கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம் 3.25/5.; முறுக்கேறிய மூர்க்கசாமீ

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம் 3.25/5.; முறுக்கேறிய மூர்க்கசாமீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ராம்நாடு மாவட்டம் பகுதியில் இரு வேறு சாதிப் பிரிவினர் உள்ளனர். வழக்கம் போல தமிழ் சினிமாவில் காட்டப்படும் மேல் சாதி – கீழ் சாதி பிரிவு தான்.

அருள்நிதியும் சந்தோஷ் பிரதாப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

சந்தோஷ் பிரதாப் மீது எவராவது கை வைத்தால் அவன் தன் சாதியை சேர்ந்தவர் என்றாலும் அடித்து துவம்சம் செய்பவர் அருள்நிதி.

இந்த சூழ்நிலையில் சாதி அரசியல் நடத்தும் வில்லன் ராஜசிம்மனால் சந்தோஷூக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அதன் பழி அருள்நிதி மீது விழுகிறது.

இதன் பிறகு என்ன ஆனது.? தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கினாரா அருள்நிதி.? ராஜசிம்மன் யார்? அவரது பின்னணி என்ன? என்பதே இந்த படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பெரும்பாலும் பேய் மற்றும் திரில்லர் படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. ஆனால் இதில் முழுக்க முழுக்க அடிதடியில் இறங்கி அமர்க்களம் செய்துள்ளார்.

முறுக்கேறிய மீசை அதற்கேற்ற உயரம் என கம்பீரமாக தோன்றி கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி. மூர்க்கசாமி என்ற கேரக்டரில் முத்திரை பதித்துள்ளார்.

அருள்நிதிக்கும் துஷாரா விஜயனுக்கும் உள்ள காதல் காட்சிகள ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அருள்நிதிக்கு முத்தம் கொடுத்தபின் துஷாரா பேசும் வசனங்கள் நம்மை கலங்க வைக்கும்.

சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு நட்புக்கு துணை நிற்கும் கேரக்டரில் சந்தோஷ் பிரதாப் பிரகாசிக்கிறார்.

அருள்நிதியின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, சந்தோஷ் காதலியாக சாயாதேவி உள்ளிட்ட கேரக்டர்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நிற்கும்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக பத்மன் வருகிறார். கதை ஓட்டத்தில் இவரது கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது.

சில நடிகர்களின் போட்டோக்களை வைத்து அவர்களின் சாதியை குறிப்பிட்டு சொல்லி விடுகிறார் இயக்குனர்.

டெக்னீஷியன்கள்…

மிகவும் மோசமான தவறுகளை செய்பவனை கழுவேத்தி மரத்தில் கட்டி வைத்து தண்டனை கொடுப்பது அந்த காலத்து நடைமுறை. எனவே அந்த கழுவேத்தி முறையை பயன்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சை கௌதம் ராஜ்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார். ராம்நாடு மக்களின் வாழ்வியலையும் அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையும் அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பது சிறப்பு.

இந்தப் படத்திற்கு இமான் இசை என்றால் நிஜமாகவே நம்ப முடியவில்லை. நிறைய எதிர்ப்பார்த்தோம்.

ஆனால் ‘அவ கண்ணை பார்த்தா.. என்ற பாடல் காதலர்களுக்கு பிடிக்கும். அருள்நிதிக்கு கொடுத்துள்ள பின்னணி இசையில் அனல் தெரிக்கிறது.

கணேஷ்குமாரின் சண்டை பயிற்சி பணத்திற்கு பெரிய பலம் ஆக்ஷனை அள்ளித் தெறிக்கவிட்டுள்ளார். அதுபோல நாகூரானின் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு படத்திற்கு உறுதுணை.

அரசியல் சார்ந்த சாதி படம் என்றாலும் நட்பை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பது படத்திற்கு பெரிய பலம். அது போல ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்.

ஆக கழுவேத்தி மூர்க்கன்…. முறுக்கேறிய மூர்க்க சாமி

Kazhuvethi Moorkkan movie review and rating in tamil

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்.; த்ரில்லர் விசாரணை

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்.; த்ரில்லர் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு குழந்தை கடத்தப்படுவதை பார்த்து விடுகிறார் மகத். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.

