குறட்டையால் குடும்பத்தில் குழப்பம்.; குட் மெசேஜ் சொல்லும் ‘குட் நைட்’

குறட்டையால் குடும்பத்தில் குழப்பம்.; குட் மெசேஜ் சொல்லும் ‘குட் நைட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெய் பீம்’ நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படத்திற்கு, ‘குட் நைட்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் படம் ‘குட் நைட்’.

இதில் ‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்ற, பட தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார்.

‘குட் நைட்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

”குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது.

தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

good night movie first look poster released

சார்மினாரில் படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் ஷங்கர்…

சார்மினாரில் படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் ஷங்கர்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ஷங்கர் ஷெட்யூலை முடித்துவிட்டு, தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘RC15’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நேற்று துவங்கியுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், சார்மினார் முன் தனது படத்தை ட்விட்டரில் பகிர்ந்த இயக்குனர் ஷங்கர், “#RC15 இன் அடுத்த அட்டவணையை சின்னமான சார்மினாரில் தொடங்குகிறோம்” என்று எழுதினார்.

Shankar resumes shooting of Ram Charan’s ‘RC15’

‘ஜெய் பீம்’ மணிகண்டன் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை வெளியிட்ட அனிருத்

‘ஜெய் பீம்’ மணிகண்டன் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை வெளியிட்ட அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்ஸ்டார் அனிருத் சமூக ஊடகங்களில் ‘ஜெய் பீம்’ மணிகண்டன் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டனின் புதிய திட்டத்திற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மணிகண்டன் ஜோடியாக மீத்தா ரகுநாத் கதாநாயகியாக நடிக்கிறார். குட் நைட் படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.
குட் நைட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Anirudh unleashes title & first look of ‘Jai Bhim’ Manikandan’s next film!

துணிவு வில்லன் நடிகரின் மனைவிக்கு வளைகாப்பு .. வைரலாகும் புகைப்படங்கள்

துணிவு வில்லன் நடிகரின் மனைவிக்கு வளைகாப்பு .. வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கேஜிஎஃப்’, ‘சர்பட்டா’ மற்றும் அஜீத் குமாரின் ‘துணிவு’ ஆகிய படங்களில் வலுவான வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜான் கோக்கன். அவர் நடிகை மற்றும் விஜே பூஜா ராமச்சந்திரனை 2019 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி விரைவில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறது.

முன்னதாக, இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தனர். இப்போது, ​​​​ஜான் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற நெட்வொர்க்கிங் தளங்களில் பூஜாவின் வளைகாப்பு விழாவில் இருந்து மகிழ்ச்சிகரமான படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Clicks from Thunivu villain actor’s wife’s baby shower function go viral!

என் நடிப்பை பார்த்து கண் கலங்கிட்டாங்க.; வியப்பில் ‘கபாலி’ விஷ்வந்த்

என் நடிப்பை பார்த்து கண் கலங்கிட்டாங்க.; வியப்பில் ‘கபாலி’ விஷ்வந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரன் பேபி ரன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது…

நடிகர் விஷ்வந்த் பேசும்போது…

இந்த படம் வெற்றி பெற பத்திரிகையாளர்களாகிய நீங்கள் முக்கிய காரணம். நான் இப்படத்தில் கால் டாக்சி டிரைவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பலரும் என்னை படத்தின் இடைவெளியிலேயே பாராட்டினீர்கள். சிலர் கண் கலங்கியதாகவும் தெரிவித்தார்கள். அதற்கு முக்கிய காரணம், இந்த வாய்ப்பளித்த ஜிஎன் கிருஷ்ண குமார் சார் தான்.

என்னிடம் கதை வரும் போது என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், திரையில் தான் படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்த்தேன். அப்போது, படம் ஆரம்பித்த 10வது நிமிடம் முதல் திரையரங்கு முழுவதும் அமைதியாகவே இருந்தது.

அந்த அளவிற்கு கதையை ஆர்.ஜே. பாலாஜி சுமக்க ஆரம்பித்து விட்டார். அது தான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கூட. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி சார் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பலரும் என்னிடம் பேசியது, படத்தின் இறுதி காட்சியில் வரும் கருத்து தான். படம் பேசிய விஷயம் பெரிதாக இருந்தது என்றார்கள். இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

Kabali viswanth emotional speech at run baby run event

ஓவர்சீஸ் முதல் ஓடிடி வரை.; ‘ரன் பேபி ரன்’ படத்திற்கு குவியும் வரவேற்பு

ஓவர்சீஸ் முதல் ஓடிடி வரை.; ‘ரன் பேபி ரன்’ படத்திற்கு குவியும் வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரன் பேபி ரன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது…

படத்தொகுப்பாளர் G.மதன் பேசும்போது…

இந்த படம் எனக்கு சிறப்பான படம். இப்படத்தின் கதை கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. கதை கூறியதுபோல் படம் எடுத்துவிட்டால் நிச்சயம் வெற்றிபெறும் என்று நினைத்தேன்.

அதேபோல், படமும் நன்றாக வந்திருந்தது. படத்தொகுப்பிற்கு 2 வாரங்கள் ஆனது. முடிந்ததும் இயக்குநரிடம் காட்டினேன், அவருக்கு பிடித்திருந்தது. அதேபோல் தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தது.

பின்பு ஆர்.ஜே.பாலாஜியிடம் படம் நன்றாக வந்திருக்கிறது, மக்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை என்றேன். ஆனால், மக்கள் படத்தை வெற்றியடைய செய்துவிட்டார்கள்.

இந்த வாய்ப்பு கொடுத்த லக்ஷ்மன் சாருக்கு நன்றி, துரைக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமார் பேசும்போது…

நன்றி தெரிவிக்கும் சந்திப்பு மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிர்வாக தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. சொன்ன நேரத்தைவிட விரைந்து படத்தை முடித்தார்கள்.

இப்படத்தை பார்த்துவிட்டு ஓவர்சீஸ் முதல் ஓடிடி, அமேசான் வரை அனைத்து தளங்களில் வாங்கி இருக்கும் அனைவருக்கும் நன்றி. சிறந்த கதை, கலைஞர்களை கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு அனைத்து தளங்களிலும் வரவேற்பு இருக்கிறது.

நானும் பாலாஜி சாரும் இன்னொரு படத்தில் பணியாற்றவிருக்கிறோம். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் பேசும்போது…

இதுபோன்ற ஒரு படம் எடுப்பதற்கு லக்ஷ்மன் சார் தான் காரணம். அவருடைய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்த ஊக்கத்தில் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது.

இப்படம் வெற்றிபெற முக்கிய காரணம் நடிகர், நடிகைகள் தான். இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படம் வேகமாக முடித்ததற்கு நான் மட்டும் காரணம் அல்ல.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் என்னோடு வேகமாக பயணித்து பணியாற்றினார்கள். ஆர்.ஜே.பாலாஜி சார் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் நேர்மறையான உணர்வு இருக்கிறது.

Run baby Run gets massive response from audience

More Articles
Follows