பெட்டர் மார்க் கொடுக்க முடியல.. பெட்ரோமாக்ஸ் விமர்சனம் (3/5)

பெட்டர் மார்க் கொடுக்க முடியல.. பெட்ரோமாக்ஸ் விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்

மலேசியாவில் வசிக்கும் பிரேம்முக்கு இந்தியாவில் அவருடைய ஒரு பழைய வீடு உள்ளது. அந்த வீட்டில் தமன்னா மற்றும் 3 பேர்.. சாரி சாரி.. 4 பேய்கள் அந்த வீட்டில் இருக்கின்றனர்.

இந்த வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டு மலேசியா செல்ல நினைக்கிறார் பிரேம்.

அந்த வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை துரத்துகின்றனர். பேய் பயத்தால் பலரும் வாங்க பயப்படுகின்றனர்.

எனவே ஒரு ஐடியா செய்து முனிஸ்காந்த், காளி வெங்கட், டி எஸ் கே சரவணன், சத்யன் ஆகிய 4 பேரை அந்த பங்களா தங்க வைக்கின்றனர்.

இவர்கள் சில நாட்கள் உயிரோடு இருந்தால் தான் அந்த வீட்டை யாராவது வாங்குவார்கள்? என திட்டம் போடுகின்றனர்.

அதன்பிறகு என்ன ஆனது? திட்டம் கை கூடியதா? பேய் என்ன செய்தது? தமன்னா யார்? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

வெள்ளை அழகு கொள்ளை அழகு என வருகிறார் தமன்னா. பெரிதாக பயமுறுத்தவில்லை இந்த அழகு பேய். அவர்தான் படத்தின் ஹீரோ என்றாலும் அவரே கெஸ்ட் ரோல்தான் வருகிறார்.

இடைவேளை வரை படத்தை தாங்க முடியவில்லை. மொக்க காமெடியே உள்ளது.

ஆனால் 2ஆம் பாதியில் சேர்த்து வைத்து சிரிக்க வைத்துள்ளனர்.

முனிஸ்காந்த், டிவி நடிகர் டிஎஸ்கே சரவணன், சத்யன், மற்றும் காளி வெங்கட், யோகி பாபு, மைனா ஆகியோரின் காமெடி சிக்ஸர் அடிக்கிறது.

போலீஸ் போல ஒரு கம்பீரம், வில்லத்தனம் என பிரேம் பிரகாசிக்கிறார்.

டேனி ரேமண்ட் – ஒளிப்பதிவு காட்சிகளில் காட்சிகள் மிர்ட்டல்.

ஆனால் ஜிப்ரானின் பின்னனி இசை இதில் பயங்கர தடுமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஏன் ப்ரோ என்னாச்சு?

ஒரு மாறுபட்ட பேய் கதையை குடும்ப கதையாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராத ஒன்று.

2ஆம் பாதியில் இருந்த காமெடி முதல் பாதியில் இருந்திருந்தால் இந்த பெட்ரோமாக்ஸ் இன்னும் ப்ரைட்டாக இருந்திருக்கும்.

Petromax review rating

பக்கா.. பப்பி விமர்சனம் (3.25/5)

பக்கா.. பப்பி விமர்சனம் (3.25/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் வருண். இவரது செல்ல நாய் பெயர் பப்பி

வருணின் சீனியர் யோகிபாபு. யோகி பாபுவிற்கு பெரிய கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

வருணின் வீட்டு மாடிக்கு குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. பின்பு என்ன? இருவரும் காதலிக்கின்றனர்.

இருவரும் ஒரு நாள் தனிமையில் செக்ஸ் வைத்துக் கொள்ள கர்ப்பமாகிறார் சம்யுக்தா ஹெக்டே.

கருவை கலைத்து விடு. இந்த வயதில் திருமணம் செய்வது சரி வராது என்கிறார் வருண். ஆனால் நாயகியோ மறுக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நிறைய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்த வருண் இதில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தங்கை மகன் ஆவார்.

மொரட்டு சிங்கிள் செய்யும் லீலைகள், அசட்டுத்தனம் ஆகியவற்றை திறம் பட செய்திருக்கிறார் வருண். ஆனால் நாய் பிரவசத்திற்காக இவர் அவஸ்தைப்படும் காட்சிகளில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார்.

