கோடிகளைக் கொட்டினாலும் முடியாது.; ரசிகர்களுக்காக சிம்புவின் சிலிர்க்க வைக்கும் செயல்

கோடிகளைக் கொட்டினாலும் முடியாது.; ரசிகர்களுக்காக சிம்புவின் சிலிர்க்க வைக்கும் செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் சிம்பு.

மேலும் இவரது நடிப்பில் ‘பத்து தல’, ‘கொரானா குமார்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மிக பிரபலமான ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் சிம்பு நடிக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராக இருந்ததாம்.

ஆனால் தான் நடித்தால் தன் ரசிகர்களும் அந்த மதுவை அருந்த கூடும் என்பதால் அதை நிராகரித்து விட்டாராம் சிம்பு.

மேலும் தீய பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை அவர் கைவிட்டதால் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Why Simbu Rejects The Offer To Act In Alcohol Advt

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் ஒரு சிலரே.

சிலரை அதில் மிக முக்கியமானவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போது ரஜினியுடன் ஓரிரு படங்களில் நடித்தார். பின்பு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக முத்து வீரா எஜமான் உள்ளிட்ட படங்களின் நடித்திருந்தார்.

மேலும் கமல் , சத்யராஜ் , விஜயகாந்த் , கார்த்திக் , அஜித் , விஜய் , பிரசாந்த் ஆகியோருடன் நடித்திருந்தார்.

கடந்த 2009-ல் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஜூன் 27-ம்தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சர்வதேச உடல் தான தினத்தையொட்டி மீனா உடல் தானத்தை அறிவித்துள்ளார்.

“உயிர்களைக் காப்பாற்றுவதை விட சிறந்த செயல் எதுவும் இருக்க முடியாது.

நீண்ட கால உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகள் தானமாக கிடைப்பது என்பது ஒரு வரம். தனிப்பட்ட முறையில் இதனை நான் உணர்ந்திருக்கிறேன்.

உடல் தானம் செய்வது என்பது உயிர்களைக் காக்கும் உன்னத வழிகளில் ஒன்று. எனது கணவருக்கு உறுப்புகள் தானமாக கிடைத்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஒருவர் உறுப்பை தானம் செய்யும்போது 8 பேர் காற்றப்படலாம். உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

அந்த வகையில் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்வதாக அறிவிக்கிறேன்.

இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நாம் உயிர் வாழலாம். என உருக்கமாக தெரிவித்துள்ளார் மீனா.

Actress Meena has pledged her organs for donation

தெய்வக் குழந்தை அப்பா நீ.. வர்ணிக்க முடியா உணர்வு நீ.; ரஜினியை வாழ்த்திய சௌந்தர்யா

தெய்வக் குழந்தை அப்பா நீ.. வர்ணிக்க முடியா உணர்வு நீ.; ரஜினியை வாழ்த்திய சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15 1975 ஆண்டு வெளியானது.

தற்போது 47 வருடங்களை கடந்துள்ள நிலையில் ரஜினியிசம் 47 ஆண்டுகள் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு சென்னை ரோகினி தியேட்டரில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் சிறப்பு காட்சியாக ஆகஸ்ட் 14ல் திரையிடப்பட்டது.

இந்த படத்தை வரவேற்று ரஜினி ரசிகர் கோலாகலமாக கொண்டாடி பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.

படம் ரிலீசான நாள் முதல் காட்சி பார்ப்பது போன்ற ஒரு உற்சாகம் ரசிகர்களிடம் காணப்பட்டது.

ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் நாயகனாக ‘பைரவி’ படம் மூலம் மாறினார்.

முதலில் ஸ்டாராக மாறி 5 வருடங்களிலேயே சூப்பர் ஸ்டாராக மாறினார்.

தற்போது அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உலகம் முருவதும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ரீல் லைஃப்பை தாண்டியும் ரியல் லைஃப்பிலும சூப்பர் ஸ்டாராக மாறினார் ரஜினிகாந்த்.

அவர் திரைத்துறையில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரஜினிக்கு ரசிகர்களும் அரசியல் பிரபலங்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் குடும்பத்தினரும் இதை கேக் வெட்டிக் கொண்டாடினர்.

அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினியின் மகள் சௌந்தர்யா அந்த பதிவில்…

“நீங்கள் தெய்வக் குழந்தை அன்பு அப்பா! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு நீ’ என்றும், ‛அப்பாவின் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்’ என பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா.

ரஜினியை எதிர்க்க ஆளே இல்ல.; ஒரு ஹிட்டுக்கே அவரு ஆட்டமா? 47 Years of Rajinism Fans Celebration

#Thalaivar #Rajinikanth

‘கபாலி’ வசூலை அறிவித்தார் தாணு.!

