தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் கதை எழுதி தயாரித்து நடித்துள்ள விஐபி2 படம் இந்த ஜீலை மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய பலவீனம் எது? வெற்றிமாறன் நெருக்கம் பற்றிய கேள்விகளுக்கு தன் சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துக் கொண்டிருந்தார் வெற்றிமாறன்.
அது ஒரு கனாக்காலம் சூட்டிங்போது ஒரு நாள் இரவில் கதை சொல்ல வந்தார் வெற்றிமாறன்.
கதை கேட்ட உடனே அவரிடம் நான் சொன்ன ஒரே வார்த்தை நிச்சயமாக படம் பண்னுவோம் என்பதுதான்.
அவர் நிச்சயம் உலகளவில் ஒரு பெரிய கலைஞராக வருவேன் என அடுத்த நிமிடமே என் நண்பர்களை அழைத்துச் சொன்னேன்.
பொல்லாதவன் படம் செய்தோம். அதன்பின் மற்ற பட வாய்ப்பு இருந்தும் மீண்டும் எனக்காக ஆடுகளம் படம் செய்தார்.
இன்றளவும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நான் பெரிதும் நம்பும் ஓரிரு நபர்களில் அவர் முக்கியமானவர்.
எனக்கு வெற்றி தோல்வி எதுவந்தாலும் நான் முதலில் செல்லும் இடம் என் அம்மாவை தேடிதான். அவருக்கு பிறகு என் குழந்தைகள்தான்.
என்னுடைய பலவீனமே நம்பிக்கைதான். என்னுடன் பழகுபவர்களை நிறைய நம்பிவிடுவேன்.
அவர்கள் என்னை ஏமாற்றினாலும் அதை மாற்றிக் கொள்ளமாட்டேன்.
அவர்கள் என்னை ஏமாற்றுவதற்கு நான் என்ன செய்ய முடியும்.” என்றார்.
Confidence is my weekness says Actor Dhanush