கணவரை காவல்நிலையத்தில் தொலைத்த பழங்குடி இன பெண்ணுக்காக போராடும் சூர்யா..; நவம்பர் 2ல் தீர்ப்பு

கணவரை காவல்நிலையத்தில் தொலைத்த பழங்குடி இன பெண்ணுக்காக போராடும் சூர்யா..; நவம்பர் 2ல் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது.

இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.

இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘ஜெய் பீம்’ நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார்.

வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

‘ ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக பிரத்யேகமாக வெளியாகிறது.

Suriya in Jai Bhim to Premiere Worldwide On Amazon Prime Video this Diwali on 2nd November 2021

மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் ‘ரெண்டு காதல்’ பிப்ரவரி 14 காதலர் தினத்தையொட்டி வெளியானது.

அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ‘டூ.. டூ.. டூ’ இரண்டாவது பாடலும் வெளியானது.

இந்த நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் & நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Nayanthara’s one more film to release in OTT

பச்சிளங் குழந்தை மருத்துவ செலவுக்கு ரூ 20 லட்சம் வழங்கிய மக்கள் செல்வன் (வீடியோ)

பச்சிளங் குழந்தை மருத்துவ செலவுக்கு ரூ 20 லட்சம் வழங்கிய மக்கள் செல்வன் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குமாரபாளையம் பகுதியை சேர்ந்த
பாரதி குழந்தைக்கு SMA எனும் சொல்ல கூடிய Genetic Disorder சிகிச்சையின்
மருத்துவ செலவுக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் 20 இலட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

எனவே குழந்தையின் பெற்றோர் தங்களது மனமார்ந்த நன்றிகளை விஜய்சேதுபதிக்கு தெரிவித்துக் கொண்டனர்.

Vijay Sethupathi donates Rs 20 lakhs to genetic disorder child

சூர்யாவை அடுத்து கமல்ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்

சூர்யாவை அடுத்து கமல்ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இப்படத்தை அடுத்து தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

அண்மையில் கமலை சந்தித்த வெற்றிமாறன் ஒரு நாவலை அவரிடம் சொன்னதாகவும் கமலுக்கு அந்த நாவல் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா…

‛‛பிக்பாஸ் சீசன் 5, விக்ரம் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் உடன் புதிய படத்திற்காக கமல்ஹாசன் இணைய உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Vetrimaaran’s next with Ulaga Nayagan Kamal Haasan

‘ருத்ர தாண்டவம்’ மத கலவரத்தை தூண்டும்.; கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு தலைவர் பேட்டி

‘ருத்ர தாண்டவம்’ மத கலவரத்தை தூண்டும்.; கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு தலைவர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது லியோன் சுவாமி பேசியதாவது… “ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

ஜபம் என்பது கிறிஸ்துவ மக்களுக்கு புனிதமானது. ஆனால் இயக்குனர்கள் மத கலவரத்தையும் பிரச்சினையும் உருவாக்குவது போல இப்போது திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

இது கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது.

‘ருத்ர தாண்டவம்’ போன்ற மத கலவரத்தை தூண்டும் படங்களால் அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மதத்தை இழிவுப்படுத்தும் திரைப்படங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போகிறோம்.” என பேசினார்.

ருத்ர தாண்டவம் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.

முழு திரைப்படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் படத்திற்கு தடை கோரி வழக்கு போடப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Christian churches federation opposes Rudra Thandavam movie

என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் கட்சிகளில் பல பிரிவுகள் இருக்கும். அதில் வழக்கறிஞர் அணி, இளைஞரணி, கலை இலக்கிய அணி என பல அணிகள் இருக்கும்.

இது போல அணிகள் ஆரம்பிக்கப் போவதாகவும் ரசிகர்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்!

நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.

மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From the desk of STR Announcement on Fans Welfare Association

More Articles
Follows