தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மாநாடு’ படத்தை அடுத்து சிம்பு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு முன்பே சிம்பு ஒப்புக் கொண்ட படம் ‘பத்து தல’.
இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
’பத்து தல’ படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதில் சிம்பு டான் கேரக்டரிலும், கௌதம் போலீஸ் கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.
’சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் கலையரசன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சிம்பு கௌதம் இணைந்து நடிக்கும் காட்சிகளை மே 27ஆம் தேதி முதல் படமாக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
இதனையடுத்து கிட்டத்தட்ட 3 வாரங்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
STR’s Pathu Thala shooting update here