First on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்

First on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் (திருநங்கை), சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, தயாரிப்பாளர்கள் ஜேஎஸ்கே, பி.எல். தேனப்பன் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
இசை – யுவன் சங்கர் ராஜா,
பாடல்கள் – மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்
எடிட்டிங் – சூர்ய பிரதமன்

இயக்கம் – ராம்
தயாரிப்பு – பி.எல். தேனப்பன்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது சிறுமி (சாதனா). அவரை வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடும் ஒரு தந்தை மம்மூட்டி.

இந்த இருவரின் வாழ்க்கையும் இயற்கையும் தான் படத்தின் வாழ்வியல்.

கேரக்டர்கள்…

வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை எப்படியெல்லாம் ஒரு தந்தை வளர்க்க வேண்டும் என்பதையும் அதுவும் அவள் பருவ வயதை அடைந்துவிட்டால் அதன்பின்னர் அவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்ல அமுதவனாக வாழ்ந்திருக்கிறார் மம்முட்டி.

ஒரு காட்சியில் வயதுக்கு வந்த தன் மகளுக்கு உடை மாற்றும் காட்சியில் தன் முகத்தையே நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த வயதில் செக்ஸ் பற்றி மகளுக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது முதல் ஒவ்வொரு அப்பாவின் உணர்வுகளை கொட்டியிருக்கிறார் இந்த மெகா நடிகன் மம்முட்டி.

தங்க மீன்கள் சாதனா… வாத நோயால் பாதிக்கப்பட்ட பெண் இப்படிதான் இருப்பாளோ? என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார். எப்படிதான் படம் முழுவதும் அந்த கைகள் கால்கள் முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ தெரியவில்லை.

தேசிய விருது இவரை நிச்சயம் தேடி வரும். கொண்டாட்டத்திற்கு காத்திருப்போம்.

அழகு, நடிப்பு, யதார்த்தம், அன்பு என அசத்தியிருக்கிறார் அஞ்சலி.

சமுத்திரக்கனி, வடிவுக்கரசு, லிவிஸ்டன் ஆகியோருக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் நடிப்பில் அனைவரும் கச்சிதம்.

அதுவும் திருநங்கையாக வரும் அஞ்சலி அமீர் நடிப்பில் சபாஷ் போட வைத்துள்ளார். நாயகன் நம்மை கட்டிக் கொள்வாரா? என்பதை யோசித்து கொண்டே அவர் காட்டும் முகபாவனைகள் செம.

திருநங்கை பிறப்பால் அவர் அவமானப்படும் காட்சிகளும் அருமை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கொடைக்கானலில் பல காட்சிகளை படம் பிடித்துள்ளார் தேனி ஈஸ்வர். ஒவ்வொரு காட்சியை காட்டும்போது பனி விலக காத்திருப்பது நம்மை இன்னும் ஈர்க்கிறது.

தன் இசை சாம்ராஜ்யத்தை அரங்கேற்றியுள்ளார் யுவன். செத்து போச்சு மனசு என்ற பாடலை கேட்டால் நமக்கும் அப்படிதான் தோன்றும். தூரமாய் மற்றும் அன்பின் அன்பே பாடல்கள் இனிமை.

இயக்கம் பற்றிய அலசல்…

இயற்றை அதிசயமானது… இயற்கை கொடுரமானது… இயற்கை புதிரானது என 12 அத்தியாயங்களை காட்டி இறுதியில் இயற்கை பேரன்பானது என படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் ராம்.

12 அத்தியாயங்கள் என்றாலும் அதை போராடிக்காமல் ஒவ்வொரு முறையும் இயற்கையும் இந்த சமூகமும் நம்மில் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை இன்ச் பை இன்ச் சொல்லியிருக்கிறார்.

கை முதல் கால்கள் வரை எந்தவித குறைபாடும் இன்றி நம்மில் பலர் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாம் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர செய்திருக்கிறார் டைரக்டர் ராம்.

வெறும் உணர்வுகளை மட்டும் சொல்லாமல், செக்ஸ் கல்வியின் அவசியம், திருநங்கைகளுடன் இல்லறம் என பல சிந்தனைகளை பேசியிருப்பது சிறப்பு.

