2வது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்

2வது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.

தமிழில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி தன் கேரக்டரை பரபரப்பாக பேச வைத்தவர் அமலாபால். அதன் பின்னர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தில் சிறந்த ஒரு நடிப்பை கொடுத்து தன்னுடைய கவர்ச்சி பக்கத்தை திசை திருப்பினார்.

விஜய் இயக்கிய தலைவா & தெய்வ திருமகள் ஆகிய படங்களில் நடித்த போது இயக்குனருடன் விஜய்யுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலித்தார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களில் இயக்குனர் விஜய்யை விவகாரத்து செய்தார் அமலாபால்.

அமலா பால்

அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆடை, ராட்சசன், கடாவர் என பல்வேறு விதமான படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26ல்தனது காதலரை அறிமுகப்படுத்தினார் அமலா பால். தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருமண அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் பாய் பிரண்ட் ஜெகத் தேசாய் என்பவரை மணந்தார்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அமலா பால்

Amala Paul 2nd marriage photos goes viral

ஸ்ரீகோபிகா வராதது ஏன்.? மோகன் வைத்யாவுக்கு சம்பள பாக்கி.? ‘ரூல் நம்பர் 4 பிரஸ் மீட் அப்டேட்

ஸ்ரீகோபிகா வராதது ஏன்.? மோகன் வைத்யாவுக்கு சம்பள பாக்கி.? ‘ரூல் நம்பர் 4 பிரஸ் மீட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் மூன்றாம் தேதி ‘ரூல் நம்பர் 4′ என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாகவே ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தான் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது…

“நாயகனும் இயக்குநருமான ஏகே பிரதீப் கிருஷ்ணா துபாய் நாட்டில் இருந்ததால் வர முடியாத காரணத்தினால் அவர் இப்போது வந்து பத்திரிகையாளர்களை சந்திப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் மோகன் வைத்யா என்பவர் செக்யூரிட்டி வேடத்தில் நடித்திருந்தார். அவரின் மகளாகத்தான் நாயகி ஸ்ரீ கோபிகா நடித்திருந்தார்.

இந்த நிலையில் மோகன் வைத்யாவிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது பற்றி ஃபிலிம் ஸ்ட்ரீட் சார்பாக கேள்வி கேட்டபோது.. அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது.. ஒருவேளை அவருக்கான சம்பளம் பாக்கி இருந்தால் அதை அவரிடம் பேசி முடித்து விடுவோம்..

சமீபத்தில் கூடழூல் நம்பர் 4 படத்தின் முதல் காட்சிக்கு அவர் வந்திருந்து சிறப்பித்தார் என தெரிவித்தனர்.

இந்த படத்தை வெளியிடும் ஜெனிஸ் கூறியதாவது.. ”

இந்த வாரம் வெளியான படங்களில் ரூல் நம்பர் 4’ என்ற படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்களில் எண்ணிக்கை காட்சிகள் கூடி வருகிறது.

மற்ற படங்களை விட இந்த படத்திற்கு மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் பிர்லா போஸ், இசையமைபபாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாயகி ஸ்ரீ கோபிகா கலந்து கொள்ளாதது பற்றி கேட்டபோது.. “கோபிகா படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 90 எம் எல் என்ற படத்தில் ஓவியாவுடன் நடித்திருந்தார்.

அன்பே வா உள்ளிட்ட ஓரிரு டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒரு ஷூட்டிங்கில் இருப்பதால் ‘ரூல் நம்பர் 4’ பத்திரிகை சந்திப்புக்கு அவரால் வர முடியவில்லை என்று தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z )
இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை
ஒளிப்பதிவு – டேவிட் ஜான்
பின்னணி இசை – தீரஜ் சுகுமாறன்
எடிட்டிங் – எஸ்.பி.அஹமது
நடன இயக்குநர் – அஜய் காளிமுத்து
சண்டைக் காட்சி – ராக் பிரபு
இணை இயக்குநர் – ஜெகானந்த வர்தன்
மக்கள் தொடர்பு – பா.சிவக்குமார்

ரூல் நம்பர் 4

Rule Number 4 movie press meet

நான் கிறிஸ்தவன் அல்ல.. நான் இசையமைப்பாளர் அல்ல..; பாலா வெற்றிமாறனை புகழ்ந்த மிஷ்கின்

நான் கிறிஸ்தவன் அல்ல.. நான் இசையமைப்பாளர் அல்ல..; பாலா வெற்றிமாறனை புகழ்ந்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிய இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..

“எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், “டெவில்” படத்தின் கதையும் அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும்,. மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும். அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான்.

நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல; ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன்.
நான் அடிக்கடி என் உதவி இயக்குநர்களிடம் சொல்லும் வார்த்தை, இந்த உலகில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, ஒரு பேனாவையும் பேப்பரையும் தான். அதனால் தான் எழுத்தாளர் ஜெயமோகனை முதலில் பேச அழைத்தேன். இன்று எனக்கு கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தரும் ராமமூர்த்தி எனக்கு ஒரு குருநாதர் என்றால், எனக்கு இன்னொரு குருநாதரும் இருக்கிறார். அவர் இளையராஜா, அவர் கால்களில் விழுந்து வணங்குகிறேன்.

ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, ‘அன்னகிளியே உன்னத் தேடுதே…” பாடலைக் கேட்டு என் அப்பனின் தலைமுடியைப் பற்றி இழுத்து நிறுத்தி அப்பாடலைக் கேட்டேன். அன்று முதல் அவர் எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்..

எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது. மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன். இந்த இசை பயணத்தின் மூலம் நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல.

ஒரு தாய் குழந்தையைப் பெற்று வெளியே போடுகிறாள். ஆனால் ஒரு இயக்குநரோ அக்குழந்தையை எடுத்து தனக்குள்ளே விட்டுக் கொள்கிறான். அப்படி என்னை செதுக்கிய இயக்குநர்கள் இருவர். ஒருவர் கதிர், மற்றொருவர் வின்சென்ட் செல்வா. இருவருமே என்னுடைய குருநாதர்கள் தான். அவர்களிடம் இருந்து தான் நாங்கள் உருவாகி இருக்கிறோம். அவர்களுக்கு நன்றி. அது போல் தயாரிப்பாளர் தாணு அவர்களும் என் மீது அதீத அக்கறையும் பாசமும் கொண்ட ஒரு குருநாதர் தான். அவருக்கும் என் நன்றி.
இந்த
இவர்களுக்கு அடுத்ததாக என் வளர்ச்சியின் மேல் எப்பொழுதுமே அக்கறை கொண்டு என்னை பாசத்தோடு அழைத்துக் கொள்பவர்கள் இயக்குநர் சசியும், தெலுங்கு படங்களை இயக்கி வரும் இயக்குநர் கருணாகரனும் அவர்களுக்கும் நன்றி.
ஒரு படம் வெளியாகி, அது ரசிகர்களால் அமோகமாகப் போற்றப்பட்டு, அதன் 11ம் நாள் அப்படத்தை காண கிருஷ்ணவேனி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினார்கள். இது ஐரோப்பிய நாடுகளில் தான் வழக்கம். ஆனால் அதே மரியாதையை இங்கு ஒரு மகத்தான கலைஞனுக்கு மக்கள் கொடுத்தார்கள். என் சமகாலத்து இயக்குநரான பாலா தான் அவன். இந்த நிகழ்விற்கு வந்து சிறப்பித்த இயக்குநர் பாலாவிற்கு நன்றி. அவர் கூறலாம் என் முன் அவர் ஒன்றும் இல்லை என்று. ஆனால் உண்மை அவர் முன் நான் ஒன்றும் இல்லை என்பதே.

சினிமாவில் சிலர் கூறுவார்கள் அதிர்ஷ்டத்தால் ஜெயித்து விட்டான் என்று. இவர்களைப் பொறுத்தவரை சோவிகளை குலுக்கிப் போட்டால் உடனே தாயம் விழுந்துவிடும், பூவா தலையா என்று சுண்டினால் உடனே பூ விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள்.

வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல. தன் வாழ்நாள் முழுக்க, 24 மணி நேரமும் சினிமா, சினிமா, சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கும் மகத்தான இயக்குநர் அல்ல, மகத்தான கலைஞன் அவன். அவன் தான் என் நண்பன் வெற்றிமாறன். அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் அவனது அசராத உழைப்பும் ஆழ்ந்த் அறிவும் தான். விழாவை சிறப்பித்தமைக்காக வெற்றிக்கு நன்றிகள்.

