அய்யனார் வீதி விமர்சனம்

அய்யனார் வீதி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.பாக்யராஜ், பொன்வண்ணன் யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு–சக்திவேல், இசை– யுகே.முரளி, இயக்கம் -ஜிப்ஸி என்.ராஜ்குமார். தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர்.

தலைமுறைகளின் பகை பற்றிய கதை. அந்த ஊரில் மரியாதையும் கௌரவமும் உள்ள குடும்பம் ஜமீன் அய்யனார் குடும்பம். ஒருகாலத்தில் அய்யனார் அப்பாவின் உறவினரான மச்சானே அந்த ஊரில் சாராயம் காய்ச்ச, அதைக் குடித்து அந்தக் கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர்.

அய்யனார் அப்பாவான பெரிய ஜமீன் இதைக் கேள்விப்பட்டதும் அவனைத் தண்டிக்கச் சொல்கிறார். ஊர்மக்கள் அடித்தே கொன்று விடுகிறார்கள். இதனால் குடும்பப் பகை வருகிறது .சாராயம் காய்ச்சிய குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைக்கிறார்கள்.

Ayyanar Veethi stills

அடுத்த தலைமுறையிலும் இது பகையாகத் தொடர்கிறது.அய்யனாருக்கு போன தலைமுறை பகையான மாடசாமியின் வாரிசு பாண்டியன் துணைக்குத் தன் தம்பி மருதுவை வைத்துக் கொண்டு அவ்வூரில் சாராயம் காய்ச்சிக் குடிக்க வைத்து அய்யனாரையும் மக்களையும் பழிவாங்கத் துடிக்கிறான்.

அது மட்டுமலல அய்யனார் மகள் துர்காவை களங்கப் படுத்த திட்டமிடுகிறார்கள்.

விளைவு ? கோவில் நகையைத் திருடி அய்யனார் மீது பழிபோடுகிறார்கள். ஊர்த்திருவிழாவின் போது அய்யனார் கோவில் மணியைத் திருடி கலகமூட்டுகிறார்கள்.

போலீசைக் கைக்குள் போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அய்யனார் வீதியில் எந்த அநியாயமும் தவறுகளும் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

Ayyanar Veethi stills 2

இந்நிலையில் அய்யனாருக்கு எதிராக அனைத்து அக்கிரமங்களும் தலைவிரித்தாட வைத்த பாண்டியன், மருது கோஷ்டிக்கு முடிவு என்ன ஆகிறது.? அய்யனார் என்ன செய்கிறார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

படம் கிராமமும் கிராமம் சார்ந்த பகுதிகளில் படமாகியுள்ளது. நகரநெருக்கம் வாகனங்கள், கட்டடங்கள் என்று நகர கலாச்சாரத்தையே பார்த்துப் போரடித்த ரசிகர்களுக்கு இப்படம் கிராமத்துக்கு அழைத்துச் சென்ற உணர்வைத் தருகிறது படமே அய்யனார் சித்த பிரமை போல் மௌனமாக இருக்கிறாரே அவருக்கு என்ன ஆகிவிட்டது என்கிற ப்ளாஷ்பேக்கில் தொடங்குகிறது. நடந்த முன் கதை விரிகிறது. அது மட்டுமல்ல படத்தில் வேறு சிறுசிறு ப்ளாஷ் பேக்குகளும் உள்ளன.

Ayyanar Veethi director Gypsy Rajkumar

அய்யனாராகப் பொன்வண்ணன் நடித்து இருக்கிறார். தோற்றத்தில் பொருத்தம். மரியாதையான மிடுக்கில் செயல்பாடுகளில் அதிகம் பேசாமலேயே கவர்கிறார். சுப்ரமணிய சாஸ்திரியாக வரும் பாக்யராஜ் தனக்கே உரித்தான் பாணியில் வருகிறார். சின்னச்சின்ன முடிச்சு போட்டும் அவிழ்க்கிறார்.

படத்தின் முடிவு அவர் தலையில். அய்யனாராக வேடமிட்டு அவர் செய்யும் கொலை அட.. எனத் திடுக்கிட வைக்கிறது.

படத்தில் கிளைக்கதைகள் சில உள்ளன அதில் ஒன்றுதான் யுவன்– சாராஷெட்டி கல்லூரிக் காதல். வாழ்க்கையில் முன்னேற லட்சியம் வேண்டும் என்று கூறி, காதலிக்கும் முன் ஏதாவது சாதித்து விட்டு வா என்கிறார் சாரா.

