தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஏதாவது ஒரு பிரச்சினைகளை சந்தித்து வருவது வழக்கமாகிவிட்டது.
அண்மையில் வெளியான ‘மாநாடு’ படமும் தடைகளை தாண்டி நவம்பர் 25 ம் தேதி ரிலீஸ் ஆனது.
அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
‘மாநாடு’ படக்குழுவும் தங்களுக்குள்ளே சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி வந்தனர்.
படம் வெளியாகி 3வது வாரத்திலும் தமிழகத்தில் 200 தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் சிம்புவின் தந்தையும் பிரபல நடிகருமான டி.ராஜேந்தர் ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த நோட்டீஸில்…
‘மாநாடு’ ரிலீசுக்கு முந்தைய நாள் வரை கடும் பைனான்ஸ் பிரச்சனை இருந்தது.
இதனால் பைனான்சியர் உத்தம் சந்த், விற்கப்படாத ரூ.5 கோடி மதிப்பிலான சேட்டிலைட் உரிமத்திற்கு பொறுப்பேற்பதாகவும், ஒருவேளை சேட்டிலைட் உரிமம் ரூ.5 கோடிக்கும் குறைவான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு தான் பொறுப்பேற்றதாக டி.ராஜேந்தரிடம் கையெழுத்து பெற்றாராம்.
இந்த ஒப்பந்தத்திற்கு டி.ஆர் ஒப்புக் கொண்டு, கையெழுத்திட்டதாலேயே மாநாடு படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டதாம்.
தற்போது மாநாடு படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.
இதனையடுத்து சுரேஷ் காமாட்சியும், உத்தம் சந்த்தும் தனக்கு தெரியாமலேயே சேட்டிலைட் உரிமத்தை மிகப் பெரிய தொகைக்கு வெளியே விற்று விட்டதாக அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்..
“வெற்றி கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது. கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா” என குறிப்பிட்டுள்ளார்.
T Rajendhar files case regarding satellite rights of Maanaadu