தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களாக ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் வலம் வருகின்றனர்.
எனவே இவர்களின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்களது படங்கள் தயாராகும் போதே கதை குறித்த எதிர்பார்ப்பு எகிற செய்யும்.
தற்போது இவர்கள் நடித்து வரும் படங்கள் பற்றிய கதைகள் உலா வருகின்றன.
தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
இதில் வேற்று கிரகவாசியான அக்ஷய்குமார் கோரமுகத்துடன் பூமிக்கு வருகிறார்.
தனது மிருக குணத்தால் பூமியில் அட்டகாசம் செய்கிறார். எனவே சயின்ட்டிஸ்ட் வசீகரன் தனது சிட்டிக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவரை அழிக்க சொல்கிறார் என சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, ஏகே 57 படத்தில் அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் போலீஸ் ஆபிசராக வருகிறாராம்.
ராணுவ ரகசியங்களை தெரிந்து நாச வேலைகளை செய்யும் தீவிரவாதிகளை கண்டு பிடித்து ஒழிப்பதே படத்தின் கதை என கூறப்படுகிறது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து படத்திற்கு எங்க வீட்டுப் பிள்ளை என பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.
எனவே கதையும் அப்படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.