தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தை கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
‘என்னுடைய சக்தி பிலிம்ஸ் சார்பாக 600க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி ரிலீஸ் செய்து இருக்கிறேன்.
ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்துக்கு பிறகு படங்களை வெளியிடவில்லை.
என்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர் என்னை போன்ற விநியோகஸ்தர்களை தேடி வந்தது இல்லை.
ஆனால் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ராஜா தேடிவந்து படத்தை வெளியிட வேண்டிக் கொண்டார்.
அதன்படி ‘ரெமோ’வை வாங்கி ரிலீஸ் செய்தேன்.
இப்படத்தை மினிமம் கியாரன்டிக்கு வாங்கி இருந்தாலும், திரையரங்க விகிதாச்சார அடிப்படையில்தான் ‘ரெமோ’வை வெளியிட்டேன்.
தமிழகம் முழுக்க இப்படத்தை ரூ. 30 கோடி ரூபாய்க்கு ‘ரெமோ’ படத்தை வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் நிச்சயமாக விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என நம்புகிறேன்.
விடுமுறை நாட்களில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது. அதன்பின்னர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விற்கப்பட்டு வருகிறது. அதாவது 50, 70 ரூபாய்க்கு விற்றனர்.
இதுபோன்ற வியாபார நடைமுறையை ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கடைபிடிக்க வேண்டும்.
அப்படியிந்தால் நிச்சயம் அனைத்து படங்களும் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்கும். தியேட்டர்கள் முதல் எல்லாருக்கும் லாபம் கிடைக்கும்.” என்றார்.
கபாலி, தெறி, வேதாளம் ஆகிய படங்களின் டிக்கெட்டுக்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக பல புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.