இளம் சாதனையாளர் விருது இருவருமே பெறுகின்றனர் பின்னே ஏன் காதலன் யுவனை நிராகரிக்கிறார் என்று புரியவில்லை.

துர்காவாக வரும் சிஞ்சு மோகன் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார் குணச் சித்திரமாகப் பளிச்சிட்டுள்ளார். தயாரிப்பாளர் செந்தில்வேல் மருது என்கிற வில்லனாக வருகிறார். துடிப்பான நடிப்பில் வெறுப்பேற்றி வசவுகள் வழியாகவே பாராட்டு பெறுகிறார்.

பாக்யராஜை இன்னமும் புத்திசாலித் தனமான காட்சிகளில் பயன் படுத்தியிருக்கலாம். சிலகாட்சிகள் பழைய படத்து உணர்வைத் தருகின்றன

Ayyanar Veethi stills 3

சிங்கம்புலியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. யூகே முரளியின் இசையில் பாடல்களில் திறமை. காட்டியுள்ளார். ‘வராரு ஐயன் வராரு ‘கோயில்களில் இனி தூள்கிளப்பும்.

‘பொண்ணுங்களை பொறுத்தவரை’ கானாபாணி கலக்கல். ‘கண்ணுச் சாராயம் முன்னாலே’ குத்துப்பாட்டு .’அன்பு கொண்ட ஐயன் முகம்’ இனிமை ரகம். கிராமத்து இயல்பை அழகை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல் .பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

ஆங்காங்கே பிரியும் இளைக்கதைகளை இயக்குநர் தவிர்த்தால் ‘அய்யனார் வீதி’ தேரோட்டம் ஒரே நேர்க் கோட்டில் சென்றிருக்கும் .

 

பாகுபலி2 விமர்சனம்

பாகுபலி2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், ரோகினி மற்றும் பலர்.
இயக்கம் : ராஜமௌலி
இசை : எம் எம் கீரவாணி
ஒளிப்பதிவாளர் : கே கே செந்தில்குமார்
எடிட்டர்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
தயாரிப்பு : அர்க்கா மீடியா ஒர்க்ஸ்

கதைக்களம்…

முதல் பாகத்தின் கதை தங்களுக்கு தெரியும்தானே. இதில் அதன் ப்ளாஷ்பேக் காட்சிகளும், அதன்பின்னர் சில தற்போதைய காட்சிளும் உள்ளன.

பாகுபலிக்கு முடி சூட்ட விரும்புகிறார் ராணி சிவகாமி. அதே சமயம் அவருக்கு ஒரு நல்ல மணமகளையும் பார்க்க விரும்புகிறார்.

இதனிடையில் பாகுபலி மற்றும் கட்டப்பாவை ஊருக்குள் சென்று நாட்டில் மக்களின் நிலையை அறிந்து வர செல்கிறார்.

அப்போது மற்றொரு அரச வம்சத்தின் இளவரசி தேவசேனா (அனுஷ்கா) மீது காதல் கொள்கிறார் பிரபாஸ்.

ஆனால் தன்னை யார்? என்று அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை. பின்னர் அனுஷ்காவும் காதலிக்கிறார்.

baahubali rana

இதனிடையில், அனுஷ்காவின் ஓவியம் பார்த்து காதல் கொள்கிறார் ராணா. எனவே அனுஷ்காவை ராணாவுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

இதன்பின்னர் பிரபாஸின் காதல் தெரிய வர, என்ன செய்தார் மகாராணி? என்பதும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதையும் தன் உச்சக்கட்ட விஷ்வல் ட்ரீட் கொடுத்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் ராஜமவுலி.

baahubali ramya krishnan anushka

கேரக்டர்கள்…

பாகுபலியை மட்டுமல்ல தன்னையே இயக்குனரிடம் ஒப்படைத்துவிட்டார் பிரபாஸ்.

சில காட்சிகளில் மரத்தை பிடுங்குவது, தேரை இழுப்பது என்பது போல இருந்தாலும், அதை பிரபாஸ் செய்வதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அத்தனை பலத்துடன் வெறி கொண்டு நடித்திருக்கிறார் பிரபாஸ்.

அனுஷ்கா மீது காதல் கொள்ளும் போதும், கோழையாக நடிக்கும்போதும் இளம் பெண்களை கொள்ளை கொள்வார்.

