தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : உதயநிதி, பார்வதிநாயர், நமீதாபிரமோத், கருணாகரன், எம்ஸ்பாஸ்கர், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் : பிரியதர்ஷன்
இசை : தர்புகா சிவா மற்றும் அஜனீஷ்
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மற்றும் மூன்சாட்
கதைக்களம்…
மலையாளத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘நிமிர்’.
கேரளா எல்லையான தமிழகத்தின் ஒரு பகுதியில் உதயநிதி ‘நேஷ்னல்’ என்ற ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தந்தை மகேந்திரன்.
தன் உறவுக்கார பெண்ணான பார்வதி நாயரை காதலிக்கிறார் உதயநிதி. ஆனால் இந்த காதல் கைகூடாமல் போகிறது.
உதயநிதி கடை அருகில் ஒரு போட்டோ ப்ரேம் செய்யும் கடை வைத்திருக்கிறார் எம்எஸ்.பாஸ்கர். இவருக்கு ஒரு பெண். இந்த கடையில் கருணாகரன் வேலை பார்க்கிறார்.
ஒருமுறை ஒரு பிரச்சினையில் உதயநிதியை ஊர் மக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார் சமுத்திரக்கனி.
எனவே அவரை திருப்பி அடிக்கும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார் உதயநிதி.
சமுத்திரக்கனியை அடிக்க நினைக்கும்போது அவர் பாரீன் சென்று விடுகிறார்.
இதனிடையில் உதயநிதிக்கு மற்றொரு நாயகியான நமீதாபிரமோத் மீது காதல் வருகிறது. இவர் சமுத்திரக்கனியின் தங்கை.
அதன்பின்னர் என்ன ஆனது? செருப்பு போட்டாரா? இந்த காதலாவது கை கூடியதா? சமுத்திரக்கனியை அடித்தாரா? ஆகியவைகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
யதார்த்தமான நடிப்பில் நிமிர வைத்துள்ளார் உதயநிதி. மனிதன் படத்திற்கு பிறகு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். வேஷ்டி கட்டி கிராமத்து நாயகனாக பளிச்சிடுகிறார்.
இவரின் தந்தையாக மகேந்திரன். சில காட்சிகளில் வந்தாலும் தொழிலை நேசிக்க சொல்லும் தந்தையாக அசத்துகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர நடிப்பிலும் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். இவரின் மகளாக வரும் அந்த பெண் கொள்ளை அழகு.
தன் அளவான நடிப்பில் கருணாகரன் கச்சிதம்.
உதயநிதியை கல்யாணம் செய்ய முடியாத பார்வதி நாயர் சில பெண்களை நினைவுப்படுத்துகிறார். காதல் வேற கல்யாணம் வேற என தன் நடிப்பில் தத்துவம் பேசியிருக்கிறார்.
ஒரு இழவு (மரணம்) வீட்டில் உதயநிதியுடன் கண்களால் பேசி ரசிக்க வைக்கிறார் பார்வதி.
நமீதா புரமோத் கண்களிலும் நம் மனதிலும் நின்று விடுகிறார். அவரின் பெரிய விழிகளை கொண்டு நம்மை சில நேரம் விழுங்கிவிடுகிறார்.
கஞ்சாகருப்பு, சண்முகராஜன், அருள்தாஸ் ஆகியோர் அளவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
படத்திற்கு வசனம் எழுதி நடித்துள்ளார் சமுத்திரக்கனி. வசனங்கள் ப்ளஸ். நடிப்புக்கு அவ்வளவு ஸ்பேஸ் கொடுக்கவில்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவளார் என்.கே.ஏகாம்பரம் அவர்கள்தான்.
ஒவ்வொரு ப்ரேமையும் நாம் ப்ரேம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ரசித்து ரசித்து எடுத்து செதுக்கியிருக்கிறார்.
ஒருவேளை உங்களுக்கு இந்தப் படத்தில் கதை, நடிகர்கள் பிடிக்கவில்லை என்றாலும் படத்தை பார்க்க வைத்துவிடுவார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.
தர்புகா சிவா 4 பாடல்களும், அஜ்னீஷ் லோக்நாத் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்து உள்ளனர். நெஞ்சில் மாமழை என்றும் நம்மை நெஞ்சை விட்டு போகாது.
இயக்கம் பற்றிய அலசல்…
ஒரு யதார்த்தமான கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்கும் அர்த்தம் சொல்லியிருக்கிறார்.
உதயநிதி போட்டோ கிராபர் என்றாலும் அவர் வேலையை சரியாக செய்யவில்லை என்பதை காட்சியில் உணர்த்தி, பிறகு அவர் எப்படி கற்றுக் கொள்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆண் பெண் பழகினாலே அது காதல்தான் என முடிவு எடுக்கும் அப்பாவாக எம்எஸ்.பாஸ்கரை காட்டியிருக்கிறார்.
உதயநிதியிடம் நமீதா காதலை சொல்லும்போது என் அண்ணன் அடிப்பியா? உனக்கு தைரியம் இருக்கா? என அழகாக தெளிவுப்படுத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இப்படியாக கேரக்டர்கள் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
அதிலும் இறுதியாக பார்வதியின் கணவர் கேரக்டரை ட்விஸ்ட் வைத்து கொடுத்திருப்பது நச்.
இருந்தாலும் செருப்பு போடும் சபதம் கொஞ்சல் நெருடல்தான்.
நிமிர்… இமைக்காமல் ரசிக்கலாம்.