தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருச்செந்தூர் முருகன் – சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் வடிவேலு. அப்போது செய்தியாளர் ஒருவர் வாரிசா துணிவா? எதை முதலில் பார்ப்பீங்க.? என்ற கேள்விக்கு…
“எல்லா படமும் நல்லா ஓடணும். பெரிய வெற்றி பெறணும். அப்போதுதான் தயாரிப்பாளர் நல்லா இருக்க முடியும்.
ஒரு சினிமா நல்லா இருந்தாத்தான் சம்பந்தப்பட்ட எல்லாரும் நல்லா இருக்க முடியும்.
நான் அடுத்ததா மாமன்னன் படத்துல நடிச்சிருக்கேன்.. அடுத்து சந்திரமுகி-2 வருது.
அடுத்து விஜய்சேதுபதி கூட நடிக்கிறேன். அதேமாதிரி எனக்கு பிடித்த நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறேன்” என்று பேசினார் வடிவேலு.