தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளிய ஆவதற்கு முன்பே சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மேலும் இந்த படம் வெளியானால் ஜாதி ரீதியான மோதல்கள் வெடிக்கும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘மாமன்னன்’.
இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் எந்த நடிகரும் செய்யாத ஒன்றை முதன் முறையாக செய்து காட்டி இருக்கிறார் உதயநிதி.
பொதுவாக ஒரு படத்தின் டைட்டிலை போட்ட பிறகு நாயகன் பெயர்.. நாயகி பெயர்.. முக்கிய நட்சத்திரங்கள் பெயர்கள் டைட்டில் காடுகளில் ஒவ்வொன்றாக வரும்.
இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தாலும் முதலில் வடிவேலு பெயர்.. பின்னர் பகத் பாசில்.. அதன் பின்னர் நாயகி கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரின் பெயர்களை திரையிட்ட பிறகே உதயநிதியின் பெயர் டைட்டில் கார்டில் வந்தது.
ஒரு அறிமுக நடிகரின் புதிய படம் என்றாலும் அதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருந்தாலும் நாயகனின் பெயர் தான் முதலில் திரையிடப்படும்.
இந்த நிலையில் உதயநிதி இதுவரை 15 படங்களில் நாயகனாக நடித்திருந்தும் கூட தன்னுடைய பெயரை முதலில் திரையிடாமல் சீனியர்களுக்கு உதயநிதி கொடுத்த மரியாதை பலரின் பாராட்டை பெற்று வருகிறது.
இது உதயநிதியின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Udhayanidhi made title card magic in Maamannan
கூடுதல் தகவல்..
மாரி செல்வராஜ் இந்த டைட்டில் கார்டு விஷயத்தை மறுத்த போதும் அதில் உறுதியாக இருந்து உதயநிதி ஸ்டாலின் தான் இதை செய்ய சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனி அரசியலில் முழு நேரமாக ஈடுபட உதயநிதி முடிவு செய்திருப்பதால் தற்போதைக்கு இதுதான் அவரது கடைசி படம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.