‘லிங்கா-தலைவா’ படப்புகழ் வேந்தர் மூவிஸ் மதன் கைது

‘லிங்கா-தலைவா’ படப்புகழ் வேந்தர் மூவிஸ் மதன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vendhar movies madhan

எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மதன்.

இவர் பச்சமுத்து மீது கொண்ட அன்பின் காரணமாக வேந்தர் மூவிஸ் என்ற சினிமா நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வந்தார்.

ரஜினியின் லிங்கா, விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் உரிமையை இவர் பெற்று இருந்தார்.

இதனிடையில் கங்கையில் ஜீவசமாதி அடைய போவதாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாயமானார்.

இவரின் இரண்டு மனைவிகள் இது தொடர்பாக புகார் கொடுத்தனர்.

மேலும் எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டியில் இவர் பண மோசடி செய்ததாக கூறப்பட்டு வந்தது.

தற்போது மணிப்பூர் மாநிலத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இவர் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளார் என்றும் பல தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றுமுன் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி.

ரஜினி பட பர்ஸ்ட் லுக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

ரஜினி பட பர்ஸ்ட் லுக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanushஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ பட பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

இதனை ரஜினி, அக்‌ஷய்குமார் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இணையங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை தன் ட்விட்டரில் பதிவிட்ட தனுஷ் எதையும் குறிப்பிடாமல் வெறும் டாட் (Dot – முற்றுப்புள்ளி) என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ரோபா பட ஸ்டைலில் டாட் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு மேல என்ன சொல்லனும் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ பர்ஸ்ட் லுக் விழா ஹைலைட்ஸ்…

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ பர்ஸ்ட் லுக் விழா ஹைலைட்ஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

all stars stageலைக்கா-ஷங்கர்-ரஜினி- அக்‌ஷய்குமார் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் நடைபெற்ற சம்பவங்களின் சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

இவ்விழாவில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர் பங்கேற்றனர்.

மேலும் லதா ரஜினிகாந்த், நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஆர்யா பங்கேற்றனர்.

விழாவில் ஏஆர் ரஹ்மான் பேசும்போது…

இதுவரை எத்தனையோ படங்களை இசையமைத்துவிட்டேன். ஆனால் இப்படத்திற்கு மிகவும் சிரமப்பட்டு இசையமைத்துள்ளேன்.

ஒரு பாடல் முழுவதுமாக முடிந்துவிட்டது.

சவுண்ட் இன்ஜினியர் ரசூல்குட்டி பேசும்போது… இப்படத்திற்கு உலகத்திலேயே இதுவரை யாரும் பயன்படுத்தாத சில சவுண்டுகளை பயன்படுத்தி உள்ளேன்.

எடிட்டர் ஆண்டனி பேசும்போது… 3டி கிளாஸ் அணிந்து கொண்டுதான் இப்படத்தின் எடிங்டிங் பணிகளை செய்தேன்.

அக்‌ஷய்குமார் பேசும்போது… எல்லாரும் ரஜினியிடம் இருந்து கிளாஸ் (கண்ணாடி) அணிவது, கோட் போடுவது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

இப்படம் இந்திய சினிமாவில் பெரும் சாதனைகளை படைக்கும் என்றார்.

ஷங்கர் பேசும்போது… நிச்சயம் ரோபோ படத்தின் மூன்றாம் பாகம் வரும்” என்றார்.

‘கடவுளும் ரசிகர்களும் பண்டிகையா மாத்திடுறாங்க…’ – ரஜினி பேச்சு

‘கடவுளும் ரசிகர்களும் பண்டிகையா மாத்திடுறாங்க…’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini welcomeரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…

“ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் அக்‌ஷய்குமார் கேரக்டரை நான் செய்திருப்பேன். அவர்தான் படத்தின் ஹீரோ.

இப்படத்தை உற்சாகமாக செய்தேன். இதன் ஸ்டோரி மிகவும் கவர்ந்துவிட்டது.

2.ஓ படம் ஹாலிவுட் படத்திற்கு நிகரானது. இந்திய சினிமாவே இப்படத்திற்காக பெருமைப்படும்.

ஷங்கருடன் பணிபுரிவது ரொம்ப கஷ்டம். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.

இவ்விழாவுக்கு வந்துள்ள சல்மான் கான் சம்மதித்தால் நாளைக்கே அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கத் தயார்.

என் படங்களின் ரிலீஸை கடவுளும் ரசிகர்களும் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.” என்று பேசினார்.

சல்மான்கான் செய்த காரியத்தால் ரஜினி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

சல்மான்கான் செய்த காரியத்தால் ரஜினி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Salman Khanபாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் கான்களே நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களின் ரிலீசுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள்.

காரணம் ரஜினிக்கு இந்தியளவில் மாபெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் ரஜினியின் 2.ஓ பர்ஸ்ட் லுக்குக்கு பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் வந்தார்.

அப்போது மேடையறிய சல்மான்கான், தான் அழைக்கப்படாமல் இங்கே வந்தேன். ரஜினி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்காக இங்கே வந்தேன்” என பேசினார்.

அதன்பின்னர் ரஜினி பேசும்போது, சல்மான்கான் சம்மதித்தால், அவருடன் இணைந்து நடிக்க தயார் என்று கூறினார்.

பாலிவுட்டில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் சல்மான்கான், ஒரு விழாவுக்கு அழைக்கப்படாமலே ரஜினிக்காக வந்திருந்தது ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

ரஜினியின் ‘2.0’ பட பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் சொன்ன ஷங்கர்

ரஜினியின் ‘2.0’ பட பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் சொன்ன ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO first look லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் ரஜினி படத்தில் பன்ச் டயலாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

தற்போது 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் இடம் பெற்றுள்ளது.

அதாவது… ‘உலகம் மனிதர்களுக்கு மட்டும் கிடையாது…’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதன் வெளியீட்டு விழாவை நேரடியாக யூடியுப் பக்கத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அது தடைப்பட்டுள்ளது.

More Articles
Follows