ஒரு இரண்டு நபர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஒருவன் என் நண்பனும், உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவனும் ஆன ராம்.

அவனுக்கு அங்கு ‘ஏழு கடல்’ திரைப்படத்தின் பணிகள் இருப்பதால் கிளம்பி வர முடியாமல் கையில் தம்மைப் பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொண்டு இருப்பான்., இன்னொருவன் தமிழ் சினிமாவின் மற்றொரு மகத்தான கலைஞனான தியாகராஜன் குமாரராஜா. முதலில் வருகிறேன் என்று சொன்னவன், அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து ஒன்னு சொல்லணும் என்றான்… என்ன நீ இசை வெளியீட்டிற்கு வரவில்லை அதுதானே…? என்றேன்… ஆமாம் வரவில்லை எனென்றால் என்று முடிப்பதற்குள் “உனக்கு சங்கோஜமாக இருக்கிறது” அதுதானே என்று கேட்டேன்… ஆமாம். தேங்க்ஸ்டா என்றவன்,

நான் கண்டிப்பாக வர வேண்டும் என்று நினைத்தால் சொல். நான் வருகிறேன் என்றான். நான் நீ வராதே என்று கூறிவிட்டேன். அவன் ஒரு பூவைப் போல மென்மையானவன். அவன் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டு தான் இருப்பான் என்று நம்புகிறேன்.

இரத்தம் மற்றும் கொலைகளில் நன்கு உள்ளீடாகச் சென்று அதில் வேறொரு பரிமாணத்தை தேடுபவன் அருண் மாதேஸ்வரன். அவன் ராக்கி கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, “நீங்கள் ஒருவனை புல்டோசரால் தரையோடு தரையாக நசுக்கி, அவனை சுரண்டி எடுத்து மீனுக்கு உணவாக போடுகிறீர்கள் என்றான்.

உனக்கு ப்ரைட் ஆன எதிர்காலம் இருக்கிறது என்று ஆசி வழங்கினேன். டக்காஸி கிட்டானோவைப் போல் ஒரு வன்முறையை அதன் உச்சத்தை அழகியலோடு காட்சிப்படுத்த முடியாது. அவரிடம் டொரொண்டினோ பற்றி கேட்ட பொழுது “அவர் ஸ்டெமினா இல்லை” என்று பதிலளித்ததாகச் சொல்வார்கள். ஆனால் நம் அருண் மாதேசிடம் அந்த திறமை இருக்கிறது. அழகியலும் வன்முறையும் ஒன்றாக அவருக்கு கை வருகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.

ஒரு கலைஞன் என்பவன் தன்னை குறித்தான விமர்சனங்களை கூர்மையாக கவனிப்பவனாக இருக்க வேண்டும். அதை அலசி ஆராய்ந்து அதில் உண்மைகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும். அந்த வகையில் என்னையும் என் படைப்புகளையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் இசை விமர்சகர் ஷாஜிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் இரு நாடுகள் அடித்துக் கொள்கின்றன. மதம் அரசியல் கட்சி இரண்டும் ஒன்று தான். தினம் தினம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். இப்படி இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளும் நம்மை ஒரு குழந்தையை பாதுகாப்பது போல் பாதுகாப்பவர்கள் கவிஞர்கள் தான். அவர்களுக்கு நன்றி.
அது போல் இப்படத்திற்கு கொடையாளிகளாக வந்து இப்படத்தை சிறப்பாக தயாரிக்க உதவி இருக்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கு நன்றி.

நடிகர் விதார்த் திரைப்பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட நடிகன். அவனுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்துவிட்டு தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வரும் அருணுக்கும் நன்றி. வசந்த் ரவி இன்னும் ஒரு 15 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இருப்பான்..

