தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’.
இந்த படத்தின் இசை விழா தற்போது சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வருகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுந்தர் சி பேசியதாவது…
“எனது கதையில் இரண்டு ஹீரோக்கள் மட்டும் நடிக்க மறுத்தார்கள். ஒருத்தர் தளபதி விஜய். அடுத்தவர் மக்கள் தளபதி உதயநிதி.
உதயநிதிக்கு எழுதிய கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாமா ? என்று கேட்டேன். அதற்கு ஓகே சொன்னார். அந்த அளவுக்கு நல்ல மனசு.
அந்த படம் தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு…’ அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
அது போல உதயநிதியை எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம். அவர் எளிதாக அணுகக் கூடியவர். அவர் நல்ல மனிதன்” என பாராட்டி பேசினார் சுந்தர் சி.
sundhar c speech at Kalaga Thalaivan Audio Trailer Launch