தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா, அபர்ணா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப்போற்று’.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவே தயாரித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை அக்டோபர் 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ளார்.
இதனால் திரைத்துறையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இது தொடர்பாக ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்…
“நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலோ, நடிகர் சங்கத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில் இது விஷயமாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது.
இதில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும், பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆன்லைன் டிக்கெட்டிங் மற்றும் vpf குறித்தும் நிரந்தரத் தீர்வு காண திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட முத்தரப்பினரும் அமர்ந்து பேசி, எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமுகமான நல்ல முடிவினை எடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தித் திரை உலகம் செழிக்க திரையரங்க உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”.
இவ்வாறு ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.