மேலும் ப்ரேமில் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டுவதை ரசிக்க முடியவில்லை. மற்றபடி இந்த படம் இவருக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

கோமாளி படத்திற்கு பிறகு சம்யுக்தா ஹெக்டேவிற்கு நல்ல வேடம். ஆனால் கோமாளியில் பார்த்த அந்த ப்ரெஷ்னஸ் இதில் இல்லை. என்னவோ?

படத்தின் மெயின் பில்லரே யோகி பாபு தான். முரட்டு சிங்கிளுக்கு மாமா வேலை பார்க்கும் காட்சிகளில் இவரின் காமெடி ரசிக்க வைக்கிறது.

பஸ் ஸ்டாண்டில் ஒரு கலர் குப்பைத் தொட்டி இருக்கு என்னும் இவரது காமெடி செம. அதிலும் க்ளைமாக்ஸில் பப்பி பார்ட் 2 பற்றி இவர் செய்யும் காமெடியும் ரசிக்க வைக்கிறது.

மற்றபடி, நான் கடவுள் ராஜேந்திரன், மாரிமுத்து, நித்யா, வெங்கடேஷ், ரிந்து ரவி என அனைவரும் தங்கள் கேரக்டரில் கச்சிதம்.

தரன்குமார் இசையில் பாடல்கள் ரசிகர்களை முக்கியமாக இளைஞர்களை தாளம் போட வைக்கும். பின்னனி இசையும் ரசிக்கும் ரகமே.

அதிலும் யோகிபாபுக்கு இவர் போட்டுள்ள தீம் மியூசிக் சூப்பர். அந்த பாடலுக்கு விஜே விஜய் எழுதியுள்ள வரிகள் அருமை. பன்னி மூஞ்சி வாய்யா.. கோலமாவு கோகிலா கொக்கி போட்டவர் என்ற வரிகள் யோகிபாபுக்கு செம மேட்சிங்.

ஒளிப்பதிவு தீபக் குமார் பாடி கலர்புல்லான காட்சிகளை கொடுத்துள்ளார்.

நாய்க்குட்டி கர்ப்பம், பெண் கர்ப்பம் என ஒப்பீடு செய்திருப்பது சரிதான்.

ஆனால் காதலியை கர்ப்பமாகி விட்டு கழட்டிவிட நினைக்கும் ஹீரோ நாய்க்காக மட்டும் அழுவது ஓவர். நாய்க்கு கொடுக்கும் உணர்வை தன்னால் கர்ப்பமான காதலிக்கு கொடுக்காமல் விடுவது ஏனோ..?

இந்த லாஜிக் எல்லாம் வேண்டாம் என்றால் இந்த மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ள பப்பியை ரசிக்கலாம்.

மொரட்டு சிங்கிள், ரொமான்ஸ், காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட் என அனைத்தையும் சரியாக கலந்து கொடுத்திருப்பதால் இந்த பப்பி.. பக்கா

Puppy review rating

உணவே அதிர்ச்சி… அருவம் விமர்சனம்… (2.75/5)

உணவே அதிர்ச்சி… அருவம் விமர்சனம்… (2.75/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

உணவு பாதுகாப்பு அதிகாரி சித்தார்த். நேர்மையின் உச்சம். கலப்படம் இல்லாத உணவை தருவதையே கனவாக கொண்டிருப்பவர்.

ஸ்மெல்லிங் சென்ஸ் அதாவது முகரும் உணர்வு இல்லாதவர் கேத்ரின் தெரசா. இருவரும் காதலிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் சித்தார்த்தின் அதிரடி நடவடிக்கையால் பல தொழிலதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆயில் கலப்படம், பால் கலப்படம், டீக்கடை ஓனர், தரமற்ற குடீநீர் வழங்குபவர் என ஒவ்வொருவரையும் பிரித்து மேய்கிறார்.

பாதிக்கப்பட்ட முதலாளிகள் சித்தார்த்தை தீர்த்துக் கட்ட திட்டம் போடுகின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? நேர்மையாக இருந்தாரா? கேத்ரீனை திருமணம் செய்தாரா?