அப்போதுதான் கடத்தல் கும்பலுக்கும் அந்த காவல் அதிகாரிக்கும் (சுப்ரமணிய சிவா & அமித் பார்கவ்) தொடர்பு இருப்பதை அறிகிறார்.

கடத்தலை பார்த்த குற்றத்திற்காக மகத் கொல்லப்படுகிறார். மகத் கொல்லப்பட்டதை அறிந்த அவரது காதலியும் போலீஸ் அதிகாரியமான வரலட்சுமி விசாரணையில் இறங்குகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? தன் காதலனை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்துபவர்களின் நோக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது ? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்…

மகத் படத்தில் கொஞ்ச நேரமே வருகிறார். ஓட்டம் பதட்டம் என ரசிக்க வைக்கிறார்.

வழக்கமான நாயகி இல்லாமல் கம்பீரமான போலீஸாக வரலட்சுமி.. தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை தன் நடிப்பால் மெருகூட்டி இருக்கிறார்.

நண்பனுக்காக பழிவாங்கும் நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபாலன் மற்றும் யாசர் அராஃபத் நடித்துள்ளனர்.

இதில் சந்தோஷ் பிரதாப் கூடுதல் கவனம் பெறுகிறார். ஆனாலும் காட்சிகள் பெரிதாக இல்லை.

வில்லன்களாக மாஃபியா கேங் லீடர் சுப்ரமணிய சிவா & போலீசாக அமித் பார்கவும் வருகின்றனர்.

உயர் அதிகாரியாக ஆரவ்.. விசாரணை காட்சிகளில் கம்பீரமாக மிரட்டியிருக்கிறார். இவருக்கு சில ஃபிளாஷ்பேக் காட்சிகளும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

தயாள் பத்மநாபன் இயக்கிய இந்த படம் ஒடிடியில் மே 19ஆம் தேதி வெளியானது. இவரின் முந்தைய ‘கொன்றால் பாவம்’ படமும் ஒரு திரில்லர் தான்.

ஓடிடிக்கு ஏற்ற வகையில் ஒரு திரில்லர் கதையை மெதுவாக கொடுக்க வேண்டும் என நினைத்து அந்த கதைக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு – சேகர் சந்துரு
படத்தொகுப்பு – ப்ரீத்தி பாபு
பின்னணி இசை – மணிகாந்த் கத்ரி

2 காவல் நிலையம் 3 வீடுகள் என கதை நகரும்போது அதை வைத்து தன்னால் என்ன முடியுமோ அது நிறைவாக செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதற்கு ஏற்றார் போல் படத்தொகுப்பும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.

பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

ஒரு காவல்நிலையத்தில் ஒரு ஆய்வாளர் கொலை செய்யப்படுகிறார். ஆனால் காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருக்குமா என்ன.?

தன்னுடைய காதலர் காவலராக இருக்கும்போது அவரிடம் ஆலோசனை கேட்காமல் வேறு ஒரு காவல் நிலையத்திற்கு இளைஞர் செல்வது ஏன்?

காதலனைக் கொன்றவனை பிடிக்க போலீசை வரலட்சுமி நம்பாமல் இருக்க என்ன காரணம் ? ஆகிய லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே உள்ளன.

ஆக மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன் – த்ரில்லர் விசாரணை

Maruthi Nagar police station movie review and rating in tamil

பிச்சைக்காரன் 2 விமர்சனம்.. 3.5/5.. பிச்சை போடலாம்

பிச்சைக்காரன் 2 விமர்சனம்.. 3.5/5.. பிச்சை போடலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிச்சைக்காரன் முதல் பாகத்தில் ஒரு பணக்காரன் பிச்சைக்காரன் ஆக நடித்திருப்பார். பிச்சைக்காரன் 2 படத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒரு பணக்காரனாக நடித்திருக்கிறார்.

கதைக்களம்…

1 லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் விஜய் குருமூர்த்தி. இவர் இந்தியாவின் 7வது பணக்காரன்.

