‘சந்திரமுகி-2’ சூட்டிங்கில் விஜய் பட காமெடி செய்த வடிவேலு.; லாரன்ஸ் ராதிகா அரட்டை (வீடியோ)

‘சந்திரமுகி-2’ சூட்டிங்கில் விஜய் பட காமெடி செய்த வடிவேலு.; லாரன்ஸ் ராதிகா அரட்டை (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்த படத்தையும் இயக்குகிறார்.

முதல் பாகத்தில் ரஜினியுடன் நயன்தாரா ,ஜோதிகா ,பிரபு ,விஜயகுமார் ,வடிவேலு ,நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்து இருந்தார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கும் மறுத்துவிட்டதால் நடிகர் ராகவா லாரன்சை நாயகனாகியிருக்கிறார் பி வாசு.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் மைசூரில் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

‘சந்திரமுகி2’ படப்பிடிப்பு மைசூரில் நடந்து வரும் நிலையில், ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி வீடியோ ஒன்றினை போஸ்ட் செய்துள்ளார்.

அந்த பதிவில்… “வடிவேலு நம் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இவர் நடித்த படத்தின் ஒரு பேமஸான காட்சியை நடித்துக் காட்டியுள்ளார்.

இந்த காமெடி காட்சி எந்த படத்தில் வரும் என யோசிங்க ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் படத்தின் நாயகன் லாரன்ஸும் அருகில் இருக்கிறார்.

அந்த படக்காட்சி விஜய்யின் 25 வது படமான ‘சுறா’ படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Vadivelu, who made Vijay’s comedy while shooting ‘Chandramukhi-2’

5 மொழி.. 2500 தியேட்டர்.; அடேங்கப்பா அண்ணாச்சி.; லெஜண்ட் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி கலக்குறாரே

5 மொழி.. 2500 தியேட்டர்.; அடேங்கப்பா அண்ணாச்சி.; லெஜண்ட் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி கலக்குறாரே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது*

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர், ‘மொசலோ மொசலு’ பாடல், ‘வாடிவாசல்’ பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ‘பொ பொ பொ’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு உரிமை, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் – கே ஜி எப், ஆர் ஆர் ஆர், டான், 2.0, காலா ஆகிய படங்களின் தெலுங்கு விநியோகஸ்தர்.
ஸ்பைடர் மற்றும் காட்பாதர் படங்களின் தயாரிப்பாளர்.விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி விநியோகம், கணேஷ் ஃபிலிம்ஸ் நம்பிராஜன்- ரஜினி நடித்த சிவாஜி, ஏவி எம் தயாரிப்பில் வெளியான அநேக படங்கள், டான், செக்க சிவந்த வானம், ராவணன், மாஸ்டர் மற்றும் நானும் ரவுடி தான் ஆகிய படங்களை வெளியீட்டாளர்.

வெளிநாட்டு உரிமை, ஏ பி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா – கே ஜி எப், விக்ரம், சார்லி உள்ளிட்ட பல படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்றவர். வெளிநாட்டு வெளியீட்டில் முதன்மையான நிறுவனம்.

மலையாளம் உரிமை, மேஜிக் ஃபிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்- கே ஜி எப், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் சார்லி படத்தின் தயாரிப்பாளர்.

கன்னட உரிமை, ஃபைவ் ஸ்டார் செந்தில் – விக்ரம், டான், கோப்ரா ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.

முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் உலகமெங்கும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide

அமெரிக்காவில் சிகிச்சை முடித்து தாய் மண்ணிற்கு திரும்புகிறார் டி ராஜேந்தர்

அமெரிக்காவில் சிகிச்சை முடித்து தாய் மண்ணிற்கு திரும்புகிறார் டி ராஜேந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலட்சிய திமுக தலைவரும் பன்முக கலைஞருமான டி ராஜேந்தர் உடல்நல குறைவால் மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் நாளை ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.

டி ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி ஆரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

டி ஆரின் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் அவருடன் நாடு திரும்புகின்றனர்.

சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து டி ஆர் நன்றி கூறுகிறார்.

தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவித்தார்.

இலட்சிய திமுக தொண்டர்கள் டி ஆருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

D. Rajender

D. Rajender returns to motherland after treatment in America

ட்ரெண்டிங்கில் #நான்தான்டா_ரஜினி #உதவாக்கரை_உதய்.; இலங்கை – தூத்துக்குடி முதல் கள்ளக்குறிச்சி வரை.. ஓர் அலசல்

ட்ரெண்டிங்கில் #நான்தான்டா_ரஜினி #உதவாக்கரை_உதய்.; இலங்கை – தூத்துக்குடி முதல் கள்ளக்குறிச்சி வரை.. ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழக முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு காரணமான எந்த அதிகாரிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் போராடிய மக்கள் பலரும் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு நடந்து சில தினங்களுக்கு பின்னர் தூத்துக்குடி மக்கள் சந்திக்க சென்றார் ரஜினிகாந்த்.