உருவமே இல்லாமல் வந்து செல்லும் அந்த அருவம் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நேர்மையாக இருப்பவன். எப்போதும் ஒரு கவுரத்தோடு இருப்பான். என்பதற்கேற்ப மிலிட்டரி அதிகாரி போல மிடுக்காக வருகிறார் சித்தார்த்.

உணவு பாதுகாப்புக்காக இவர் நடவடிக்கைகள் எடுக்கும்போது அதிரடி. ஆக்சனில் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

நிஜமாகவே ஒரு வித்தியாசமான கேரக்டரை செலக்ட் செய்துள்ளார் கேத்ரின் தெரசா. கயிறு கட்டி இவர் போடும் பைட் செம. பின்னணி இசையும் செம.

கிளாமர் இல்லாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார் நாயகி.

மொக்க காமெடி செய்து வெறுப்பேத்தியிருக்கிறார் சதீஷ். நாயகியின் அப்பாவாக ஆடுகளம் நரேன்.

மிரட்டல் வில்லன்களாக கபீர் துகான் சிங், ஸ்டண்ட் சில்வா, மதுசூதனன் ராவ், போஸ்டர் நந்தா என அனைவரும் கச்சிதம்.

தமன் இசையில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. பின்னணி இசை ஓகே. சில காட்சிகளில் இரைச்சலாக உள்ளது.

மேலும் இசைக்கு ஏற்ப காட்சிகள் இல்லை. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு அனைத்தும் காட்சிகளும் கலர்புல்லாக உள்ளது.

நாம் அன்றாடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் நடக்கும் ஒவ்வொரு முறைகேடுகளையும் இன்ச் பை இன்சை அலசியிருக்கிறார். அதற்காகவே இயக்குனரை சூப்பராக பாராட்டலாம்.

பால் மற்றும் பிரட் வகைகள் கெட்டுப் போகாமல் இருக்க என்ன என்ன? சேர்க்கின்றனர். இதனால் சிறுமிகள் சீக்கிரம் வயசுக்கு வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கேன் வாட்டர் சுத்தம் என நினைத்தால் அதிலும் இத்தனை அசுத்தமா? என நமக்கே பயத்தை வரவைத்துள்ளார் இயக்குனர் சாய் சேகர்.

என்னதான் ஆயிரம் விழிப்புணர்வு வாட்ஸ் அப் மேசேஜ் வந்தாலும் எல்லாரும் பார்வேட் பன்றாங்க. ஆனால் யாரும் பாலோ பண்றது இல்லை என்பதையும் நாசூக்காக சொல்லியிருக்கிறார்.

உலகத்திலேயே சுத்தமான உணவு தாய்ப்பால்தான். ஆனால் அந்த தாய் உண்னும் உணவில் இத்தனை கலப்படம் இருந்தால் அவள் கொடுக்கும் பால் எப்படி சுத்தமாக இருக்கும்? என்பதையும் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இதற்காக சாய் சேகருக்கு சபாஷ் போடலாம்.

உணவு பாதுகாப்பு அதிகாரி என்ற ஒரு லைனை வைத்து அழகாக முழு படத்தையும் காட்டியிருக்கலாம். அதை விடுத்து பேய், பழிவாங்கல் என கதையை கொண்டு சென்று நம்மை நொகடித்துவிட்டார்.

Aruvam review rating

100% ஈகோ மோதல்..; 100% காதல் திரை விமர்சனம்

100% ஈகோ மோதல்..; 100% காதல் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஜி.வி. பிரகாஷின் அத்தை பெண் ஷாலினி பாண்டே. கிராமத்திலிருந்து படிக்க சென்னை வருகிறார் ஷாலினி. ஆனால் படிக்க இஷ்டமில்லாமல் மாமாவுக்காக வந்து அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார்.

ஜிவி பிரகாஷ் தான் படிக்கும் காலேஜில் முதல் மாணவன். தன்னைப் போல தன் முறைப்பெண் நன்றாக படிக்க உதவுகிறார். ஒரு கட்டத்தில் ஷாலினி பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார். இதனால் இருவருக்கும் ஈகோ மோதல் தொடங்குகிறது.

இது பெரும் பிரச்சினையாக அந்த சமயத்தில் மற்றொரு மாணவன் அஜய் இருவரையும் முந்தி பர்ஸ்ட் மார்க் வாங்கிவிடுகிறார். எனவே அஜய்யை தோற்கடிக்க ஷாலினி அவரை காதலிப்பதாக கூறி அவனின் கவனத்தை திசை திருப்புகிறார்.

அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே காதல் என்னாச்சு? ஷாலினி யாரை திருமணம் செய்தார்?, அஜய் என்ன செய்தார்? யார் முதல் மாணவனாக வந்தார்? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்…

ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினியின் ரொமான்டிக் லவ் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது. அதுபோல் முதல் பாதியில் வரும் ஈகோ மோதலும் ரசிக்கும் வகையில் உள்ளது.

ஷாலினி பாண்டே அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை சூடேற்றுகிறார். மாமா என கொஞ்சி பேசும்போது நமக்கு இப்படியொரு மாமா பெண் இல்லையே என ஏங்க வைக்கிறார்.

க்ளைமாக்சில் ஜிவி. பிரகாஷ் தன் நிலையை சொல்லும்போது இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம். குழந்தைத்தனமாக உள்ளது.

ரேகா, தலைவாசல் விஜய், ஆர்வி. உதயகுமார், ஷிவானி பட்டேல், ஜெயசித்ரா கேரக்டர்கள் ஓகே.

மனோபாலா, அப்புக்குட்டி, சாம்ஸ் கேரக்டர்கள் இருந்தும் பயனில்லை.

தம்பிராமையா, நாசர் கேரக்டர்கள் படத்தின் நீளத்தை அதிகரிக்க உள்ளது. காட்சிகளை வெட்டினாலும் ஓகே தான் நல்ல கலைஞர்களை வீணடித்துவிட்டனர்.

படத்தில் 6 குட்டீஸ் நடித்துள்ளனர். இவர்கள் ஜிவி. பிரகாஷ் வீட்டிலேயே இருக்கிறார்கள். இவர்கள் யார்? என்பது தெளிவாக இல்லை. ஆனால் அதில் ஒரு குண்டு பையன் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் நாயகனே இசையமைப்பாளராக உள்ளார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை ஓகே.

கணேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளில் இளமை ததும்புகிறது.

எடிட்டர் காசி விஸ்வநாதன் நிறைய காட்சிகளை வெட்டி ரசிகர்களையும் படத்தை காப்பாற்றி இருக்கலாம். அதுதான் பெரும் குறையாக உள்ளது.

ஜிவி. பிரகாஷ் ஒருவரிடம் கதை சொல்வதும் ஷாலினி குட்டீஸ்க்கு கதை சொல்வதும் போரடிக்கிறது.

படத்தின் முதல் பாதியும் ரொமான்டிக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதி கலகலப்பாக உள்ளது.

ஆனால் இரண்டாம் பாதியில் ஹீரோ ஹீரோயின் பெயரை மாற்றி ஷாரூக் கஜோல் என வைத்திருக்கு காட்சிகள் கடுப்படிக்கிறது. அதுவும் க்ளைமாக்ஸ் நாடகம்.. மாப்பிள்ளை அஜய் (யுவன் மயில்சாமி) பாவம்.

இந்த படம் தெலுங்கில் 100% லவ் என்ற பெயரில் 2011ல் வெளியானது. அந்த படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருந்தால் காதல் ரசிக்க வைத்திருக்கும்.

காதலை விட ஹீரோ ஹீரோயினுக்கும் நிறைய மோதல் உள்ளது.

மேலும் ஜிவி. பிரகாஷை விட அஜய் தான் (யுவன் மயில்சாமி) கிரேட் என ஷாலினி சொன்னதால் தான் இவ்வளவு பிரச்சினையும் உருவாகிவிடுகிறது. எனவே தான் 100% மோதல் என பதிவிட்டுள்ளோம்.

காதல் இருக்கும் இடத்தில்தான் மோதல் இருக்கும் என்கிறீர்களா..? ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் நம்ம இயக்குனர் எம்.எம். சந்திரமௌலி கோட்டை விட்டு இருக்கிறார்.

100 % Kadhal review rating

First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)

First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து இந்த அசுர கூட்டணி அமைத்துள்ளனர் வெற்றிமாறன் & தனுஷ்.

பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கதையாகக் கொண்ட படம் தான் இது.

கதைக்களம்…

சிவசாமி (தனுஷ்) இவரது மனைவி மஞ்சுவாரியர். மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி.