பேரன்பு… அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…

First on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்

First on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், , குமரவேல், திவ்யதர்ஷினி (விஜய் டிவி டிடி) மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – ரவி யாதவ்
இசை – ஏஆர் ரஹ்மான்,
பாடல்கள் – மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்
எடிட்டிங் – ஆண்டனி

இயக்கம் – ராஜீவ் மேனன்
தயாரிப்பு – மைண்ட் ஸ்கீரீன் பிலிம்ஸ் இன்ஸ்டியூட்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

நம்பர் 1 மிருதங்க வித்வானாக திகழ்கிறார் நெடுமுடி வேணு. கூடவே கொஞ்சம் திமிரிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.

சிம்பிளாக சொன்னால்… மிருதங்க வாசிக்க தன் விரல்களே தனக்கு எல்லாம் என்பதால் மற்றவரிடம் கை குலுக்குவதை கூட தவிர்ப்பவர் இவர். இவரிடம் தாளம் பயில பலர் காத்துக் கிடக்கின்றனர்.

இவருக்கு மிருதங்களை செய்துக் கொடுக்கும் குமரவேலின் மகன் ஜிவி. பிரகாஷ் இவரிடம் தாளம் பயில ஆசைப்படுகிறார்.

ஏற்கெனவே அவனிடமும் இசை ஆர்வம் இருப்பதால் கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார் நெடுமுடி வேணு.

ஆனால் கீழ்ஜாதியை சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் தன் குருவிடம் பயில்வதை தாங்க முடியாத வினீத் சில பிரச்சினைகளால் வெளியேறுகிறார்.

தன் குருவை எப்படியாவது மிஞ்சி விட துடிக்கிறார்.

இதனிடையில் மற்றொரு பிரச்சினையால் ஜிவி. பிரகாஷையும் வெளியே அனுப்புகிறார் நெடுமுடி வேணு.

அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் என்ன செய்தார்? மிருதங்க தாளத்தில் சாதித்துக் காட்டினாரா? வினீத் என்ன செய்தார்? யார் ஜெயித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்து அலட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஜிவி. பிரகாஷ்.

ஒருவேளை ஜிவி பிரகாஷ் கேரக்டரில் மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் நம்மால் இந்தளவு ரசித்திருக்க முடியாது. இவர் ஒரு இசையமைப்பாளர் நம்மால் அந்த கலையை கூடவே நடிப்பையும் ரசிக்க முடிகிறது.

ஆனால் மாபெரும் நடிகர் நெடுமுடி வேணுவுடன் நடிக்கும் காட்சிகளில் திணறியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். அடிக்கடி முகத்தை மூடி அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் நெடுமுடி வேணு இவரை வாழ்த்தும் போது உற்சாகத்தில் துள்ளாமல் முகத்தை ஏதோ நார்மலாக வைத்திருப்பது நமக்கே நெருடலாக இருக்கிறது. பாலா பட்டறைக்கு சென்று வந்த பிறகும் இப்படி இருக்கலாமா ஜிவி பிரகாஷ்..?

படத்தின் 2வது நாயகனாக வேம்பு ஐயராக வாழ்ந்திருக்கிறார் நெடுமுடி வேணு. நீயெல்லாம் நம்பர் 1ஆக வர முடியாது. ஏனா நான்தான் நம்பர் 1 என்று சொல்லும்போதும் கர்வம் தெரிகிறது.

தாளத்துடன் படத்தில் காமெடியையும் இவரே அழகாக செய்திருக்கிறார்.

நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தான் இப்பட நாயகி. தமிழில் 8 தோட்டக்கள், தீதும் நன்று படங்களில் நடித்துள்ளர்.

சர்வம் தாளமயம் பட நாயகி என்றாலும் ஜிவி. பிரகாஷ்க்கு அக்கா மாதிரி இருக்கிறார். முகத்தில் அவ்வளவு மெச்சூரிட்டி. மற்றபடி நடிப்பில் குறையில்லை.

இதிலும் டிவி தொகுப்பாளராக வருகிறார் டிடி. ரியால்ட்டி ஷோக்களில் நடக்கும் தில்லு முல்லுகளையும் அப்பட்டமாக காட்டியிருப்பது சிறப்பு. கூடவே திறமையானவருக்கு மரியாதை எப்படியாவது வந்தே சேரும் என காண்பித்திருப்பது மிகச் சிறப்பு.

