தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஆனந்தம்’ என்ற அருமையான குடும்ப படத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.
இதனையடுத்து ‘ரன், சண்டக்கோழி, பையா, ஜீ, அஞ்சான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தையும் தயாரித்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
இந்த நிலையில் இவர் மீது பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது
‘எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமி & அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
லிங்குசாமி தரப்பில் மேல் முறையீடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Lingusamy gets jail for six months