‘விக்ரம்’ வசூலை அறிவிப்பாரா கமல்.?

ரஜினிகாந்த்

Soundarya congratulated her father Rajinikanth on completing 47 years in industry

வித்தியாசமான மனிதரய்யா : விசாகப்பட்டின பேருந்தில் அஜித் பயணம்

வித்தியாசமான மனிதரய்யா : விசாகப்பட்டின பேருந்தில் அஜித் பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி ‘AK61’ படத்திற்காக இணைந்துள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

பின்னர் சிறிய இடைவெளி விடப்பட்டது. அப்போதுதான் சில வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். இத்துடன் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்துக் கொண்டு விருதுகளை வென்றார் நடிகர் அஜித்.

தற்போது மீண்டும் AK61 சூட்டிங் தொடங்கியுள்ளது. எனவே தற்போது விசாகப்பட்டினம் சென்றுள்ளார்.

அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில்… பேருந்தில் கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டே அஜித் பயணம் செய்கிறார்.

அவர் சூட்டிங் தளத்திற்கு செல்லும்போது பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அஜித்தின் பயணத்தை ரசிகர் ஒருவர் படம் எடுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் எளிமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/UnK8zReKZ9c

Ajith traveled by bus to Visakhapatnam

JUST IN ரூ 15 கோடி சம்பளத்தை பதுக்கிய விஜய்.; அபராதம் விதித்தது ஐடி.; கோர்ட் தடை

JUST IN ரூ 15 கோடி சம்பளத்தை பதுக்கிய விஜய்.; அபராதம் விதித்தது ஐடி.; கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்து இருந்தார் நடிகர் விஜய்.

அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடி 40 லட்சம் பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார்.

எனவே அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளது.

அதன்படி, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாயை வருமானத்தை நடிகர் விஜய் கணக்கில் காட்டவில்லை என தெரிய வந்தது.

எனவே வருமானத்தை மறைத்த காரணத்திற்காக ஜூன் மாத இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

இதனையடுத்து தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

மேலும் அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவிட்டு இருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் விஜய்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்தார் நீதிபதி அனிதா சுமந்த்.

அவரது உத்தரவில்.. நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tax evasion case: Interim stay on penalty imposed on Actor Vijay by IT

ஒரே மேடையில் 3 படங்களின் விழாவை நடத்திய சசிகலா புரொடக்ஷன்ஸ்

ஒரே மேடையில் 3 படங்களின் விழாவை நடத்திய சசிகலா புரொடக்ஷன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்கவிழாவும் நேற்று இனிதே நடைபெற்றது.

ட்ராமா

இவ்விழாவினில்

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் சலீம் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளை பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

“கா” பட இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது…

நான் கா படத்தின் இயக்குநர். இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி.

“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசியதாவது…

ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை.

லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமல் சாரின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பை தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் நன்றி.

தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியதாவது…

திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்று தான் போய்க்கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றியை பெறும்.

ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப்பெரும் வெற்றி ஆனால் அவர் ஏன் ஜெயிக்கவில்லை. அவர் இடையில் நிறைய சின்ன படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்ன படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியை தருமென வாழ்த்துகிறேன்.

தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் தமிழ் சினிமா இருக்கிறது. இது மாற வேண்டும். சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்த படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன் நன்றி.

ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசியது…

தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது.

படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி

ட்ராமா பட நடிகை காவ்யா வெல்லு பேசியதாவது

இது எனது முதல் படம் இந்தப்படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட் இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசியதாவது

சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி.

லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசியதாவது…

எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்

நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது…

லாகின் லாக்டவுன் முடிந்து ஷீட் போன படம், நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும். பெரிய நன்றிகள்.

ட்ராமா

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் யார் என்பது தான் தமிழ் சினிமாவின் பரபரப்பு கேள்வியாக இருந்து கொண்டிருந்தது. வெளியாகுமா என்ற நிலையில் மூன்று சின்ன படங்களை வாங்கி அதன் வெளியீட்டை உறுதி செய்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ். மூன்று படைப்புகளையும் தரமான படைப்புகளாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். நல்ல படைப்பாளிகள் இதன் மூலம் வெளிவருவார்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது…

சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப்படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய லாபத்தை தரும் நன்றி.

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா? நாம் ஜெயிப்போமா ? என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம்.

இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும் இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியை பெறும். இப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

இத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

ட்ராமா

Sasikala Productions hosted 3 films event on one stage

More Articles
Follows