வில்லனாக வினீத். தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். யதார்த்த நடிப்பில் நம்மை எப்போதும் போல் கவர்கிறார் குமரவேல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சர்வம் தாளமயம் படத்தின் சர்வமும் நான்தான் என நிரூபித்திருக்கிறார் ஏஆர். ரஹ்மான்.

கர்நாடக இசை சாரலில் நம்மை நனைய வைத்திருக்கிறார். அதற்கேற்ப ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும் இசைந்து கொடுத்திருக்கிறது.

சர்வம் தாளமயம் மற்றும் வரலாமா பாடல்கள் என்றும் கேட்கும் ரகம்.

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் இடைவேளை வரை படம் செல்வதே தெரியவில்லை. ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் இசையுடம் பயணிக்க முடிகிறது.

ஆனால் 2ஆம் பாதியில் கொஞ்சம் நீள்கிறது. க்ளைமாக்ஸ் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதில் ஒரு ட்விஸ்ட் கலந்துக் கொடுத்திருக்கலாம்.

ஜிவி. பிரகாஷ் தன் குருவை விட்டு வந்த பிறகு, எதற்கு மனித குருவை தேடிப் போகிறாய். இயற்கையில் இல்லாத இசையா? அதில் உன் குருவை தேடு என்கிறார் அபர்ணா. ஆனால் இறுதியில் குருவிடமே செல்கிறார் ஜிவி. ஒருவேளை இதுதான் குரு பக்தியோ..?

நல்லவேளை ஜாதி மோதல் பற்றி காண்பித்துவிட்டு அதை அப்படியே விட்டு விட்டார் டைரக்டர். இல்லையென்றால் இசை திசை மாறியிருக்கும்.

ஆக இசையில் லயிக்கும் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.

சர்வம் தாளமயம்… மிருதங்கமும் மீளாத மனமும்…

நகைச்சுவையும் நகராத கதையும்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

நகைச்சுவையும் நகராத கதையும்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரபுதேவா (திரு), பிரபு (ராமகிருஷ்ணன்), நிக்கிகல்ராணி (சாரா), ஆதாசர்மா (Psycology Student), விவேக் பிரசன்னா (துபாய் ராஜா), ரவிமரியா (புல்லட் புஷ்பராஜ் ) அரவிந்த் ஆகாஷ், செந்தில், கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடித்துள்ளனர். கெளரவ வேடத்தில் வைபவ்.
ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா.
எடிட்டிங் – G.சசிகுமார்
கலை – விஜய்முருகன்
நடனம் – ஜானி, ஸ்ரீதர்
ஸ்டண்ட – கனல் கண்ணன்
தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி
தயாரிப்பு – T.சிவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.
பிஆர்ஓ – மௌனம் ரவி

Charlie Chaplin 2 stills 1

கதைக்களம்…

முதல் பாகத்தை போல இந்த சார்லி சாப்ளின் படத்திலும் பிரபுதேவாவின் கேரக்டர் திரு. மற்றபடி அந்த படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார் பிரபுதேவா. பிரபு ஒரு டாக்டர். பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் பிரபு தேவா.

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நிக்கியை திருமணம் செய்யவிருக்கிறார். அதன்படி திருமணமும் திருப்பதியில் நடக்க இருக்கிறது.

அந்த சமயம் நிக்கியின் பழைய வீடியோவை ஒன்றை பிரபு தேவாவுக்கு காட்டுகிறார் அவரின் நண்பர். அதில் நிக்கி ஒருவரை லிப் கிஸ் அடிப்பதாக உள்ளது.

இதனால் நிக்கியின் நடத்தையில் சந்தேகம் கொள்கிறார் பிரபுதேவா.

மேலும் தண்ணி அடித்துவிட்டு போதையில் நிக்கியையும் அவரது குடும்பத்தையும் தவறாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? அந்த காதலன் யார்? என்ன தொடர்பு, நிக்கியுடன் கல்யாணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Charlie Chaplin 2 stills 2

நடிகர் நடிகையரின் நடிப்பு எப்படி.?

நடிப்பு பாதி நடனம் மீதி என பிரபு தேவா பின்னியிருக்கிறார். வழக்கம் போல ஒவ்வொரு பாடலின் டான்சிலும் சிக்சர் அடிக்கிறார்.