தனுஷ் தம்பதிக்கு 2 மகன்கள் ஒரு மகள்.

தனுஷ் தன்னுடைய 2வது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்கிறார். இதுதான் படத்தின் முதல் காட்சி.

நடக்கும் பாதம் அடையாளம் கூட தெரிய கூட என்பதற்காக ஆற்றில் நடந்து செல்கிறார்.

ஒரு பக்கம் போலீஸ். மற்றொரு பக்கம் ஒரு ரவுடி கும்பல் இவரை வலை வீசி தேடுகிறது. ஏன் என்ற நினைவோடு கதை பின்னோக்கி நகர்கிறது.

இந்த கும்பல்களிடம் இருந்து தனுஷ் தன் குடும்பதை காப்பாற்ற போராடுகிறார். எந்த வம்புக்கு போக கூடாது என தவிர்க்கிறார்.

தன் தந்தை கோழை. உதவாக்கரை, குடிக்காரன் என நினைக்கிறான் சிதம்பரம். ஆனால் தன் மகனுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அசுரனாக மாறுகிறார் தனுஷ். அப்படி என்றால் இந்த தனுஷ் யார்? என்பதே மீதிக்கதை.

இது குடும்ப பழிவாங்கல் கதை என்றாலும் அதை வெற்றிமாறன் எடுத்திருக்கும் விதத்தை கூறினால் சுவை இருக்காது என்பதால் இத்துடன் முடிக்கிறோம்.

கலைஞர்கள்…

ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய விருதை வெல்ல போகிறார் தனுஷ். அப்படியொரு அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

1980களில் கதை தொடங்குகிறது. பின்பு 1960களிலும் ப்ளாஷ் பேக் பயணிக்கிறது. எனவே தனுஷ் இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார் எனலாம். திருநெல்வேலி பாஷையிலும் நம்மை ஈர்க்கிறார்.

ஒரு 45 வயது உள்ள மனிதரை போல தன் உடல் மொழியை கொடுத்துள்ளார். பதுங்கி பதுங்கி செல்லும்போது சரி. பாயும்போது சரி.. அப்ப்ப்பா என்னவொரு நடிப்புய்யா.. செம.….

மலையாளத்தில் பல விருதுகளை குவித்த மஞ்சு வாரியாருக்கு அருமையான அறிமுகம் தமிழில் கிடைத்துள்ளது. இவருக்கு இனி தமிழில் வாய்ப்புகள் தேடி வரும்.

பசுபதிக்கும் அருமையான வேடம். யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

தனுஷின் 2வது மகன் கென். கெட்டிக்காரன். இவர் நடிகர் கருணாசின் மகன். நடிப்பில் அப்பாவை மிஞ்சியிருக்கிறார்.

இவருடைய அண்ணனாக டீஜே அருணாசலம். கிராமத்து இளைஞருக்கு உண்டான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆடுகளம் நரேன், பவன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் வந்தாலும் அம்மு அபிராமி. அழகு அபிராமி. நடிப்பிலும் அருமை. செருப்பால் அடி வாங்கும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

போலீசாக டைரக்டர் பாலாஜி சக்திவேல். இவருடைய தோற்றமே மிரட்டல். அதுபோல் டைரக்டர் வெங்கடேஷ் மற்றும் ஜாதி வெறி பிடித்த வாலிபர் நிதிஷ் வீரா இருவரும் சூப்பர்.

ஊர் பெரியவராக வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நடிப்பிலும் செம. இவர்களுடன் பிரகாஷ் ராஜ். வக்கீல் வேடத்தில் நம் கவனம் பெறுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். கண்ணழகு ரத்தினமே.. பெண்ணழகு பெட்டகமே… கத்திரி பூவழகி பாடல்கள் என்றும் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது.

ராமரின் எடிட்டிங் எங்கும் குறையில்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவில் அந்த மிரட்டலான காடே நம்மை பயமுறுத்துகிறது.

பேய் படங்களில் வராத பயம் சில இருட்டு காட்சிகளில் நம்மை தொடுகிறது. அப்படியொரு இசையும் ஒளிப்பதிவையும் கொடுத்துள்ளனர்.

இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் பைட் உண்மையான வெறித்தனம்.. பின்னணி இசை வேற லெவல்.

