்குள் சென்று வரலாம்.

பெட்டிக்கடை… ஆரோக்யத்துக்கு ஆன்லைன் ஆப்பு

Pettikadai Movie review rating

First On Net வாடகை வீடும் நிம்மதியில்லாத நிமிடங்களும்… டு லெட் விமர்சனம்

First On Net வாடகை வீடும் நிம்மதியில்லாத நிமிடங்களும்… டு லெட் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா மற்றும் ஒரு சிலர்.

இயக்கம் – செழியன்
ஒளிப்பதிவு – செழியன்
எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்

சவுண்ட் டிசைன் – தபஸ் நாயக்
தயாரிப்பு – பிரேமா செழியன்
பிஆர்ஓ – ஜான்

படத்தை பற்றி….

ஜோக்கர், பரதேசி, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட தரமான படங்களில்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செழியன். தற்போது இயக்குநராக அவதாரமெடுத்து ‘டு லெட்’ படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 2017 ஆண்டு முதல் 100க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

இப்படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது.

கதைக்களம்…

சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், இவர்களின் ஒரே மகன் தருண். (எல்கேஜி மாணவன்). இவர்கள் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். வீட்டின் ஓனர் தான் ஆதிரா பாண்டிலட்சுமி.

சினிமாவில் இயக்குனராக வாய்ப்பு தேடி அலைகிறார் நாயகன். எனவே சரியான வருமானம் இன்றி குடும்பம் நடத்த படாத பாடு படுகிறார்.

சரியான அடிப்படைகளை வசதிகளை செய்துக் கொடுக்காமல் வீட்டின் வாடகையை ஏற்றும் ஓனர். இதனால் வீட்டில் நிம்மதியின்றி தவிக்கிறார்கள்.

பிரச்சினை பெரிதாக வேறுவழியில்லாமல் குறிப்பிட்ட தேதியில் வீட்டை காலி செய்ய சொல்கிறார். இதனிடையில் வீட்டை பார்க்க பலரும் வருகிறார்கள்.

இவர்களும் குறைந்த வாடகைக்கு வேறு வீடு தேடி அலைகிறார்கள். இந்த அழகான பதிவுகளை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார் டைரக்டர் செழியன்.

கேரக்டர்கள்…

இந்த அழகான படத்தை 4 பில்லர்களாக தாங்கி நிற்கிறார்கள் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், அவரது 4 வயது மகன் மற்றும் ஹவுஸ் ஓனர்.

சென்னையில் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு தேடி அலையும் பாதிப்பேருக்கு இந்த படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கதை எழுதி தயாரிப்பாளரிடம் கொண்டு சென்றால் அவர் இவரை இயக்குனராக ஆக்காமல் கதையை மட்டும் கேட்கும் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தும்.

சினிமாவில் நாம் ஆக்சன் காட்சிகளை எப்படிஎல்லாம் ரசிக்கிறோம். ஆனால் அதன் பின்னால் எத்தனை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணிகள் உள்ளது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.

சினிமாக்காரன நம்பி நாட்டையே கொடுப்பாங்க. ஆனா ஒரு வீடு தரமாட்டாங்க என்ற வசனங்கள் கைத்தட்டலை பெறும்.

சின்ன சின்ன உணர்வுகளை ஒரு இல்லத்தரசியாக இனிமையாக வழங்கியிருக்கிறார் ஷீலா. என்னங்க நான் ஒன்னு சொல்லட்டுமா? என்று இவர் கணவரிடம் கேட்கும் அழகே தனிதான்.

போட லூசு பையா என்று கணவனை திட்டும் அழகும் ரசிக்க வைக்கிறது.

ஆதிரா பாண்டி லட்சுமியை அதிரடி பாண்டி லட்சுமியாக கூப்பிடலாம். நிறைய மிரட்டல் அதட்டல் இல்லாமல் இருந்தாலும் தன் பார்வையாலே நம்மை பதற வைக்கிறார்.

மாஸ்டர் தருனும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். தன் அப்பா அம்மா படும் சின்ன சின்ன கஷ்டங்களை புரிந்துக் கொண்டு அந்த பிஞ்சு மனதில் விளையாட்டு கூட வாடகை வீடு பற்றிய விளையாட்டமாக மாறியது கொடுமை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

பாடல்கள் பின்னணி இசை எதுவும் இல்லாமல் தன் சவுண்டை வைத்து இந்த படத்தை டிசைன் செய்துள்ளார் தபஸ் நாயக். படத்தின் உயிரோட்டத்திற்கு அது பெரிதும் கைகொடுத்துள்ளது.