நிக்கி கல்ராணி மற்றும் அதா ஷர்மா என இரண்டு நாயகிகள். ஒருவர் அழகில் கவர்கிறார் என்றால் மற்றொருவர் கவர்ச்சியில் ஈர்க்கிறார்.

இரண்டு ஹீரோயின்களும் பாடல் காட்சியில் ரசிகர்களை கலங்கடித்து விடுகிறார்கள்.

பிரபுதேவாவுக்கு தப்பான ஐடியா கொடுத்துவிட்டு அவரை மாட்டி விடுவதில் விவேக் பிரசன்னா (துபாய் ராஜா) சிரிக்க வைக்கிறார்.

பிரபு மற்றும் டி. சிவா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். சம்மந்திகள் ரகளை செய்துள்ளனர்.

இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், அமித் பார்கவ், சமீர் கோச்சார் ஆகியோரின் கேரக்டர் நிறைவு.

ஆனால் வில்லன் வேடம் வலுவில்லை. ஏதோ வில்லன் வேடம் வேண்டும் என்று வைத்த போல உள்ளது.

அதிலும் ரவி மரியா கேரக்டர் ஏன் என்றே தெரியவில்லை. எடிட்டர் கட் செய்து எங்களை காப்பாற்றியிருக்கலாம்.

Charlie Chaplin 2 stills 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அம்ரீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளமும் ஆட்டமும் போட வைக்கிறது.

சின்ன மச்சான்…, ஐ வாண்ட் டூ மேரி யூ மாமா… இவள இவள… ஆகிய மூன்று பாடல்கள் ரீபீட் மோடு.

ஒளிப்பதிவாளர் கை வண்ணத்தில் காட்சிகள் அருமை. ஆனால் எடிட்டர் சில காட்சிகளை கை வைத்திருக்கலாம்.

முதல்பாகம் போல காமெடியை இதில் எதிர்பார்த்து செல்ல வேண்டாம். அதில் பிரபு மற்றும் பிரபுதேவா இருவரும் வேற லெவலில் கலக்கிருப்பார்கள். இதில் அந்த வேகம் இல்லை.

பலவீனமான திரைக்கதையால் படம் சோதிக்கிறது. சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது.

முதல் பாதி சுவாரஸ்யம் இல்லை என்றாலும் 2ஆம் பாதியில் நம்மை சிரிக்க வைத்துள்ளார் டைரக்டர் சக்தி சிதம்பரம்.

சார்லி சாப்ளின் 2… நகைச்சுவையும் நகராத கதையும்

First on Net மீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்

First on Net மீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மகேந்திரன், குரு சோமசுந்தரம், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், சபீர், விவேக் பிரசன்னா மற்றும் பலர்
இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – திரு
எடிட்டர் – விவேக் ஹர்ஷன்
பாடல்கள் – விவேக், தனுஷ், கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மது

கதைக்களம்…

ரஜினிகாந்த் (காளி) ஒரு காலேஜ் ஹாஸ்டலுக்கு வார்ட்ணாக வருகிறார்.

வரும்போதே மினிஸ்டர் சிபாரிசுடன் வருவதால் அதே ஹாஸ்டல் சூப்பர் வைசர் முனிஸ்காந்துக்கு டவுட் வருகிறது.

கல்லூரியில் சீனியர் மாணவர் பாபி சிம்ஹா ஜுனியரை ராக்கிங் செய்கிறார்.

இதனை ரஜினி கண்டிக்கிறார். எனவே பாபி சிம்ஹா ரவுடிகளை அனுப்பி ரஜினியை அடிக்க திட்டமிடுகிறார்.

அதற்கு முன்பே வேறு ஒரு கும்பலும் அங்கு ரஜினியை கொல்ல வருகிறது.

அப்படி என்றால் ரஜினி யார்.? அவரின் பின்னணி என்ன? என்பதே பேட்ட ஸ்டோரி..

கேரக்டர்கள்…

ரஜினி ரஜினி ரஜினி… எங்கும் ரஜினி எதிலும் ரஜினி என மாஸ் காட்டியிருக்கிறார். படம் முழுக்க தன் பேட்ட ராஜ்யத்தை அரங்கேற்றியுள்ளார்.