மகாராணியின் கட்டளையை மீறும்போது அது சரிதான் என்று ரசிகர்கள் சொல்லுமளவுக்கு ரசிக்க வைக்கிறார் பிரபாஸ்.

பிரபாஸைவிட நான் சளைத்தவன் இல்லை என்னுமளவுக்கு ராணாவும் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.

இருவரும் மோதும் சண்டை காட்சிகளை பார்க்கும்போது, இனி தமிழ் சினிமாவில் இதுபோல் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அப்படியொரு கம்பீரம். ரசிகர்களிடையே ஆரவாரம்.

Bahubali-2 kattappa

கட்டப்பா சத்யராஜ், இதில் காமெடியும் செய்து ரசிக்க வைக்கிறார். பாசத்திற்கும் ராஜ தந்திரத்திற்கும் நடுவில் இவர் சிக்கிக் கொண்டு நடிக்கும் காட்சிகள், தன் சினிமா அனுபவத்தை பயன்படுத்தியுள்ளார்.

இவர்களுக்கு போட்டியாக மகாராணி ரம்யா கிருஷ்ணன், இளவரசி அனுஷ்கா.

மகாராணி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனை விட பொருத்தமான ஆள் கிடைப்பாரா? எனத் தெரியவில்லை. சிவகாமி சிக்ஸர் அடிக்கிறார்.

உண்மை என்னவென்று தெரியாமல் கட்டளையிட்டுவிட்டு அதன் பின் தவிக்கும் காட்சிகளில் தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.

இளவரசியாக ஜொலிக்கிறார் அனுஷ்கா. அழகிலும் அடிதடியிலும் அசத்துகிறார். வாள் வீச்சிலும் விழி வீச்சிலும் ஸ்கோர் செய்கிறார்.

நயவஞ்சகர் நாசர் என்னும் திட்டுமளவுக்கு தன் கேரக்டரை உயர்த்திருக்கிறார்.

முதல் பாகத்தில் தமன்னாவின் காதல் இருந்தது. ஆனால் இதில் தமன்னாவே இல்லை என்னுமளவிற்கு ஓரிரு காட்சிகளில் வருகிறார்.

Baahubali-2 rajamouli

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மதன்கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். அரசர் காலத்து கதையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் பலமுறை பார்க்க வைக்கும்.

கலை இயக்குனரே படத்தின் ஆணிவேர் எனலாம். ஒரு பாடல் காட்சியில் அந்த பறக்கும் கப்பல் ஆச்சயரிமூட்டும்.

யானை அணிகலன் ஆகட்டும், கிராம மக்கள் ஆகட்டும், போர்க்களம் ஆகட்டும், அரண்மனை ஆகட்டும் எதுவாக இருந்தாலும் நிஜம் எது? கிராபிக்ஸ் எது? தெரியாத அளவுக்கு நம்மை ஈர்க்க வைக்கிறார்.

படத்தின் பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜா போன்றோரை பயன்படுத்தியிருந்தால் பாடல்களையும் ரசிகர்கள் ரசித்திருப்பார்கள்.

BAHUBALI stills

இயக்கம் பற்றிய அலசல்…

சரித்திர கால கதையை எந்தவித சலிப்பும் இல்லாமல் கொண்டு செல்கிறார் டைரக்டர்.

முதல் பார்ட்டில் போர்களம், வீரம் என அதிரடிகளை கொடுத்தவர், இதில் காதல், குடும்பம், ராஜ தந்திரம், ஆட்சி, சூழ்ச்சி என அத்தனையும் ட்விஸ்ட் கலந்து கொடுத்திருக்கிறார்.

பாகுபலியை கட்டப்பா ஏன் கொல்கிறார்? என்பதையும் ஏற்றுக் கொள்ளும்படி கொடுத்திருக்கிறார்.

தியேட்டரில் சென்று பாகுபலியை பார்த்தால் உங்களுக்கு பாக்கியம் என்றே சொல்லலாம்.

நவீன தொழில்நுட்பம், சயின்ஸ்பிக்சன் என மற்ற கதைகளை ஹாலிவுட்டில் எடுக்கலாம். ஆனால் நம் சரித்திர காலத்தை இந்த மண்ணில் பிறந்தவரால் மட்டுமே எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார் ராஜமௌலி.

