முடி கொட்டிய பிறகே வாய்ப்புகள் வந்தது… நிறைய உருவ கிண்டல்கள்.. – எம் எஸ் பாஸ்கர்

முடி கொட்டிய பிறகே வாய்ப்புகள் வந்தது… நிறைய உருவ கிண்டல்கள்.. – எம் எஸ் பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள படம் ‘மதிமாறன்’. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எஸ் பாஸ்கர் பேசியதாவது…

“இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத் தான் நிறைய இடத்தில் டயலாக் பேசினேன்.

என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக்கேட்டுக்கொண்டே இருப்பார் அவ்வளவு ஆர்வம்.

உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான்.

அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார் என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார் இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அனைவருக்கும் என் நன்றிகள்.

நடிகர் சுதர்ஷன் பேசியதாவது…

மதிமாறன் மிக அர்ப்பணிப்பான நடிகர் அருமையாக நடித்துள்ளார். நான் இந்தப்படத்தில் ஒரு போலீஸ் பாத்திரம் நடித்துள்ளேன். வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிரவீன் குமார் பேசியதாவது…

8 வருட நட்பு, நாளைய இயக்குநர் குறும்படம் பார்த்து எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் மந்திர பாண்டியன். பாலா சார் படத்தில் வாய்ப்பு தந்தார் ஆனால் அதில் நடிக்க முடியவில்லை. மீண்டும் இந்தப்படத்தில் வாய்ப்பு தந்தார் என்றென்றும் நன்றிகள். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

இயக்குநர் தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். இயக்குநர் மந்திரா மிகத்திறமையானவர். அவர் திறமை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது அவரிடம் நிறையக் கதைகள் பேசியுள்ளேன். அவர் கண்டிப்பாக நல்ல படம் செய்திருப்பார். தயாரிப்பாளர் நவீன் என் நண்பர். இந்தப்படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்கள். எம் எஸ் பாஸ்கர் சமீப காலங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இருந்தாலே படம் நன்றாக இருக்கும்.

கதாபாத்திரங்கள் மீது தான் இந்தப்படம் பயணிக்கிறது. இந்தப்படமும் சிறப்பாக இருக்கும். எப்போதுமே ஒரு கதைக்காகச் செலவு செய்ய வேண்டும் ஹீரோவுக்காக செலவு செய்யக்கூடாது அப்போது தான் படம் சிறப்பாக வரும்.

தமிழ்த்திரை இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் தான் இன்றைய நாயகன். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

MS Baskar emotional about his cinema carrier at Madhimaaran event

பட்டைய கிளப்பும் ‘பார்க்கிங்’.. டைரக்டருக்கு தங்கம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

பட்டைய கிளப்பும் ‘பார்க்கிங்’.. டைரக்டருக்கு தங்கம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது.

நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்”.

நடிகை பிரார்த்தனா, “இந்தப் படத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. அபர்ணா கதாபாத்திரம் கொடுத்த ராம் சாருக்கு நன்றி.

என் கேரக்டர் பலருக்கும் கனெக்ட் ஆகி இருக்கு. ’எங்க வீட்டு பொண்ணு மாதிரி இருக்க’ என சொன்னார்கள். நமக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர் சினிஸ் சாருக்கு நன்றி”.

நடிகை இந்துஜா, “’பார்க்கிங்’ படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இதற்கு முதலில் நான் மீடியாவுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய ஓப்பனிங் கொடுத்தீர்கள். பார்வையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படம் பண்ணும்போது நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. இயக்குநர் ராமுக்கும் படக்குழுவுக்கும் நன்றி. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நன்றி”

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்….

“மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்த சினிஸ் அண்ணனுக்கு நன்றி.