கமர்சியல் பாடல் காமெடி என எதையும் நம்பாமல் தன் கதையையும் கதாபாத்திரத்தையும் நம்பி களம் இறங்கியுள்ள செழியனை பாராட்டலாம். போரடிக்காமல் சின்ன சின்ன அசைவுகளை படமாக்கியுள்ளது அருமை.

டு லெட்… வாடகை வீடும் நிம்மதியில்லாத நிமிடங்களும்

ஸ்டைலிஷ் தேவ் திரை விமர்சனம்

ஸ்டைலிஷ் தேவ் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரித்தி சிங், ஆர்ஜே விக்னேஷ்காந்த், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா மற்றும் பலர்.

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் – ரஜத் ரவிசங்கர்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
எடிட்டிங் – ஆண்டனி ரூபன்

தயாரிப்பு – பிரின்ஸ் புரொடக்சன்ஸ்
பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்..

கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். கார்த்தி பணக்கார வீட்டு பையன்.

எனவே தன் நண்பர்களை கூட வேறு வேலைக்குச் செல்ல விடாமல் கூட வைத்துக் கொள்கிறார்.

கார்த்தியின் தொல்லை தாங்காத இரு நண்பர்களும் அவரை காதலில் விழ வைத்துவிட்டால் நாம் எஸ்கேப் ஆகிவிடலாம் என்பதால் காதலியை தேடுகின்றனர்.

ஒருவழியாக பேஸ்புக்கில் ரகுலை பார்க்கும் கார்த்தி அவரை பிடித்து போக அவருடன் சுற்றுகிறார்.

ஆனால் தன் அப்பா தன்னை விட்டு போனதால் ஆண்களை வெறுக்கும் நபர் ரகுல் பிரித்தி சிங்.

ஆண்களை வெறுக்கும் நாயகி ரகுலை கார்த்தி எப்படி கரம் பிடித்தார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆக்சன், ரொமான்ஸ், ரிச் பாய் என செம ஸ்மார்ட் லுக்கில் வருகிறார் கார்த்தி. நடனத்திலும் அசத்துகிறார்.

கொஞ்சம் திமிர், கொஞ்சம் அழகு, கொஞ்சம் நடிப்பு என வருகிறார் ரகுல் பிரித்தி சிங்.

பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை.

மீசையை முறுக்கு படத்தில் நம்மை கவர்ந்த ஆர்ஜே. விக்னேஷ்காந்த் இப்படத்தில் தேவையா? என்றே தோன்றுகிறது. இவர் மட்டுமே வரும் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு படத்தை ஓட்டலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வேல்ராஜ் ஒளிப்பதிவில் காட்சிகளை ரசிக்க முடிகிறது. கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.

எடிட்டர் தான் நம் பொறுமையை சோதித்துக் கொண்டே இருக்கிறார். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ வரை போதுமடா சாமி என்று எண்ணத் தோன்றுகிறது.

எடிட்டரை ஆர்ஜே. விக்னேஷ்காந்த் தனியாக கவனித்தாரோ என்னவோ? அவரின் காட்சிகளை நீட்ட்ட்ட்ட்டீ… நம்மை அட விடுய்யா? என்று கதறவைத்துவிட்டார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒன்றிரண்டு ரசிகர்களை கவர்கிறது. ஆனால் பின்னணி இசை பல இடங்களில் நம்மை கடுப்பேத்துகிறது. படம் முடியும் தருவாயில் பாடல்களை வேற போட்டு நம்மை மீண்டும் சோதித்து விட்டார்.

திறமையான நடிகர்கள் வைத்துக் கொண்டு ஒரு நல்ல படத்தை வழங்க தவறவிட்டுள்ளார் ரஜத் ரவிசங்கர்.

