JUST IN வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீசன் காலமானார்

JUST IN வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீசன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு.்இவரது காமெடியை ரசிக்காத தமிழர்களே இல்லை என்னும் அளவுக்கு நகைச்சுவை மன்னனாக சிறந்து விளங்கி வருகிறார்.

அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விரைவில் வெளியாக உள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் வடிவேலுவின் இளைய தம்பி ஜெகதீசன் என்பவர் வயது 55 இன்று மதுரையில் காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் ஜெகதீசன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.

மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜெகதீசன்

Actor Vadivelus brother Jagadeesan passes away

பாங்காங்கிலும் நான் ஏகபத்தினி விரதன்.; நான் செஞ்சதை தம்பி ராமையா இப்போ செய்றார் – சந்தானம் தந்த ‘கிக்’ மேட்டர்

பாங்காங்கிலும் நான் ஏகபத்தினி விரதன்.; நான் செஞ்சதை தம்பி ராமையா இப்போ செய்றார் – சந்தானம் தந்த ‘கிக்’ மேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’.

இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ்.

தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், கூல் சுரேஷ், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார்.

சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

கிக்

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ‘கிக்’ படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசும்போது…

“தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஒரே கட்ட படப்பிடிப்பாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் பூசனிக்காயெய் உடைத்து, ஒரேகட்ட படபிடிப்பாக இந்த படத்தை நடத்தி முடித்தனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.

விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் வருவது போல ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற, வெற்றிக்கு உத்தரவாதம் தருகின்ற கான்செப்ட்டில் தான் இந்த படம் உருவாகியுள்ளது.

பல ஹீரோக்களின் படங்களில் நான் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோ கூடவே இருந்து கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறேன். அப்படி இந்த படத்தில் தம்பி ராமையா அண்ணன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கிக்

பல வருடங்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பான நிஜாம் பாக்கு விளம்பரத்தில் வருவது போல காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்.

மன்சூர் அலிகானை சார் ஒரு குழந்தை என்று சொல்லலாம். ஹாலிவுட் படத்தில் ஒரு கிங்காங்கிடம் இளம்பெண் மாட்டிக்கொண்டது போல, இந்தப் படத்தில் மன்சூர் அலிகானிடம் நடிகர் கிங்காங் மாட்டிக்கொண்டார்.

அரண்மனை படத்திற்கு பிறகு கோவை சரளாவுடன் அக்காவுடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எங்களுக்கான வசனங்கள் ஒர்க் அவுட் ஆனது போல இதிலும் வசனங்கள் இருக்கின்றன.

எவ்வளவோ படங்களில் நடித்துள்ள எனக்கு இத்தனை வருடங்களில் இப்போதுதான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.. எப்போதும் என்னை சுற்றி பெண்கள் தான் இருப்பார்கள்.. என ஆச்சரியப்பட்டு என்னிடம் சொன்னார், செந்தில் அண்ணன். படப்பிடிப்பில் இருந்தே நடிகர் கவுண்டமணிக்கு அண்ணனுக்கு போன் செய்து அந்த தகவலை கூறி மகிழ்ந்தார்.

கிக்

கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு.. அங்கே பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்து வரும் பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா அருமையான பாடல்களை கொடுத்துள்ளார்.

பாங்காங்கில் சண்டைக் காட்சிகளை படமாக்கியபோது டேவிட் கேஸ்ட்டிலோ மாஸ்டர் முதல்நாளே பக்காவாக எனக்கு ஸ்ச்ண்ட் ரிகர்சல் கொடுத்து விட்டு தான் படமாக்கினார்.

பாங்காங் போனாலும் எல்லோரும் ஏகபத்தினி விரதன்களாக இருந்ததால் எங்கேயும் ஊர் சுற்றவில்லை. டிடி ரிட்டன்ஸ் படத்துடன் இதை ஒப்பிட வேண்டாம்.

இந்த #கிக் வேற மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார் சந்தானம்.

கிக்

Santhanam funny about Bangkok incidents at Kick event

காதலர்களின் மனப்பிரவாகம்.; ‘வெத்துவேட்டு’ இயக்குநரின் அடுத்த ‘பரிவர்த்தனை’

காதலர்களின் மனப்பிரவாகம்.; ‘வெத்துவேட்டு’ இயக்குநரின் அடுத்த ‘பரிவர்த்தனை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

M.S.V. Productions சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’.

இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்:

வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது….

“காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை. அந்த மாயவலையில் சிக்கிக் கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் ” இப்பரிவர்த்தனை படம் என்றார்.

பரிவர்த்தனை

மேலும் அவர் கூறும்போது நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடவே படமாக்கியிருக்கிறோம். என்றார்.