லாக்டவுண் சமயத்தில் மூன்று கதைகள் சொன்ன போது, இது செய்யலாம் என அவர்தான் சொன்னார். என் மீதும் படம் மீதும் சுதன் சார் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது படத்தின் ரிசல்ட் பார்த்து அவர் ஹேப்பி. ஹரிஷ் கல்யாண் அண்ணனிடம் கதை சொல்லும் போது ஒரு பதட்டம் இருந்தது. ஆனால், அவரும் இந்தக் கதையில் ஈடுபாடு காட்டி நிறைய சப்போர்ட் செய்தார். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்டரி ஆக்டர்.

படப்பிடிப்புத் தளத்தில் அந்தக் கதாபாத்திரத்திலேயே இருந்தார். படத்தில் வருவது போலயே ரொம்ப கோபமாக இருந்தார். படம் முழுவதுமே இந்துஜாவுக்கு கர்ப்பமாக இருப்பது போன்ற சவாலான கதாபாத்திரம். நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் என இந்துஜா ஒத்துக் கொண்டார். பிரார்த்தனா எல்லாமே சிங்கிள் டேக்கில் நடித்து விடுவார். படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி”.

இணைத் தயாரிப்பாளர் சினிஸ், “ஒவ்வொரு நாளும் படத்தின் கலெக்‌ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. ஆனால், மழை வெள்ளத்தால் பாதிப்பு வருமோ என யோசித்தோம். ஆனால், திரையரங்குகளில் இப்போது வரை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல கதை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், பிரார்த்தனா, ரமா என அனைவருக்கும் நன்றி”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர்…

“இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. ராம், முருகேஷ், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, பிரார்த்தனா என இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும்.

படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பிலும் நான் கோபமாக இருந்தது உண்மை. காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றிக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி”.

நடிகர் ஹரிஷ் கல்யாண்…

“படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள்.

இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.

Harish Kalyan presented Gold gift to Parking director

பணத்திற்காக அலையும் உறவுகளை சொல்ல வரும் பிளாக் காமெடி ‘உடன்பால்’

பணத்திற்காக அலையும் உறவுகளை சொல்ல வரும் பிளாக் காமெடி ‘உடன்பால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன.

1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் “உடன்பால்” படம் திரையிடப்பட்டது.

இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லிய இந்த திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்திரையிடலின் போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் எழுந்து நின்று படக்குழுவினரைப் பாராட்டினர்.

மேலும் படக்குழுவினருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். படக்குழுவினர் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் தளத்தில் ஓடிடித் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

உடன்பால்

Udanpaal movie deals with money minded relatives

இலங்கையில் இசை ராஜ்யம் நடத்தும் மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ்

இலங்கையில் இசை ராஜ்யம் நடத்தும் மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் இன்று டிசம்பர் 17ல் பிறந்தநாள் காணும் இலங்கையின் மூத்த கலைஞர்.
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

இசையை தனது வாழ்க்கையாக்கியவர் இன்றும் இசையோடு பயணம் செய்கிறார்.

வாழ்ந்தால் இசையோடு தான் என்று தனது வாழ்க்கையைப் பற்றியே பாடல் இயற்றி இசையமைத்து பாடியவர் தனக்கென ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

1968 களில் இலங்கையின் முதல் இசைத் தட்டுகளை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

எமது இலங்கை கலைஞர்களும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள். இசையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத கலைஞர்.

எம்பி பரமேஷ் அவர்கள் இசைத்தட்டுகளை வெளியிடுவதற்கு முன் மேடை நிகழ்ச்சிகள் செய்து புகழ்பெற்றவர்.

பாடல் எழுதுவது, இசையமைப்பது, விளம்பர வேலைகள் என பொறுப்புக்கள் அதிகமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இசை பயணத்தை தொடர்ந்தார்.

காதல் ஒரு நல்ல கலைஞனை உருவாக்கும் என்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு எம்பி பரமேஷ் அவர்கள் தான். காதலித்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் இசை.

அந்த காதலும் இசையும் தான் இன்னும் அவரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

சங்கீத பூசனம் சிவமாலினி மீது எம்பி பரமேஷ் அவர்கள் வைத்த காதல்தான் “உனக்கு தெரியுமா…நான் உன்னை நினைப்பது…”என்ற பாடல் உருவாக காரணமாக இருந்தது. சிவமாலினி அவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சங்கீதம் படித்துக் கொண்டிருந்த காலம்.

