தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனுஇமானுவேல், பிரசன்னா, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள துப்பறிவாளன் படம் இன்று செப்டம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.
இதனையொட்டி தியேட்டர்களில் படத்தை செல்ஃபோனில் பதிவு செய்து பரபரப்புவதை தடுப்பதற்காகவும் அப்படி பதிவு செய்பவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்து கொடுக்கவும் தமிழகமெங்குமுள்ள விஷால் நற்பணி இயக்கம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளையும் கண்காணிக்க இருக்கிறார்களாம்.
இதற்காக இந்த பறக்கும் படைக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.
இது தொடர்பான கடிதங்களில் யார்? யார்? வருவார்கள் என ஒவ்வொரு தியேட்டருக்கும் விஷால் அனுப்பியுள்ளார்.
Vishal flying squad will supervise in Thupparivalan theaters to avoid piracy