5 கோடியில் 1.5 கோடியை திரைத்துறை சங்கங்களுக்கு கொடுத்தார் சூர்யா

5 கோடியில் 1.5 கோடியை திரைத்துறை சங்கங்களுக்கு கொடுத்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தான் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார் சூர்யா.

அது தொடர்பான அறிக்கையில்… “சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடியை க்களுக்கும், திரையுலக சங்கங்களுக்கும் கொரோனா களத்தில் பணியாற்றியவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்திருத்தார்.

அதன்படி முதற்கட்டமாக ஐந்து கோடியில் 1.5 கோடியை திரையுலகினருக்கு அளித்துள்ளார் சூர்யா.

இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்சி’ க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்சியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார்.

தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகளை சிவக்குமார் வழங்கினார்.

இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலையில் கொடுக்கப்பட்டது.

சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி லலித்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

1.5 கோடி கொடுக்கப்பட்டது போக மீதமுள்ள ரூ. 3.5 கோடி தொகை பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் முகென் ராவ்வுடன் இணையும் திவ்ய பாரதி & ஷிவானி நாராயணன்

பிக்பாஸ் முகென் ராவ்வுடன் இணையும் திவ்ய பாரதி & ஷிவானி நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mugen rao shivaniமலேசியாவின் பிரபலமான பாடர்களில் ஒருவர் முகென் ராவ். இவரது பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே அந்த நாட்டில் உண்டு.

இவர் கடந்த 2019 ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

அதன்பின்னர் மலேசியாவுக்கே சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பேச்சுலர் பட நாயகியான திவ்ய பாரதி முகேன் ராவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானி நாராயணனும் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சூரரைப் போற்று’ ஓடிடி ரிலீஸ் குறித்து மெர்சல் தயாரிப்பாளர் அறிக்கை

‘சூரரைப் போற்று’ ஓடிடி ரிலீஸ் குறித்து மெர்சல் தயாரிப்பாளர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruசூர்யா, அபர்ணா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப்போற்று’.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவே தயாரித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அக்டோபர் 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ளார்.

இதனால் திரைத்துறையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இது தொடர்பாக ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

“நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலோ, நடிகர் சங்கத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில் இது விஷயமாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது.

இதில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும், பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆன்லைன் டிக்கெட்டிங் மற்றும் vpf குறித்தும் நிரந்தரத் தீர்வு காண திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட முத்தரப்பினரும் அமர்ந்து பேசி, எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமுகமான நல்ல முடிவினை எடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தித் திரை உலகம் செழிக்க திரையரங்க உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”.

இவ்வாறு ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வாம்மா மின்னல்… மின்னல் தீபாவுக்கு திருமணம் நடைபெற்றது

வாம்மா மின்னல்… மின்னல் தீபாவுக்கு திருமணம் நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

minnal dheepa marriageசரத்குமார் மற்றும் மீனா ஜோடியாக நடித்த படம் ‘மாயி’.

அதில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் மின்னல் போல் வந்து செல்வார் நடிகை தீபா.

இதன்பின்னர் இவருக்கு மின்னல் தீபா என்பதே பெயரானது.

இவர் சினிமா மட்டுமில்லாமல் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி மின்னல் தீபாவுக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாம்.

பாட்ஷா தம்பி நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’

பாட்ஷா தம்பி நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் பாட்ஷா.

பாட்ஷாவில் அவரது தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார்.

கன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரது மகன் அக்ஷித்தும் தந்தையை போலவே ‘சீதாயணம்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தை பிரபாகர் ஆரிபாக இயக்கியுள்ளார்.

கலர் கிளவுட்ஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில்
லலிதா ராஜ்யலக்ஷ்மி தயாரித்துள்ள மும்மொழிப் படத்தை ரோஹன் பரத்வாஜ் வழங்குகிறார்.

இப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷண் நடிக்க, முக்கிய வேடங்களில் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹீரோவின் காதல் விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.. இதன் விளைவு என்ன?

ஹீரோ யாருக்கு எதிராக போராடுகிறார்?

அவர் என்ன செய்தார் ? எதற்காக செய்தார்? என்ற சில திருப்பங்களுடன் பெண்களை மதிக்க வேண்டும் என்கிற கருத்துடன் உருவாகியுள்ளது சீதாயணம்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

புகழ்பெற்ற தமிழ் மற்றும் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரின் வாரிசான இசைமைப்பாளர் பத்மநாப பரத்வாஜ், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் முதல் முறையாக திருமண அழைப்பிதழில் இருக்கும் ஒரு ஸ்லோகத்தை பாடல் வடிவத்தில் உருவாக்கியுள்ளார்.

தெலுங்கு கன்னடத்தில்,ஸ்வேதா மோகன் இந்தப் பாடலை பாட…

தமிழில், பிரபல பின்னணிக் குரல் S.N.சுரேந்தர் மகளும், நடிகர் இளைய தளபதி விஜய்யின் உறவினர் பாடகி பல்லவி வினோத் தமிழில் மூச்சு விடாமல் முதல் முறையாக பாடி இருக்கிறார்…

பாங்காங், மங்களூர், அகும்பே, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் 63 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

அதை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன..

*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் oகலைஞர்கள் விபரம்*

நடிகர்கள் ; அக்ஷீத் . அனாஹிதா பூஷண், வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா,
அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா மற்றும் பலர்.

நடனம் ‘ அனீஸ்

சண்டைப்பயிற்சி ; ரியல் சுரேஷ்

பாடல்கள் ; பழனிபாரதி

இசை ; பத்மநாபா பரத்வாஜ்

ஒளிப்பதிவு ; கொல்லி துர்கபிரசாத்

படத்தொகுப்பு ; பிரவீன் புடி

இயக்குனர் ; பிரபாகர் ஆரிபாக

தயாரிப்பு ; லலிதா ராஜ்யலக்ஷ்மி

நிர்வாக தயாரிப்பு ; ப்ருத்வி பொலவரப்பு

sasi kumar

முருகதாஸ் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் மீண்டும் ‘சுறா’ ஜோடி..?

முருகதாஸ் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் மீண்டும் ‘சுறா’ ஜோடி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamanna in thalapathy 65மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு தளபதி 65 படத்திற்காக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தர்பார் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் தமன் இசையமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய்யின் 50வது படமான ’சுறா’ என்ற படத்தில் விஜய் தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர்.

ஆனால் சுறா படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows