தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி பாடல்கள் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்ட முதலே ஜீன் 12ஆம் தேதி கபாலி தினமாகவே பார்க்கப்பட்டது.
பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, எங்கு திரும்பினாலும் அப்பாடல்கள் பற்றிய பேச்சே காணப்பட்டது.
நெருப்புடா தொடங்கி கபாலிடா வரை இந்த குரல்களுக்கு பஞ்சமில்லை.
இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதக்கின்றனர்.
இவர்களைப் போல், பெரிய நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் தெரிவித்துள்ளதாவது… செம எனர்ஜியான பாடல்கள். மகிழ்ச்சி என கூறினாராம்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது…
‘கபாலி பாடல்களை கேட்டேன். கலக்கிட்டீங்க சந்தோஷ்… வாழ்த்துக்கள் ரஞ்சித்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தன் நண்பரான அருண்ராஜா காமராஜக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில்…
“திரும்ப திரும்ப கேட்கும் பாடல் நெருப்புடா… உன் குரல் மற்றும் பாடல் வரிகள் வேற லெவல்.
உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. நீ மிகப்பெரிய உயரம் தொட காத்திருக்கிறேன்“ என பதிவிட்டுள்ளார்.