தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர் கே.விஸ்வநாத்.
இவர் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. பல வெற்றி படங்களை இயக்கினார்
இவர் தமிழில் குருதிப்புனல், முகவரி, ‘காக்கைச் சிறகினிலே, ‘பகவதி’ யாரடி நீ மோகினி’, அன்பே சிவம், சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார்.
திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.
தமிழில் கடைசியாக , ‘சொல்லி விடவா’ என்கிற படத்திலும் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர், நள்ளிரவு தனது 93 வயதில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
விஸ்வநாதன் மறைவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது..
அதில்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
606, அண்ணாசாலை
சென்னை-60006
இரங்கல் செய்தி
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி
(முரளி ராமநாராயணன் ) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…
“திரைப்பட இயக்குனரும் தாதாசாகிப் பால்கே விருது பெற்றவரும் ஒன்பது முறை நந்தி விருது பெற்றவருமான திரு.கே.விஸ்வநாத் அவர்களின் இறப்பு தென்னிந்திய திரைப்பட உலகிற்கு பெரிய இழப்பாகும்.
கே. விஸ்வநாத் அவர்கள் ” சலங்கைஒலி, ” “சங்கராபரணம்” உட்பட தமிழ் தெலுங்கு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
யாரடி நீ மோகினி, பாசவலை, குருதிப்புனல், ராஜபாட்டை, முகவரி உட்பட தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
60 வருடங்களுக்கும் மேலாக திரை உலகில் கோலோச்சி வந்த கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Veteran film maker K Viswanath dies at 92