பாகுபலி…  பாக்ஸ் ஆபிஸில் ஒரு கதகளி

இலை விமர்சனம்

இலை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

நகரத்தில் வாழும் பெண்களுக்கு கல்வி எளிதாக கிடைத்துவிடுவதால், அதனின் அருமை அவர்களுக்கு சில சமயம் தெரிவதில்லை.

ஆனால் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு அதுவும் படிப்பே வேண்டாம் என நினைக்கும் நபர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இலை.

நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து உயர வேண்டும் என நினைக்கிறார்.

இவரின் தந்தை தவிர எல்லாரும் பெண் கல்வியை எதிர்க்கிறார்கள்.

இலையின் அம்மாவோ தன் தம்பிக்கு அவளை திருமணம் செய்துவைக்க நினைக்கிறார்.

பத்தாம் வகுப்பு கடைசி தேர்வின் அன்று, இலையின் தந்தையை வில்லன் அடித்து உதைக்கிறார்.

இதனால் தேர்வு செல்ல முடியாமல் தவிக்கிறார் இலை. இறுதியாக தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? தேர்வு எழுதினாரா? எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டார்? என்ற கேள்விகளுக்கான விடைதான் க்ளைமாக்ஸ்.

ilai heroine
கதாபாத்திரங்கள்…

இலை கேரக்டரில் முழுவதுமான் தன்னை பொருத்தியிருக்கிறார் நாயகி சுவாதி நாராயணன்.

தனக்கான கதையை, முழுவதும் சுமந்து, இலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

தேர்வு அன்று, அப்பாவை காண முடியாமல் தவிப்பதும், பள்ளி செல்ல முடியாமல் தவிப்பதும், தன்னுடைய ஒரு வயது தங்கையை கவனிக்க முடியாமல் அழுவதும், குழந்தையை பார்த்துக்க யாராவது கிடைக்க மாட்டார்களா? என தேடுவதும், என அந்த ஒவ்வொரு உணர்வுகளுக்கும் உயிரூட்டியிருக்கிறார் ஸ்வாதி.

ilai movie still

நாயகியின் தந்தை, நாயகியின் மாமன் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என அனைவரது பாத்திரங்களும் சிறப்பான தேர்வு.

விஷ்ணு வி.திவாகரனின் இசையில் பாடல்கள் ஓகே. சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு சிறப்பு.

ilai press meet

கல்வி கிடைக்க, பெண்கள் ஏங்குவதை அழகாக காட்சிகளில் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் பீனிஸ் ராஜ்.

கல்வியை அலட்சியப்படுத்தும் மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்.

குறும்படம் போல சில காட்சிகள் இருந்தாலும், கல்வி விழிப்புணர்வுக்காக பார்க்கலாம்.

இலை.. கல்வியில்லையேல் எதுவுமில்லை

கடம்பன் விமர்சனம்

கடம்பன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆர்யா, கேத்ரீன் தெரசா, தீப்ராஜ், சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்ஜி மகேந்திரன், மதுவந்தி அருண் மற்றும் பலர்.
இயக்கம் : ராகவா
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : எஸ் ஆர் சதீஷ்
எடிட்டர்: தேவா
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி

kadamban 2

கதைக்களம்…

கடம்பவனம் என்ற ஒரு வனப்பகுதி. அரசாங்கத்தையும நம்பாமல், அந்த வனத்தையே நம்பி வாழும் மக்கள் ஒரு பக்கம்.

வனத்தை அழித்து வளமாக வாழ நினைக்கும் கார்ப்பேரேட் நிறுவன அதிகாரிகள் ஒரு பக்கம்.

காட்டு வாழ் மக்களுக்கும் இந்த கார்ப்பரேட்டுக்கும் நடக்கும் யுத்தத்தில் வென்றது யார்? எப்படி வென்றார்கள்? என்பதே இந்த கடம்பன்.
Kadamban-still1

கதாபாத்திரங்கள்…

அட சூப்பர்யா இந்த ஆர்யா.. என்று ஆண்களே ஆச்சரியப்படுமளவிற்கு கட்டுடல் காட்டி அசத்துகிறார் கடம்பன்.

உடலுக்கு ஏற்ற போல ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி ரசிகர்களை வியக்க வைக்கிறார். அவரின் மெனக்கெடல் நிச்சயம் வீண் போகவில்லை. சுருக்கமாக சொன்னால் ஹார்ட் ஒர்க் ஆர்யாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

செழிப்பான வனப்பகுதியில் வாழும் கேத்ரீன் தெரசாவும் செழிப்பாகவே இருக்கிறார். கதாநாயகி என்றில்லாமல் கதையின் நாயகியாக தெரிகிறார்.