இவரின் சொத்துக்களை அபகரிக்க விஜய் குருமூர்த்தி கம்பெனியின் CEO அரவிந்த் என்பவர் சதிதிட்டம் போடுகிறார்.

எனவே மூளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், வேறொருவரின் மூளையை விஜய் உடலில் பொருத்தி, தான் போடும் கட்டளைகளை கேட்பவராக மாற்ற அரவிந்த் முடிவு செய்கிறார்.

பிச்சைக்காரன் சத்யா என்பவனை தேர்ந்தெடுத்து அவருடைய மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்துகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? வில்லனின் சதி திட்டம் நிறைவேறியதா.? விஜய் ஆண்டனி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி தயாரித்து இசையமைத்து எடிட்டிங் செய்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இரண்டு கேரக்டர்கள் என வித்தியாசம் காட்டி தன்னுடைய பங்களிப்பு சிறப்பாகவே செய்துள்ளார்.

மேலும் ஒரு இயக்குனரின் முதல் படம் என்பது தெரியாத அளவிற்கு மேக்கிங்கில் சிறப்பு சேர்த்துள்ளார்.

தன்னுடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக இந்த படத்தில் நாயகியுடன் கொஞ்சம் கூடுதலாகவே ரொமான்ஸ் செய்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார் விஜய் ஆண்டனி.

காவ்யா தப்பார் ஓரிரு காட்சிகளில் வந்து கதையின் போக்குக்கு உதவியுள்ளார். யோகி பாபு நட்புக்காக நடித்திருப்பார் என்றே தெரிகிறது.

முதலமைச்சராக நடித்துள்ள ராதாரவி தன்னுடைய முதன்மை பணியை கச்சிதமாக முடித்துள்ளார்.

சிறுவன், சிறுமியாக நடித்த இருவரின் நடிப்பும் பிரமாதம்.

விஜய் சொத்துக்களுக்கு ஆசைப்படும் அவரது நண்பர்களாக தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

பொதுவாகவே முதல் பாகம்.. இரண்டாம் பாகம் வந்தால் இரண்டு படங்களின் ஒப்பீடு அதிகமாகவே இருக்கும். முதல் பாகத்தில் அம்மா – மகன் சென்டிமென்ட் உணர்வுப்பூர்வமாக யதார்த்தமாக இருந்தது.

ஆனால் பிச்சைக்காரன் 2 படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் உள்ளது. முதல் பாகத்தை இருந்த அளவு இதில் இல்லை என்பதே உண்மை.

கோயில் சிலையே மற்றும் கல்லூறும் பூவே என்ற பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை படத்திற்கு பலம்.

எடிட்டர் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.. (எடிட்டர் விஜய் ஆண்டனி).

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு ஒரு பிளாஷ்பேக்.. பிச்சைக்காரர்களுக்கான புது வாழ்வு தரும் ‘ஆன்டி பிகிலி’ ஆகியவை சிறப்பு.

ஆனால் நட்பு, துரோகம், அரசியல் என கதைகள் வேறு பாதையில் பயணிப்பதால் சுவாரசியம் குறைகிறது.

ஆக பிச்சைக்காரன் 2.. பிச்சை போடலாம்

Pichaikkaran 2 movie review and rating in tamil

கஸ்டடி விமர்சனம் 3.25/5.; ஜெயலலிதாவை பழி தீர்த்த வெங்கட்பிரபு.?

கஸ்டடி விமர்சனம் 3.25/5.; ஜெயலலிதாவை பழி தீர்த்த வெங்கட்பிரபு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

1996ல் ஆந்திரா சாகிநெட்டிபள்ளியில் கதை ஆரம்பம். அங்குள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் நாகசைதன்யா.

ஒரு நாள் இரவில் இவர ரோந்து செல்லும்போது நடுரோட்டில் அரவிந்தசாமியும் சம்பத் ராஜூம் அடித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் இருவரும் யார் என தெரியாத நாகசைதன்யா இருவரையும் அடித்து ஜெயிலில் அடைத்து விடுகிறார். தான் ஒரு சிபிஐ அதிகாரி என சம்பத்ராஜ் சொல்ல அதை விசாரிக்க ஜெயப்பிரகாஷிடம் போன் செய்கிறார்.

