நம் தட்டுக்கு ரசிகர்களே உணவு அளிக்கின்றனர்..; சூடானார் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்

நம் தட்டுக்கு ரசிகர்களே உணவு அளிக்கின்றனர்..; சூடானார் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ‘சுல்தான்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று தியேட்டர்களில் ரிலீசானது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விவேக் மெர்வின் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படம் தெலுங்கில் நல்ல வசூல் வேட்டையாடி வருகிறது.

நேற்று நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘வைல்டு டாக்’ படத்துடன் மோதியது.

அந்த படம் முதல் நாளில் 1 கோடி வசூலித்த நிலையில், ‘சுல்தான்’ படமும் அதற்கு நிகரான வசூலை அள்ளியுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த தமிழ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் & நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்பதாக படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில்…

” கார்த்திக்கு ‘சுல்தான்’ படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் சிறந்த ஓபனிங் படம். “பெரிய ஓபனிங் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொத்த திரையுலகத்திற்கும் இப்படம் சுவாசம் அளித்துள்ளது. மொத்த ஹவுஸ்புல் காட்சிகளும் எங்கள் இதயத்தில் மகிழ்வை நிரப்பியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அவரது அடுத்த ட்வீட் பதிவில்..

“எங்களது பல படங்கள் விமர்சகர்களின் ஆதரவைப் பெற்றவை. அவர்களுக்கு எப்போதுமே நன்றி.

ஆனால், ‘சுல்தான்’ பற்றி சிலருக்கு வேறு கருத்துக்கள் உள்ளது., அதையும் மதிக்கிறேன். ஆனாலும், வார்த்தைகளில் கொஞ்சம் கண்ணியம் இருக்கலாம். இது வெறும் சினிமா தான், ஆனால் ரசிகர்கள் தான் நமது தட்டுக்களுக்கு உணவை அளித்து வருகின்றனர்,” எனப் பதிவிட்டுள்ளார்.

So happy and grateful to audience for giving us a grand opening. Indeed a career best opening for #Sulthan @Karthi_Offl. It has become a breather for the whole film industry in this difficult time. All full shows makes our heart filled with joy! Thanks again! #JaiSulthan

Many of our films have been supported by reviewers. I am always thankful to them. Few may have other opinions about #Sulthan. I value that. But let’s keep some decency in our choice of words. After all it is CINEMA and AUDIENCE who bring food to (y)our plates! #SulthanReview

Sulthan producer tweets on negativity

எப்படி இருந்த சிம்பு இப்படி மாறிட்டாரே..; எளிய மனிதர் STRஐ பாராட்டிய வெங்கட் பிரபு

எப்படி இருந்த சிம்பு இப்படி மாறிட்டாரே..; எளிய மனிதர் STRஐ பாராட்டிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு… இவரை சுற்றி எப்போதுமே பல சர்ச்சைகள் இருக்கும்.. காதல் கிசு கிசு முதல் பீப் சாங் வரை பல ப்ளாஷ்பேக் கதைகள் உள்ளன.

இவையில்லாமல் சூட்டிங்க்கு லேட்டாக வருதல், கால்ஷீட் சொதப்பல், சூட்டிங்கில் லீவு கேட்பது என பல வகைகளில் இவரது பெயர் கெட்டப் பெயரானது.

ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முற்றிலும் மாறிவிட்டார் சிம்பு.

ஒரே மாதத்தில் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து கொடுத்தார்.

தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் கேரவன் கூட கேட்காமல் மண் தரையில் படுத்து தூங்கியுள்ளார் சிம்பு.

இந்நிலையில் இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை “எளிய மனிதர்.. நடிகர்களின் வாழ்க்கை…” என குறிப்பிட்டு 2 புகைப்படங்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்குகிறார்.

மற்றொரு படத்தில் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்களை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்குகின்றனர்.

Actors life!!! Man of simplicity!!! #nightshoot #Maanaadu in between shots!! @SilambarasanTR_ @iam_SJSuryah #candidshot https://t.co/rCtrpD97cV

STR Maanaadu (1)

STR Maanaadu (2)

STR’s recent pic goes viral

‘கர்ணன்’ இடைவேளை காட்சியில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் வேற லெவல்..; சொன்னது யார்..?

‘கர்ணன்’ இடைவேளை காட்சியில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் வேற லெவல்..; சொன்னது யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhilip subbarayanமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஓரிரு பாடல்கள் சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக ‘பண்டாரத்தி…’ என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியதால், அந்த வார்த்தையை ‘மஞ்சனத்தி…’ என மாற்றிவிட்டனர்.

