ஒத்த செருப்பு-க்காக போராட தயாராகும் திரையுலகினர்

ஒத்த செருப்பு-க்காக போராட தயாராகும் திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil cinema industry announces protest to support Oththa Seruppuவித்தியாசமான சிந்தனைகளை கொண்ட பார்த்திபன், தானே இயக்கி, தயாரித்து தான் ஒருவரே நடித்து இயக்கிய படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”

இப்படம் கடந்த வாரம் வெளியானது. வித்தியாசமான முயற்சி என பலர் பாராட்டினாலும் படம் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தை பாராட்டிய ஊடகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.

இந்த நிகழ்வில் பார்த்திபனை பாராட்ட பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர்.

இயக்குனர்கள் எஸ்ஏ. சந்திரசேகர், ஆர்கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், விஜய், பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் பார்த்திபனை வெகுவாக பாராட்டினர்.

இவர்கள் பாராட்டும் போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் ஒத்த செருப்பு படத்தை தேர்வு செய்யவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் ஏதோ ஒரு ஆங்கில படம் தழுவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கல்லி பாய் படத்தை தேர்வு செய்ததை கண்டித்து பேசினர்.

இங்குள்ள அரசியலால் தான் தமிழ் படங்களுக்கு மதிப்பில்லை என பலரும் புகார் கூறினர்.

ஆஸ்கர் விருது போன்ற உலக விருது விழாக்களுக்கு ஒத்த செருப்பு போன்ற சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது என பார்த்திபன் பேசினார்.

எனவே விரைவில் பார்த்திபனுக்கு ஆதரவாக விரைவில் திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

Tamil cinema industry announces protest to support Oththa Seruppu

ஹிந்தி கற்பதால் தமிழ் அழியாது; இருட்டு அறை முரட்டு குத்து விநியோகஸ்தர் பேச்சு

ஹிந்தி கற்பதால் தமிழ் அழியாது; இருட்டு அறை முரட்டு குத்து விநியோகஸ்தர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil wont be destroyed if we learn Hindi says Gnanavel Rajaசூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.

இவையில்லாமல் ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட அடல்ட் ஒன்லி படங்களையும் விநியோகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி மொழியை கற்றுக் கொள்வது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

மத்திய அரசு, ஒரு போதும் இந்தி மொழியை திணிக்கவில்லை. மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில், ஒருபோதும் தவறு இல்லை.

ஒரு மொழி இருப்பதால், இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம், ஒரு கும்பலால் தவறாக பரப்பப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று 90 சதவீத தமிழர்களுக்கு, மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை” என பேசியுள்ளார்.

Tamil wont be destroyed if we learn Hindi says Gnanavel Raja

ஞானவேல் ராஜா சொன்னது கடைந்தெடுத்த பொய்; கமல் நோட்டீஸ்

ஞானவேல் ராஜா சொன்னது கடைந்தெடுத்த பொய்; கமல் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal denies Taking Rs 10 Crore from Gnanavel Rajaஉத்தமவில்லன் பட ரிலீஸ் பிரச்சினையின் போது தன்னிடம் கமலஹாசன் ரூ. 10 கோடி பணத்தை வாங்கியதாகவும் அதற்கு பதிலாக ஒரு படத்தில் நடித்து தருவதாகவும் ஒப்புக் கொண்டார் எனவும் ஆனால் இதுவரை படத்தில் நடிக்கவும் இல்லை பணத்தை திருப்பித் தரவும் இல்லை என ஞானவேல்ராஜா புகார் கூறியிருந்தார்.

ஆனால் ஞானவேல் ராஜாவின் புகாருக்கு கமல் சார்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது…

நடிகர் கமலஹாசனுக்கு ரூ.10 கோடி கடன் கொடுத்ததற்கான ஆவணங்களை தயாரிப்பாளர் ஞான வேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும்.

அவர் கூறியது கடைந்தெடுத்த பொய். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணம் இல்லையெனில் கமல் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும்.

மேலும் ஞானவேல் ராஜன் கூறியது பொய் என தெரிய வரும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

Actor Kamal denies Taking Rs 10 Crore from Gnanavel Raja

கறிகடை வியாபாரிகளுக்கு பரிசளித்து விஜய் ரசிகர்கள் சமாதானம்

கறிகடை வியாபாரிகளுக்கு பரிசளித்து விஜய் ரசிகர்கள் சமாதானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans cool down Bigil protesters by donating giftஅட்லி இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள படம் பிகில்.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் அக்டோபரில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சில கறிகடை வியாபாரிகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

பிகில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கறிகளை வெட்டும் கட்டை மீது விஜய் தன் செருப்பை வைத்திருந்தார் என கண்டித்தனர்.