அத்தோடு கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்கவழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்திற்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசியிருக்கிறோம்” என்றார்.

இப்படி காதலும் காதல் சார்ந்துமே உருவாக்கப்பட்ட படத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக இதன் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரியும், இவர்களுக்கு துணையாக தேவிப்ரியா, பாரதிமோகன், திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பரிவர்த்தனை

மேலும் மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா ஆகியோரும், சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர்.

இப்படத்தினை மேலும் மெருகேற்றும் விதமாக இதன் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது.

இதன் ஒளிப்பதிவாளர் கோகுல், இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின், எடிட்டர் ரோலக்ஸ், நடனம் தீனா, பாடல் VJP.ரகுபதி, மக்கள் தொடர்பு மணவை புவன் ஆகியோரோடு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இளமாறன்வேணு இணைஇயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்திணை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்தின் இறுதி காட்சியை கண்டு வியந்து பாராட்டினர்.

பரிவர்த்தனை

Surjith and Swathi starrer Parivarthanai

20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர வனத்துறை.; உண்மையை சொல்லும் RED SANDAL WOOD

20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர வனத்துறை.; உண்மையை சொல்லும் RED SANDAL WOOD

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “RED SANDALWOOD.

இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடிக்கு நாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன், சைதன்யா, விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

RED SANDAL WOOD

இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
இசை – சாம் CS
பாடல்கள் – யுகபாரதி
சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்
சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – J.பார்த்தசாரதி
கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – குரு ராமானுஜம்.

RED SANDAL WOOD

படம் பற்றி இயக்குனர் குரு ராமானுஜம் பகிர்ந்தவை….

இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
புனையப்பட்டது.

படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார்..

அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார் . அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி.

RED SANDAL WOOD

அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராத போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் .

கடத்தல் காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள் ? என்கவுண்டர் செய்ய சொன்னது யார் ? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக்கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி . இதில் பிரபாவிற்கும் கர்ணாவிற்கும்
என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை.

RED SANDAL WOOD

படபிடிப்பு ரேணிகுண்டா , தலக்கோணம், தேன்கணி கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது.

படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ் K.ரவி வெளியிடுகிறார்.

RED SANDAL WOOD

Vettri Starrer Red sandalwood movie based on True incident

ஒரே சூப்பர் ஸ்டார்தான்.; நிலாவில் ‘லியோ’ விழா.; ‘ஜெயிலர்’ ஓடி இருக்காது.; ரஜினி காலில் விழுந்ததை கண்டித்த மன்சூர் அலிகான்

ஒரே சூப்பர் ஸ்டார்தான்.; நிலாவில் ‘லியோ’ விழா.; ‘ஜெயிலர்’ ஓடி இருக்காது.; ரஜினி காலில் விழுந்ததை கண்டித்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் தன்யா நடித்துள்ள ‘கிக்’ படத்தின் இசை விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் விழா முடிந்ததும் வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது..

“ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான் என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது.. “அவர் வரட்டும்” என்றார்.

‘லியோ’ படத்தின் இசை வெளியீடு எங்கே நடக்கும் என்று கேட்டபோது அது நிலாவில் நடக்கும் என கலாய்த்து பேசினார்.

அதன் பின்னர் யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்தது குறித்து பேசிய போது.. அவர் காலில் ரஜினி விழுந்திருக்கக் கூடாது. அவர் மாண்புகளை எல்லாம் மறந்துவிட்டார். என்ன செய்வது அவருக்கு வயசாகிவிட்டது.

அவர் ‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே யோகி காலில் விழுந்திருந்தால் ‘ஜெயிலர்’ படம் ஓடி இருக்காது” என்றார்.

Mansoor Alikhan speaks about MGR Rajini and Vijay

அரச உடையில் மோகன்லாலின் அசத்தலான ‘விருஷபா’ பர்ஸ்ட் லுக்

அரச உடையில் மோகன்லாலின் அசத்தலான ‘விருஷபா’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்கள் மத்தியில், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ‘விருஷபா’ படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஆகஸ்ட் 24 அன்று, விருஷபா முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவித்தனர்.

மேலும் ‘விருஷபா’ படத்திலிருந்து, மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

பர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் அரச உடையில், கையில் வாளுடன், தீவிரமான பார்வையுடன், மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார்.

மோகன்லாலின் அரச அவதாரம் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லாலின் சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. . மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு, படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது.

விருஷபா படத்தில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக விருஷபா இருக்கும்.

‘விருஷபா’ படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்) (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

விருஷபா

Mohanlals look in Vrushabha gets thumbs up from fans

More Articles
Follows