இதில் உரிமைக்காக போராடும் அடித்தட்டு மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படம் அடுத்த வாரம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

எனவே காலம் குறைவாக இருப்பதாலும் மேலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க நினைப்பதாலும் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கர்ணன்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான திலீப் சுப்ராயன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“காலத்திற்கு பேர் சொல்லும் படமாக கர்ணன் இருக்கும்.. 16 வயதினிலே படத்தை இன்று வரை கொண்டாடுகிறோம்.

அதுபோல தனுஷ் மாரி செல்வராஜுக்கு ‘கர்ணன்’ படம் இருக்கும்.

இடைவேளை காட்சிகளில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்‌ஸ் காட்சி இடைவேளையை விட 3 மடங்கு வேற லெவலில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

This popular stunt director praises Karnan the movie

ரஜினி பெயரைக் கூட குறிப்பிடாமல் வாழ்த்திய திமுக எம்.பி.; கண்டமேனிக்கு கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

ரஜினி பெயரைக் கூட குறிப்பிடாமல் வாழ்த்திய திமுக எம்.பி.; கண்டமேனிக்கு கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth (2)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

ரஜினியை தலைவா என குறிப்பிட்டு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் நண்பன், அண்ணன், குரு முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 2ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும் மகளுமான கனிமொழி மறைமுகமாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவு இதோ…

*திரையுலகில் தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்ட, தகுதிவாய்ந்த ஒருவருக்கு, பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

The prestigious Dada Saheb Phalke Award is a well deserved accolade for a trailblazer in the film industry. Congratulations…*

இவ்வாறு மக்களவை உறுப்பினர் கனிமொழி தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் பெயரை கூட குறிப்பிடாமல் வாழ்த்து சொல்வதன் நோக்கம் என்ன? என ரஜினி ரசிகர்களும் நடுநிலையாளர்களும் இந்த ட்வீட்டுக்கு தங்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் சில…

சரி யார் அவர் பேர் தெரியாதா?? இல்லை சொல்ல முடியாதா?? அவ்வளவு தலைக்கணமா உனக்கு?? பேர் சொல்ல முடியலனா எதுக்கு வாழ்த்து சொல்ற?? யார் கட்டாயத்தின் பேரில் இந்த டிவிட்

ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்…

என கமெண்ட்டுகளை வீசி வருகின்றனர்.

Netizens slams Kanimozhi for wishing Rajinikanth

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளும் சினிமாவில் நாயகினார்.!

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளும் சினிமாவில் நாயகினார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maaveeran Pillaiசத்தியமங்கலம்… தமிழகம் கேரளா & கர்நாடக காட்டுப்பகுதியில் தன் சந்தன கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவன் வீரப்பன்.

சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த வீரப்பன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளுக்கு கடும் சவாலாக விளங்கியவர் இவர்.

சந்தனக் கட்டை கடத்தல், தந்தங்களுக்காக யானைகளை கொன்று குவித்தல் என்று பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் வீரப்பன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 2004 ஆம் ஆண்டில் அக்டோபர் 18 ஆம் தேதி என்கௌண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன்.

அவருக்கு விஜயதாரணி மற்றும் விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் மூத்த மகள் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.

இளைய மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வனயுத்தம் என்ற படம் வெளியானது

இந்த நிலையில் விஜயலட்சுமி நடிப்பில் ‘மாவீரன் பிள்ளை’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜயலட்சுமி வீரப்பனைப் போன்றே கையில் துப்பாக்கி மற்றும் யூனிபார்மில் காணப்படுகிறார்.

இது வீரப்பனின் வாழ்க்கை வரலாறா? அல்லது விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கே என் ஆர் ராஜா இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய், ரவி வர்மா இசையமைக்கிறார்.

#MaaveeranPillai Movie Teaser

#Teaser –> https://youtu.be/qs-qBnAOuh8

தமிழ்நாட்டை காத்த மாவீரன் வீரப்ப(னி)ன் மகள் நடித்த முதல் திரைப்படம் #மாவீரன்பிள்ளை

#MaaveeranPillaiTeaser @knrmovies @knrraja1 @ManiAlaya @sridhargovindh1 @MpAnand_PRO

Veerappan daughter turns heroine

விஷால் 31 அப்டேட்..: குறும்பட இயக்குனருடன் இணையும் விஷால் & யுவன் கூட்டணி

விஷால் 31 அப்டேட்..: குறும்பட இயக்குனருடன் இணையும் விஷால் & யுவன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal 31விஷால் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்தினை புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது.

புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் என்பவர் “குள்ள நரிக்கூட்டம்” மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவித்த “தேன்” ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அவர் சமீபத்தில் இயக்கிய “எது தேவையோ, அதுவே தர்மம்” குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களை குவித்தது.

இக்குறும்படத்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு தந்துள்ளார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடுவமைப்பு செய்கிறார்.

படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முன் தயாரிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishal and Yuvan joins for #Vishal31

More Articles
Follows