தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற டிசம்பர் 24ல் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் இரு முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன.
அதில் ஒன்று அச்சங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் டி.எ.அருள்பதி அணி. மற்றொறு அணி சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் ஞானவேல்ராஜா.
இந்நிலையில் அருள்பதி அணியை சில தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி.எஸ்.தாணு, சுரேஷ் காமாட்சி ராதாகிருஷ்ணன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தற்போதைய பொறுப்பு தலைவர் செல்வின்ராஜ், நடிகர்கள் டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர் மற்றும் சேரன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய பலரும் ஞானவேல்ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர். ஆனாலும் எல்லாருடைய தாக்குதல்களும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலை எதிர்த்தே இருந்தது.
நடிகர் சங்கம் பொறுப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது ஞானவேல்ராஜாவை பின்னால் இருந்து இயக்குவதாக விஷாலை குற்றம் சாட்டினர்.
கலைப்புலி எஸ்.தாணு, சேரன். எஸ்.வி.சேகர் மற்றும் செல்வின்ராஜ் ஆகியோர் பேசும் போது…
படங்கள் வெளியீட்டின் போது பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம் எனவும், பெரும்பாலான பேச்சு வார்த்தைகள் அருள்பதியின் தலையீட்டினால் சுமூகமாக முடிந்துவிட்டதாக கூறினர்.
மேலும் ஞானவேல்ராஜாவின் ‘கொம்பன்’, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, ரஜினி முருகன் போன்ற படங்கள் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வெளியானது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள வைப்பு தொகையை எல்லாம் காலி செய்துவிட்டார்கள்.
நாங்கள் திருட்டு விசிடி ஒழிப்போம் என்றார்கள் அதையும் செய்யவில்லை.” என்றும் பேசினார்கள்.
இறுதியாக நடிகர் டி.ராஜேந்தர் பேசியதாவது…
தன்னுடைய படத்திற்கு ஒரு தனியார் தொலைகாட்சியிலிருந்து வரவேண்டிய பணத்திற்கு முன்பு இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தில், வசூல் செய்து தரும்படி தான் புகார் மனு கொடுத்திருந்ததாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அப்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பெற்றுத்தர முயற்சித்தும் கிடைக்கவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் நான், டி. ராஜேந்தர் ஆகிய நான் போன் செய்தும் விஷால் போனை எடுப்பதில்லை.
அருள்பதியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதோ கதிதான்” என்று பேசினார் டிஆர்.
T Rajendar supports Arulpathi in Distributors Association Election and Oppose GnanavelRaja