இது தங்கள் தொழிலை அவமதித்துள்ளதாக போலீசிடம் புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த கறிகடை வியாபாரிகளை சந்தித்த விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு கறியை வைத்து வெட்டும் அந்த கட்டையை இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

Vijay fans cool down Bigil protesters by donating gift

செக்யூரிட்டிக்கு சம்பளம் தராத ஜெயம் ரவி மீது போலீசில் புகார்

செக்யூரிட்டிக்கு சம்பளம் தராத ஜெயம் ரவி மீது போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravi not pays security guardsசென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட்.

இவர் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்…

எங்கள் நிறுவனத்தில் 150 செக்யூரிட்டிஸ் வேலை செய்கிறார்கள்.

அவர்களை பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட வீடுகளுக்கும் காவல் பணிக்கு அனுப்பி வருகிறோம்.

எங்கள் நிறுவனத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவியின் வீட்டு பாதுகாப்புக்கு 2 காவலாளிகளை வேலைக்கு அனுப்பி வைத்தோம்.

அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பள பணம் ரூ.70 ஆயிரத்தை கொடுக்காமல் அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர்.

பின்னர் அந்த 2 பேரில் ஒருவரை எங்களது நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே ஜெயம் ரவிக்கு தனிப்பட்ட முறையில் காவலாளியாக நியமித்து கொண்டனர்.

ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரி என்பவர்தான் இதற்கு காரணமாக உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனுவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Jayam Ravi not pays security guards

கமல்-ரஜினி கலந்த கலவை தான் சிரஞ்சீவி.; மோகன்ராஜா பாராட்டு

கமல்-ரஜினி கலந்த கலவை தான் சிரஞ்சீவி.; மோகன்ராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiranjeevi is mixture of Rajini and Kamal says Mohan Rajaஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது.

பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் உரிமையை பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது.

இவ்விழாவில் R B சௌத்திரி பேசியது….

மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட ராணா தமிழக முன்னணி நாயகன் விஜய்சேதுபதி, நயன்தாரா எனப்பலர் நடித்த இந்தப் படத்தை கடந்த வாரம் பார்த்தேன்.
தமிழில் நான் தான் ரிலீஸ் செய்வேன் என அடம்பிடித்து வாங்கியுள்ளேன். தெலுங்கில் போல தமிழிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசியது…

நான் பல காலமாக சிரஞ்சீவியின் ரசிகன். இப்படி ஒரு பிரமாண்ட படத்தில் அவரைப்பார்க்க ஆவலாக உள்ளேன். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்றாலே வெற்றி தான் தமிழில் அவர்கள் வெளியிடுவது இந்தப்படத்திற்கு மேலும் ஒரு பலம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசியது

இதில் பிரமாண்ட நட்சர்திரங்கள் நடித்திருப்பதால் சௌத்திரி சார் இந்தப்படத்தை வாங்கியிருப்பார் என்றால் கிடையாது இதில் அதைத் தாண்டிய கதை இருப்பதை அவர் கண்டுபிடித்திருப்பார். தமிழில் 40 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.

அவர் கை வைத்தால் அது வெற்றி தான். நான் இணையத்தில் ராம்சரண் பாடல்களை பார்ப்பேன் ஹீரோயினாக யார் இருந்தாலும் இவர் மீது தான் கண் போகும். அவர் தமிழுக்கு வந்துள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியது…

தமிழர்களுக்கு தெலுங்குப்படம் என்றாலே சிரஞ்சீவி படம் தான். 20 வருடங்களுக்கு முன்பே அவரது படம் எனக்கு தமிழில் 25 லட்சத்தை சம்பாதித்து தந்தது. அவருடைய மார்க்கெட் அந்த அளவு பெரியது. சூப்பர் குட் இந்தப்படத்தை வாங்கியிருக்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

இயக்குநர் சசி பேசியது…

“மகதீரா” படம் சாதாரண படம் என்று நினைத்து பார்த்தேன் படம் மிரட்டலாக இருந்தது. அந்தப்படத்தின் ஹிஸ்டாரிகல் பகுதிகள் தனியே எடுக்கப்பட்டது போல் இந்தப்படம் இருக்கிறது.
பல நட்சத்திரங்கள் நடித்தாலும் சிரஞ்சீவிக்காகவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை இப்படம் பெறும் என்றார்.

இயக்குநர் மோகன் ராஜா பேசியது …

நான் சிரஞ்சீவின் மிகப்பெரிய ரசிகன். என் தந்தை ஹிட்லர் எடுத்த போது அவர் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் கமல் சார் ரஜினி சார் போல் தெலுங்கில் அவர்கள் இரண்டும் கலந்த ஒரே ஸ்டார் சிரஞ்சீவி சார் தான். இந்த வயதில் அவர் இப்படியான படைப்போடு வந்திருக்கிறார்.

