தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட சூர்யா பரிசுகளை வழங்கினார்.
அப்போது சூர்யா ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் என்ஜிகே என்ஜிகே என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
என்ஜிகே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போவதால், ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
தீபாவளிக்கு என்ஜிகே ரிலீஸ் இல்லை; சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!
ரசிகர்கள் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்ட இருந்ததால்.. இது நம்ம நிகழ்ச்சியில்லை. மற்றொரு நிகழ்ச்சி. அங்கே நம்மை பற்றி நம் படத்தை பற்றி பேசுவது சரியில்லை. நீங்கள் இப்படி செய்வது சரியா படல.” என்றார்.
மேலும் பேசும்போது… “இந்த குறும்படங்களை போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் என்.ஜி.கே உருவாகிவருகிறது.
சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும்போது நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்.
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” அவர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா