தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வித்தியாசமான சிந்தனைகளை கொண்ட பார்த்திபன், தானே இயக்கி, தயாரித்து தான் ஒருவரே நடித்து இயக்கிய படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”
இப்படம் கடந்த வாரம் வெளியானது. வித்தியாசமான முயற்சி என பலர் பாராட்டினாலும் படம் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தை பாராட்டிய ஊடகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.
இந்த நிகழ்வில் பார்த்திபனை பாராட்ட பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர்.
இயக்குனர்கள் எஸ்ஏ. சந்திரசேகர், ஆர்கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், விஜய், பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் பார்த்திபனை வெகுவாக பாராட்டினர்.
இவர்கள் பாராட்டும் போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் ஒத்த செருப்பு படத்தை தேர்வு செய்யவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் ஏதோ ஒரு ஆங்கில படம் தழுவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கல்லி பாய் படத்தை தேர்வு செய்ததை கண்டித்து பேசினர்.
இங்குள்ள அரசியலால் தான் தமிழ் படங்களுக்கு மதிப்பில்லை என பலரும் புகார் கூறினர்.
ஆஸ்கர் விருது போன்ற உலக விருது விழாக்களுக்கு ஒத்த செருப்பு போன்ற சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது என பார்த்திபன் பேசினார்.
எனவே விரைவில் பார்த்திபனுக்கு ஆதரவாக விரைவில் திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
Tamil cinema industry announces protest to support Oththa Seruppu