உலகில் குழந்தையை கொஞ்சும் வளர்க்கும் அப்பாவை பார்த்திருக்கிறேன் முதல்முறையாக மகன் தந்தையை கொண்டாடும் படமாக இந்தப்படத்தைப் பார்க்கிறேன். இந்தப்படத்தில் மிகப்பெரிய ஆளுமைகள் மதித்து தங்கள் பங்களிப்பை தந்துள்ளார்கள் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற என் வாழ்த்துக்கள் என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி

மிக அழகான காலகட்டத்தில் நான் இருக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரும் ஒரே மாதிரியான இரு வேறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு பலரது ரத்தம்மும் தியாகமும் இருக்கிறது அவற்றை ஞாபகப்படுத்தும் இரண்டு படங்களில் பணிபுரிவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அமித் திரிவேதி வட இந்திய சாயலே இல்லாத தென்னிந்திய இசையை இந்தப்படத்தில் கொடுத்திருக்கிறார்.

நான் என்னால் முடிந்தளவு சிறப்பான பணியை தந்துள்ளேன். இந்தப்படத்தில் வேலை பார்த்தது நல்லதொரு அனுபவமாக இருந்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

நடிகை நாயகி தமன்னா பேசியது ….

வீட்ல என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தாலும் குடும்பம் முழுதும் அங்கு இருக்க வேண்டும் இன்று நான் சினிமா கற்றுக்கொண்ட நிறைய ஆளுமைகள் இங்கு இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய படத்தில் நான் இருப்பதே பெருமைதான். நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவமாகவே இருந்தது. சுரேந்தர் ரெட்டி சார் படத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும். இது இந்தியா முழுமைக்கும் உள்ள ரசிகர்களுக்கான படம். பாகுபலிக்கு பிறகு மிகப்பெரிய படமாக இந்தப்படம் கிடைத்திருக்கிறது.

சிரஞ்சீவி சாருடன் முதல்முறை நடித்தபோது டயலாக்கை மறந்தவிடக்கூடாது என பெரும் பதற்றம் இருந்தது. அவருடன் நடித்தது நம்பமுடியாத அதிர்ஷ்டம். நயன்தாராவுடன் நடித்ததும் மிகப்பிடித்த, மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் பங்குபெறும் வாய்ப்பு தந்ததற்கு ராம்சரணுக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ராம்சரண் பேசியது….

எல்லாருடைய அன்புக்கும் நன்றி. இந்தப்படத்தை நம்பி தமிழில் வாங்கியதற்கு R B சௌத்திரி சாருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி. நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன்.

96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம். நயன்தாரா தமிழ் சூப்பர்ஸ்டார் அவர் இந்தப்படத்தில் நடித்ததும் சந்தோஷம்.

தமன்னாவும் நானும் நடித்த படத்திற்கு அப்பா வந்திருந்தார். நான் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் தமன்னாவுடன் நடிப்பேன் என்றார். விளையாட்டுக்கு சொன்னார் என்று நினைத்தேன். சினிமாவின் மேஜிக் அதுதான் இப்போது அது நடந்திருக்கிறது. நான் அப்பாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்கிறார்கள்.

ஆனால் இது அவர் எனக்கு கொடுத்த கிஃப்ட். 10 வருடங்களுக்கு முன்பே இந்தக்கதையை கேட்டார். அப்போதிலிருந்து உருவான படம் இது. கமல் சார் இப்படத்தில் மூன்று நிமிடம் குரல் தந்துள்ளார் அவருக்கு என் நன்றி. 10 நாட்கள் முன் அரவிந்த்சாமி சார் வீட்டுக்கு வந்திருந்தார் ‘இவ்வளவு பெரிய படம் எடுக்கிற என்னயெல்லாம் கூப்பிடல’ எனக்கேட்டு அவரே அப்பாவுக்கு டப்பிங் பேசுகிறேன் என்றார்.

கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவரது மனதிற்கு, அன்பிற்கு நன்றி இந்த வாரம் படம் வருகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள், கொண்டாடுங்கள் என்றார்.

சிரஞ்சீவி பேசியது…

நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. “சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு.

பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின் சினிமா வந்த பிறகு தமிழில் வந்த “கத்தி” படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார்.

நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி.

இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.

“சைரா நரசிம்ம ரெட்டி” படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். பருச்சூரி சகோதரர்கள் இப்படத்தினை எழுதியுள்ளார்கள். நடிகர் ராம் சரண் Konidela Production கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார்.
அமித் திரிவேதி இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜீவன் கலை இயக்கம் செய்து காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பணிபுரிந்த மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

எடிட்டிங் – ஶ்ரீகர் பிரசாத்
வசனம் – விஜய் பாலாஜி
VFX மேற்பார்வை – கமல் கண்ணன்
உடை வடிவமைப்பு – சுஷ்மிதா கோனிடெலா, அஞ்சு மோடி , உத்தாரா மேனன்.
ஸ்டண்ட் – க்ரேக் பாவெல், லீ விட்டேக்கர், ராம் – லக்‌ஷ்மன்.
இணை இயக்கம் – பாலகிருஷ்ணன் தேவர்
உதவி இயக்கம் – பெல்லம்கொண்டா சத்யம் பாபு
ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள்.

Chiranjeevi is mixture of Rajini and Kamal says Mohan Raja

syeraa press meet

More Articles
Follows