இயக்கம் பற்றிய அலசல்…

வெற்றிமாறன்.. பெயரிலேயே வெற்றியை வைத்துள்ளதால் என்னவோ படம் இயக்கினாலும் தயாரித்தாலும் வெற்றிதான் இவருக்கு. பொறுமையாக படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.

நாம் தினமும் சோறு சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு குழம்பு, கூட்டு என வைத்தால் நிச்சயம் ருசிப்போம். அதுபோல வன்முறை, அடி, வெட்டு குத்து, குடும்ப பகை என பார்த்து சலித்து போன கதையாக இருந்தாலும் அதை முறையாக கொடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற பல்ஸை அறிந்திருக்கிறார்.

வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பை சந்தித்த மனிதன் எப்படி பக்குவப்பட்ட வாழ்க்கையை வாழ்வான் என்பதையும், அவரின் பிள்ளைகள் அவரை எப்படி நடத்துவார்கள் என்பதையும் அசுர பலத்துடன் சொல்லியிருக்கிறார். அதுபோல 1960களில் இருந்த செருப்பு போடாத ஜாதி அரசியலையும் நச்சென்று சொல்லியிருக்கிறார்.

திரைக்கதையை போல படத்தின் வசனங்களும் நச் நச்… கைத்தட்டல்களை அள்ளுகிறது. வசனங்களில் சில…

கௌரவத்தை வச்சிட்டு குடும்பத்தை இழக்க முடியாது..
எல்லாரும் இறந்துட்டா குடும்ப வாரிசு இல்லாம போய்டும்…
போனவங்கள நினைச்சிட்டு இருக்கிறவங்கள இழந்துட கூடாது
செவலை நாய் போச்சுன்னு நீ சொல்ற.. நான் நாயோடு மட்டும் போச்சேன்னு போதும் நான் நினைக்கிறேன்.. என ஒவ்வொரு வார்த்தையிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

காசு, சொத்து ஆகியவற்றை ஒருவன் பறித்து விடலாம். ஆனால் படிப்பை மட்டுமே இந்த உலகில் யாரிடம் இருந்தும் யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை சொல்லி அடித்திருக்கிறார்.

வன்முறை கொஞ்சம் ஓவர் டோஸ் என்பதால் குழந்தைகள் பார்ப்பது கடினம். மற்றபடி கலைப்புலி தாணு அவர்கள் தமிழ் சினிமா பெருமைப்பட கூடிய பெட்டகத்தை கொடுத்துள்ளார் எனலாம்.

அசுரன்.. அசத்தல்.. அருமை.. அதிரடி..

சிரஞ்சீவி ராஜ்ஜியம்.; சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் (3.5/5)

சிரஞ்சீவி ராஜ்ஜியம்.; சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் (3.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி

இசை – அமித் திரிவேதி

இயக்கம் – சுரேந்தர் ரெட்டி

தயாரிப்பு – கொன்னிடலா புரொடக்ஷன் கம்பெனி

கதைக்களம்..

நம் இந்திய தேசம் என்பது பல மாநிலங்களை சேர்ந்த ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அந்தந்த மாநிலங்களில் பலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரடினர்.

அதுபோல ஆந்திராவில் கொயில்குன்ட்லா என்ற பிரதேசத்தில் நொசாம் பாளையத்துக்காரராக இருந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்த படம்.

ரேநாடு என்றழைக்கப்படும் நாட்டிற்குள் 60 பாளையத்துக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களது பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவர்களிடம் வரி வசூலித்தும், அவர்களின் செல்வங்களை அபகரிக்கின்றனர் ஆங்கிலேயர்கள்.

இந்த கொயில்குன்ட்லா என்ற பகுதியில் ஜான்சன் துரை என்பவன் அதிகாரம் செய்கிறான். அவனை கொன்று அந்த பகுதியில் விடுதலை வேட்கையை ஆரம்பிக்கிறார் நரசிம்ம ரெட்டி.

துரையைக் கொன்றதால் நரசிம்ம ரெட்டியைக் கொல்ல படையை அனுப்புகிறார் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர்.

மற்றவர்கள் ஓடி ஒளிய நரசிம்ம ரெட்டி தனியாளாக நின்று அந்த அவர் அனுப்பிய 300 படை வீரர்களை ஓட விடுகிறார்.