உண்மைதான் என்று தெரிய வரும் நிலையில் திடீரென உயர் போலீஸ் அதிகாரிகள் அரவிந்த் சாமியை கொல்ல முற்படுகின்றனர்.

இதற்குப் பின்னணியில் முதலமைச்சர் பிரியாமணியும் ஐஜி சரத்குமாரும் இருப்பதை அறிகிறார் நாக சைதன்யா.

எனவே ஒரு கொலை குற்றவாளியை சிபிஐ-யிடம் ஒப்படைக்க அவர் முதல்வரை மீறி என்ன செய்தார்? என்ன நடந்தது? ஒரு சாதாரண கான்ஸ்டபிள் என்ன செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கேரக்டர்கள்…

ஆக்சன் டான்ஸ் ரொமான்ஸ் என நாக சைதன்யா நடித்திருந்தாலும் ஏனோ அவரது முகம் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டாது போலவே உள்ளது.

இதற்கு முன் சில டப்பிங் படங்களை பார்த்து இருந்தால் அந்த உணர்வு ஏற்பட்டு இருக்காது என்றே நம்பலாம். ஃப்ளாஷ் பேக் காட்சியில் தாடியுடன் வலம் வரும் நாகசைதன்யாவை நன்றாக ரசிக்கலாம்.

1990 களில் நாம் பார்த்த ரசித்த பெண்களைப் போலவும் நடிகைகளை போலவும் கீர்த்தி ஷெட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

அவரின் உதடுகள் பேசுவதோடு கண்கள் பேசும் பாஷையும் புரிகிறது. விரைவில் கீர்த்தி ஷெட்டி நேரடி தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்வார் என நம்பலாம்.

பிரியாமணியும் மிரட்டலான முதலமைச்சராக தன் கேரக்டரை கெத்தாக செய்திருக்கிறார். முதல்வருக்கு அடிபணிந்த ஐஜியாக சரத்குமார் தோற்றத்திலும் காட்சிகளிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.

சீரியஸான இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பு ஊட்டி நம்மை ரசிக்க வைத்துள்ளார் அரவிந்தசாமி.

1990களில் வந்த ‘புதையல்’ பட காட்சிகள் அப்போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நாகசைன்யாவின் அண்ணனாக கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜீவா. ஜோடியாக ஆனந்தி. அவர்களது காட்சிகளில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஜீவா இறந்ததாக காட்டப்பட்டாலும் ஆனந்தி என்ன ஆனார்? என்ற ஒரு காட்சியில் கூட இல்லை.

டெக்னீஷியன்கள்….

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தங்களின் ராஜ பலத்தை காட்டி காட்டியுள்ளனர். தீம் மியூசிக் தெறிக்க விட்டுள்ளது.

நிஜ வாழ்க்கையில் கங்கை அமரன் குடும்பத்திற்கும் ஜெயலலிதா – சசிகலா குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பகை இருந்துள்ளது போல.. அதற்கு ஏற்ப ப்ரியாமணியை ஜெயலலிதா போல காட்டி வச்சி செய்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு என காட்டப்படும் காட்சிகள் ஜெயலலிதாவை குறி வைப்பதாகவே உள்ளது சரி அது படைப்பாளி சுதந்திரம் என விட்டுவிடலாம்.

இடைவேளையின் போது காட்டப்படும் அந்த பெரிய அணை திறக்கும் நீர் காட்சி அருமை. அது படமாக்கிய விதமும் சிறப்பு.. ஒளிப்பதிவாளர் கதிருக்கு பெரிய பாராட்டுகளை கொடுக்கும். எடிட்டரும் தன் பணியில் சிறப்பு.

‘கஸ்டடி’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவானது என்கிறார்கள். வார்த்தைகள் மட்டும் தமிழ் உச்சரிப்புடன் அழகாக இருக்கிறது. ஆனால் பின்னணியில் காட்டப்படும் அனைத்துமே தெலுங்கு சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. எனவே ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு வரவில்லை.

