எல்லா மொழியிலும் ரீமேக் செய்ய தகுதியான படம் ‘சுல்தான்’..; கார்த்தி பெருமிதம்

எல்லா மொழியிலும் ரீமேக் செய்ய தகுதியான படம் ‘சுல்தான்’..; கார்த்தி பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சுல்தான்’.

ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்பட டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இன்று மாலை இப்பட டிரைலர் வெளியாகவுள்ளது.

இப்பபட பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

இதில் ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் நடிகர் கார்த்தி பேசுகையில்…

” எந்தப் படமாக இருந்தாலும் முழு திரைக்கதையை இயக்குனரிடம் படிக்க கேட்பேன். சொல்ல சொல்வேன்.

நான் 20 நிமிடங்கள் கதை கேட்டு ஒப்புக்கொண்ட ஒரே படம் சுல்தான் தான்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பெரிய விஷயங்களாக யோசிக்கிறார். மிகவும் பொறுமைசாலியாக இருக்கிறார்.

இரண்டு வருடங்கள் இந்த படத்திற்க்காக வேலை செய்திருக்கிறார்.

இப்படம் வெற்றி பெற்றால் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்படக் கூடிய தகுதியான கதை” என பாராட்டி பேசினார் கார்த்தி.

இந்தப் படத்தை தமிழகத்தில் நேரடியாக வெளியிடுகிறது ட்ரீம் வாரியர் நிறுவனம்.

ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறான் சுல்தான்.

Actor Karthi talks about his upcoming film Sulthan

நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று.; ஹீரோயினுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்

நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று.; ஹீரோயினுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kiara advaniநிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் கைரா அத்வானி இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென அமீர்கானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

எனவே அந்த பட நாயகி கைரா அத்வானிக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

அவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

கடந்தாண்டில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன் & ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் குணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Super Star Aamir Khan tests positive for corona

ஒரே நேரத்தில் ரஜினி விஜய் அஜித் வாழ்த்து..; இன்ப வெள்ளத்தில் மிதக்கும் இமான் ரியாக்சன் இதோ..!

ஒரே நேரத்தில் ரஜினி விஜய் அஜித் வாழ்த்து..; இன்ப வெள்ளத்தில் மிதக்கும் இமான் ரியாக்சன் இதோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இமான் அவர்களுக்கு கிடைத்தது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் விஜய்யும் அஜித்தும் தனிப்பட்ட முறையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தனர் என டி.இமான் குறிப்பிட்டு நன்றி என தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

“என்னுடைய இசைப்பயணம் அண்ணன் விஜய் அவர்களின் ’தமிழன்’ திரைப்படத்தில் இருந்து ஆரம்பமானது.

தற்போது அஜித் சார் அவர்களின் விஸ்வாசம் திரைப்படத்தில் தனக்கு தேசிய விருது கிடைத்துள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

100 படங்களை தாண்டிவிட்ட இமான் தற்போது தான் முதன்முறையாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

D Imman’s tweet on receiving personal wishes from Thalaivar, Thala and Thalapathy

Rajini Vijay Ajith (1)

ஹிந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்

ஹிந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை.

அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவரின் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார்.

டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகர் இவர், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.

இந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய இந்தி – விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்து, இந்தி சிங்கிளில் நடித்த முதல் இளம் தென்னிந்திய நடிகர் என்ற அங்கிகாரம் பெற்றுள்ளார்.

சிரீஷுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

மேலும் மலையாள திரைப்படத்தில் நடித்த முதல் தெலுங்கு நடிகர் இவர், 1971: பியோண்ட் பார்டர்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து நடித்தார்.

நடிகர் அல்லு சிரீஷ் அவர்களின் வரவிருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஒரு காதல்-நகைச்சுவை, அதன் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரியப்பட்டுள்ளது.

திரைப்படங்களைத் தவிர, சிரிஷ் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.

மேலும் இனையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் ஆதரவை பெற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

Actor Allu Sirish talks about his Hindi single ‘Vilayati Sharab’

JUST IN ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ நடிகர் விருச்சககாந்த் பரிதாப மரணம்.. படிச்சா அழுதுடுவீங்க

JUST IN ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ நடிகர் விருச்சககாந்த் பரிதாப மரணம்.. படிச்சா அழுதுடுவீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் & சந்தியா ஜோடியாக நடித்த படம் ‘காதல்’.

சுகுமார், சூரி, தண்டபாணி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்

இந்த படத்தில் சினிமா சான்ஸ் தேடி அலையும் ஒரு கேரக்டரில் விருச்சககாந்த் என்பவர் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ என்ற ஒரே வசனத்தை பேசி பாபு என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார்.

அதனை தொடந்து சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் போதிய வருமானம் இன்றி சூளை அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள நடைபாதையில் வசித்து வந்துள்ளார்.

இவரின் தாய், தந்தையரின் இறப்புக்கு பின் மனநலம் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் தெருவோரம் உள்ள ஆட்டோ நிறுத்துமிடங்களில் உறங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆட்டோவில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

எதனால் உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

Kadhal fame Viruchagakanth aka Babu died due to cardiac arrest

Kadhal Viruchagakanth (1)

Kadhal Viruchagakanth (3)

மூவி புரோமோசனில் கலந்துக் கொள்ளாத கீர்த்திக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்த நடிகர்

மூவி புரோமோசனில் கலந்துக் கொள்ளாத கீர்த்திக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RangDeமலையாளம் மற்றும் தமிழில் கலக்கிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு & ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

இவர் பிசியாக நடித்து வருவதால் தெலுங்கில் அவர் நடித்து ரிலீசாக உள்ள ‘ரங்தே’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொள்ள மாட்டார் என தகவல்கள் பரவியது.

எனவே அந்த பட ஹீரோ நிதின், புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நிதின்.

அதில்… “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் .. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என குறிப்பிட்டிருந்தார். .

அவரின் அழைப்பை ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nithin requests Keerthy Suresh to join film promotions

More Articles
Follows