தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் எவரும் எதிர்பாராத வகையில் சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இப்படத்தின் நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.
ஆதவன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவுடன் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருந்தார்.
தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.