தேவையற்ற காட்சிகளை வெட்டிவிட்டு படத்தை திரையிட்டால் இந்த தேவ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

First on Net : காதலர்களுக்கு சமர்ப்பணம்… ஒரு அடார் லவ் விமர்சனம்

First on Net : காதலர்களுக்கு சமர்ப்பணம்… ஒரு அடார் லவ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் செரிப், ரோசன், ஷியாத் ஷாஜகான், மிஷேல் மற்றும் பலர்

இசை – ஷான் ரஹ்மான்
இயக்கம் – உமர் லுலு
ஒளிப்பதிவு – சினு சித்தார்த்
எடிட்டிங் – அச்சு விஜயன்

தயாரிப்பு – கலைப்புலி எஸ் தானு
பிஆர்ஓ – டைமண்ட் பாபு மற்றும் ரியாஸ்

கதைக்களம்…

+1 மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவர்களிடையே நடக்கும் ஒரு காதல் கதை தான் இப்படம்.

பள்ளிக்கூட காதலை நாம் ஆதரிக்க கூடாது என்றாலும் இது ஒரு படத்தை பற்றிய விமர்சனம் என்பதால் வேறு வழியில்லாமல் படத்தை மட்டுமே பாராட்டுகிறோம்.

ரோசன் மற்றும் நூரின் இருவரும் நல்ல நண்பர்கள். இதில் தன் தோழி உதவியுடன் பிரியாவுக்கு ரூட்டு விடுகிறார் ரோசன்.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஒரு சூழ்நிலையில் ரோசனை பிரிந்து செல்கிறார் பிரியா. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார் ரோசன்.

அப்போது மற்றோரு பெண்ணை காதலிப்பது போல் நீ நடித்தால் உன் பிரியா உன்னைத் தேடி வருவாள் என்று ஐடியா கொடுக்கிறார்கள் மற்ற நண்பர்கள்.

யாரை காதலிப்பது என்று ரோசன் கேட்க, நம் தோழி நூரினை காதலிப்பது போல் நடி என்கின்றனர் நண்பர்கள். வேறு வழியில்லாமல் தோழியும் ஒப்புக் கொள்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

கேரக்டர்கள்…

புருவழகி பிரியா வாரியர் துறு துறு நடிப்பில் கவர்கிறார். சண்டை போடுவது, சின்ன சின்ன முக பாவனைகளில் நம்மை ஈர்க்கிறார். அதுவும் கண்ணடித்து கன் ஷாட் செய்து எல்லாம் செம.

ஒரு ஸ்கூல் பையன் கேரக்டரில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் ரோசன். நடிக்காமல் அந்த கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் ரோசன்.

இவரின் நண்பர்களாக வரும் அந்த குண்டு பையன் மற்றும் சினேகா மேடத்தை சைட் அடிக்கும் அந்த நண்பர்கள் படத்தின் ஹைலைட். படத்தை போரடிக்காமல் அழகாக ஜாலியாக கொண்டு செல்கின்றனர்.

ரோசன் மற்றும் பிரியா வரியர் இருவரும் படத்தின் நாயகன் நாயகி என்றாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார் நூரின். இவரின் காதா கேரக்டர் நம் மனதில் நிறைந்து நிற்கிறது.

அழகு நடிப்பு நடனம் என ஒவ்வொரு ப்ரேமிலும் நூரின் 100 அடித்திருக்கிறார். இவரின் கேரக்டரை பார்ப்பதற்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

இவர்களுடன் படத்தில் வலம் வரும் ஆசிரியர்கள் அனைவரும் செம. அதிலும் ஒன்றுமில்லாத லெட்டரை படிக்கும் அந்த போலீஸ் கேரக்டர் சிரிப்பின் உச்சம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. பாடல் வரிகளை மலையாளத்திற்கு மெட்டு அமைத்துள்ளதால் சிலவற்றை முழுமையாக கேட்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.

ஒரு பள்ளிக் காதலையும் அதில் இல்லாத மெச்சுரிட்டியையும் அழகாக காட்டியிருக்கிறார் டைரக்டர் உமர் லுலு.

க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று. மனதை கனமாக்கி நம்மை அனுப்புகிறது.

ஒரு அடார் லவ் படத்தை 90% சிரித்து ரசித்திருந்தால் க்ளைமாக்சில் 100% நம்மை அழவைத்து அனுப்பி விடுகிறார் டைரக்டர்.