அண்மையில் வெளியான வாத்தி மற்றும் தீ வாரியார் ஆகிய படங்களும் இதே பாணியில் தான் இருந்தன. இதை தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் கொஞ்சம் சரி செய்து கொண்டால் தமிழ் பதிப்பிலும் பெரும் வெற்றியை பெறலாம்.

Custody movie review and rating in tamil

ஃபர்ஹானா விமர்சனம் 3.5/5.; சுதந்திர பறவை

ஃபர்ஹானா விமர்சனம் 3.5/5.; சுதந்திர பறவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமையலறையில் கிடந்த பெண்கள் ஒரு காலம்.. படிக்க தொடங்கிய காலம் ஒரு காலம்… வேலைக்கு சென்ற காலம் ஒரு காலம்… இவை எல்லாம் கடந்து தற்போது தனக்கு பிடித்தமான வேலை. தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் பெண்கள்..

நவீன காலத்திற்கேற்ப திரைக்கதை அமைத்து இந்த பர்ஹானாவை பறக்கவிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

கதைக்களம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் இஸ்லாமிய மனைவி கணவன் தம்பதியர். இவர்களின் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம்.

கணவனுக்கு பெரிதாக படிப்பறிவு இல்லை. தன் தந்தையுடன் செருப்பு கடையில் பணிபுரிகிறார். குடும்ப வறுமையின் காரணமாக படித்த பெண்ணான ஐஸ்வர்யா ஒரு கால் சென்டரில் (பேங்க் கஸ்டமர் கேர்) வேலைக்கு சேருகிறார்.

அதே அலுவலகத்தில் வேறொரு துறையில் பணிபுரியும் தன் தோழிகளைப் போல தனக்கும் நிறைய சம்பளம் வேண்டும் என நினைக்கிறார். முதலில் மறுக்கும் அனுமோள் & ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் சம்மதிக்கின்றனர்.

அங்கு இணைந்த பின் தான் அது செக்ஸ் சாட்டிங் கஸ்டமர் கேர் என தெரிய வருகிறது. முதலில் அந்த பணியை வெறுக்கும் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் ஒரு ஆண் குரலோடு பேச பேச தனக்கு கிடைக்காத பாசம் அன்பு அதில் கிடைப்பதாக உணர்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த ஆண் குரல் ஐஸ்வர்யாவின் குடும்ப விவரங்களை பற்றி தெரிந்து கொள்கிறது. என்னை நீ சந்திக்க வேண்டும்.. என் வீட்டிற்கு வர வேண்டும் இல்லை என்றால் உனது குடும்பத்தில் நீ பேசிய பேச்சுக்களை சொல்லி விடுவேன் என்கிறது.

அதன் பின் பர்ஹானா என்ன செய்தார்.? வேலையை விட்டு விட்டாரா? அல்லது அந்த நபரை சந்தித்தாரா? யார் அந்த ஆண் குரல்? இதனால் குடும்பத்தில் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த கதையாக இருந்தாலும் தன் கேரக்டர் என்ன என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அதில் எப்போதும் போல சிக்ஸர் அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு ஆண் மகனால் தன் குடும்பத்திற்கு செய்யாததை ஐஸ்வர்யா செய்யும்போதும்.. வேறொரு ஆணுடன் சிக்கிக் கொள்ளும் போதும்.. பரிதவிக்கும் காட்சிகளில் பர்ஹானா அதிகமாகவே கவர்கிறார்.

படம் முழுவதும் மர்மக்குரலாகவே ஒலிக்கிறது செல்வராகவன் குரல். இவரது கேரக்டரில் வேறொருவர் இருந்திருக்கலாம். ஏனென்றால் கொடுத்த பில்டப் அப்படி.

ஒரு கையாலாகாத கணவனாக ஜித்தன் ரமேஷ். இந்த கேரக்டரில் எந்த ஒரு தமிழ் ஹீரோவும் நடிக்க மறுப்பார்கள் என்பது தான் உண்மை. ஒருநாள் வேலைக்கு செல்ல ஐஸ்வர்யா தயங்கும்போது ஒவ்வொரு கஸ்டமரையும் காலை தொட்டு தான் நான் செருப்பை அணிவிக்கிறேன்.