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சார் நாங்கள் சிறுவயதில் பார்த்து வியந்த ஒரு ஆளுமை. ஆரி 2 கேமராவில் தான் எடுத்திருப்பார். ஆனால் அது ஏதோ Pana Visionல் எடுக்கப்பட்டது போலத்தான் இருக்கும். அவர் எங்கள் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். அவரிடம் ஒரு கோரிக்கை. ஜூனியர் ஆர்டிஸ்டுகளில் 25 நபர்களுக்கு ஒரு திருநங்கை என்கின்ற ரீதியில் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கான ஆவணங்கள் செய்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன். பெற்றோர்களை பாராட்டுவது, உடன் பிறந்தவர்களைப் பாராட்டுவது என்பது சங்கோஜமான காரியம்.

என் தம்பி என்னிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்று வந்த போது மிக கேவலமாக அவனிடம் நடந்து கொண்டேன். செருப்பை தூக்கி எறிந்தேன்… பின்னர் இரண்டு வருடம் பார்த்திபனிடம் பணியாற்றி விட்டு என்னிடம் வந்தான். ஏற்றுக் கொண்டேன்.

ஒரு படம் இயக்குநரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும். இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள்“ என்று பேசினார்.

Mysskin praises ilaiyaraaja and Rahman at Devil audio launch

பூர்ணாவுக்கு ‘டெவில்’ தேசிய விருது பெற்றுத்தரும்..; ஆதித்யா நம்பிக்கை

பூர்ணாவுக்கு ‘டெவில்’ தேசிய விருது பெற்றுத்தரும்..; ஆதித்யா நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் ஆதித்யா பேசும் போது…

“இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஒரு இக்கட்டான தருணத்தில் நான் இருந்த போது, சேகர் மூலமாக தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்னை அணுகி இரண்டு இலட்சம் ரூபாய்கான செக்கை வழங்கினார். படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கினோம்.

பிறகு தயாரிப்பு பணிகளில் ஹரி சாரும் தன்னை இணைத்துக் கொண்டார். தயாரிப்பாளர்கள் இப்படம் சிறப்பாக உருவாக எல்லா வகைகளிலும் உதவினார்கள் அவர்களுக்கு நன்றி. நான் முதலில் எழுதிய கதையை இயக்குநர் மிஷ்கினிடம் கொடுத்தேன். அவர் இந்தக் கதை நல்ல கதை தான்.

ஆனால் முதலில் நீ “அன்னாகரீனா”வைப் படி என்று கொடுத்தார். அது கிட்டத்தட்ட 600 பக்கம் இருக்கும். பின்னர் தேவி பாரதி எழுதிய சிறுகதையை வாசித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர் படத்திற்குள் பூர்ணா, விதார்த், அருண் என ஒவ்வொருவராக வந்தார்கள். பூர்ணா இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பட உருவாக்கத்தில் உற்ற துணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

Devil will give National award to Poorna says Aadhitya

என் வாழ்க்கையில் டெவில் முக்கியமானதாக இருக்கும்… – விதார்த்

என் வாழ்க்கையில் டெவில் முக்கியமானதாக இருக்கும்… – விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விதார்த் பேசும் போது…

“நான் முதலில் மிஷ்கின் சார் படத்தில் தான் நடிக்க அழைக்கிறார்கள் என்று தான் போனேன். ஆனால் அங்கு போன பிறகு தான் இயக்குநர் ஆதித்யா என்பதே தெரிந்தது.

இப்படத்தில் நடித்து முடித்தப் பின்னர் தான் இப்படம் என் வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. எனவே இப்படி ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்த மிஷ்கின் சாருக்கு நன்றி. ஆதித்யா உண்மையாகவே அருமையான ஒரு இயக்குநர். அதைவிட மிகச்சிறந்த நடிகரும் கூட, என்னிடம் பிரமாதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். மிஷ்கின் சாரின் இயக்கத்தில் நடிக்க முடியவில்லை என்றால் கூட, அவரது இசையில் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. ” என்று பேசினார்.

நடிகர் வசந்த் ரவி பேசும் போது…

இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் இங்கு வந்திருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அது மிஷ்கின் சார் மீது எனக்கு இருக்கும் அன்பு தான். அவர் எப்போதுமே மனதில் இருந்து பேசுவார். உண்மையாக என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே பேசுவார்.

