நடிகையும் அமைச்சருமான ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகையும் அமைச்சருமான ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா.

இதுவரை 100+க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

‘செம்பருத்தி’ படம் மூலம் தன்னை தமிழ் அறிமுகப்படுத்தி ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் செட்டிலானார்.

அதன் பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் கொண்டு அரசியலில் நுழைந்தார்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று ஆந்திரா மாநில சுற்றுலாத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் ரோஜா.

இந்நிலையில் ரோஜா உடல்நலக் குறைவு காரணமாக திடீரென ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கால் வீக்கம் காரணமாக அமைச்சர் ரோஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Actress Politician Roja admitted in pvt hospital

முதலாமாண்டு திருமண நாளை கண்ணீருடன் கொண்டாடிய நயன்தாரா – விக்கி

முதலாமாண்டு திருமண நாளை கண்ணீருடன் கொண்டாடிய நயன்தாரா – விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான 5-6 மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர் இந்த தம்பதி.

இந்த நிலையில் நேற்று 2023 ஜூன் 9ஆம் தேதி தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.

அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் புல்லாங்குழல் வாசித்து இருக்கிறார்.

விக்னேஷ் இவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழை நீ மழலை…’ என்ற பாடலை புல்லாங்குழல் மூலம் வாசித்துள்ளார்

அதை கணவர் விக்கியுடன் அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார் நயன்தாரா.

ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி அழத் தொடங்கினார் நயன்தாரா.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara and Vignesh Shivan celebrated their 1st wedding Anniversary

90s கிட்ஸ்களின் பேவரைட் டைரக்டருக்கு மாரடைப்பு.; ஆஸ்பத்திரியில் அனுமதி!

90s கிட்ஸ்களின் பேவரைட் டைரக்டருக்கு மாரடைப்பு.; ஆஸ்பத்திரியில் அனுமதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

90 கிட்ஸ்களின் பிரபல திகில் மற்றும் திரில்லர் தொடராக விளங்கிய ‘மர்மதேசம்’ தொடரை இயக்குநர் நாகா மற்றும் சி.ஜெ.பாஸ்கர் இயக்கியிருந்தனர்.

இந்த தொலைக்காட்சி தொடர் சன் டிவி-யில் 1995ஆம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

இந்த சீரியலை நிச்சயம் 90கிட்ஸ் மறந்து இருக்க மாட்டார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியை இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன் போன்ற தொடர்களையும் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார்.

சாயாசிங் நடிப்பில் வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இயக்குநர் நாகா ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் நாகா இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சுருண்டு விழுந்தார்.

பட குழுவினர் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இயக்குனர் நாகாவுக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Marma desam director naga admitted in hospital due to heart attack

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கினார் தமிழக அமைச்சர்

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கினார் தமிழக அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட்டது.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Maaveeran film tamilnadu release rights take udhayanidhi’s Red Giant

ரஜினி – மோகன்லாலின் ‘ஜெயிலர்’ பட விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

ரஜினி – மோகன்லாலின் ‘ஜெயிலர்’ பட விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை கேரளாவில் ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sri Gokulam Films to release rights take in Kerala for maveeran movie

அரசியல்வாதி மகனை திருமணம் செய்யும் நடிகை மேகா ஆகாஷ்

அரசியல்வாதி மகனை திருமணம் செய்யும் நடிகை மேகா ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, சிம்புக்கு ஜோடியாக ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, அதர்வாவுடன் ‘பூமராங்’ ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமானார்.

கடந்த மே19-ம் தேதி திரைக்கு வந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து இருந்தார்.

மேலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது 27 வயதாகும் மேகா ஆகாஷிற்கு விரைவில் அவரது பெற்றோர் திருமணம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

மேகா ஆகாஷும் அரசியல்வாதி ஒருவரின் மகனும் இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் விரைவில் மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதி மகனுடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு குடும்பத்தினரும் ரகசியமாக செய்து வருவதாகவும், திருமணம் ஆகும் தகவலை மேகா ஆகாஷ் விரைவில் அறிவிப்பார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

actress megha akash get married to politician son soon

More Articles
Follows