அது என்னுடைய தொழில்.. எனவே கஷ்டமரின் விருப்பத்திற்கு நடந்து கொள் என அவர் அட்வைஸ் செல்லும் போது ஒரு கணவராக நிச்சயம் பெண்களுக்கு பிடிக்கும்.

பழமைவாதியான இஸ்லாமிய கேரக்டரை நம் கண் முன்னே கொடுத்துள்ளார் கிட்டி. பெண்கள் வீட்டை விட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கும் அவர் ஒரு கட்டத்தில் மனம் மாறுவது ரசிக்க வைக்கிறது.

முக்கியமாக குங்கும பொட்டு பெண்ணிடம் அவர் பேசும்போது அவர் மனம் வருவதை தன் முக பாவனைகளில் காட்டி இருக்கிறார்.

இவர்களுடன் மாடர்ன் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா.. ஆண்களிடம் அவர் சிக்கி சீரழிவது நம் மனதை கலங்கடிக்கும்.

அலுவலக தோழியாக அனுமோள். ஒரு உற்ற தோழியாக தன் கேரக்டரில் உயர வைத்திருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

‘ஒரு நாள் கூத்து’ மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் முதல் இரண்டு படங்களில் அவர் கொடுத்த டச் இதில் கொஞ்சம் குறைவாக இருப்பதை உணர முடிகிறது.

காரணம் பர்ஹானாவில் முதல் பாதி வரை பெரிதாக ஈர்ப்பு இல்லை. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படத்தை வேகமாக நகர்த்தி அதை ஈடுக்கட்டி உள்ளார் இயக்குனர் நெல்சன்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சிறப்பு.. இடைவேளைக்குப் பிறகு பின்னணி இசை நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கிறது.

ஃபர்ஹானா என்ன செய்யப் போகிறார்.? என்ற பதட்டத்தை நம்மில் தன் இசை மூலம் உணர வைக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயின் கேமரா சென்னை ஐஸ் ஹவுஸ் சந்து பொந்து எல்லாம் புகுந்து விளையாடுகிறது.

ஒரு நடுத்தர இஸ்லாமிய குடும்பம் எப்படி இயங்கும் என்பதை தன் கேமரா கண்களில் அழகாக படம் பிடித்துள்ளார்.

இஸ்லாமிய குடும்பத்தில் ஆண்மகன் ஒருவர் வரும்போது அந்த பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள்.? என்பதையும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

ஃபர்ஹானா வேலைக்குப் போகலையா..?” என்று கிட்டி கேட்பதை காட்சியாக முடித்திருப்பதில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் சென்டிமெண்ட் டச் தெரிகிறது.

ஆக ஃபர்ஹானா.. சுதந்திர பறவை

Farhana movie review and rating in tamil

இராவண கோட்டம் விமர்சனம்.; தலக்கட்டு.. வெளுத்துக்கட்டு

இராவண கோட்டம் விமர்சனம்.; தலக்கட்டு.. வெளுத்துக்கட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க இன்று வெளியானது ‘இராவண கோட்டம்’.

1957ல் நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை சொல்லி முற்ப்பட்டு இருக்கிறார் விக்ரம் சுகுமாறன்.

கதைக்களம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற ஊரின் தலக்கட்டு பிரபு. இவரது அறிமுகமே தேசிய தலைவர் படங்களுடன் இவரது தலை இடம்பெறுகிறது.

பிரபுவின் நெருங்கிய நண்பர் இளவரசு. பிரபு – மேலவீதி.. இளவரசு – கீழவீதி. (ஜாதியை சொல்லாமல் இப்படி வைச்சிட்டாங்க)

இந்த ஊர் மொத்தமும் மொத்தமும் பிரபு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே ஒரு அரசியல்வாதி நினைத்தாலே கூட அந்த ஊரில் எது செய்ய நினைத்தாலும் பிரபுவின் அனுமதி வேண்டும்.

நாலு காசு பார்க்கலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு (எம்எல்ஏ அருள்தாஸ் & அமைச்சர் தேனப்பன்) இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

சாதீயை வைத்து ஊரை இரண்டாக பிரிக்கும் வேலையில் அருள்தாஸின் ஒத்தக்கை அல்லக்கை பக்கா ப்ளான் போடுகிறார்.

