தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் சூர்யா-கார்த்தியின் தந்தை சிவக்குமார் அவர்களும் ஒரு நடிகர் என்பது நாம் அறிந்ததே.
மேலும் இவர் ஓர் அழகான ஓவியர் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தங்கள் தந்தையின் 75 ஆண்டுகள் ஓவியங்களை நினைவு கூறும் வகையில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியை நடத்த இருக்கின்றனர்.
இந்த நிகழ்வானது அக். 24-26 வரை சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் நடைபெறுகிறது.
இன்று தொடக்கவிழாவில் ஓவியர்கள் அல்போன்ஸ் தாஸ், மணியம் செல்வன், ஸ்ரீதர் உள்ளிட்டோருடன் நடிகர் கார்த்தி கலந்து கொள்ளவுள்ளார்.
நிறைவு விழா அன்று தனது தந்தை சிவகுமாருடன் சூர்யா கலந்து கொள்கிறார்.