இவரின் அண்ணனாக வருபவரும் தன் நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் முருதாஸ் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தொழில் அதிபராக வரும் தீப் ராஜ்வும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.

இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி ஆகியோர் வில்லனோடு இணைந்து தங்கள் கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.
kadamban 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவுக்கு அடுத்து பின்னணி இசையில் நான்தான் என சொல்லாமல் நிரூபித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

ஒத்த பார்வையில், உச்சிமலை அழகு ஆகிய பாடல்களும் கேட்கும் ரகமே.

நாமும் நாட்டை விட்டு காட்டில் வசிக்கலாமே என ஏங்கும் அளவுக்கு கேமரா விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் சதீஷ்குமார்.

கிட்டத்தட்ட 70 யானைகள் வரும் காட்சி நிச்சயம் ரசிகர்களை பரவசப்படுத்தும்.

ஒரு அழகான தாத்தா பேரன் உறவை சொன்ன மஞ்சப்பை இயக்குனர் ராகவா எடுத்த படமா? இது என இரண்டாவது படைப்பை நன்றாக கொடுத்துள்ளார்.

நாட்டை நம்பி காடு இல்லை. ஆனால் காடு இல்லையேல் நாடே இல்லை. அதில் உள்ள விலங்குகளை நாம் ZOO வில் மட்டுமே பார்த்து மகிழ்கிறோம்.

அவற்றை நாம் தொந்தரவு செய்யாதவரை நமக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

தேன் கூடு, மூங்கில் காடு என அனைத்தையும் கண்முன் வந்து நிறுத்தியிருக்கிறார் ராகவா.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதைகள் அரிதாகவே வரும். எனவே நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

கடம்பன்… கைவிடமாட்டான்

சிவலிங்கா விமர்சனம்

சிவலிங்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவாசு, வடிவேலு, ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : பி வாசு
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : சர்வேஸ் முரளி
எடிட்டர்: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பு : ரவீந்திரன்

sivalinga 3

கதைக்களம்…

முதல்காட்சியில் சக்திவேல்வாசு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்படுகிறார்.

அவர் வளர்க்கும் ஒரு புறா மட்டுமே அந்த கொலைக்கு சாட்சியாகிறது.

இந்த வழக்கு சிபிசிஐடியான சிவலிங்கேஸ்வரன் லாரன்ஸ் விசாரிக்கிறார். இதனிடையில் ரித்திகா சிங்குடன் காதல் திருமணம் நடக்கிறது.

இறந்துபோன சக்தி, ஆவியாக வந்து ரித்திகாவின் உடலில் புகுந்து கொள்கிறது.

ஆனால் தன்னை யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதை அறியாமல் அலைகிறது அந்த ஆன்மா.

எந்த ஆதாரமும் இல்லாத இந்த கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார்? புறா எப்படி சாட்சி ஆனது? அந்த ஆன்மா சாந்தி அடைந்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் பதில் சொல்லும்.

sivalinga 2

கேரக்டர்கள்..

முறைப்பான போலீஸ் அதிகாரி போல் இல்லாமல், கமர்ஷியல் போலீசாக ஜொலிக்கிறார் லாரன்ஸ்.

அவரின் டான்ஸ் மற்றும் ஸ்டைல் எதிலும் பஞ்சமில்லை. இதில் சின்ன கபாலி நான் என்று பாடி காட்டுகிறார்.

பேய்க்கும் தனக்கும் எப்பவும் எல்லா அம்சமும் பொருந்தும் என்று இதிலும் கலக்கியிருக்கிறார்.

இறுதிச்சுற்று பாக்ஸர் ரித்திகா இதில் ரங்குரக்கரா என குத்தாட்டம் போட்டு இருக்கிறார். பேய் பிடித்தவளாகவும் மிரட்டியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சக்திவேல் வாசு. நடிப்பில் நல்ல தேர்ச்சி. இதையே கன்டின்யூ பன்னுங்க பாஸ். ரஹீம் கேரக்டரில் பிரியாணி போல மணக்கிறார்.