ஒரு அடார் லவ்… காதலர்களுக்கு சமர்ப்பணம்

சந்தானம் கெத்து.. தில்லுக்கு துட்டு2 விமர்சனம்

சந்தானம் கெத்து.. தில்லுக்கு துட்டு2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சந்தானம், மொட்டை ராஜேந்திரன், ஷ்ரத்தா சிவ்தாஸ், ஊர்வசி, பிபின் மற்றும் பலர்.
இசை – சபீர்
இயக்கம் – ராம்பாலா
ஒளிப்பதிவு – தீபக் குமார் பார்த்தி
எடிட்டிங் – மாதவன் மது
தயாரிப்பு – சந்தானம்
பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்…

சந்தானம் அவரின் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். இவர்கள் தண்ணி போட்டு விட்டு செய்யும் அலப்பரையால் அந்த ஏரியாவே இவர்களுக்கு பயந்து வாழ்கிறது.

அதே ஏரியாவில் குடியிருக்கும் ஒரு டாக்டர் தன் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நாயகியிடம் தன் காதலை சொல்கிறார். ஐ லவ் யூ என்று சொன்ன மறு நிமிடமே இவருக்கு பல பிரச்சினைகள் பேய் ரூபத்தில் வருகிறது.

அதனால் அந்த பெண்ணை சந்தானத்திடம் கோர்த்துவிட நினைக்கிறார். சந்தானம் அந்த பெண்ணை லவ் செய்துவிட்டால் நிச்சயம் ஐ லவ் யூ என்று சொல்வார். அவரும் பேய்யிடம் மாட்டிக் கொள்வார். நாம் நிம்மதியாக வாழலாம் என்று கணக்கு போடுகிறார்.

அதன்படி சந்தானமும் நாயகி ஷ்ரத்தா சிவ்தாஸை காதலித்து அவரிடம் ஐ லவ் யூ சொல்கிறார். அப்போது பேய் இவரை தாக்குகிறது.

அப்படியென்றால் அந்த பேய் யார்? நாயகிக்கும் பேய்யும் என்ன தொடர்பு? சந்தானம் என்ன ஆனார்? காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த பேய் படம் என்றாலும் அது மனிதர்களை பயமுறுத்தும். ஆனால் பேயை கலாய்ப்பவர் ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால் அது சந்தானம் மட்டும்தான். கலாய் சக்ரவர்த்தி இதிலும் மணக்கிறார்.

படம் தொடங்கியது முதல் க்ளைமாக்ஸ் வரை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

சபரிமலைக்கு மாலை போடுவது முதல் சரக்கு போடுவது வரை சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காமெடி வேற லெவல்.

கவுண்டமணி செந்தில் காம்பினேஷன் போல சந்தானம் மொட்டை ராஜேந்திரனுடன் கூட்டணி போட்டுக் கொள்ளலாம். அப்படியொரு அசத்தல் காமெடியை கொடுத்துள்ளனர்.

கேரளத்து பைங்கிளி ஷ்ரத்தா சிவ்தாஸ் அழகுடன் நடிப்பையும் சேர்த்து கொடுத்துள்ளார். மிகையில்லாத நடிப்பு.
ஊர்வசி படத்தில் வந்த பிறகு படத்தின் காமெடி அடுத்த லெவலுக்கு போகிறது. அவரும் அந்த பிபின் மந்திரவாதியும் டம்மி பீஸ் என்று தெரிந்த பின் நடக்கும் கலாட்டக்கள் வரவேற்பை பெறும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

சபீர் இசையில் பாடல்களும் சபாஷ் ரகமே. அதிலும் மவனே யாருகிட்ட என்ற பாடலை சண்டையுடன் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் டைரக்டர் ராம்பாலா.

பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்களின் பணிகளில் கச்சிதம்.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும். அதை சரியாக செய்தால் போதும் என்ற நல்ல எண்ணத்துடன் படத்தை கொடுத்துள்ளார்.

இண்டர்வெல் காட்சியில் அந்த பாட்டில் உடையும் காட்சியும் செம.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருந்தாலும் சில டபுள் மீனிங் காட்சிகளை வெட்டியிருக்கலாம். புரிந்தவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் நிறைவாக செய்திருக்கலாம்.

தில்லுக்கு துட்டு 2… சந்தானம் கெத்து..

Dhilluku Dhuddu 2 review rating

More Articles
Follows