அதில் பிரபுவின் விசுவாசியான சாந்தனுவும் இளவரசின் மகன் சஞ்சய் சரவணனும் சிக்குகிறார்கள். இதில் நாயகி ஆனந்தியும் அடக்கம்.

அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தண்ணீர் பிரச்சனையால் ஊரே திண்டாடுகிறது. எனவே கருவேல மரங்களை ஒழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதால் அதனை ஒழிக்க கிராம மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால் கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாக மாறும் அரசியல்வாதிகள் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்றனர்.

இறுதியில் என்ன ஆனது.? ஊர் பிரிந்ததா.? பங்காளிகள் இணைந்தார்களா.? ஊருக்கு நல்லது நடந்ததா? கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டதா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சாந்தனு ஒரு முரட்டு கிராமத்து இளைஞனாக அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். தன்னுடைய கேரக்டரை கச்சிதமாகவே கொடுத்துள்ளார் எனலாம்.

இவருக்கு போட்டியாக சஞ்சய்.. தன்னால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி ஆனந்தி கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்துள்ளார். ஊர் பெரியவர் பிரபுவின் கதாபாத்திரம் படத்திற்கு அவரது உடலை போலவே பலம் சேர்த்துள்ளது.

தீபா ஷங்கரின் காட்சிகள் யதார்த்தமாக உள்ளது. அதே சமயம் சுஜாதாவின் காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது. எப்போதும் மிரட்டும் அருள்தாஸ் இதில் எம்எல்ஏவாக இருந்தும் அடக்கி வாசித்திருக்கிறார். மினிஸ்டர் தேனப்பன் தன் கேரக்டரில் கச்சிதம்.

ஒத்தக்கை ஆசாமி.. வில்லனாக இவர் போடும் சதி திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.

படத்தில் இவரது கேரக்டருக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது ஏனோ?. இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்.

டெக்னீஷியன்கள்…

மேலத்தெரு கீழத்தெரு என்ற இரு பிரிவினரை காட்டினாலும் ஊர் மக்கள் தல கட்டுக்கு கட்டுப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை காட்டுகிறது.

அது போல சாதி வேறாக இருந்தாலும் சாந்தனு – சஞ்சய் நட்பு பாராட்டக்குரியது. ஆனால் ஆனந்தியின் முக்கோண காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.

பெரும்பாலும் எந்த படத்திலும் சொல்லாத சீமகருவேல மரங்கள் அரசியலைப் பற்றி சொல்லியிருப்பது இயக்குனரின் சமூக ஆர்வத்தை காட்டுகிறது.

தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்படும் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கார்ப்பரேட் கைக்கூலிகளை விரட்டி அடிக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

அது போல கிராமத்திற்குள் அரசியல் வந்தால் ஓட்டுக்கு பணம் வந்துவிடும் என்பதையும் பிரபு கேரக்டர் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

பிரபு – சாந்தனு சார்ந்த மேலத்தெருவில் ஒரு கெட்டவர் கூட இல்லை. ஆனால் இளவரசு – சஞ்சய் சரவணன் சார்ந்த கீழத்தெருவில் ஒரு நல்லவர் கூட இல்லையா.? இப்படியாகவே காட்சிகளை நகர்த்தி இருப்பது ஏதோ ஒரு பிரிவினருக்காக இயக்குனர் நிற்கிறாரோ.? என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசை கிராமத்து கதை ஓட்டத்தில் இருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சிறப்பு.

SI எஸ் ஐ செங்குட்டுவன் & இந்திரா.. இதை வைத்து ஒரு செயின் டாலர் காட்சி காட்டப்படுகிறது.்இதனை வைத்து ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து நினைத்துள்ளார் இயக்குனர்.. ஆனால் அதுவும் சப் என்று ஆகிவிடுகிறது.

ஆக இராவண கோட்டம்.. தலக்கட்டு வெளுத்துக்கட்டு.்

Raavana Kottam movie review and rating in tamil

More Articles
Follows