வடிவேலுக்கு சரியான ரீஎண்ட்ரி இப்படம். அவரது காட்சிகளை இன்னும் நீட்டி இருக்கலாம். காமெடி கைகொடுத்திருக்கிறது.

சக்தியின் லவ்வராக வரும் ஷாரா சிறப்பான தேர்வு. நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.

இவர்களுடன் ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உண்டு.
sivalinga 1

தொழில்நுட்ப கலைஞர்கள்.

தமனின் பின்னணி இசை தாறுமாறு. ஹாரர் படத்திற்கு ஏற்ற ஆர்ஆர் ரசிக்க வைக்கிறது.

ரங்குரக்கர மற்றும் சின்ன கபாலி பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். சிவலிங்கா பாடலும் ரசிக்க வைக்கிறது.

சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
ஆனால் முதல்பாதியில் வரும் ஊர்வசி காட்சிகளை வெட்டி, இரண்டாம் பாதியை குறைத்திருக்கலாம்.

இடைவேளைக்கு பின்னர்தான் படமே என்கிற அளவுக்கு அவ்வளவு காட்சிகளை வைத்துள்ளார் டைரக்டர் பி.வாசு.

ஒரு விசாரணை, ஒரு சிபிசிஐடி என இருந்தாலும் அதில் கமர்ஷியல், பேய் என அனைத்தையும் கலந்து கொடுத்துள்ளார் பி வாசு.

பொதுவாக இதுபோன்ற படத்தில் ஆவி எதற்காக, யாரால்? கொல்லப்பட்டது என்பது தெரிந்திருக்கும். ஆனால் இதில், யார்? தன்னை கொன்றார்கள்? என சக்தியின் ஆன்மா அலைவது ட்விஸ்ட்.

ஏ கிளாஸ் ஆடியன்ஸை விட பி அண்ட் சி சென்டரில் சில்லரைகளை அள்ளுவான் சிவலிங்கா

சிவலிங்கா.. த்ரில்-லிங்கா

பவர் பாண்டி விமர்சனம்

பவர் பாண்டி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராஜ்கிரண், தனுஷ், பிரசன்னா, ரேவதி, சாயாசிங், மடோனா, ஆடுகளம் நரேன், (கௌரவ தோற்றத்தில் டிடி, ஸ்டண்ட் சில்வா பாலாஜிமோகன், கௌதம் மேனன், ரோபா சங்கர்) மற்றும் பலர்.
இயக்கம் : தனுஷ்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவாளர் : வேல்ராஜ்
எடிட்டர்: பிரசன்னா
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு : தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ்
power paandi 2

கதைக்களம்…

மனைவியை இழந்த பவர் பாண்டி ராஜ்கிரனுக்கு ஒரே மகன் பிரசன்னா. ராஜ்கிரணின் மருமகள் சாயா சிங். அவருக்கு ஒரு பேரன் ஒரு பேத்தி.

சினிமாவில் பைட் மாஸ்டராக பணி புரிந்த பாண்டி, 64 வயதில் தன் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறார்.

தவறுகள் எங்கு நடந்தாலும் இவர் தட்டி கேட்பதால், அந்த பகுதி வில்லன் (சென்ட்ராயனிடம்) சிறுசிறு மோதல்கள் வருகிறது.

இதனால் போலீஸ் நிலையத்துக்கு அடிக்கடி செல்லும் பிரசன்னா, ஒரு சூழ்நிலையில் தன் தந்தையை ஓவரா திட்டி விடுகிறார்.

இதற்கு மேல் தனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என புறப்படும் ராஜ்கிரண், தன் முன்னாள் காதலியை தேடி செல்கிறார்.

அதன்பின் என்ன ஆனது? காதலியை கண்டு பிடித்தாரா? அவர் யார்? எங்கு இருக்கிறார்? மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பதுதான் கதை.

power paandi 5

கதாபாத்திரங்கள்…

தன் உடலுக்கும் வயதுக்கும் ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து கெத்து காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.

வயதான கேரக்டர் என்றாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை வசியம் செய்து விடுகிறார்.

முன்னாள் காதலியை கண்டுபிடித்த பின், அவள் தன்னை இன்னும் நினைத்து கொண்டு இருக்கிறாளா? என்று கேட்டுவிட்டு, அதற்காக காத்திருக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்.

பைட், ரொமான்ஸ், பாசம், அன்பு என நவரசம் காட்டி நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.

