தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பார்த்திபன் தயாரித்து அவர் ஒருவரே நடித்து இயக்கிய படம் ‘ஒத்த செருப்பு’.
இந்தப் படத்தின் புதுமை பலரையும் கவர்ந்தது.
ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படத்தில் ‘ஒத்த செருப்பு’ படம் தேர்வாகவில்லை என தனது ஆதங்கத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார் பார்த்திபன்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
இந்த விருதை கிண்டலடித்துள்ளார்
தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார்.
இந்த விருது குறித்து ட்விட்டரில், “அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட் பார்சல்ல்ல்…” என்று தெரிவித்தார்.
கோபமடைந்த பார்த்திபன் வரிசையாக தி.மு.க எம்.பி செந்தில்குமாருக்கு பதிலடி கொடுத்தார்.
அதில் ஒரு சில…
ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் ்அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்
!———-___________________________________________ திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.Conti https://t.co/mw24Ktifi5
இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை.மற்றபடி மக்கள் conti https://t.co/EKvJ8titpu
6: மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்!conti https://t.co/RA0afTwy75
7: உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன்.
உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!
தி.மு.க MP செந்தில்குமாரின் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபனுக்கு ஆடியோ (ஒலிப்பதிவு) அனுப்பியுள்ளார் தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி.
இதுதொடர்பாக பார்த்திபன் தன் ட்விட்டரில்.., “சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, தி.மு.க.வின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு.உதயநிதி ஸ்டாலின், அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதைக் கேட்டேன்.
அவருடைய பெருந்தன்மையைக் கண்டு, என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். யாகாவாராயினும் நா காக்க…..தற்சமய” என்று குறிப்பிட்டுள்ளார்.
Udhayanidhi Stalin expressed regret for DMK MP Senthil Kumar’s controversial tweet