தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.
இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.
ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் இந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா தன்னுடைய இல்லற வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.
“நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிறது. முறைப்படி விவாகரத்து செய்துவிட்டோம். அது ஒரு வருடம் ஆகிவிட்டது.
நாங்கள் இருவரும் அவரவர் வாழ்க்கையின் அடுத்த கட்டத்மிற்கு நகர்ந்துவிட்டோம்.
இனிமையானவர் சமந்தா. எங்களின் அந்த திருமண வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை இப்போதும் உண்டு.
ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பும்போதுதான் அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வதந்திதான் பிரச்சினைக்கு காரணம். முதலில் அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. பிறகு அது எங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.” என்றார்.
Why divorce with Samantha? Naga Chaitanya talks about the difficulty in the ‘custody’ meeting