அப்போது சிகிச்சை பெற்று வந்த ஒருவரை சந்தித்த போது.. “ஒருவர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்டார். நான்தான் பா ரஜினிகாந்த் என்றார் ரஜினி.

எனவே ரஜினியை கிண்டல் அடித்தனர்.

மேலும் நான்தான்பா ரஜினிகாந்த் என்பதும் ட்விட்டரில் ட்ரெண்டானது.

(சில நாட்களுக்குப் பிறகு ரஜினியை கேள்வி கேட்டவர் ஒரு பைக் திருட்டு வழக்கில் கைதானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அப்போது இந்த சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்..”போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர். எனவேதான் போராட்டம் கலவரமாக மாறியது. அடிக்கடி போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” என்றார்.

இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினிக்கு எதிராக திரும்பினர். போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகளா ?என ரஜினிக்கு எதிரான அறிக்கைகளை விட்டனர்.

அந்த சமயத்தில் நடிகர் உதயநிதி ரஜினியை கிண்டல் அடித்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் ரஜினி சொன்னது உண்மைதான்.. போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரமாக மாறியது” என விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதிக்கு மரணத்திற்கு எதிரான போராட்டம் உருவானது.

இந்த போராட்டமும் ஓரிரு தினங்களில் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் சக்தி பள்ளியை அடித்து உடைத்தனர். பஸ்களை எரித்தனர். அங்கிருந்த மேஜை ,நாற்காலி ,ஃபேன் ,ஏசி உள்ளிட்ட பொருட்களை களவாடி சென்றனர்.

(தற்போது இது குறித்து ரஜினிகாந்த் வாய் திறக்கவில்லை.)

தற்போது திமுகவைச் சார்ந்த உறுப்பினர்களும் மற்ற அரசியல் பிரபலங்களும் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதால் கலவரமாக மாறியது என்றனர்.

இதே போன்ற போராட்டம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ரஜினியை கிண்டல் அடித்த பிரபலங்கள் இன்று மட்டும் ரஜினி சொன்ன அதே வார்த்தையை சொல்வது ஏன்? என ரஜினி ரசிகர்களும் நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கள்ளக்குறிச்சிக்கு இதுவரை உதயநிதி எம்எல்ஏ நேரிலும் செல்லவில்லை.

இதனையடுத்து #உதவாக்கரை_உதய் & #நான்தான்டா_ரஜினி என்ற டிரெண்டுகள் ட்விட்டரில் வலம் வருகின்றன.

கூடுதல் தகவல்…

கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை கருணாநிதி ஆண்டபோது இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.

அப்போது இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் கண்டன கூட்டங்களும் நடந்தன.

அப்போது நடிகர் சங்க சார்பிலும் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் பேசுகையில்.. “அப்பாவி மக்களை.. பெண்களை… குழந்தைகளை கொன்று குவித்த அரசு உருப்படாது. இறந்தவர்களின் ஆத்மாக்கள் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும்.. அவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.. அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது” என்று ரஜினிகாந்த் பேசினார்.

தற்போது 2022 இல் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் பசி பட்டினியினில் வாடி வருகின்றனர்.

பெரும் போராட்டங்களும் கலவரங்களும் நடந்து வருகின்றன.

இதனையடுத்து ரஜினி சாபம் பலித்தது.அன்றே சொன்ன ரஜினிகாந்த்.. என்று ரஜினி ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini fans Vs Udhayanidhi fans clash on social medias.

பிரபல நடிகரை காதலிக்கும் நித்யாமேனன்.; திருமணம் எப்போது.?

பிரபல நடிகரை காதலிக்கும் நித்யாமேனன்.; திருமணம் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகும் திறமையும் நிறைந்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பவர் நித்யா மேனன்.

இவர் விஜய் சூர்யா விக்ரம் துல்கர் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘இருமுகன்’, ‘மெர்சல்’, ‘சைக்கோ’, ‘முடிஞ்சா இவனப்படி’ போயிட்டு படங்களில் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

தற்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் நிறைய படங்கள் செய்துள்ளார்.

மலையாளத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆறாம் திருகல்பனா’.

தற்போது படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் பிரபலமான கேரள ஹீரோ ஒருவரை நித்யா காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் நித்யா மேனனின் திருமண அழைப்பிதழை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

South indian Actress Nithya Menen is getting married soon?

மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணையும் சூர்யா.; வெற்றிமாறனுடன் கூட்டணி

மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணையும் சூர்யா.; வெற்றிமாறனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் ‘சூரி’ கதையின் நாயகனாக நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம் ’விடுதலை’.

இதில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவர்களுடன் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் 4-வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது. இங்கு 400 பேர் தங்கி பணிபுரிந்தனர்.

விரைவில் 5ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இந்தப் படத்தில் இணைகிறாராம்.

இவர் ஏற்கெனவே .விஜய்சேதுபதி, அஞ்சலி உடன் ‘சிந்துபாத்’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi & Suriya

Suriya to team up with Vijay Sethupathi again.;

More Articles
Follows