அதன்பின் இவருடன் 60 பாளையத்துக்காரர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கலைஞர்கள்…

படம் முழுக்க சீறும் சிங்கமாக சினங் கொண்ட சிறுத்தையாக சிரஞ்சீவி வெளுத்து கட்டியிருக்கிறார். ரெட்டிக்கு உரித்தான கம்பீரம், பயப்படாத வீரம் என அந்த கேரக்டரை நம் கண் முன்னே கொடுத்துள்ளார்.

ஒரு காட்சியில் தண்ணீருகு அடியில் தலையை சீவும் காட்சி சூப்பர். இப்படி பல காட்சிகள் அனைவருக்கும் பிடித்த மாதிரி படமாக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்து நம் மனதில் நிறைகிறவர் சுதீப். நரசிம்ம ரெட்டியையே எதிர்க்கும் அக்கு ராஜுவாக பட்டைய கிளப்பியிருக்கிறார்.

நரசிம்ம ரெட்டியின் குரு கோசாயி வெங்கண்ணாவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். தன் அனுபவ நடிப்பால் நம்மை கவர்கிறார்.

நரசிம்ம ரெட்டியின் மனைவியாக நயன்தாரா (சித்தம்மா). காதலியாக தமன்னா. (அதாவது மணம் முடிக்காமலேயே மனைவியாக வாழும் லட்சுமி கேரக்டரில் தமன்னா.) இருவருக்குமே பெரிதாக காட்சிகள் இல்லை. மேக் அப் கூட சில காட்சிகளில் ஓவராக இருக்கிறது. ஆனால் நயன்தாராவை விட தமன்னா காட்சிகள் ஓகே.

படத்தின் ஆரம்பத்தில் வரும் அனுஷ்கா இறுதியிலும் வருகிறார் அவ்வளவுதான். வேற யாரு இருக்கா? அட ஆமா நம்ம விஜய்சேதுபதி இருக்காருல்ல.. இருக்காரு அவ்வளவுதான். சொல்ல ஒன்றுமில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அமித் திரிவேதியின் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பார்க்கலாம்.

டப்பிங் படம் என்பதால் பாடலை ரசிக்க முடியவில்லை.

ஜுலியஸ் பாக்கியம் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

ரத்தினவேலு ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக கொண்டு செல்கிறது. பிரம்மாண்டத்தின் தன் கேமரா வழியே காட்டியிருக்கிறார்.

இவரைப் போல கலை இயக்குனர் ராஜீவன் அமைத்துள்ள செட் ஒர்க்கும் சூப்பர். கமலக்கண்ணனின் விஷுவல் கண்களுக்கு விருந்து.

படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக உள்ளது. விஜய்சேதுபதி, அனுஷ்கா கேரக்டர்களை கூட வெட்டியிருக்கலாம் போல..

இயக்கம் பற்றிய அலசல்…

சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த்சாமி டப்பிங் செய்துள்ளார். நடிகர் அமிதாப்பச்சனுக்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

படத்தின் ஹீரோ நரசிம்ம ரெட்டிதான். ஆனால் இவரைப் போல பல நட்சத்திரங்கள் இருந்தும் மற்றவர்களை டம்மியாக்கிவிட்டார்கள். அதுதான் கொடுமை. மேலும் தெலுங்கு ரசிகர்களை கவனத்தில் கொண்டு படத்தை கொடுத்துள்ளனர்.

இந்த படத்தை பாகுபலியுடன் ஒப்பிட கூடாது. ஆனால் பலரும் அதை தான் செய்வார்கள். ராஜமௌலி மெகா மௌலி. அவருடன் ஒப்பிடுவது சரியில்லை. மற்றபடி பிரம்மாண்ட கதையை கமர்சியல் மசாலா கலந்து சொல்லியுள்ளனர்.

வயசானாலும் சிரஞ்சீவியின் கம்பீரம் இன்னும் குறையவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். தமிழுக்கு கமல் போல தெலுங்குக்கு என்றும் சிரஞ்சீவிதான்.

ஆக.. சைரா நரசிம்ம ரெட்டி… சிரஞ்சீவி ராஜ்ஜியம்

More Articles
Follows