துணிவா.? வாரிசா.? எது பர்ஸ்ட் சாய்ஸ்.? வடிவேலு சொன்ன பதில் இதோ….

துணிவா.? வாரிசா.? எது பர்ஸ்ட் சாய்ஸ்.? வடிவேலு சொன்ன பதில் இதோ….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்செந்தூர் முருகன் – சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் வடிவேலு. அப்போது செய்தியாளர் ஒருவர் வாரிசா துணிவா? எதை முதலில் பார்ப்பீங்க.? என்ற கேள்விக்கு…

“எல்லா படமும் நல்லா ஓடணும். பெரிய வெற்றி பெறணும். அப்போதுதான் தயாரிப்பாளர் நல்லா இருக்க முடியும்.

ஒரு சினிமா நல்லா இருந்தாத்தான் சம்பந்தப்பட்ட எல்லாரும் நல்லா இருக்க முடியும்.

நான் அடுத்ததா மாமன்னன் படத்துல நடிச்சிருக்கேன்.. அடுத்து சந்திரமுகி-2 வருது.

அடுத்து விஜய்சேதுபதி கூட நடிக்கிறேன். அதேமாதிரி எனக்கு பிடித்த நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறேன்” என்று பேசினார் வடிவேலு.

‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பில் நடந்த ஸ்வாரஸ்ய சம்பவத்தை நினைவு கூர்ந்த நடிகர் மாதவன்

‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பில் நடந்த ஸ்வாரஸ்ய சம்பவத்தை நினைவு கூர்ந்த நடிகர் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 இடியட்ஸ் படப்பிடிப்பிற்கு முன்பு தனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக சமீபத்தில் மாதவன் கூறினார்.

இதனால் முழு படத்தையும் முழங்கால் கட்டுடன் படமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“படப்பிடிப்பின் போது நான் ஒரு பாதுகாப்புக் கட்டு அணிந்திருந்தேன்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பிரகாஷ் படுகோனுடன் பேட்மிண்டன் விளையாடும்போது எனக்கு தசைநார் கிழிந்தது.

அதிர்ஷ்டவசமாக, ராஜு ஹிரானி என்னை கைவிடவில்லை அதற்குப் பதிலாக காயம்பட்ட முழங்கால் மற்றும் பாதுகாப்புக் கட்டு ஆகியவற்றை ஸ்கிரிப்ட்டில் எழுதினார்.

‘வாரிசு’ விஜய்யாக மாறிய கூல் சுரேஷ்.; வைரலாகும் போட்டோ

‘வாரிசு’ விஜய்யாக மாறிய கூல் சுரேஷ்.; வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது அதில் விஜய் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார்.

தற்போது அதே ஸ்டைலில் நடிகர் கூல் சுரேஷ் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

தற்போது ஒரு போட்டோ மட்டும் வெளியாகி உள்ளது.

அந்தப் படத்தில் கூல் சுரேஷ் நடிகர் விஜய் போல அமர்ந்திருந்து போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பார்த்துட்டு பாராட்டுறாங்க…; ரிட்டர்ன்ஸ் மகிழ்ச்சியில் வடிவேலு

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பார்த்துட்டு பாராட்டுறாங்க…; ரிட்டர்ன்ஸ் மகிழ்ச்சியில் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்செந்தூர் முருகன் – சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது.. “திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது உங்க குறையெல்லாம் தீரும்.

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதல்.

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பட ரிசல்ட் நன்றாக வந்துள்ளது.

தியேட்டரில் மக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். படம் பார்த்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக உள்ளனர்.” என்றார்.

தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து மனம் திறந்த சன்னி லியோன்

தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து மனம் திறந்த சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் விளம்பரங்களின் போது பேசிய ​​சன்னி லியோன், தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதால், பின்னடைவு தனக்கு ஒரு பெரிய விஷயமல்ல என்று பகிர்ந்து கொண்டார்.

நான் முதன்முதலில் வயது வந்தோருக்கான பொழுதுபோக்குத் துறையில் வந்தபோது, ​​​​எனக்கு நிறைய வெறுப்பு அஞ்சல் மற்றும் கொலை மிரட்டல்கள் மற்றும் எல்லா வகையான பைத்தியக்காரத்தனமான விஷயங்களையும் பெற்றேன்.

கொலை மிரட்டல்களைப் பற்றிப் பேசிய லியோன், “எனக்கு அந்தக் கடிதங்கள் வந்தபோது, ​​எனக்கு 19-20 வயது இருக்கும் என்றார்.

சிறந்த பரிசுக்காக சாண்டாவுக்கு நன்றி தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங் !

சிறந்த பரிசுக்காக சாண்டாவுக்கு நன்றி தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலத்தீவு விடுமுறையில் இருந்து பார்க்காத, காதல் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட ராகுல், “சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார், அது நீங்கள்தான்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே ❤️…. நீங்கள் நீங்கலாக இருப்பதற்கு மற்றும் என் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் நிரப்பியதற்கு நன்றி ..

என் அமைதியான காரணியாக இருப்பதற்கு நன்றி ??எனக்கு தெரியும் நீங்கள் எப்படி உந்தப்பட்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்.

மேலும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் வெல்ல விரும்புகிறேன் .. என பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங் .

More Articles
Follows