தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.
இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.
முக்கிய வேடங்களில் அரவிந்த்சாமி பிரேம்ஜி நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் இன்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.
இது பொது விழாவோ.. அல்லது ரசிகர்கள் கூடும் இடமோ அல்ல.. முழுக்க முழுக்க செய்தியாளர்கள் கலந்துக் கொள்ளும் இடமாகும். அப்படி இருக்கையில் 10க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் செய்தியாளர்களை நாகசைதன்யா மற்றும் கீர்த்தியிடம் நெருங்க விடாமல் தள்ளிக் கொண்டே வந்தனர்.
பிரஸ்மீட்டில் எதற்கு பவுன்சர்ஸ்.? என்ற கேள்வி அனைவரிடம் இருந்தது. மேலும் கூட்டமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற? என்ற சிரிப்பலையும் எழுந்தது.
பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரும் நட்சத்திரங்கள் எதற்கு பவுன்சர்களை அழைத்து வருகிறார்கள்.? ரசிகர்கள் கூடினால் பிரச்சனை ஏற்படும்.. தள்ளுமுள்ளு ஏற்படும் என கருதலாம். ஆனால் பிரஸ்மீட்டில் எதற்கு பவுன்சர்?
இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் இதை சரி செய்வார்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.!
Bouncers atrocity at custody press meet