எம்.பி. பரமேஷ் அவர்கள் இந்த பாடலை இலங்கை வானொலி ஒளிபரப்பு செய்து தன் காதலை மாலினி காதில் விழ வைத்தார். பாடல்கள் தமிழர்கள் வாழும் சகல இடங்களிலும் ஒழித்தது.

இந்த பாடல் இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அன்றைய காதலர்களின் தேசிய கீதம் “உனக்கு தெரியுமா…நான் உன்னை நினைப்பது…”என்ற பாடல் தான்.

மக்கள் மனதை கொள்ளை அடித்த அந்த பாடல் சங்கீத பரம்பரையில் வந்த சங்கீத பூஷனம் மாலினி அவர்கள் மனதை மயக்காமலா? இருந்திருக்கும் இசையோடு இசை சேர்ந்தது.

எம்பி பரமேஷ்

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஸ் அவர்கள் தொடர்ந்து இசையமைத்து சாதனை படைத்த பாடல்கள்:
1. உனக்கு தெரியுமா…உன்னை நினைத்தது…?
2. ⁠ நீ இன்றி நிலவு…
3. ⁠போகாதே தூரம் போகாதே…
4. ⁠நீ வாழுமிடமெங்கே…
5. ⁠மனமாளிகை ரோஜா…
6. ⁠எழுதுகிறேன் பாட்டு…
7. ⁠அழைக்கும் ஓசை கேட்கலையா…
8. ⁠பாடலெனக்கிது முதல் தரம் தான்…
என்ற பாடல்களை எழுதி இசையமைத்து பாடினார்.

இந்த எட்டு பாடலையும் மூன்று இசை தட்டுகளில் வெளியிட்டார். அதில் அந்த இசைத் தட்டுகள் மிகப் பெரிய சாதனைகள் படைத்தன. இதில் சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்து இசைத் தட்டுகளை வெளியிட்டார்.

சிங்கள மொழிகளும் மிகச் சிறந்த வரவேற்பு பெற்ற பாடல்கள்:
1. உனக்கு தெரியுமா உன்னை நினைத்தது…/ Thigu Neela asthekai..
2. ⁠மன மாளிகை ரோஜா / Thura are athithe…
3. ⁠அலைக்கும் ஓசை கேட்கலையா…/ Sulanga selavan
4. ⁠பாடலெனக்கிது முதல் தரம்…/ Agasevan…

என்று ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிட்ட இசைத்தட்டுக்கள் இணையதளம் மற்றும் எந்த ஒரு சோஷியல் மீடியாவும் இல்லாத காலத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார்.

அவரது புகழ் இந்தியா முழுவதும் ஒலித்து சாதனை படைத்தது.

இலங்கையில் 30 வருட போரில் மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் இழக்கவில்லை படைப்புகளையும் உணர்வுகளையும் இழந்து விட்டனர்.

1986 இல் ஜெர்மனிக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த எம்பி பரமேஷ் சிவமாலினி அவர்கள் இசையையும் தனது படைப்புகளையும் கைவிடவில்லை. 2000-ஆண்டு இறைவனைடி சேர்ந்த தன் காதல் மனைவி மாலினி அவர்களின் நினைவுகளோடும், இசையோடும் வாழ்ந்து வருகிறார் எம்.பி. பரமேஷ் அவர்கள்.

பல விருதுகளைப் பெற்ற எம்பி பரமேஸ் அவர்கள் 2019ல் ஜெர்மனியில் வெளிவரும் வெற்றி மணி என்ற தமிழ் பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் கனடாவில் வெளியாகும் தமிழ் மிரர் (Tamil Mirror-Canada) பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார்.

எம்பி பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள். அனைவரும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களின் மூத்த மகள் ஈழத்து மெல்லிசைக் குயில் பிரபலனி பிரபாகரன்அவர்கள். அப்பாவின் பெயர் சொல்லும் பிள்ளையாக இசைத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அப்பாவின் இசைப் பணியை தொடர்ந்து செய்ய உறுதுணையாக இருக்கிறார்.

இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் பிரபலானி பிரபாகரன்.

எம்.பி.பரமேஸ், சிவமாலினி தம்பதிகளின் இசை வாரிசு பிரபலனி பிரபாகரன். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். 2020 ஆம் ஆண்டு எம்.பி. பரமேஸ் அவர்கள் தனது இசை வாழ்வின் கோல்டன் ஜூபிலி விழாவை கொண்டாடினார்.

2000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார். அதில் சில நூறு பாடல்கள் பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார்.

2024 இல் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாடல்களாக எழுதி இசையமைத்து வெளியிடும் பணியில் உள்ளார். அந்த பாடல்களும் இலங்கையில் சாதனை படைக்கப் போவது நிச்சயம். ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்களின் பாடல்களை iTunes, sportify, மற்றும்
www.mppramesh.com என்ற இணையதளம் மூலமாகவும் கேட்டு ரசிக்கலாம்.

எம்பி பரமேஷ் அவர்களின் இசைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் காணும் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க பல்லாண்டு…தொடரட்டும் இசைப் பயணம்…

எம்பி பரமேஷ்

Srilankan Musician MP Paramesh music records

‘The Kashmir Files’ & ‘The Kerala Story’ வரிசையில் BHAI.?

‘The Kashmir Files’ & ‘The Kerala Story’ வரிசையில் BHAI.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாய் – Sleeper Cell Trailer இணையதளத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

பாய் – Sleeper Cell = இஸ்லாமியர்களை குறி வைக்கும் படமா?

பாய் – Sleeper Cell Trailer வசனங்கள் மற்றும் காட்சிகள் சர்ச்சை.

கோவை வெடிவிபத்தை பேசும் படமா இந்த பாய் – Sleeper Cell?

மூன்று இடங்களில் bomb blast உறுதி என்ற வசனத்தைக் கொண்டு Church மற்றும் கோவில் visual – உடன் trailer ஆரம்பம் ஆகிறது.

எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் (அப்பொழுது மூன்று மதங்களின் பெயர் paper – ல் எழுதியிருப்பது )

நான் மதம் மாறனுமா?

இஸ்லாமிய பெண் தொழுகும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருப்பது.

பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம் போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் Trailer சுவாரஸ்யமாக இருக்க இறுதியில் Maruthi car- ல் குண்டு வெடிப்பு அதில் 1998- ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை சம்பந்தப்படுத்தி பேசியிருக்கும் வசனம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maruthi car குண்டு வெடிப்பு சமீபத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை நினைவூட்டுகிறது இது ஒருபுறம் இருக்க, ஒட்டு மொத்த உலகையுமே புரட்டி போட்ட கோவை 1998 குண்டு வெடிப்பு இந்த இரண்டு சம்பவத்தையும் இணைத்து உருவாகியிருக்கும் படமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது?

காஸ்மீர் files மற்றும் the kerala stories போன்ற சர்ச்சைக்குறிய படங்களின் வரிசையில் Bhai – Sleeper cell இருக்கும் என்ற பரவலான பேச்சும் மக்களிடையே வளம் வருகிறது.

இத்தனை சர்ச்சை கேள்விகள் இருந்தாலும்… Bhai – Sleeper Cell Trailer ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.பாய் – sleeper cell திரைப்படம் டிசம்பர் 28- ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

bhai movie Trailer is controversy

சபரீஷ் நந்தா இயக்கத்தில் ரஜினி ரீல் மகன் நடிக்கும் ‘இந்திரா’

சபரீஷ் நந்தா இயக்கத்தில் ரஜினி ரீல் மகன் நடிக்கும் ‘இந்திரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார்.

வசந்த் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தற்போது இப்படத்திற்கு ‘இந்திரா’ என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மகனாக வசந்த ரவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vasanth Ravi’s Indra movie first look poster released

More Articles
Follows