குழந்தைகளா… என ஹாஸ்டல் மாணவர்களை ரஜினி கூப்பிடுவதே கொள்ளை அழகு.

வார்டனாக அன்பு, கண்டிப்பு, வில்லன் இடம் அதிரடி, சிம்ரன் உடன் ரொமான்ஸ் என பிரிந்து மேய்ந்திருக்கிறார் மாஸான ரஜினி. அதே துள்ளல் காமெடி, கூலிங் கிளாஸ் ஸ்டைல் என சிக்ஸர் அடித்துக் கொண்டே இருக்கிறார்.

நவாஸுதீன் & விஜய்சேதுபதி கேங் அட்டாக் பண்ண ஆரம்பிச்சதும் ரஜினி அடுத்த அதிரடி ஆரம்பம்.

சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, என அனைவரும் கச்சிதம்.

படத்தின் வசனங்களும் அனல் பறக்கிறது. ரஜினி பன்ச், ரஜினி ரொமான்ஸ் அனைத்தும் பக்கா.

இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம் என ரசிகர்களுக்கு அரசியல் பன்ச்சும் இருக்கு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

திரு அவர்களின் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு கண்களுக்கு விருந்து. மலை பகுதிகளும் அதனை சார்ந்த அந்த விடுதி காட்சிகளும் அருமை.

அதுபோல் ரஜினி த்ரிஷா சசிகுமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராமத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.
அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளன.

இளமை திரும்புதே பாடலில் ரொமான்டிக் ரஜினியை பார்க்க முடிகிறது. விவேக் வரிகளில் எஸ்பிபி அனிருத் இணைந்து பாடியுள்ள மரண மாஸ் பாடல் ரசிகர்களின் எவர்கீரின் பாடலாக அமையும்.

கார்த்திக் எழுதி, ஆன்டனி தாசன் பாடியுள்ள ஆஹா கல்யாணம் பாடல் இனி திருவிழாக்களிலும் கேட்கலாம்.

பேட்ட பராக் பாடல்… மாஸ் உச்சம். எனர்ஜியை உண்டாக்கும் பாடல்.

உல்லாலா பாடல் இனிமை. என ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு ரகமாக கொடுத்துள்ளார் அனிருத்.

ஒரு ரஜினி வெறியராக இருந்து பேட்ட படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். எப்படி எல்லாம் ரஜினியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அறிந்து அதை அறுசுவையாக பறிமாறியிருக்கிறார் டைரக்டர்.

கபாலி, காலா வில் வேறு ஒரு ரஜினியை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது 90களில் பார்த்த மாஸ் ரஜினியை இதில் பார்க்க வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

பேட்ட.. மீண்டும் ரஜினிசம்… தலைவர் படம் இது

Petta review rating

First on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்

First on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அஜித்குமார், நயன்தாரா, யோகிபாபு, ஜெகபதிபாபு, பரத் ரெட்டி மற்றும் பலர்
இயக்குனர் – சிவா
இசை – இமான்
ஒளிப்பதிவு – வெற்றி
எடிட்டர் – ரூபன்
பாடல்கள் – விவேக், தாமரை, யுகபாரதி, சிவா
தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

ஊர் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால்
ஓங்கி அடிக்கும் நபர் தூக்கு துரை அஜித்.

நயன்தாரா ஒரு டாக்டர். கொடுவிலார்பட்டி என்ற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப்புக்கு வருகிறார்.

இருவருக்கும் இடையே சில மோதல் அதன் பின் காதல் என கதை செல்கிறது.

ஒரு கட்டத்தில் திருமணமும் நடக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அவர்தான் அனிகா.

பின்னர் கருத்து வேறுபாடால் அஜித் நயன்தாரா பிரிகின்றனர்.

குழந்தையுடன் மும்பை செல்கிறார் நயன்தாரா.

அதன் பின்னர் என்ன ஆனது..? மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

மாஸ், ஆக்சன் என கலக்கிய அஜித் இதில் சென்டிமெண்டிலும் ரசிக்க வைக்கிறார்.

ஹீரோயினாக நயன்தாரா செம நடிப்பு.

அஜித் மகளாக அனிகா. நடிப்பால் கவர்கிறார்.

காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகிறது. ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஜெகபதி பாபு நடிப்பில் நல்ல முதிர்ச்சி.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் நன்றாக இருந்தாலும் தேவையில்லாத இடத்தில் வருகிறது.

முதல் பாதியில் சில காட்சிகள் நாடகம் போல் உள்ளது.

இமான் இசையில் அடிச்சி தூக்கு… பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

தாமரை வரிகளில் கண்ணான கண்ணே பாடல்கள் தாய்மார்களை கவரும். வேட்டி கட்டு… பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

பொதுவாக அஜித் படங்களில் ஆக்சன் இருக்கும். ஆனால் இதில் சென்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார் சிவா.

அஜித்துக்கும் நயன்தாராவுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி தல ரசிகர்களை ஈர்க்கும்.

அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும் வாசம்

Viswasam review rating

டைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்

டைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மா கா பா ஆனந்த், சூஷா குமார், வஸ்தவன், யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்
இயக்குனர் – மார்ட்டின்
ஒளிப்பதிவு – எம்.ஆர்.பழனிகுமார்
இசை – சி.தரண்குமார்
பிஆர்ஓ – சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை

கதைக்களம்…

மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே அது ஒரு பிரச்சினையாகிறது.

அந்த குழந்தையை கொன்றுவிட சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் மா.கா.பா.வின் அம்மா அந்த குழந்தையை காப்பாற்றி விடுகிறார்.

இதனையடுத்து வளர்ந்து பெரியவர் ஆகிறார் மா.கா.பா.ஆனந்த். தனது நண்பன் வஸ்தவன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க வேண்டும் எனவும் அதில் கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற ஒரு சபதம் போட்டு சென்னை வருகின்றன.

அப்போது ஒரு லெகின்ஸ் சாமியாரை சந்திக்கிறார்.

அவர் ஒரு மந்திரம் சொல்கிறார். நீ உடனே பணக்காரன் ஆகிவிடலாம் என்கிறார்.

அதன்படி அந்த மந்திரத்தை மா.கா.பா. உபயோகித்தாரா? பணக்காரன் ஆனாரா? என்ன மந்திரம் அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இந்த மாதிரி கேரக்டருக்கு தான் இவருக்கு செட்டாகும் என நினைத்தாரோ என்னவோ? அப்படி ஒரு கதையை மாகாபா ஆன்ந்துக்கு கொடுத்துள்ளார் டைரக்டர் மார்ட்டின்.

அவரும் டிவியில் செய்வது போல அதைவிட குறைவாக செய்திருக்கிறார்.

எதிர் நீச்சல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த சூசா குமார் இதில் அழகாக வருகிறார்.

மாகாபா நண்பர் ஒரு சில இடங்களில் கவர்கிறார். சில நேரம் ஓவர் ஆக்ட்டிங் செய்கிறார்.

மனோபாலா, மதுமிதா ஆகியோரும் படத்தில் உண்டு. யோகி பாபு ஒரு காட்சியில் வருகிறார். சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக அருள்தாஸ். இவரின் அலப்பரை தாங்கல. மொக்க ஜோக் மொக்க ஜோக் என சொல்லி சொல்லி நம்மை கழுத்தறுக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறார்கள்.

அடல்டி + முழு காமெடி படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் மார்டின். ஆனால் நம்மை தியேட்டரில் அமர விடாமல் செய்கிறார்.

ஒரு சில இடங்களில் காமெடி பெயரில் சோதிக்கிறார். லுசுகு என்ற ஒரு கட்சி வேற இதில். (லுங்கி சுடிதார் குர்தா) இதில் அடிக்கடி டிவி செய்திகள் வேற. அதுவும் மண்டைய போட்டார் அதை போட்டார் என கிண்டல்கள் வேற.

எப்படி படம் எடுத்தாலும் மக்கள் பார்த்து விடுவார்கள் என மார்ட்டின் நினைத்துவிட்டாரோ? என்னவோ?

இதில் ஒரு பேட்டியில் அவரின் வாழ்க்கையில் நடந்த கதை என சொல்லி இருக்கிறார். இப்படியொரு கேவலமான கதையா? என எண்ணத் தோன்றுகிறது.

மாணிக்… டைரக்டருக்கு வார்னிங்

More Articles