இந்த நட்பு, தரமணி படத்தின் படப்பிடிப்பின் போது துவங்கியது. ராக்கி படத்தில் அவரோடு இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. கடைசி நிமிடத்தில் அது நடக்கவில்லை. கூடிய விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்று நம்புகிறேன். இது போன்ற அன்புடன் கூடிய அண்ணன் தம்பியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

Devil is important movie for me says Vidharth

விஜய்யின் ‘யூத்’ படத்திலேயே இசை உதவி புரிந்தவர் மிஷ்கின் – வெற்றிமாறன்

விஜய்யின் ‘யூத்’ படத்திலேயே இசை உதவி புரிந்தவர் மிஷ்கின் – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது…

“மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது.

“Journey into the darkness in the search of light” என்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் செண்டர் ஸ்டேஜ் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீடு சிறப்பு வாய்ந்தது. மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே. வின்சென்ட் செல்வா கூறியது போல் விஜய்யின் யூத் படத்தின் பின்னணி இசையில் கூட அவர் உதவி புரிந்திருக்கிறார்.

இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு Courage, Confident and Commitment தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனால் தான் அவர் இதை சாதித்து இருக்கிறார். எனவே இந்த இசை பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

அது போல் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, அவர் ஸ்டைலிலேயே ஒரு படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் ஆதித்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

இயக்குநர் அருண் மாதேஷ்வரன் பேசும் போது…

“மிஷ்கின் அவர்களின் திரைப்படங்களில் வரும் பின்னணி இசையே எந்தவித சாயலும் இன்றி ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். அப்படித்தான் அவர் இப்பொழுது இசை அமைத்து இருப்பதும், வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு தனித்துவம் அதில் தெரிகிறது. எனக்கு அதிகமாக பேச வராது. இசையமைப்பாளராக மிஷ்கின் அவர்கள் வெற்றி பெறுவதற்கும், இயக்குநராக ஆதித்யா வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

இசை விமர்சகர் ஷாஜி பேசும் போது…

“இன்று இந்த மேடையில் மிஷ்கினை ஒரு இசையமைப்பாளராக பார்ப்பது எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் என்னை பொருத்தவரை மிஷ்கின் எப்பொழுதுமே இசையோடு இருப்பவர் தான். அவருக்கும் எனக்குமான முதல் அறிமுகமே அவர் இரண்டு படங்கள் எடுத்தப் பின்னர், ஒரு இசை குறித்த விவாதத்துடன் தான் தொடங்கியது. மிஷ்கின் ஒரு பைத்தியக்காரர் போல 24 மணி நேரமும் வெஸ்டர்ன் க்ளாசிக் இசையினை கேட்டுக் கொண்டே தான் இருப்பார். திடீரென்று நள்ளிரவு மூன்று மணிக்கு போன் செய்து, இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா..? என்று பேசத் துவங்குவார்.

பெரும்பாலும் நாம் தமிழ்ப்பாடல்கள் தான் கேட்போம்,. ஆனால் அவருக்கு பழைய இந்தி பாடல்கள் மீதும், மைனஸ் ஸ்கேல் இசையின் மீதும், இளையராஜா இசையின் மீதும் மிகப்பெரிய அபிமானம் உண்டு. அப்படி ஒரு Intensive- ஆன மியூசிக் listener. நானும் ஒரு மியூசிக் listener தான், ஆனால் என்னால் வாழ்நாளில் கண்டிப்பாக இசை அமைக்க முடியாது.

அதற்கு ஒரு பெரிய டெடிகேஷன் தேவைப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் எனக்கு போன் செய்து, கல்கத்தாவில் இருந்து ஒரு ஹார்மோனியம் வாங்க வேண்டும். எப்படி வாங்குவது என்று கேட்டார். நான் ட்ரிபிள் ரீட் ஹார்மோனியம் வாங்கலாம் மிஷ்கின், ஆனால் இந்த காலகட்டத்தில் எப்படி வாங்குவது என்று தயங்கினேன். ஆனால் அவர் அதை வாங்கிக் காட்டினார். அதையும் அவர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு மியூசிக்கல் பியானோவையும் வைத்து பயிற்சி செய்து கொண்டே இருப்பார் எப்பொழுதும்.

