தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன்னுடைய படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்ளாதவர் நயன்தாரா.
இதனை காஷ்மோரா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகவே கூறினார் விவேக்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நயன்தாரா தற்போது கூறியுள்ளதாவது…
“நான் சில கொள்கைகளை வைத்திருக்கிறேன்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்னை ஒப்பந்தம் செய்யும்போதே பட விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.
எல்லா டிவியிலும் படத்தை பற்றி ஒரே விஷயத்தை பேச எனக்கு விருப்பமில்லை.
ஆனால் கட்டாயம் விளம்பரம் செய்தே ஆகவேண்டிய நேரங்களில் என்னால் முடிந்தவரை புரமோட் செய்கிறேன்.
நடிகைகள் விளம்பரம் செய்வதால் மட்டும் ஒரு மோசமான படத்தை வெற்றியடைய வைக்க முடியாது.
படத்தின் கதைதான் அதன் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.
நடிகைகளின் கடைசிப் பகுதிச் சம்பளத்தைத் பிடித்து கொள்ளலாம் என விவேக் கூறியிருந்தார்.
நானே பல சமயங்களில் சம்பளத்தை குறைத்தும் உள்ளேன். விட்டுக் கொடுத்தும் உள்ளேன்.
விவேக் பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.
Nayanthara reaction to Vivek speech about Movie promotions