தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பெரும் சர்ச்சையானது.
அங்கு அதிமுக.வினரால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு அவரது தயாரிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆர்.கே.நகர்’ என பெயரிட்டுள்ளார்.
இப்படத்தை சரவணராஜன் இயக்கி வருகிறார்.
இதில் நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக சனா, வில்லனாக சம்பந்த் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவதால். கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
அதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.