எனவே இசையின் அவர் இன்னும் ஆழமாகப் போககூடியவர் தான். அதனால் தான் இந்த வயதில் கூட ஒரு மாஸ்டரை வைத்துக் கொண்டு இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை கற்று வருகிறார்.

அது போல் உலகளவில் சார்லி சாப்ளின், வூடி ஆலன், க்ளைண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் டேவிட் லின்ச் போன்ற இயக்குநர்கள் இசையமைப்பாளராகவும் மாறி இருக்கிறார்கள். அது ஒரு நீட்சி என்றே நான் கருதுகிறேன். அது போல் இயக்குநர் ஆதித்யாவின் சவரக்கத்தி படத்தில் ஒரு பைத்தியமாக நடித்தேன்.

டெவில் படத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பாதிரியார் ஆக நடித்திருக்கிறேன். இரண்டு கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் திருமணம் செய்து வைத்தப் பின்னர் தான் இந்த கூத்தெல்லாம் நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது குற்றவுணர்வாக இருக்கிறது. ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதற்காக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வரைக்கும் ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதே எனக்குத் தெரியாது. இது அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.

”டெவில்” படத்தின் தயாரிப்பாளர் இராதாகிருஷ்ணன் பேசும் போது…

“இந்த இசை வெளியீட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள். இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என்று எண்ணிணோம். ஆரம்ப காலகட்டங்களில் பாய் என்பவரும் பின்னர் எங்கள் நண்பர் ஹரியும் எங்களோடு இணைந்ததால் இப்படத்தை சிறப்பாக தயாரித்துள்ளோம். இசை அமைக்க ஒத்துக் கொண்ட இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மற்றொரு தயாரிப்பாளர் ஹரி பேசும் போது…

“இப்படம் லவ் டுடே” போல் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறோம். ஆதரவு அளியுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகி முரளி பேசும் போது…

“மிஷ்கின் சாரின் திரைப்படங்களின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் இந்திய திரைப்படங்களுக்கான மரியாதை உயர்ந்து வருகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது…

“இயக்குநர் ஆதித்யாவிற்கு என் வாழ்த்துக்கள், ஏனென்றால் ஒரு டெவிலை வைத்தே அவர் வேலை வாங்கி இருக்கிறார். எனவே அவர் முதல்படியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். இசை வெளியீட்டிற்கு அழைத்த போது, ஏதோவொரு படம் என்று சுவாரஸ்யம் இன்றி தான் இருந்தேன். ஆனால் அந்த அழைப்பிதழின் கலர் மற்றும் டிசைனைப் பார்த்த போதும், அதற்குள் மிஷ்கின் இசையமைப்பாளர் என்று பார்க்கும் போது, ஓ மிஷ்கின் இசையமைப்பாளராகவும் ஆகிவிட்டாரா..? என்று தோன்றியது.

ஆனால் அவர் முன்னிலையில் இசைக் கலைஞர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல்களை இசைத்த போது மிரண்டு போனேன். எனக்கும் இசை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இந்தப் பாடலைப் போல் கொடுங்கள் என்று இளையராஜாவிடம் கேட்பேன்.

அவ்வளவு தான் எனக்குத் தெரியும். முன்பெல்லாம் சினிமா எடுப்பது கஷ்டம். ஆனால் வெளியிடுவது எளிது, இப்பொழுதெல்லாம் சினிமா எடுப்பது ஈஸி ஆகிவிட்டது. ஆனால் அதை ரீலீஸ் செய்வது மிக கடினமானதாக மாறிவிட்டது. மேலும் முன்பு பத்து நாட்களுக்குப் பின்னர் கூட ஒரு படம் பிக்கப் ஆகி பெரும் வெற்றி அடையும். ஆனால் இப்பொழுது ஒரு படத்தின் ஆயுள் என்பது வெறும் மூணு நாட்கள் தான். ஒரு சுனாமி போல் வந்து ஓடிவிடுகிறது. என்னதான் மிஷ்கின் இயக்குநராக இருந்தாலும் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அவரின் தம்பி தான் முதன்முறையாக கொடுத்திருக்கிறார்.

இப்படம் வெற்றி அடையவும், இசையமைப்பாளராக மிஷ்கின் வெற்றி அடையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Even in Youth movie Mysskin helped for Music says Vettrimaran

More Articles
Follows