ஐடி ஊழியராக பிரசன்னா. நாட்டில் எது நடந்தாலும் நமக்கென்ன? என இருக்கும் ஒரு சராசரி மகனாக வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா.

ஒரு காட்சியில் அம்மாவின் போனை கட் செய்யும் நண்பரை பார்த்து, அம்மாதானே அப்பாதானே என அலட்சியம் செய்யாதீங்க. அவங்க நம்மள பத்தி ரெண்டு நிமிஷம் விசாரிக்க போறாங்க. அதை பேசுங்க என சொல்லும்போது பிஸியான மனிதர்களின் கன்னத்தில் அறைவது போல இருக்கும்.

power paandi 4

மாமனாரை மதிக்கும் நல்ல அமைதியான மருமகளாக சாயாசிங். குழந்தைகளின் தொந்தரவு தாங்க முடியாமல் தாத்தாவிடம் கொடுத்து விட்டு செல்லும் பெற்றோரை நினைவுப் படுத்துகிறார்.

தனுஷ் உடன் காதல் வயப்படுவதும், காதலை சொல்வதும், பிரிந்து செல்வதும் என காதலை உணர்ந்து நடித்திருக்கிறார் மடோனா.

பழைய காதலனை கண்டதும் வயதுக்கேற்ற போல், காதலை நாகரீமாக மறைத்து தான் அனுபவமிக்க நடிகை என்று நிரூபிக்கிறார் ரேவதி.

உன்ன நினைச்சேன், நினைக்கிறேன். நினைச்சிட்டு இருப்பேன் காதலை சொன்னாலும் குடும்பத்தின் உறவுக்காக தயங்கி நிற்கும்போது ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் சின்ன குழந்தைகள், ஆடுகளம் நரேன், வித்யூலேகா, சென்ட்ராயன், டிடி ஆகியோரும் தங்களின் சிறுபணியை சிறப்பாக செய்துள்ளனர்.

power paandi 6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒவ்வொரு கேரக்டரின் உணர்வுகளுக்கும் தன் இசையால் உயிர் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன்.

பாடல்களையும் பின்னணி இசையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

இவரும் தனுஷ்ம் பெரும்பாலான பாடல்கள் பாடியுள்ளனர்.

இளவயது கேரக்டர் தனுஷ் என்பதால் பாடலுக்கு குரல் ஓகே. ஆனால் சில பின்னணி இசையின் போதும் ஹம்மிங் கொடுக்க வேண்டுமா சார்..?

வேல்ராஜின் ஒளிப்பதிவில் நம்மை மறந்து காட்சிகளை ரசிக்க முடிகிறது.

வசனங்கள் படத்திற்கு பெரும் சேர்க்கிறது. ‘காதலிச்ச பொண்ணோ கடவுள் கொடுத்த பொண்ணோ ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான் ” என்று வந்து செல்லும் கேரக்டர்களின் வசனங்களும் மனதில் நிற்கிறது.

power paandi 3

இயக்குனர் நடிகர் தனுஷ் பற்றி…

ப்ளாஷ்பேக் காட்சியில் பாண்டியாக தனுஷ். ஆட்டம் இனிமே தான் ஆரம்பம் என அசால்ட்டாக களம் இறங்கி கிராமத்து மொழியில் நம்மை கவர்கிறார் தனுஷ்.

தன் படம், தான் ஹீரோ என்றெல்லாம் இல்லாமல் ரசிகனுக்கு எது தேவையோ அதை மிக அழகாக செய்துள்ளார்.

காதலியை தேடிச் செல்லும்போது, ஒரே நிமிடத்தில் காதலியை கண்டுபிடிப்பது, போன் இல்லை என்று சொல்லும்போது லாஜிக் மீறல்.

வீட்டை விட்டு ஓடிச்செல்லும்போது, பேங்கில் எடுத்த பணத்தில் போன் வாங்கலாமே?

தாத்தா, அப்பா எல்லாரையும் குழந்தைகள் ஒருமையில் வா போ என்றே அழைக்கின்றனர். அது கூட பாசம் என்றாலும், பக்கத்து வீட்டு இளைஞனை வாடா போடா என்று கூப்பிடுவது ரொம்ப ஓவர்.

ஆக மொத்தம் தமிழ் புத்தாண்டு நாளில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான ஒரு டைரக்டர் கிடைத்துவிட்டார்.

பவர் பாண்டி … தனுஷின் ரியல் பவர்

More Articles
Follows