விருது பெற்ற ரஜினி தனுஷ் விஜய்சேதுபதி இமான் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு நாசர் வாழ்த்து

விருது பெற்ற ரஜினி தனுஷ் விஜய்சேதுபதி இமான் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு நாசர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள்.

அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான, தாதா சாகேப் பால்கே விருதினை அவர் பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

அவரது கலைப்பயணம் மேலும் தொடர
அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் இன்று தேசிய விருது பெற்ற கலைஞர்களான…

சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி. இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோருக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி!

அன்புடன்,
நாசர், நடிகர்,
அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பு

Actor Nasser wishes to National award film winners

JUST IN தமிழ் மக்கள் இல்லேன்னா நானில்லை.; தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி பேச்சு

JUST IN தமிழ் மக்கள் இல்லேன்னா நானில்லை.; தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம்.

இந்தியாவின் கௌரமிக்க இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி.

இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி.

இந்த விருதை எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர்.

கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பஸ் டிரைவர் என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன்.

நான் கண்டக்டராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என் நடிப்புத் திறனை பார்த்து திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.

எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன்.

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.”

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Super Star Rajinikanth speech at National Film Awards

ஜெயிலுக்கே விடுதலை கொடுத்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா

ஜெயிலுக்கே விடுதலை கொடுத்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு குற்றவாளி ஜெயிலில் இருந்து விடுதலை (ரிலீஸ்) ஆவதை பார்த்திருக்கோம். ஆனால் ஒரு ஜெயிலே ரிலீஸ் ஆகவுள்ளதை அறிந்திருக்கிறீர்களா.?

ஆம் நீண்ட மாதங்களாக பல்வேறு காரணங்களாக கிடப்பில் போடப்பட்ட ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

அதன் விவரம் வருமாறு..

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’.

இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’.

இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார்,’பசங்க’ பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன்ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர்.

நடனக் காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர். ஜிவிபிரகாஷ் குமாரின் இசையில் கபிலன், சிநேகன் , கருணாகரன், தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய ‘காத்தோடு காத்தானேன்…’ பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டுகோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது. 

இந்த நிலையில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.

விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gv Prakashs Jail movie will be released by Studio Green

கார்த்திக் ராஜா இசையில் நான்கு நாயகிகளுடன் இணையும் நட்டி

கார்த்திக் ராஜா இசையில் நான்கு நாயகிகளுடன் இணையும் நட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் ‘வெப்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார்.

‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார்.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வேடங்களில் பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.

கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர்: அருண்
சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா

Nattys WEB movie first look released

BREAKING நாளை (OCT 25) எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்..; ரஜினி திடீர் அறிக்கை

BREAKING நாளை (OCT 25) எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்..; ரஜினி திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நாளை அக்டோபர் 25ஆம் தேதி தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. எனவே தற்போது சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ஒன்று தாதா சாகேப் பால்கே விருது பெற போகிறேன்.

அடுத்து என் 2வது மகள் சௌந்தர்யா HOOTE என்ற வாய்ஸ் சோஷியல் மீடியாவை தொடங்கவுள்ளார். அதில் என் குரலை பதிவு செய்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், புதிதாக சமூக வலைதளம் ஒன்றை வருகிற 25ஆம் தேதி தொடங்க உள்ளார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘HOOTE’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Rajini daughter Soundarya launching Hoote VOICE based Social media

கூடுதல் தகவல்.. : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டுவதாக அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.

இதனால், டொனால்ட் ட்ரம்ப், தானே சொந்தமாக சமூக வலைதளம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் பிரத்யேக சமூக வலைதளத்தை டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக தொடங்கியுள்ளார். இந்த வலைதளம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது.

தற்போது புதிய சமூக வலைத்தளம் (குரல்) ஒன்றை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தொடங்கவுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

JUST IN மகிழ்ச்சி… வருத்தம்..; விருது பெற டெல்லி செல்லும் முன் ரஜினிகாந்த் பேட்டி

JUST IN மகிழ்ச்சி… வருத்தம்..; விருது பெற டெல்லி செல்லும் முன் ரஜினிகாந்த் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

ரஜினியை தலைவா என குறிப்பிட்டு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் நண்பன், அண்ணன், குரு முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

இவர்களின் வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நாளை அக்டோபர் 25ஆம் தேதி தாதா சாகேப் பால்கே விருது பெற ரஜினிகாந்த் டெல்லி செல்கிறார்.

இதனையொட்டி இன்று அக்டோபர் 24 சற்றுமுன் தன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த நேரத்தில் கே பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

இந்த விருது வாங்கிய பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

Actor Rajinikanth met Media at Poes Garden

More Articles
Follows